என் மலர்

    நீங்கள் தேடியது "Jayakumar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது.
    • மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 24 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2017-ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின்போது சில சாட்சிகள் பிறள் சாட்சிகளாக மாறினர்.

    இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார்.

    அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, இன்று (திங்கட்கிழமை) ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஆஜரானார்.

    முன்னதாக அவர் விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜனதாவுடன் கூட் டணி இல்லை என்று கடந்த 18-ம் தேதி முடிவெடுத்து அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நிலையே தொடருகிறது.

    நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி கூட்டம் முடிந்ததும் அறிவிப்போம்.

    1972-ம் ஆண்டு முதல் பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்தான் அ.தி.மு.க. பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அ.தி.மு.க.வை ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகவே மத்திய மந்திரியை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். மத்திய மந்திரியிடம் கட்சி சார்ந்த விஷயங்கள் பற்றி பேசவில்லை என்றார்.

    அதை தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடக்கும் என்று உங்களுக்கு மிரட்டல் வந்ததாக தகவல் பரவி உள்ளதே என்று கேட்டதற்கு, "இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை. சோதனைகளை கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல" என்றார்.

    அந்த பூச்சாண்டி பா.ஜனதாவா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் மற்ற விஷயங்கள் நாளை கூறுகிறேன் என்றார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் மீண்டும் கூட்டணி தொடர்பாக கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
    • விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார்.

    கொடைக்கானல்:

    முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை எனவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

    இது தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். தான் கொடைக்கானலில் இருப்பதை இணையதளத்தில் பதிவு செய்ததைதொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் அவரை சந்திக்க திரண்டனர்.

    ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார். தற்போது அவர் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் எனவும் உதவியாளர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1000 ரூபாய் வழங்க ஆயிரதெட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.
    • தி.மு.க. அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த ஏற்பாடு நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது குறித்து தீர்மானக் குழு ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசித்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின், பொன்னையன், செம்மலை, தம்பிதுறை, பாலகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் 2 கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் வழங்காமல் தி.மு.க.வினருக்கே வழங்கப்படுகிறது.

    1000 ரூபாய் வழங்க ஆயிரதெட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். தி.மு.க. அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது.

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்குதான் தருகிறார்கள். தன்னார்வலர்கள் மூலம் படிவம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் விண்ணப்ப படிவம் வழங்குகின்றனர். தகுதியுடையவர்களுக்கு வழங்குவது இல்லை. தி.மு.க. பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பப் படிவம் கொடுக்கிறார்கள்.

    தி.மு.க.வுக்கு பாராளு மன்ற தேர்தலில் சரியான பதிலடி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம்.
    • 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள்.

    அமைச்சர் முத்துசாமியின் ஆலோசனை கொஞ்சம் கூட பொருந்தாதது என்றார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அவர் கூறியதாவது:-

    காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறக்க போவதாகவும், அது வேலைக்கு செல்வோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பது போலவும் அமைச்சர் முத்துசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

    காலையில் வேலைக்கு போகும்போதே சரக்கு போட்டுக்கொண்டு போனால் நிலைமை என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். வேலை நடக்குமா? இல்லை வேலை நடக்கும் இடத்துக்கு ஒழுங்காக போய் சேருவார்களா? அடுத்து இன்னொரு சீர் திருத்தத்தையும் கொண்டு வருகிறார்களாம். அதாவது பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம். 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள். அங்கு பிரிட்ஜிலோ அல்லது எங்கேயாவது வைத்திருப்பார்கள். இதை பார்க்கும் குழந்தைகள் என்ன நினைக்கும்? ஜூஸ் பாக்கெட்டுதான் வைத்திருக்கிறார்கள் என்று அதை எடுத்து குடிக்க தொடங்கும். ஆக வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது.
    • ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திராகாந்தி, லால்பக தூர் சாஸ்திரியையும் பிரதமராக உருவாக்கிய தமிழர். 1940ல் சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர். ஆனால் தற்போது சிறை கைதியாக இருந்துக் கொண்டு பதவியை காந்தம் போல பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குரலாக ஓ.பி.எஸ். இருக்கிறார். கொடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை. தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1-ந்தேதி ஓ.பி.எஸ். ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்வதை தடுக்கிறார்கள். இதற்குமேல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் நீட்டிக்காமல் அவரை நீக்குவதுதான் சரி.

