என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய்வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
    • நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.

    பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

    இருவரும் சதத்தை நோக்கி சென்றனர். வில் யங் 98 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். டேரில் மிட்செல் அபாரமாக விளையாடி 96 பந்தில் சதம் விளாசினார்.

    இருவரும் நிலைத்து விளையாட நியூசிலாந்து அணி வெற்றி நோக்கி பயணித்தது. இருவரும் ஆட்டமிழக்காமலும், அதிரடியை நிறுத்தாமலும் விளையாடியதால் நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும், கிளென் மிட்செல் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 18-ந்தேதி இந்தூரில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    • நியூசிலாந்து தொடக்க வீரர்கள் டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
    • டேரில் மிட்செல் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.

    பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

    இருவரும் அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 31 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி வெற்றி்கு 19 ஓவரில் 128 ரன்கள்தான் தேவை. இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தாவிடில், நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    • பி.வி. சிந்து முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார்.
    • அதன்பின் 12-21, 15-21 என 2-வது மற்றும் 3-வது கேம்களை இழந்தார்.

    இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து, முதல் சுற்றில் வியட்நாமின் துய் லிங் நகுயென்னை எதிர்கொண்டார். இதில் 68 நிமிடங்கள் போராடி பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களில் 12-21, 15-21 என தோல்வியை சந்தித்தார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இந்தியாவின் மற்றொரு வீரரான தருண் மன்னேபல்லியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 15-21, 21-6, 21-19 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மாளவிகா பன்சாத் சீன தைபேயின் யு போவை 21-18, 21-19 என வீழ்த்தினார்.

    அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 3 ஜோடிகள் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தன.

    • போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடைபெற இருக்கிறது.
    • 2022-க்குப் பிறகு ஆஸ்திரேலியா இருதரப்பு தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து மார்ச் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக முன்னணி அணிகள் தயாராகி வருகின்றன.

    ஆசிய கண்டத்திற்கு வெளியில் உள்ள அணிகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் உலகக் கோப்பைக்கு முன் சில டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. உலகக் கோப்பைக்கு இந்த போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகின்றன.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் டி20 அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

    ஜனவரி 29, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக ஆஸ்திரேலியா அணி ஜனவரி 28-ந்தேதி பாகிஸ்தான் செல்கிறது. போட்டிகள் அனைத்தும் பகல்-இரவு ஆட்டமாக லாகூரிலா் நடத்தப்படுகின்றன.

    ஆஸ்திரேலியா கடந்த 2022-ம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானில் இருதரப்பு தொடரில் விளையாட இருக்கிறது. என்றாலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் விளையாடுவதற்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது.

    பாகிஸ்தான் தேர்வாளர்கள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹசன் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆஹாவை சந்தித்து அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வியிடம் ஒப்புதல் பெற்று அடுத்த வாரம் அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    • பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 24 ரன்னிலும் சுப்மன் கில் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கோலி 23 ரன்னிலும் ஷ்ரேயாஸ் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    118 ரங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 27 ரன்னில் ஜடேஜா அவுட்டாக பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

    50 ஓவர்கள் முடிவில் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். 

    • டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன் 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
    • தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளார்.

    மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், 4 முறை பேட்மிண்டன் உலக சாம்பியனான டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன், டெல்லி காற்று மாசுவின் காரணமாக 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளதாகவும் "இது ஒரு பேட்மிண்டன் போட்டி நடத்துவதற்கு தகுதியான இடம் அல்ல" எனவும் தனது இன்ஸ்டாகிராமில் அண்டர்ஸ் அண்டன்சன் பதிவிட்டுள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி 302 ரன்கள் குவித்தார்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி (785 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

    முதலிடத்தில் இருந்து ரோகித் 2 இடங்கள் சறுக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார். நியூசில்ந்து வீரர் டேரில் மிட்செல் (784 புள்ளிகள்) 2 இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 4-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    • இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது
    • இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கவுள்ளது.

    இந்த போட்டியில் காயம் காரணமாகி விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • தொடக்க நாளில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
    • ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது

    19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1988-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.

    இதுவரை 15 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது.

    16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்துகிறது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறு கிறது.

    இதில்16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம்:-

    ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜப்பான் (ஏ பிரிவு), இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா (பி பிரிவு), இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து (சி பிரிவு), தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா (டி பிரிவு).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளில் 3 ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.

    நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் - தான் சானியா அணிகள் மோதுகின்றன.

    • அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
    • இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7- ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை.

    இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காெணாலி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதனால் அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடு களிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்–பார்ன் சுகிதா சுவாச் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-ஹரிகரன் அம்ச கருணன் ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் யீ சின்-டியோ ஈ யி ஜோடியை வெளியேற்றியது.

    ×