என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை தேர்தல்"

    • ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.
    • தி.மு.க.வில் தற்போது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாக உள்ள மகாராஜன் வருகிற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் இணைந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார். இதே போல் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், ஓ.பி.எஸ்.சின் மகனுமான ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளார். இது தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க.வில் தற்போது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாக உள்ள மகாராஜன் வருகிற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். அவருக்கும் தங்க தமிழ்செல்வன் எம்.பி.க்கும் அடிக்கடி கட்சியில் மோதல்கள் ஏற்பட்டு வந்தது.

    அரசு விழாவில் இது பயங்கரமாக வெடித்த நிலையில் இருவரும் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதனால் மகாராஜன் எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக ரவீந்திரநாத்தை களமிறக்க அவர் ஆதரவு கரம் நீட்டி வருகிறார். தற்போது கட்சியில் இணைந்து உடனடியாக ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதால் ஏற்கனவே தொகுதியை குறி வைத்து கட்சி பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரும்பாலும் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் தி.மு.க. சார்பில் ரவீந்திரநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்கு எவ்வாறு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்றுவார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின்பே தெரிய வரும்.

    • புதிதாக தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, மார்ச் 6-

    தமிழக சட்டசபை தோ்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டணியில் காங் கிரஸ், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்பட 21 கட்சிகள் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.

    கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 தொகுதி களிலும் தோல்வி அடைந் தது. இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப் பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதி களிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி அடைந்ததால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வில்லை.

    புதிதாக தி.மு.க. கூட்ட ணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதி கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வட தமிழகத்தில், விடு தலை சிறுத்தைகள் கட்சி மூலம் தலித் வாக்குகளையும், தே.மு.தி.க. மூலம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வாக்காளா்கள் மற்றும் பிற்பட்டோா் சமூக வாக்குகளை ஒருங்கி ணைத்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் உத்தியாகும்.

    கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக் கப்படும் என தெரிகிறது.

    கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டி யிட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு ஆகியவை தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் லைட் சின்னத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறை உதயசூரியன் சின்னத் தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதி யில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இவை தவிர, மனிதநேய ஜனநாயக பேரவை, கொங்கு இளைஞா் பேரவை, முக்குலத்தோா் புலிப்படை, புதிய திராவிடா் கழகம் உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளில் வேட்பா ளர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். 62 தொகுதிகளில் தனி சின்னத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டி யிட உள்ளதாக தி.மு.க. வட் டாரத்தில் கூறப்படுகிறது.

    • அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.
    • தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

    அதேபோன்று தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். இதனிடையே தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் இன்று வழக்கதை விட கூட்டம் அலைமோதுகிறது.

    இதனிடையே தி.மு.க. சார்பில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் விருப்பமனு அளித்தார். 

    • வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
    • மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-

    இது "எங்கள் குடும்பம்" என்று சொல்வதா, "கழகக் குடும்பம்" என்று சொல்வதா, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் "நமது குடும்பம்" என்ற நிலையிலேதான் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்பில் கழகப் பணி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்புக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே கழகத்தை உருவாக்குவதற்கு, கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் கடைசி வரையிலே கழகத்திற்கு, தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர்.

    அதைத் தொடர்ந்து அவருடைய மகன், என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலே ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி.

    ஆகவே இப்படித் தொடர்ந்தது அந்த உறவு. அதற்குப் பின்னால் இங்கே வரவேற்புரையாற்றிய உதயநிதி குறிப்பிட்டதைப் போல, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்றைக்கு எங்களுடைய குடும்பத்திலே, குறிப்பாக உதயநிதியிடத்திலே எந்த அளவுக்கு நட்போடு பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

    சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி, பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளிவிவரத்தையும் கையிலே வைத்துக் கொள்ளாமல் எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போல பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரைப் பார்த்து எல்லோரும் பாராட்டுகிற போது அவருடைய தந்தை என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவுக்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்போதும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ஆகவே இது இப்படித் தொடர்ந்து இன்னும் அன்பிலோடும் முடியவில்லை, தலைவர் கலைஞரோடும் முடியவில்லை, என்னோடும் முடியாது. நம்முடைய அன்பில் பொய்யாமொழியோடு முடியாது. அதேபோல நம்முடைய உதயநிதி, மகேஷோடு முடியப் போவதில்லை. உதயநிதியினுடைய மகன் இன்பனாக இருந்தாலும் சரி, மகேஷினுடைய மகன் இனியனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நட்பும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆகவே வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்து எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்துவிட்டுதான் இன்றைக்கு வந்திருக்கிறேன்.

    இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிற போது கையை எடுத்து இப்படி ஒரு சொல். அந்த ஆக்ஷனோடு நான் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்தது அல்ல. ஏதோ காரில் ஏற வருகிற போது அங்கே எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் என்னை பார்த்து "என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். "முடிந்துவிட்டது" என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு பெரிய வைரலாகி "எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் ஃபினிஷ்டு" அப்படின்னு சொல்ற மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

    ஆகவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்களாக இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிக்கு இரண்டு பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சென்னையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நாம் வழக்கமாகச் செல்வது உண்டு.

