என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின.

    செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 

    குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

    இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.

    கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின. இதன் விளைவாக, பாரம்பரிய பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    தொழில்நுட்பம் மட்டுமின்றி உற்பத்தி, நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.

    2025 இல் அதிக பணிநீக்கம் நடைபெற்ற நிறுவனங்களின் பட்டியல்

    1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.

    5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.

    7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

    8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.

    9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.

    10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.

    இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

    ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வேலைகளை தொழில்நுட்பங்கள் பறிக்கும் சைன்ஸ் பிக்ஷன் அதிபுனைவு நினைவாகி வருகிறது. 

    • ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெட்மி நோட் 14 5ஜி விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 சீரிசின் இந்திய வெளியீட்டுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 சீரிஸ் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாகும் என்று சியோமி உறுதிப்படுத்தியது.

    நாட்டில் தனது சந்தைப் பங்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சியோமி நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும்.

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2024ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிசின் ஆரம்ப விலையாகும். தற்போது, இந்த விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 ஆக மாறியுள்ளது.

    இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, நீங்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகக் குறையும். இவைதவிர மாத தவணை சலுகைகளும் உள்ளன. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சியோமி இந்தியா வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.

    அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் அதிக பிரைட்னஸ் கொண்டிருந்தது. இத்துடன் சோனி நிறுவனத்தின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருந்தது. இதில் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.

    இந்த நிறுவனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது. பாதுகாப்பிற்காக, திரையின் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் கொண்டிருக்கிறது.

    • ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
    • உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன என்று நம்ப வைத்தது.

    அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சுசான் ஆடம்ஸ் (83) என்ற மூதாட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவரது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) என்பவரால் அவர்களது வீட்டில் கடுமையாக அடித்து கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்.

    பின்னர் சோல்பெர்க் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

    கொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு சோல்பெர்க் ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் குடும்பத்தினர் வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து, இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி ஓபன் ஏஐ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    வழக்கின் பின்னணி

    ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56) முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார். உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

    இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

    சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

    "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

    இதன் விளைவாகவே எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    போலீசார் ஆய்வில், தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.

    இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தது.

    Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும். 

    • ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
    • நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.

    ரெட்மி நிறுவனம், ரெட்மி நோட் 15 5ஜி, நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகியவற்றை போலந்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் புதிய நோட் 15 சீரிஸ் உலகளவில் வெளியாகியுள்ளது. இவை பிரகாசமான AMOLED டிஸ்ப்ளே, பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா கொண்டுள்ளன.

    புதிய நோட் 15 5ஜி மாடலில் 6.77-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவை அதிகரித்த பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் சற்றே பெரிய 6.83-இன்ச் CrystalRes பேனல்களுடன் வருகின்றன. மூன்று மாடல்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வருகின்றன.

    இத்துடன் நோட் 15 மாடலில் IP65 ரேட்டிங், நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் IP68 ரேட்டிங் உடன் வருகின்றன. நோட் 15 5ஜி 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர் பயன்படுத்துகிறது. நோட் 15 ப்ரோ உலகளவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா பிராசஸருடன் வருகிறது. நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப் பயன்படுத்துகிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    பேட்டரியை பொருத்தவரை ரெட்மி நோட் 15 மாடலில் 5,520mAh, நோட் 15 ப்ரோ மாடலில் 6,580mAh மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 100W சார்ஜிங் கொண்ட 6,500 mAh யூனிட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் 4x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200MP சென்சார்களை கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா உள்ளது. நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.

    மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் ஜெமினி AI சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, வைபை 6E, ப்ளூடூத், NFC, GPS/GLONASS/Galileo/BeiDou, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி சி கொண்டிருக்கின்றன.

    • இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
    • ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

    ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி சமீபத்தில் தனது ரெட்மி 15C ஸ்மார்ட்போனினை ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியது.

    இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 15 5ஜி சீரிசை இந்திய சந்தையில் கொண்டுவர இருக்கிறது. ரெட்மி நோட் 15 சீரிஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சீரிசில் ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    இவற்றில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம். ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

    சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய மாடல்கள் 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தலைசிறந்த பிராசஸர், அதிநவீன கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    • 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறியது எக்ஸ்.
    • முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்தது.

    27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த விதிமீறலால் ஐரோப்பிய எக்ஸ் பயனர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் எக்ஸ் தங்களின் விளம்பர தரவுத்தளத்திற்கான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிவிட்டது என்றும் ஐரோப்பியஒன்றியம் குற்றம்சாட்டி இருந்தது.

    இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், அப்போதுதான் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் 797 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.      

    • இத்துடன் 108 ஸ்போர்ட்ஸ் மோட்கள், VO2 மேக்ஸ் பதிவுக்கான ஆதரவு உள்ளது.
    • ரியல்மி வாட்ச் 5 மாடல் 460mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ரியல்மி வாட்ச் 5 மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி P4x 5ஜி ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி வாட்ச் 5 மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் அல்ட்ரா மாடலைப் போன்ற டிசைன் கொண்டுள்ளது. இது பல ஸ்டிராப் நிறங்களிலும் வருகிறது. இந்த முறை, சிறந்த கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன.

