என் மலர்
விளையாட்டு
- எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள்.
- வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.
உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் சூர்ய குமார்யாதவ் கூறியதாவது:-
நாங்கள் கோப்பையை கைப்பற்றி விட்டோம் என்பதை உணர கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இது நீண்ட பயணமாக இருந்தது. 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது.ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கினார்கள். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். நல்ல கிரிக்கெட் தொடர்புடைய பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
2024-க்குப் பிறகு எல்லாம் மாறியது. 2024-ல் நாங்கள் வேறு வகையான கிரிக்கெட்டை விளையாடினோம், அதில் இருந்து இந்த அணி எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.
கடந்த ஒரு மாதமாக அற்புதமான பயணமாக இருந்தது. இந்த பயணம் முழுவதும் ஒரு அணியாக நாங்கள் சாதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை படைத்து இருக்கிறோம்.
நான் ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் ரன்கள் எடுப்பது முக்கியத்துவம் பெற்றது.
எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.
2025-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், முற்றிலும் மாறுபட்ட வகையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். தற்போது 2026-ல் சொந்த நாட்டு மக்கள் முன்பு சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதித்தோம்.
எனவே 2027, 2028, 2029 ஆண்டுகளிலும் அதை தொடர விரும்புகிறோம். எங்களை தடுக்க முடியாது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எங்களது அடுத்த இலக்காகும். அதே ஆண்டில் தான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
- ஜெய்ப்பூரைச் சேர்ந்த அதிதி ஒரு மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.
- கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அனைத்து வீரர்களும் தனது குடும்பத்தினருடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி மகிழந்தனர்.
அந்த வகையில் இஷான் கிஷன் தனது நீண்டகால காதலியான அதிதி ஹுண்டியாவை மைதானத்தில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
மைதானத்திற்கு வந்த அதிதி ஹுண்டியாவுடன் இணைந்து இஷான் கிஷன் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் நடனமும் ஆடி மகிழ்ந்தனர். இறுதியாக இஷான் கிஷன் தனது காதலிக்கு மைதானத்தில் வைத்து ஒரு மோதிரை பரிசளித்து தனது காதலை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அதிதி ஒரு மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் 2017 'ஃபெமினா மிஸ் இந்தியா' இறுதிப் போட்டியாளர் மற்றும் 2018 'மிஸ் திவா சூப்பர்நேஷனல்' பட்டத்தை வென்றவர்.
கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது இருவரும் ஒன்றாகக் கொண்டாடியது இவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
முன்னதாக பிப்ரவரி 2026-ல், இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே அளித்த பேட்டியில், இஷான் மற்றும் அதிதியின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும், அவர்களுக்குத் திருமணத்தில் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார்.
- 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன். 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெய வர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.
89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்.
- 9 முதல் 12-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.24 கோடி வழங்கப்பட்டன.
- 13 முதல் 20-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.03 கோடி வழங்கப்பட்டன.
அகமதாபாத்:
நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்தது.
சஞ்சு சாம்சன் 46 பந்தில் 89 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) , இஷான் கிஷன் 25 பந்தில் 54 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர்), அபிஷேக் சர்மா 21 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) , ஷிவம் துபே 8 பந்தில் 26 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேம்ஸ் நீசம் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
256 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 19 ஓவரில் 159 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.
டிம் ஷெய்பெர்ட் அதிகபட்சமாக 26 பந்தில் 52 ரன்னும் ( 2 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் சான்ட்னெர் 35 பந்தில் 43 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 4 விக்கெட்டும், அக் ஷர்படேல் 3 விக்கெட்டும் ஹர்திக் பாண்ட்யா , வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.75 கோடி வழங்கப்பட்டது. கடந்த முறை வழங்கப்பட்ட அதே பரிசு தொகை வழங்கப்பட்டது.
அரை இறுதியில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா ரூ.6.30 கோடி கிடைத்தது. 5 முதல் 8-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.48 கோடியும், 9 முதல் 12-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.24 கோடியும், 13 முதல் 20-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.03 கோடியும் வழங்கப்பட்டன.
ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.28.64 லட்சம் பரிசாக கிடைத்தது. மொத்தம் ரூ.101 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
- மிகவும் தகுதியான தொடர் நாயகன் சஞ்சு சாம்சனுக்கு எனது வாழ்த்துகள்.
- மிகவும் முக்கியமான நேரத்தில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 80.25 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். 199 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் தகுதியான தொடர் நாயகன் சஞ்சு சாம்சனுக்கு எனது வாழ்த்துகள். மிகவும் முக்கியமான நேரத்தில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். உங்களை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன், செட்டா (Chetta)!" எனப் பதிவிட்டுள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 3-வது முறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
3-வது முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது, டி20 வடிவத்தில் எந்த அணியும் இதைச் செய்தது இல்லை. இதுவே முதல் முறை. கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியான மற்றும் சரியானவர்கள்.
அணியின் அற்புதமான செயல்திறன் மற்றும் கிரிக்கெட்டின் சிறப்பு பிராண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாம்பியன்கள். அகமதாபாத்தில் இந்திய அணிக்கு கிடைத்த அபார வெற்றி. போட்டி முழுவதும்விளையாடிய அதிரடி கிரிக்கெட். கடினமான சூழ்நிலைகளில் தொடர்ந்து போராடி மீண்டும் உலக சாம்பியன்களாக மாற இந்திய வீரர்கள் காட்டிய அற்புதமான குணம். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து வீரர்களுக்கும் நிர்வாகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் என தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை பாராட்டி எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில் கம்பீரை தோனி கலாய்த்ததால் அந்த பதிவு இணையத்தில் வைரலானது.
அந்த பதிவில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு 'கில்லர் காம்போ'. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.
- சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பினராயி விஜயன் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அணிக்கு ஒரு வரலாற்று வெற்றி. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அற்புதமான வெற்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம்.
டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட சஞ்சுசாம்சனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். நீங்கள் கேரளாவையும் முழு இந்தியாவையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி" என்று தெரிவித்துள்ளார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
- சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
- இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
- ஐசிசி தொடர்களில் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி நியூசிலாந்து.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 255 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது. அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவுவது இது 6-வது முறையாகும்.
இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே (2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது.
2009 சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2015 ஒருநாள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2019 ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் தோல்வி.
2021 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2026 டி20 உலகக்கோப்பை: நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
இருப்பினும், ஐசிசி தொடர்களில் அதிகமுறை (14 முறை) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து இப்போதும் தக்கவைத்துள்ளது.
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின.
- இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடியால் 255/5 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (4/15) மிரட்ட, நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு மற்றும் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற முப்பெரும் சாதனைகளை இந்தியா படைத்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் இன்று அதிகாலையில் நரேந்திர மோடி மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனுமன் தெக்ரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த அனுமன் கோவிலில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் கழுத்தில் மாலையுடன் கையில் கோப்பையை ஏந்தியபடி சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
- இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியதாவது:
இது நீண்ட நெடிய பயணமாக இருந்தது. 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது. ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கினார்கள். அவர்கள் அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.
இரண்டு ஆண்டாக நாங்கள் கடுமையாக உழைத்து தற்போது உலகக் கோப்பையை மீண்டும் வென்றுள்ளோம்.
நான் ஒவ்வொரு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள், அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும்.
எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். அதுவும் இறுதிப்போட்டியில் ரன்கள் சேர்த்திருப்பது உண்மையிலே ஸ்பெஷலான ஒரு விஷயம்.
பும்ரா ஒரு தலைமுறையின் கிடைக்கும் ஒரு வீரர். நான் எப்போதுமே அவரை இந்த தேசத்தின் சொத்து என்று தான் கூறுவேன். முக்கியமான ஆட்டங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். எப்படி அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர்.
எங்கள் அணியில் இரண்டு உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும். இதுதான் என்னுடைய வெற்றிக்கான ரகசியம் என தெரிவித்தார்.






