என் மலர்
ஈரோடு
- அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது.
- எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் பிரச்சார கூட்டம் குறித்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அப்போது, தீவிர தவெக தொண்டரான அந்த பெண்," விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வெச்சிடுவேன்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,"ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுருக்கேன். முதல் முறை அதிமுகவிற்கும், 2வது முறை சீமானுக்கும் போட்டேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜயக்கு தான்.
ஆட்சிக்கு வருபவர்களால் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது. இலவசம் இலவசம்-னு சொல்றாங்க ஆனா பஸ்-ல கூட ஏத்துறது இல்ல. தண்ணீர் வசதி, சாலை வசதி இல்ல.
விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
என் வீட்டில் 9 பேர் இருக்காங்க. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அப்படி போடலனா சோத்துல விஷம் தான்.
விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோட்டு வரர்தா வேண்டியிருக்கேன" என்றார்.
- ஈரோடு கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
- திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இந்நிலையில், ஈரோடு கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடம் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
- தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
- எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-
எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.
இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..
என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.
தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.
என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை.
- இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை.
ஈரோடு:
ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சரமாரியாக குற்றம்சாட்டினார். அப்போது விஜய் பேசியதாவது:-
உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை. எனக்கு, என்மேல எல்லையில்லா பாசம் வெச்சுருக்கிற இந்த Mass- தான் துணை.
சலுகைகளை இலவசம் என்பதில் உடன்பாடு இல்லை. ஓசியில் போவதாகக் கூறி மக்களை அவமானப்படுத்துகின்றனர். கேட்பதற்கு ஆள் இல்லை என மக்களுக்கான சலுகைகளை கேவலப்படுத்துகிறீர்களா? இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை என்றார்.
இதனிடையே, பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்பீக்கர் கம்பம் மீது ஏறிய தொண்டரை தம்பி கீழ இறங்குப்பா... ப்ளீஸ்... நீ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன் என்று அறிவுரை கூறினார்.
- மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
- மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளன.
* ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான பிரச்சனையை எடுத்து பேசி வருகிறேன். இது அரசியல் கிடையாதா?
* மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது அரசியல் இல்லையா? இல்லை உங்களைப்போல அநாகரிகமாக பேச வேண்டுமா?
* நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை, மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் இல்லை.
* மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
* ஓசி ஓசி என்று மக்களை அசிங்கப்படுத்தினால் அதனை தட்டிக்கேட்க நான் வருவேன்.
* மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
* சொன்னா மட்டும் போதுமா? என கேட்கிறார்கள். நாங்கள் என்ன வாயிலேயே வடை சுட நாங்கள் என்ன தி.மு.க. வா...
* தி.மு.க. ஆட்சியில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது யார் ஆட்சியில்?
* தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு உள்ளதா? அப்படி என்றால் வாடகை வீட்டில் யாரும் வசிக்கவில்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
- பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-
எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன், உடன் நிற்பீர்கள் தானே? என்று விஜய் கேட்க கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து விஜய் பேசியதாவது:-
* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தினால் பலருக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.
* வள்ளுவர் கோட்டத்திற்கு காண்பித்த அக்கறையை மக்கள் மீதும் சிறிது காட்டியிருந்தால் பலருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும்.
* ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
* பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளை அடிக்காதீர்கள்.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நமது கொள்கை எதிரி.
* எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி.
* தேர்தல் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
* த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?
* எனக்கு பயமில்லை என சத்தம் போட்டு பாடுவது ஏன்?
* அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. எதிரிகள் குறித்து மக்கள் புரிந்து கொண்டால் போதும்.
* 24 மணி நேரமும் தி.மு.க.வினரின் நோக்கம் விஜய், த.வெ.க.வை எப்படி முடக்கலாம் என்பதை பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.
* ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என் ஆய்வு செய்தால் ஒன்றும் இல்லை, ஜீரோ தான்.
* நெல் கொள்முதல் செய்வதிலும் ஊழல்.
* ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை கூட கிடையாது.
* மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் சிறப்பாக வேலை நடக்கிறது.
* தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை தூர்வாராமல் ஆற்று மணலை மட்டும் கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
* மணல், மலை காணாமல் போனது போல் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* மற்ற மாவட்டங்களில் மணல், மலை காணாமல் போனது போல் ஈரோட்டில் செம்மண் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளது.
* பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக்கூறிக்கொள்ள உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
* நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? நான் பேசும் விஷயங்களை பாருங்கள் என்றார்.
- இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் இல்லை என்கிறார் ஆதவ் ஆர்ஜூனா.
- நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?
ஈரோடு பரப்புரையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் மேலும் பேசியதாவது:-
அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது.
கொள்கை தலைவர் சமூக சீர்த்திருத்தவாதி எங்களுடைய வழிகாட்டி தந்தை பெரியாரின் வழியில் அவர் பாதத்தை தொட்டு நமக்கான மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்குகிறார்.
நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?
இங்கு இருக்கக்கூடிய ஈரோடு மக்கள் எந்த அளவிற்கு, ஒவ்வொரு விவசாயிகள், ஒவ்வொரு நெசவாளர்கள், ஒவ்வொரு தொழிலாளர்கள் நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துயரத்தில் கடக்கின்றனர்.
இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மாக் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நிர்வாகத்தை கொடுத்துள்ளார்கள்.
இதை மாற்ற வேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? தமிழக வெற்றிக் கழகத்தால், தலைவர் விஜயால் மட்டுமே மாற்ற முடியும்.
இன்று இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை த.வெ.க. தான்.
திமுக நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் இளைஞர்களே இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும்.
- மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* மஞ்சள்... மஞ்சள்... பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னாடி மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள்.
* நம் வீட்டில் கூட அம்மாக்கள், சகோதரிகள் நமக்காக நாம் நல்லா இருக்கணும் என்பதற்காக மஞ்சள் நிற புடவையை கட்டி வேண்டிப்பாங்க.
* நம் கொடியில் கூட அந்த எனர்ஜெட்டிக்கான வைப் மஞ்சள் இருக்கும். அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
* இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாம வேறு எங்க போய் பேசுறது.
* அதுமட்டுமல்ல.. இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும். இந்த ஈரோடு மண். விவசாயத்துக்கும் பெயர் போன மண்.
* இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை. காலிங்கராயன் கால்வாய்.
* காலிங்கராயன் அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போதும், ரொம்ப சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய் பார்த்து சொன்னாராம். மகனே கலிங்கா.. தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கு.. மோர் விற்ற காசு முகடம் வரைக்கும் இருக்கு. அதை எடுத்துப்போட்டு போய் கால்வாய் வெட்டுரான் என்று தைரியம் கொடுத்தார்கள்.
* பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தையரித்தை தான் நீங்கள்... என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள், தோழிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க.
* இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை.. இந்த விஜிய மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று பேசினார்.
- தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர்.
- உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது.
ஈரோடு:
ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர் விஜய், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் விஜயமங்கலத்திற்கு வந்தடைந்தார்.
இக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்றை படைப்பதற்கு இங்கு பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். அதோடு மட்டுமல்ல சில பேர் நினைக்கிறார்கள்.
தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர். நல்லவர். வல்லவர்.
உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏன் என்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என்று விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சி தலைவரை பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதியை காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையிலும் இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம். இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம் மட்டும் இல்ல. நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்கிற முறையில் தான் இங்கே ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி தான் என்று பேசினார்.
- காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
- ஆர்.கே.விரோடு, பிரப்ரோடு, பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, சம்பத்நகர்,
ஈரோடு:
ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20- ந் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, ஈரோடு நகர், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ்காலனி. பெரியார்நகர், திருநகர்காலனி, ஈரோடு-பேருந்துநிலையம், காந்திஜிரோடு, ஈ.விஎன்ரோடு, ஆர்.கே.விரோடு, பிரப்ரோடு, பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, சம்பத்நகர்,
வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர்,சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன்கோவில்வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- காலை 6 மணி முதல் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது.
- பரந்தூர், மாமல்லபுரத்திலும் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மேலும் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்ற த.வெ.க. பொருளாளரை போலீசார் தடுத்தி நிறுத்தினர். விவிஐபி லிஸ்டில் வெங்கட்ராமன் பெயர் இல்லாததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே பரந்தூர், மாமல்லபுரத்திலும் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்களுடன் வெங்கட்ராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
- பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிப்பு.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட தொண்டர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மேலும் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது. இன்னும் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு நேரம் இருப்பதால் மேலும் த.வெ.க. தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






