search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dayanidhi maran"

    • வெளிநாட்டிலிருந்து ஊடுருவி வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
    • மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையத்திடம் 3 கேள்விகள் கேட்கிறேன்.

    1. வெளிநாட்டிலிருந்து ஊடுருவி இந்தியாவுக்குள் வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

    2. மன்மோகன் சிங் சொன்னதை திரித்து, மதத்தின் பேரில் மக்களை பிரிக்கும் மோடியின் மீது என்ன நடவடிக்கை பாயும்?

    3. ஒரு சமூகத்தின் மீது துவேஷத்தைக் கொட்டி இன்னொரு சமூகத்தின் மனங்களில் நச்சை விதைக்கும் மோடி மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை?

    10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லாததால், பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூட பழைய வகுப்புவாத அஜெண்டாவை நாடியுள்ளார். மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.
    • பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது என்றார் தயாநிதி.

    புதுடெல்லி:

    இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அரசு. ஆனால், வரலாறு காணாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடிவிட்டது.

    10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?

    சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை ஒன்றிய அரசு.

    பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.

    இடைநிலை நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு நல்லது வரவில்லை, நாமம் தான் வந்தது. ஏழைகளுக்கு பயனில்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

    மொழியை வைத்து மக்கள் வாழ்வை சீரழித்திடும் மோடி அரசை வரும் தேர்தலில் வெளியேற்ற சபதமேற்போம் என காட்டமாக விமர்சித்தார்.

    • அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    • இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை:

    மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் அடையும் சிரமத்தை நேற்றைய தினம் சமூகவலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டு இருப்பதை கண்ட பிறகாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொண்டு உடனடியாக அவற்றை சரிசெய்வதோடு, அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுகுறித்து பலமுறை மண்டல கூட்டத்திலும், பலமுறை கடிதம் வாயிலாகவும் ரெயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

    • ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
    • குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து கோபாலபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்கள். கடந்த 8-ந் தேதி அவரது மனைவிக்கு வங்கியில் இருந்து பேசுவது போல் போன் அழைப்பு சென்று உள்ளது. அந்த இணைப்பை துண்டித்ததும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.99,999 திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் 2018-ம் ஆண்டிலேயே ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? என்று காட்டமாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு வங்கிக்கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

    மேலும் குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார், குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள்.

    • தயாநிதி மாறன் செல்போன் எண்ணுக்கு பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.
    • மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.

    சென்னை:

    'டிஜிட்டல்' மயமான உலகில், மோசடி செயல்கள் 'ஹைடெக்' ஆகி உள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 'உங்கள் கணக்கு எண் விவரங்களை 'அப்டேட்' செய்ய வேண்டும்' என்று அப்பாவி மக்களை ஏமாற்றி, 'ஓ.டி.பி.' எண்ணை பெற்று பண மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இதே பாணியில், 'நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. குறிப்பிட்ட 'லிங்க்'கில் சென்று பணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என்று குறுந்தகவல் அனுப்பியும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சட்டென்று எடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

    இந்த நிலையில் மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனிடம் 'சைபர்' மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.

    சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறன் எம்.பி. வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் தயாநிதி மாறன் எம்.பி.யின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இடம் பெற்றிருந்தது.

    இந்த மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.

    வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டார்.

    புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.க் கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று கூறினார்.
    சென்னை:

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதிமாறன் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அதன்பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து இந்த பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். இந்த வெற்றிக்கு காரணம் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த தேர்தல் யுக்தி தான்.

    சென்ற முறை அ.தி.மு.க. கூட்டணி இதே அளவில் வெற்றி பெற்றார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக அவர்கள் வாதாடவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்தார்கள். இனி அது நடக்காது. நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். உங்களின் குரலாக உங்களுக்காக நாங்கள் எல்லோரும் உழைப்போம்.

    தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பை பெருக்குகின்ற வகையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் உழைத்து உங்களுக்காக குரல் கொடுத்து காப்போம் என்று உறுதியளிக்கிறோம். ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஓரம் கட்டி விட்டார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    ஒரு இடத்தில் மட்டும் தப்பித்து இருக்கிறார்கள். அதுவும் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான். பண பலத்தால் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் உதறி தூசி தட்டி விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மக்கள் இன்னும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

    இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் யாரும் ஜெயித்தது கிடையாது. ஒருமித்த கருத்தோடு மக்கள் தெளிவாக தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் வாக்களித்தார்கள். சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற முடியாத காரணத்தால் இன்று மக்கள் நினைத்த மாற்றம் நடக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்தது இந்த எடப்பாடி பழனிசாமி அரசு போய்விட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அது தான் ஜனநாயக விருப்பம். இதை உணர்ந்து தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் அவர் நல்ல மனிதர்.

    எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் பார்க் கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்கள் சண்டை போட்டதே கிடையாது. இப்போது அவர்கள் செய்ய மாட்டார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவில் ஒரு பகுதி மக்கள் ஏன்? இவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உணரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஆயிரம்விளக்கு தொகுதியில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே பிரசாரத்தை தொடங்கி கோபாலபுரம் கலைஞர் இல்லம் வரை வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தி.மு.க. எம்.எல்ஏ.தான் உள்ளார். என்னையும் எம்.பி.யாக தேர்வு செய்தால் இந்த தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேலும் அதிகம் கிடைக்கும். இது தொகுதி மக்களுக்கு கிடைக்கும் இரட்டிப்பு யோகமாகும்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பா.ஜனதா தொடர்ந்து செயல்படுகிறது.

    எனவே மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்துக்கு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கு.க. செல்வம் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் திருவல்லிக்கேணி வி.பி.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நடந்து சென்று வாக்கு கேட்டனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறனுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019 #DMK

    பி.எஸ்.என்.எல். இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரிய தயாநிதி மாறன் அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #DayanidhiMaran #SC
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  2004-06ம் ஆண்டு வரை  தொலைத்தொடர்பு துறை மந்திரியாக தயாநிதி மாறன்  பதவி வகித்தார்.

    அப்போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தி, அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல்.  பொதுமேலாளர் பிரம்மநாதன், துணை மேலாளர் எம். வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன்நெட்வொர்க் துணைத் தலைவர் கண்ணன், தொழில்நுட்ப ஊழியர் ரவி ஆகியோர் மீது சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மீதான மனுவின் மீதான விசாரணை, வாதங்கள் முடிந்தன. இதில் மாறன் சகோதரர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

     பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், இந்த வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 25-ம்  வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லாது என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



    இந்த உத்தரவை எதிர்த்தும் இவ்வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளுமாறு மனுதாரர்களை அறிவுறுத்தியுள்ளது. #DayanidhiMaran #SC

    ×