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தக்காளி, இஞ்சியை கண்ணீல் பார்க்க முடிய வில்லை.

    டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது. எந்த மாநிலத்திலாவது டாஸ்மாக் நேரத்தை மாற்ற ஆலோசனை நடைபெற்றுள்ளதா? தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு சென்று ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று விடுவார்கள்.

    ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சேர்த்துக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருநாள் காட்சி மாறும். ஆட்சியும் மாறும்.
    • தி.மு.க. அரசில் நடைபெற்று வரும். அராஜகங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கொடி, இரட்டை இலை, லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தி வருவது மோசடி செயலாகும்.

    அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. அரசு விசாரணை நடத்தியது.

    வழக்கு நடந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக விசாரணை தாமதம் ஆனது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு உயர் போலீஸ் அதிகாரியிடம் இருந்து பதவி குறைந்த அதிகாரிக்கு மாற்றப்பட்டது. குறைந்த பதவி வகித்தவர் இதனை விசாரித்து வந்தார்.

    எதற்காக மாற்றப்பட்டது? இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் வலியுறுத்தினார்.

    ஒருநாள் காட்சி மாறும். ஆட்சியும் மாறும். தி.மு.க. அரசில் நடைபெற்று வரும். அராஜகங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இனிமேல் அண்ணாமலை அ.தி.மு.க. பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ விமர்சனம் செய்ய மாட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோருடன் அ.தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது தவறை திருத்திக் கொண்டுள்ளார். இனிமேல் அவர் அ.தி.மு.க. பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ விமர்சனம் செய்ய மாட்டார். ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோருடன் அ.தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்றால் போது என்று நினைத்ததால் தான் ஓ.பன்னீர்செல்வம் பணத்தை வாரி இறைத்து செலவு செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.
    • தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார் கூறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. பலரும் ஒன்று கூடி உள்ளார்கள். இது தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. கூடிவிட்டு எல்லோரும் கையைத் தூக்கிவிட்டதால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடுமையான கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற பெட்டிகளை கழற்றி விட்ட பின் அ.தி.மு.க. ரெயில் சென்று கொண்டிருக்கிறது.

    தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.

    தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படலாம்.

    எங்களைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; வந்தால்தான் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றி தெரியும் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எங்கும், எதிலும் ஊழல் என்ற அடிப்படையில் ஊழல் சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது
    • எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு காலத்தில் மக்கள் விரோத போக்கு, ஜனநாயக விரோத போக்கு, சட்டத்தின் அத்துமீறல்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை, மின்சார கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எங்கும், எதிலும் ஊழல் என்ற அடிப்படையில் ஊழல் சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சி எப்போது தூக்கி எறியப்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கி இருக்கிறது.

    தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை பாராளுமன்ற தேர்தலுக்காக செப்டம்பர் மாதம் கொடுத்து, ஆசை காட்டி விட்டு அப்புறம் நிறுத்தி விடும் சூழல் நிச்சயம் ஏற்படும்.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும். இலாகா இல்லாமல் எதற்கு அமைச்சர்?.

    அமலாக்கத்துறையினரிடம் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் மேலே இருந்து கீழே இருப்பவர்கள் வரை மாட்டக்கூடிய நிலைமை நிச்சயம் வரும்.

    மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார். இன்றைக்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. இன்னும் பல அமைச்சர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். தப்பு செய்தவர்கள் கம்பி எண்ணுகிற சூழ்நிலை நிச்சயம் உருவாகும்.

    எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம். நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். எத்தனை தொகுதிகள் என்பதை அ.தி.மு.க.தான் ஒதுக்கும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் கவர்னர் தொகுத்து வைத்திருக்கிறார்.

    மத்திய அரசும் உளவுப்பிரிவு மூலம் தகவலை திரட்டி வைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp