என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை தேர்தல்"
- சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.
- கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று இரவு வருகிறார். சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதே போன்று பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
- கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
* தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
* தி.மு.க. தவிர வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
* காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.
* தி.மு.க.வுடன் காங்கிரஸ் நடத்திய முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
* கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
- டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இந்நிலையில் கூடுதல் தொகுதி விவகாரத்தில் இருதரப்பும் விடாபிடியாக இருப்பதால் இழுபறி என தகவல்வெளியாகி உள்ளது.
39 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும், தி.மு.க. தரப்பில் 22 சீட்கள் மட்டுமே தர முடியும் என உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய்.
- கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4-ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் விஜய் வருகிற புதன்கிழமை தஞ்சாவூரில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் தரப்பில் காவல்துறையிடம் இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
இந்நிலையில் மதுரையில் இன்று இரவு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலுடன் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் தெரிய வந்துள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. அறிவிப்பதற்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது.
- விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
9-வது நாளாக இன்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
9-வது நாளான இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, கழக அமைப்பு துணை செயலாளர் ஆஸ்மன், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபன் ஆகியோர் பெற்றனர். அப்போது கழகத்தினர் ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது. இதே போன்று, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து திரண்டு விருப்ப மனுக்களை வாங்கிச் செல்கின்றனர்.
தி.மு.க.வில் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்.
- வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.
சென்னை:
சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் கண்காணிக்கப்படுவர்.
* தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்.
* SIR பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தமிழ்நாடு நினைவில் வைத்துக்கொள்ளும்.
* தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் உள்ளனர்.
* கடைசி 2 மின்னணு வாக்கு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதற்கு முன்பு தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.
* வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.
* படிவம் 6 மூலமாக இப்போது கூட வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.
- தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய்.
* தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும்.
* தமிழ்நாட்டில் SIR பணியை சிறப்பாக மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு.
* தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
* தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.
* தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
* ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
* 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
* 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
* வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இருக்கும் என்பதால் வாக்களிக்க எளிது.
* 2 மணிநேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
* தபால் வாக்குகள் இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றார்.
* இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்றார்.
- அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
- தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் வேலைகளை செய்து வருகிறது. அப்படியாக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தரப்பில் குழுக்களை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதுவரை முஸ்லிம் லீக், ம.தி.மு.க., ம.ம.க. ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
- மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
இதனிடையே, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதத்திற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னதாக தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
- முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
MLA பதவியை ராஜினாமா செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தி.மு.க.வில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
- அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்.
- வாக்குச்சாவடி மையங்களின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு குறித்து இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் 12 நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நியாயமான, வெளிப்படைத்தன்மையான தேர்தலை நடத்த வேண்டும்.
* தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் காட்டக்கூடாது.
அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்.
* வாக்குச்சாவடி மையங்களின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.
* தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட 17சி படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார்.






