search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema"

    • அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

    நடிகர் கார்த்தி கடைசியாக தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக மெய்யழகன் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

    அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் நடிகர்கள் கார்த்தி இந்த படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

     

    அவர் கூறியதாவது, "90 காலகட்டங்களில் வெளிவந்த அனைத்து மசாலா படங்களுக்கும் இந்த படம் சமர்ப்பணமாக இருக்கும். மேலும் படத்தில் சண்டை காட்சிகளும் பாடல்களும் இருக்கின்றன. கார்த்தி மற்றும் அவருக்கு தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் ஆகியோர் எம்ஜிஆர் ரசிகர்களாக நடித்துள்ளனர்" என்று அப்டேட் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் எட்டு வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தாலும் என்னுடைய படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.
    • எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.

    இந்த நிலையில் ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார். இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    அதில் பல அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், எமோஷனல், காதல் காட்சிகளின் உருவாக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
    • தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

    அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.

    தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்திலும் அசோக் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'வேட்டுவம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தற்பொழுது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்து சார்பாட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். வேட்டுவம் ஒரு மாடர்ன் டே கேங்ஸ்டர் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கியவர் நடிகர் பவன் கல்யாண், இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போடியிட்டார். அதே தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பாக வங்கா கீதா விஸ்வனாதம் போட்டியிட்டார்.

    தற்போதைய நிலையில் பவன் கல்யாண் 80,161 வாக்குகளை பெற்றுள்ளார். வாங்கா கீதாவை விட 44,790 வாக்கு வித்தியாச்சத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

    இதை கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் தற்பொழுது நடிக்கவிருக்கும் தே கால் ஹிம் ஓஜி (They Call Him OG) திரைப்படம் சார்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த போஸ்டரில் நெருப்பு பற்றி எரியும் சாரில் பவன் கல்யாண் மிக ஸ்டைலாக உட்கார்ந்து இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
    • சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகினார் பிரியா பவானி சங்கர். மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

    இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பிரியா பவானி சங்கர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.  இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

     

    இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
    • இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.\

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
    • ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது.

    ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

    ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் இத்தாலிய கடலோர கிராமமான போர்டோபினோவில் [Portofino] நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் விழாவில் கலந்துக்கொண்ட அட்லி மற்றும் சல்மான் கானின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லி, ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் ஈவண்டிற்கு ஃப்ரான்ஸ் செல்வதற்காக மும்பை ஏர்போர்டில் சில நாட்களுக்கு முன் வந்தார். அப்பொழுது அவரை தொடர்ந்து சல்மான் கானும் அவரது காரில் ஏர்போர்டிற்கு வந்தடைந்தார். அங்கிருந்த செக்கியூரிட்டி கார்டுகள் சல்மான் கான் முதலில் செல்ல வேண்டும் என இயக்குனர் அட்லியை காக்க வைத்தனர்.

    ஆனால் சல்மான் கான் , அட்லியை பார்த்து சிரித்துவிட்டு ஏர்போர்ட் செக்யூரிடிடம் அவர் என்னோடு தான் வருகிறார் என்று கூறி அட்லியை முன்னாடி செல்லும்படி கை அசைக்கிறார். அட்லி சிரித்துக் கொண்டே உள்ளே செல்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சல்மான் கான் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் `சிகாந்தர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • தற்பொழுது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த அவரது இமய மலை ஆன்மீக பயணத்தில் இருக்கிறார்,

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்பொழுது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த அவரது இமய மலை ஆன்மீக பயணத்தில் இருக்கிறார், அதை முடித்துவிட்டு கூலி திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • . அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து வசூல் ரீதியாகவும் 600 கோடி ரூபாயிற்கு மேல்  வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

    இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    மேலும் நடிகர் ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இந்த தகவலை நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் படக்குழுவினர் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
    • விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார். இவரது கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரக இருந்தார். எனினும், தேர்தலுக்கு முன் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்து விட்டார்.

    ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார். ஏற்கனவே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவாக இருக்கும் மாணிக்க தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தனது மனைவி ராதிகா  விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என சரத்குமார் பராசக்தி அம்மன்  கோவிலில் அங்கப்பிரதிஷ்டம் செய்தார். இவர் அங்கப்பிரதிஷ்டம் செய்யும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்தநிலையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    அதில், "முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் அந்த பெண் கூறி இருந்தார்.

    அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.
    • தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.

    தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    கூலி படத்திற்கு முன் ஆன்மீக பயணத்தை மே 30 தொடங்கினார் ரஜினிகாந்த். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும்போது " நான் கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை வருடா வருடம் செல்வது வழக்கம், ஒவ்வொரு முறை நான் அங்கு செல்லும் போது எனக்கு அது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது என்று கூறினார். அதைத்தொடர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி வெற்றி பெறுவாரா என்ற கேட்ட கேள்விக்கு நோ கமண்ட்ஸ், அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அதை மறுத்துவிட்டார்.

    நேற்று ரஜினிகாந்த கேதார்னாத் மற்றும் பத்ரினாத் கோவில்களில் வழிப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×