என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்:
சரவணன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக விஷ்ணு, ரவி, அருண் பிரசாத், நரேஷ், அரவிந்த், பிரிதீங்கா, கார்த்திக், சித்தர் பாண்டியன், மணிமேகலை, ஹரி, ஜெகதா, சினோரா P.S. மோஹித், தமிழினியன், விவேக் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம்.
- இந்தக் கணக்கெடுப்பு. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது. இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்தக் கணக்கெடுப்பு. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு. மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும்.
இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Comm) நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்தப் புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வில் (Cinte Survey), மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தத் தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு செய்ய வேண்டியது இதைத்தான்.
எனவே. தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக. வாழ்வாதார. பொருளாதார. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும். அந்த ஆய்வானது. அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு. பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.
அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அத்துடன் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை. கபட நாடகத் திமுக அரசு, பிளவுவாத பாஜக அரசுடன் இணைந்து அமல்படுத்தத் தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
- அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார்.
அ.தி.மு.க.வுடன் இணையும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்கான சாத்தியக்கூறும் தென்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போது மத்திய மந்திரி அமித்ஷா தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாக தனது ஆதங்கத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க பா.ஜ.க.வும் ஆர்வம் காட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
இந்த நிலையில் எதிர்கால திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் சில ஒருமித்த கருத்துக்கள் உருவாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற ஜூலை 7-ந்தேதி கூட்டி அதில் முக்கிய முடிவை எடுப்பது என முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா? விலகுவதா? என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா? என நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என கோஷமிட்டு கட்சியை வளர்த்தவர்கள். அதனால் விஜய்யுடன் இணைந்து பயணிக்க கொஞ்சம் நெருடலாக உள்ளது. இப்போதைக்கு இந்த முயற்சி இல்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது" என்றனர்.
- ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது.
- எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு.
சென்னை:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி என்ற 3-வது அணி வலுவாக உருவானது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருந்தன. மேலும் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அதோடு வெறும் 6.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மண்ணை கவ்வியது. அ.தி.மு.க. 136 இடங்களிலும், தி.மு.க. 98 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த கூட்டணியால் வெற்றி பெற வேண்டிய தி.மு.க தோல்வி அடைந்து, அது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது என்று இன்றும் தேர்தல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த படுதோல்விக்கு பிறகு, மக்கள் நல கூட்டணி அடியோடு கலைக்கப்பட்டது. அதன்பின் தே.மு.தி.க. தவிர இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வருகின்றன. அதனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பாராளுமன்ற, உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல் என அனைத்திலும் வெற்றி மகுடம் சூட்டி வருகிறது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கூட்டணி வலுவான வெற்றி கூட்டணியாக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த கூட்டணியை உடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டது.
ஆனால் பழக, பழக பாலும் புளிக்கும் என்பதுபோல இப்போது தி.மு.க. கூட்டணியிலும் திரைக்கு பின் இருந்த சலசலப்புகள் பொது வெளியில் வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம், தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை பொது வெளியில் வைத்து வருகிறார். தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கூட்டணி கட்சிகளால் தி.மு.க. வெற்றி பெறுகிறது என்றும் பகிரங்கமாக கூறினார். இது தி.மு.க.வுக்கு சற்று ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.
இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 2015-ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி தொடங்க அச்சாரமிட்டது. இப்போது, அதேபோல மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாக அந்த கட்சி விரும்புகிறது என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கட்சி கூட்டணியில் இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து கொள்ளலாம். ஆனால் இதுவரை மவுனமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் ஏன் இப்படி பேச தொடங்குகிறார்கள்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் சிறிய கட்சிகளை பொறுத்தவரை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு தாங்கள்தான் காரணம் என்று எண்ணுகின்றனர். மேலும் அவர்கள் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். நமக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகின்றனர். இது சராசரியாக ஒவ்வொரு கட்சியின் ஏக்கம் தானே? தேன் எடுப்பவன் அதனை ருசிக்க கூடாது என்றால் எப்படி? அதுபோலத்தான் இதுவும்.
எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு. அந்த அடிப்படையில்தான் மக்கள் நலக்கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆட்சியில் பங்கு என்று கோஷமிடும் திருமாவளவன், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குறை சொல்லும் கம்யூனிஸ்டு, கமல்ஹாசனுக்கு கொடுத்த மேல்சபை எம்.பி. சீட்டை வைகோவுக்கு கொடுத்து இருக்கலாமே என்று ஏக்கப்படும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மீண்டும் ஒன்றிணைத்து மக்கள் நலக்கூட்டணி உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதில் இந்த முறை சீமானின் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகியவற்றையும் சேர்த்து, அதில் த.வெ.க. தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று கூறுகின்றனர். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? என்று விஜய் கட்சியில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகர் சர்வே எடுத்துள்ளார்.
அதில் வெற்றி உறுதி என்ற தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. எனவே இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் திரைக்கு பின்னால் பேசப்பட்டு வருகிறது. அதாவது கூட்டணி அமைத்து போட்டியிடலாம், வெற்றிக்கு பிறகு அதிகாரத்தையும் ருசிக்கலாம் என்று ஆசை வலை வீசப்படுகிறது.
மேலும், தி.முக., அ.தி.மு.க. ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மீண்டும் சாத்தியமா? என்றால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே இதற்கான பதில்.
