என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா"
- உலகப் பொருளாதாரத்தின் இதயம் என்று அழைக்கப்படுவது ஹார்முஸ் ஜலசந்தி.
- ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீதம் கச்சா எண்ணெய்யும், இந்தியாவுக்கு தேவையான 50 சதவீதம் கச்சா எண்ணெய்யும் செல்கிறது.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்துக்கு நடுவே இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷியா வழங்கியுள்ளது. மேலும் நாட்டின் 40 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் இதயம் என்று அழைக்கப்படுவது ஹார்முஸ் ஜலசந்தி. ஈரான் அருகே அமைந்துள்ள இந்த ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீதம் கச்சா எண்ணெய்யும், இந்தியாவுக்கு தேவையான 50 சதவீதம் கச்சா எண்ணெய்யும் செல்கிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக இப்போது இந்த வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.
3,200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலிலும் துறைமுகங்களிலும் தேங்கி நிற்பதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன. பெட்ரோல்-டீசல் எரிபொருளுக்கு முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளநிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. ரஷியா எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை காரணம் காட்டி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து இருந்ததால் இந்த உதவியை பெற இந்தியா தயக்கம் காட்டியது.
ஆனால் தற்போது ரஷியாவின் உதவியை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி முதல்கட்டமாக இந்தியாவுக்கு 95 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷியா வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் ரஷியாவின் பால்டிக் மற்றும் கருங்கடல் வழியாக இந்தியாவின் அரபிக் கடலுக்கு ரஷிய கச்சா எண்ணெய் பீப்பாய்கள் வரவிருக்கின்றன.
ஏற்கனவே இவை புறப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டது. ஒருவாரத்துக்குள் அவை இந்தியாவுக்கு வந்தடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு தேவையான 40 சதவீதம் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதாகவும் ரஷியா உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியாவுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கிறோம்" என்றுள்ளது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவை ஒருநாளுக்கு 60 லட்சம் பேரல்களாகும். இருப்பினும் ரஷியாவின் இந்த உடனடி உதவி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒரு முக்கியமான அவசர கால உதவியாக அமையும் என்பது மறுப்பதற்கில்லை.
- இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதி மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார்.
அடுத்து, களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் தனி ஆளாகப் போராடினார். வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்தனர்.
பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசி அவுட்டானார்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார்
இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சதம் அடிக்காததது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சிறப்பாக விளையாடிய சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட்டானார்.
கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 253 ரன்களை குவித்தது.
- சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை ஹாரி புரூக் தவறவிட்டார்
- தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார்
இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சதம் அடிக்காததது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.
சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
- 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- ரஷியாவிடம் இருந்து நாளொன்றுக்கு 14 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க முடிவு.
- பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை.
போர் சூழல் காரணமாக ரஷியாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் கையிருப்பு உள்ள நிலையில் ரஷியாவிடம் கூடுதலாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளதால் ரஷியாவிடம் இருந்து கூடுதலாக வாங்க முடிவு செய்துள்ளது.
தற்போது ரஷியாவிடம் இருந்து 40 சதவீதம் அளவிற்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில் அதன் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது பாதிக்கப்பட்டதால் புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்தியா புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷியாவிடம் இருந்து நாளொன்றுக்கு 14 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிறநாடுகளை விட ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலையில் வாங்குவதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
- ஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய கூட்டுத் தாக்குதலில் கமேனி உயிரிழந்தார்.
- இந்திய அரசின் சார்பில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார் விக்ரம் மிஸ்ரி.
ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் மறைவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் சார்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று டெல்லியில் உள்ள ஈரான் தூதரகதிற்குச் சென்று ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
மத்திய கிழக்கில் மோதல் வெடித்ததில் இருந்து இந்தியா அமைதி காத்து வந்தது. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு மட்டும் ஈரானுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
அதற்கும் இந்திய தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தநிலையில், தற்போது இந்தியத் தரப்பில் கமேனி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் உடனடியாக கண்டனமோ, இரங்கலோ தெரிவிக்காவிடினும் அலி கமேனியின் மறைவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள், குறிப்பாக ஷியா முஸ்லிம் சமூகத்தினர் கடும் துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சேனலான "ஒன் அமெரிக்கா நியூஸ்" நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியின் போது, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்திய கடற்படை தளங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் கூறியதை அடுத்து வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
"எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது, இது சிறந்ததல்ல; கடற்படை சொல்வது இதுதான்," என்று அவர் நேர்காணலில் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்பு குழு, ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கில் கூறப்படும் தகவல்கள் "போலியானவை மற்றும் தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று X தளத்தில் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் மோதல் குறித்து இந்தியா "கவலை" தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தி 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகளை ஏவி வருகிறது.
- இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது.
- சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரு அணிகளும் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
நடப்பு தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 72 ரன்னில் வீழ்ந்தது. அதற்கு பிறகு நெருக்கடியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்றது. லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலம்.
அபிஷேக் சர்மாவின் பேட்டிங் கவலையை ஏற்படுத்துகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்), இஷான் கிஷன் (224), திலக் வர்மா (178 ரன்), ஷிவம் துபே (166) ஆகியோர் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா (9 விக்கெட்), வருண் சக்கரவர்த்தி (12 விக்கெட்) ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் (172 ரன், 6 விக்கெட்) சிறப்பாக செயல்படுகிறார்.
இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்து எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவது அவசியம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி புரூக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 1 சதம், 1 அரை சதத்துடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். வில் ஜேக்ஸ், பெத்தல், பான்டன், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சில் அதில் ரஷீத் (11 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், டாசன் (தலா 10 விக்கெட்) ஓவர்டன் (9), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் தடுமாறிய இங்கிலாந்து அணி அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடமுடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரையிறுதியில் ஆடுகிறது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் ஏற்படாது.
- தாக்குதலை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
- 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சி ஆகிய இரு பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 85 போர்க்கப்பல்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன. இதில் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஈரானின் ஐஆர்ஐஎன்எஸ் தேனா போர்க்கப்பலும் பங்கேற்றது.
கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து தேனா போர்கப்பல் ஈரான் திரும்பியது. இந்நிலையில் இன்று இலங்கை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கைக் கடற்கரையிலிருந்து சுமார் 40 நாட்டிகல் மைல் தொலைவில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலால் கப்பல் நீரில் மூழ்கியதாகவும், அதில் இருந்த சுமார் 180 பேரில் 100-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு ஈரானிய கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை சமிஞ்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கை விமானப்படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விமானப்படை, கடற்படை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் உடலாக கண்டெடுக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் தெற்கு துறைமுக நகரமான காலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இப்போது வழங்க முடியாது எனவும் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு அவர்கள் செல்வதற்குள் கப்பல் நீரில் மூழ்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் இந்த சம்பவம் நடந்தாகவும், ஆனாலும் இலங்கை கடற்படை உதவிகளை புரியும் என தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இந்த தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டது என அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்தது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.