    ஆகவே இதை முடிச்சுட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான் வேகவேகமாக வந்து வேகவேகமாகத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு நான் செல்லவிருக்கிறேன். இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் பல்லாண்டுக் காலம் எல்லா நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    • தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர்.
    • யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    திண்டிவனம்:

    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டது. அன்புமணிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

    ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ் 3 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த 3 நாட்களும் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடன் பா.ம.க. கூட்டணியை உறுதி செய்ய முடியாத நிலையில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த.வெ.க. கூட்டணியில் ராமதாஸ் தரப்புக்கு 35 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    இந்த தொகுதிகளில் போட்டியிட உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது. எனவே, கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
    • சேலம், வேலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை விஜய் நடத்தி உள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அனேகமாக வருகிற 13-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக்கழகமும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இதற்கிடையே சேலம், வேலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை விஜய் நடத்தி உள்ளார்.

    இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு 2 வாரங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை விரைவில் விஜய் தொடங்க உள்ளார். ஏற்கனவே தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விஜய் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது.
    • கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகம் வருகை தந்து கூட்டணியை பலப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மக்களுக்கான நல்லாட்சியை தரமுடியும் என்றும் தெரிவித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ள நிலையில் மேலும் ஒருசில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தரவுள்ளார். அந்த வகையில் வருகிற 11-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்தன.

    அதன்படி திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    திருச்சியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் பங்கேற்க இருப்பதாகவும், அதற்குள் கூட்டணியை இறுதி செய்யவும் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.

    • டோல்கேட் வரி வசூலித்தல் கூடாது.
    • கனிமக் கொள்ளையை அனுமதிக்க மாட்டோம்.

    இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை:-

    மதுக்கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். சாராய ஆலைகள் ஒழிக்கப்பட்டு உணவாக, உழைக்கும் மக்களுக்காக கள்ளுக்கடைகள் தரமாக செய்யப்படவேண்டும்.

    இஸ்லாத்திற்கு எதிரானது என்றாலும், தமிழ்நாடு முழுக்க கோடிக்கணக்கில் அரசு இடம், தனியார், பொது இடங்களில் சாலை இருபுறமும் தென்னை-பனை மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். (10 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும்.)

    நீட் முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களை எந்தக் காரணம் கொண்டும் சிங்கள அரசு பிடிக்கவோ, கைது செய்யவோ கூடாது. கச்சத்தீவை திரும்பப் பெற்றே ஆக வேண்டும்.

    தமிழ்நாடு அரசு அடிப்படையில் நூல் முறையிலேயே கல்விக் கொள்கை அமைத்திடல் வேண்டும். கனிமக் கொள்ளையை அனுமதிக்க மாட்டோம்.

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தமிழ்நாட்டில் அவரவர் விகிதாச்சாரப் படியும், தமிழர்களுக்கு அனைத்து துறையிலும் தனியார் உட்பட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    டோல்கேட் வரி வசூலித்தல் கூடாது. எங்கள் கொள்கையில் ஒத்துப்போகிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். எங்களுடைய ஆதரவு கோடை மழையைப் போன்று நாட்டை குளிர்வித்து ஆதரவு தருகின்ற கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம்.

    தமிழர் நலனுக்கு புறம்பான கட்சிகளை எதிர்த்து வெகுதூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கிற ஏவுகணைகள் போன்று இருக்கும் எங்கள் ஆட்சி நல்லாட்சி அமைய பாடுபடுவோம்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் தமிழர்களுக்கு எதிரான கட்சிகளை நார் நாராக கிழித்து தொங்க விடுவோம். தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே தமிழன் தான் ஆள வேண்டும். தமிழக மீனவர்களை யாரும் கைது செய்ய கூடாது. இதை ஒத்துக்கொள்பவர்களிடம் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். இனியும் தூங்கி கொண்டிருக்க மாட்டோம். எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் தனித்து போட்டியிட மாட்டோம் என்றார்.  

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் சந்தித்து பேசினர்.
    • பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ப.சிதம்பரம் கட்சி தலைமைக்கு தெரிவித்தார்.

    தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ப.சிதம்பரம் கட்சி தலைமைக்கு தெரிவிப்பார் என்றும் அதைத்தொடர்ந்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் என்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று மாலை சென்னை வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதியாகி இருப்பதாக டெல்லி வட்டார தகவல் வெளியாகி உள்ளது.

    • திருச்சியில் மாநாடு நடத்தினால் அதைத்தொடர்ந்து வரும் தேர்தல் தி.மு.க. வெற்றி மாநாடாக தான் அமையும்.
    • இந்த மாநாடு, தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தி.மு.க. மாநில மாநாடுகளை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதை மரபாகவே கையாண்டு வருகிறது.

    அதன்படி நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்கிற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான திருப்புமுனையாக தி.மு.க.வின் 12-வது மாநில மாநாடு 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    200 ஏக்கரில் மாநாட்டு திடலும், மீதமுள்ள 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடங்கள், சமையல் கூடம் உள்ளிட்ட இதர பிற வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது. சுமார் 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றித்தரும் வகையில் நடைபெறும் பணிகளை மாவட்ட அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    மாநாட்டுத் திடல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை நேற்று அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு கேட்டறிந்தார். தொண்டர்களுக்கான உணவுக்கூடங்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்துடன் மாநாட்டு திடலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்தை சரிசெய்வது உள்ளிட்டவை குறித்தும் லால்குடி டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசாருக்கும் ஆலோசனைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

    திருச்சியில் மாநாடு நடத்தினால் அதைத்தொடர்ந்து வரும் தேர்தல் தி.மு.க. வெற்றி மாநாடாக தான் அமையும். கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடத்தி 9 தொகுதிகளை திருச்சி மாவட்டத்தில் முழுமையாக பெற்றது. அது மட்டுமின்றி தி.மு.க. ஆட்சிக்கும் வந்தது. அதே போல 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திருச்சி சிறுகனூரில் நடைபெறும் 12-வது மாநில மாநாடு முன்னோட்டமாக அமையும். இந்த மாநாடு, தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்.

    இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி எழுச்சியுரையாற்றுகிறார். முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றுப் பேசுகிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    மாநாட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, திருச்சி சிவா ஆ.ராசா, கனிமொழி எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின், தலைமை நிலைய அலுவலக செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைர மணி, காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் நன்றி கூறுகிறார்கள். 

    • நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
    • அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதி அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி கடந்த 28-ந்தேதி மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் மனு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் தரப்பில் பாதுகாப்பு தொடர்பாக 32 கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு த.வெ.க தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டதால் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து அய்யாசாமி பட்டி பிரிவு சாலையில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மைதானம் தயார் செய்யும் பணி தொடங்கியது. விழா நடைபெறும் இடத்தில் பூமி பூஜை நடந்து முடிந்தது. தொடர்ந்து பணிகள் துரிதமாக செய்து முடிக்கப்பட்டன.

    நிர்வாகிகள், தொண்டர்கள் அமருவதற்காக மேற்கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டது. வாகனங்கள் நிறுத்த 15 ஏக்கரில் இடம் தயார் செய்யப்பட்டது.

    இந்த பணிகளை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா, உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து 4,900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க கியூஆர் குறியீடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

    நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே த.வெ.க. நிர்வாகிகள் உற்சாகமாக வர தொடங்கினார்கள். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் காரில் புறப்பட்டார். 8.55 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 9.40 மணிக்கு திருச்சி சென்றார். பின்னர் திருச்சியில் இருந்து வேனில் தஞ்சை அய்யாசாமிபட்டி பகுதிக்கு புறப்பட்டார்.

    அப்போது விஜய்யை பார்ப்பதற்காக சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர் . விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தங்களது செல்போன்களில் செல்பி எடுத்தனர்.

     

    மேலும் வழி நெடுகிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். த.வெ.க.வின் சின்னமான விசில் ஊதி வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் விஜய் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். காரில் இருந்து இறங்கிய விஜய்க்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் பேசுவதற்காக அங்கு பிரசார பஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    முன்னதாக தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் பேசினார். இதனை தொடர்ந்து பிரசார பஸ்சில் ஏறி நின்றபடி விஜய் கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசப்போகிறார். அப்போது அவர் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க.வுக்கு ஏற்கனவே 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
    • தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகவும் தெரிகிறது. அதில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பெற்றிருந்ததாகவும், அதில் பல தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இந்த கூட்டம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது.

    இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜ.க. 50 தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வுக்கு 35 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளது. அதில் இருந்து டி.டி.வி. தினகரனுக்கு 5 அல்லது 6 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும்.

    அதேபோல் பா.ம.க.வுக்கு ஏற்கனவே 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாததால் பா.ம.க.வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக 25 தொகுதிகள் வரை அக்கட்சிக்கு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஜி.கே.வாசனுக்கு 3 தொகுதிகளும், ஐ.ஜே.கே.வுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இவர்களில் சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும், சில கட்சிகள் தாமரை சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்து உள்ளன.

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

    டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று இரவு அல்லது நாளை காலை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு கையெழுத்தானதும் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ளது.

    பிரதமர் மோடி வருகிற 7-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்து வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். வருகிற 11-ந்தேதி அவர் திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். எனவே 7-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் 11-ந்தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கவும் திட்டமிடப்பட்டு எடப்பாடி பழனிசாமி வேகமாக செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேல்சபை எம்.பி. பதவியை பொறுத்தவரை பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னொரு இடத்தில் அ.தி.மு.க.வே போட்டியிடலாம் என்றும் தெரிகிறது.

    ×