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
- பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படப்பிடிப்பு பணிகள் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிலையில் இன்றுடன் பூஜா ஹெக்டே நடிக்க வேண்டிய பகுதிகள் முடிவடைந்துள்ளதாக பூஜா ஹெக்டே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
- எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன?
- அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பேசியதாவது:-
கலைஞர் ஆட்சியில் போராடி வாதாடி இன்றைக்கு 36 மெடிக்கல் காலேஜ் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனை கொண்டு வந்தவன் வேல்முருகன், கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்து விட்டது என்கிறீர்கள். கூத்து என்றால் எனது தமிழனின் மரபு வழி கலையாகும், அதில் என்ன உங்களுக்கு குறைச்சல்.
எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். போராளிகளை பற்றி போராளிகளிடம் மைக் நீட்டி கேளுங்கள். அவர்களுக்கு போராளிகள் பற்றி தெரியாது. அவர்களின் உலகம் வேறு. எங்கள் அண்ணனை விமர்சித்து விட்டீர்கள் என்கிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்து பேச வைக்கிறார்கள் நாங்கள் தற்குறி என்கின்றனர். அவர்கள் தான் தற்குறி.
உங்கள் அண்ணன் மட்டுமல்ல இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். இவர்கள்தான் பரிசுகளை கொடுக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் துணை நடிகர் பாலா என்பவர் கதாநாயகன் அல்ல. தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்துவதில்லை. ஷோ நடத்துவதில்லை.
ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எப்போதும் சூட்டிங் நடத்தவில்லை ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
நீங்கள் எல்லாம் 10-வது 12-வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறீர்கள். கடலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் அப்துல்கலாம்களாக வரவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு பத்திரிகை இல்லாமல் ஒரு புகைப்படக்காரர் இல்லாமல் செல்பி எடுக்காமல் ஒரு கோடி ரூபாய் நிதியை அறிவித்து விஞ்ஞான கல்விக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உதவியவன் நான் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
- நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெற்றது.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தவெக சார்பில் 4 கட்டங்களாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
- நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
- மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது கட்ட விழா இன்று நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
அப்போது பேசிய விஜய், ராஜேஸ்வரி வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து உள்ளார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை. கண்டிப்பாக ஆவீங்க. என்னுடைய wishes. all th best என்று கூறி அவருக்கு பேனாவை பரிசளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாணவி ராஜேஷ்வரி, நான் எப்படி படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்கு. நீங்களும் என்னை மாதிரி ஆக வேண்டும் என்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டும்தான் அதை விட்டுறாதீங்க. all the best girls என்று கூறினார்.
சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. சார் எனக்கு cash கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். சாருக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டி, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி உள்ளார்.
- தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
- சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம்.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம் பெற்றுள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாயவன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயவன், தமிழ்நாடு அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8 முறை சந்தித்துவிட்டோம். தமிழக அரசை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்.
எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விஜயிடம் தெரிவித்தோம். விஜய் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை கடந்த 13-ந்தேதி சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் விஜயை சந்தித்ததற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம். த.வெ.க. தலைவர் விஜயை தங்கள் அமைப்பினர் சந்திக்கவில்லை. உண்மைக்கு புறம்பான செய்தியை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
- புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறார்.
- கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.
- விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.
சென்னை:
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் முதற்கட்டமாக கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டதுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்காக விஜய் நிர்ணயித்தார்.
இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கைக்கென தனி சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
கட்சியில் புதிதாக சேர்வதற்காக ஆர்வமுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதள சர்வரே அடிக்கடி முடங்கியது. கட்சியில் சேர ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டினர்.
கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.
இதுவரை கட்சியில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி 70, 80, 90 வயதான முதியவர்களும் ஆர்வமுடன் கட்சியில் இணைந்து உள்ளனர்.
கட்சியில் சேர்ந்துள்ள முதியவர்கள் இதுவரை எந்த கட்சியிலும் இருந்ததில்லை.
உறுப்பினர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக த.வெ.க. தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கென ஏற்கனவே மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.
த.வெ.க. கொள்கை மற்றும் திட்டங்களை மாவட்ட செயலாளர்களும் தொண்டர்களும் வீடு வீடாக காலையிலும், மாலையிலும் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். தி.மு.க.வை சேர்ந்த வீடுகளுக்கு அ.தி.மு.க.வினர் செல்வதில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்த வீடுகளுக்கு தி.மு.க.வினர் செல்வதில்லை.
ஆனால் த.வெ.க.வினர் இரண்டு கட்சியினர் வீடுகளுக்கும் சென்று த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதையடுத்து புதிய உறுப்பினர்களாக சேருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் த.வெ.க.வில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் இணைந்துள்ளனர்.
மேலும் பல அரசியல் பிரபலங்கள் கட்சியில் இணைவதற்காக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
த.வெ.க. தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி இருக்கும் நிலையில் த.வெ.க.வின் அரசியல் பணிகளும் புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோவை, மதுரையில் விஜய் ரோடு-ஷோ நடத்தி மக்களை சந்தித்தார். அடுத்தக்கட்டமாக பல மாவட்டங்களுக்கு விரைவில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார்.
இதையடுத்து த.வெ.க. புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.