கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து குற்ற உணர்ச்சி இல்லாமல் விஜய் டான்ஸ் ஆடுகிறார் - ஜெயக்குமார்

அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து குற்ற உணர்ச்சி இல்லாமல் விஜய் டான்ஸ் ஆடுகிறார் - ஜெயக்குமார்
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நிதர்சனமான உண்மையான போட்டியே அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான். விஜயை கண்சிடரே பண்ண மாட்டார்கள்.

விஜய் நானும் ரவுடி தான்... என்னை ஜீப்பில் ஏற்றுங்கள் என்றால் எப்படி முடியும்.

கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி, ஈவு இரக்கம் இல்லாமல் கட்சியின் ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடுகிறார் விஜய். அந்த குடும்பங்கள் எவ்வளவு மனம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.

த.வெ.க. தலைவராக இருக்க விஜய்க்கு அருகதை இல்லை. லாட்டரி பணத்தில்தான் அரசியல் கட்சி நடத்துகிறார்.

எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான் போட்டி. அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.

பிரதமர் வந்தார். அவருடைய கட்சிக்காரர்கள் அவரை பூஸ்ட் பண்ண சொல்லலாம்.

நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.

எங்களுக்கு எல்லாம் கீழே தான். எங்களுக்கு யாரும் மேலே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com