    இதில் ஒரு பெரிய டிஸ்ப்ளே மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. இது ஒரு விலையுயர்ந்த வாட்ச் அல்ல, ஆனால் இது முற்றிலும் மலிவு விலையிலும் நிர்ணயிக்கப்படவில்லை.

    ரியல்மி வாட்ச் 5 விலை ரூ.4,499 ஆகும். இந்த வாட்ச் வைப்ரண்ட் ஆரஞ்சு, மின்ட் புளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் பிளாக் நிறங்களில் கிடைக்கும். இந்த சாதனத்தின் முதல் விற்பனை வருகிற 10ஆம் தேதி 25 முதல் தொடங்கும். அறிமுக சலுகையாக, ரியல்மி நிறுவனம் இந்த வாட்ச்-ஐ ரூ. 3,999க்கு விற்பனை செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட், ரியல்மி இந்தியா வலைதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல ஆஃப்லைன் சேனல்களில் விற்பனைக்கு வரும்.

    ரியல்மி வாட்ச் 5 மாடலில் 600nits பிரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய பெரிய 1.97-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 22mm ஸ்ட்ராப்புடன் கூடிய மெட்டல் யூனிபாடி டிசைனுடன் வருகிறது. இத்துடன் 108 ஸ்போர்ட்ஸ் மோட்கள், VO2 மேக்ஸ் பதிவுக்கான ஆதரவு உள்ளது.

    இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, பெண்களின் சுகாதார நுண்ணறிவு மற்றும் பல உள்ளன. புளூடூத் காலிங் மற்றும் NFC சப்போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதியுடன் வருகிறது.

    ரியல்மி வாட்ச் 5 மாடல் 460mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. துல்லியமான நேவிகேஷனுக்காக பல செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான ஆதரவுடன் சுயாதீன GPS கொண்டுள்ளது.

    • இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது.
    • பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகத்தை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 15C 5ஜி-யின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ C85 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 SoC வழங்கப்படுகிறது. இது மலிவு விலையில் நம்பகமான 5G இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




    புகைப்படம் எடுப்பதற்கு, 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. இது நீண்ட கால பேட்ரி பேக்கப் வழங்குவதை உறுதி செய்கிறது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போக்கோ C85 5ஜி ஸ்மர்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

    • இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.
    • சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் trifold ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z trifold-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ஒரு நிலையான ஸ்மார்ட்போனில் இருந்து 10 இன்ச் டேப்லெட் அளவிலான டிஸ்ப்ளே வரை விரிவடையும் பல-மடிப்பு டிசைன் கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z trifold அதன் இரண்டு தனித்துவமான டிஸ்ப்ளேக்களால் வரையறுக்கப்படுகிறது. கவர் ஸ்கிரீன் 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X பேனல் ஆகும், இது நிலையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பரிமாணங்களை பிரதிபலிக்கிறது. இது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

    விரிக்கும்போது, சாதனம் 2160 x 1584 தெளிவுத்திறன் கொண்ட 10.0-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X பிரதான திரையை வெளிப்படுத்துகிறது. இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.



    சாம்சங் நிறுவனம் Z TriFold மாடலை புகைப்படங்கள் எடுக்க தலைசிறந்த சாதனமாக நிலைநிறுத்துகிறது. இதில் OIS, F1.7 200MP வைடு-ஆங்கிள் கேமரா உள்ளது. இத்துடன் 12MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x வரை டிஜிட்டல் "ஸ்பேஸ் ஜூம்" வழங்கும். செல்ஃபி எடுக்க இரண்டு தனித்தனி 10MP சென்சார்களை கொண்டுள்ளது.

    இந்த சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. இது 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் 5,600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    புதிய கேலக்ஸி Z TriFold 512 ஜிபி மாடலின் விலை 2,445 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,19,235 ஆகும். இது டிசம்பர் 12ஆம் தேதி முதல் கொரியாவில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சீனா, தைவான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகளில் வெளியிடப்படும்.

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
    • பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனம் C சீரிசில் முற்றிலும் புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி C85 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ 144Hz LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 5300+ mm² VC கூலிங், 8 ஜிபி ரேம், 10 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, AI எடிட் ஜீனி, 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் இதில் IP69 Pro வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி கொண்டுள்ளது, இது 2 நாட்கள் வரை பயன்பாட்டை உறுதியளிக்கிறது, இத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, கலிலியோ, QZSS, USB டைப்-C உள்ளது.

    ரியல்மி C85 5ஜி ஸ்மார்ட்போன், பரோட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடலின் விலை ரூ. 15,499 ஆகும். 6GB + 128GB மாடலின் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கிறது.

    • அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
    • நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.

    ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல், மூன்றாம் தரப்பு மூலம் விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.

    மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும்.
    • இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும். இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாழ்நாள் முழுக்க உத்தரவாதத்துடன் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6T-ஐ போலவே இருக்கும் என தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மற்றும் 8000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

     


    இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் 50MP + 8MP கேமரா சென்சார்கள் இடம்பெறுகின்றன.

    இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. வழக்கம் போல், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

    ×