என் மலர்
நீங்கள் தேடியது "US"
- ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.
- பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, இந்தியா உலகின் 2-வது பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆயுத இறக்குமதியில் உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2 சதவீதம். இருப்பினும், 2015-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதம். முந்தைய காலகட்டத்தில் இது 51 சதவீதமாக இருந்தது. 2011-15 காலகட்டத்தில் இது 70 சதவீதமாக இருந்தது. ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது. 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு 80 சதவீதமாக இருந்தது. 2016-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா (35 சதவீதம்), ரஷியா (17 சதவீதம்) மற்றும் சீனா (14 சதவீதம்) உலகிற்கு ஆயுத சப்ளையர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.
- அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தனர்.
- எண்ணெய் விலைகளை குறைக்க உதவும் குறுகிய கால நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்றார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
அதன்பின் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதால் இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக எரிசக்தி தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு இந்தியா கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகில் எண்ணெய் நன்றாக விநியோகிக்கப்படுகிறது. நேற்று எங்கள் நட்பு நாடான இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க கருவூலத்துறை ஒப்புதல் அளித்தது. இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்களாக உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டிருந்தோம். அதை அவர்கள் செய்தார்கள். அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தனர்.
ஆனால் உலகெங்கிலும் உள்ள தற்காலிக எண்ணெய் விநியோக பாதிப்பால் ரஷிய எண்ணெயை வாங்கி கொள்ள நாங்கள் இந்தியா க்கு அனுமதி வழங்கி உள்ளோம். மற்ற ரஷிய எண்ணெய் மீதான தடையை நாங்கள் ரத்து செய்யலாம் என்றார்.
அதேபோல் அமெரிக்க எரிசக்தித்துறை மந்திரி கிறிஸ் ரைட் கூறும்போது, இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் ஏற்கனவே தெற்காசியா முழுவதும் கப்பல்களில் உள்ள ரஷிய எண்ணெயை எடுத்துச் செல்லவும், அதை சுத்திகரிக்கவும், விரைவாக சந்தைக்கு நகர்த்தவும் அமெரிக்கா அனுமதிக்கிறது. எண்ணெய் விலைகளை குறைக்க உதவும் குறுகிய கால நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்றார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார் என்று கேட்டு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
- தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழில் பிரதானமாக உள்ளது.
தென்னை மட்டையில் இருந்து நார் துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சியில் உள்ள ஆலைகளில் உற்பத்தியாகும் தென்னை நார் துகள் மற்றும் நார்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற துறைமுகங்களுக்கு கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல், அமெரிக்க இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரான் தனது கடல் எல்லையை மூடி விட்டதால் வர்த்தக கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் கேரளத்தின் கொச்சி துறைமுகங்களில் தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பினர் கூறியதாவது:-
இந்தியாவில் ஆண்டுக்கு 11 லட்சம் டன் தென்னை நாரும், 20 லட்சம் டன் தென்னை நார் துகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே அமெரிக்க விதித்த வரி உயர்வு காரணமாக இந்த தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் வரி குறைப்பின் காரணமாக சிறிய முன்னேற்றம் காணப்பட்டது.
தற்போதைய போரால் ஈரான் தனது கடல் எல்லையை மூடியதால் வெளிநாடுகளுக்கு தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் போர் நீடித்தால் ரூ.1000 கோடி வரை தென்னை நார் மற்றும் நார் துகள் ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு உள்நாட்டு வணிகத்தை அதிகப்படுத்தும் சாத்திய கூறுகளை கயிறு வாரியம் மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கயிறு வாரியம், உற்பததியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, நேபாளம், பூடான், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று தொழில் முன்னேற்றத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
- நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ரஷியாவிலிருந்து இந்தியா 30 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்யும்போது, அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?
விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற உடனேயே, ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா மூழ்கடித்ததும் சமமாக கவலையளிக்கிறது. பன்னாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்த ஒரு கப்பல் அத்தகைய விதியை சந்திக்கும் போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்ற முடியாது.
இந்தியாவின் நீண்டகால மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் பாரம்பரியத்தில் மத்திய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்ததாகத் தெரிகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- தாக்குதலை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
- 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சி ஆகிய இரு பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 85 போர்க்கப்பல்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன. இதில் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஈரானின் ஐஆர்ஐஎன்எஸ் தேனா போர்க்கப்பலும் பங்கேற்றது.
கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து தேனா போர்கப்பல் ஈரான் திரும்பியது. இந்நிலையில் இன்று இலங்கை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கைக் கடற்கரையிலிருந்து சுமார் 40 நாட்டிகல் மைல் தொலைவில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலால் கப்பல் நீரில் மூழ்கியதாகவும், அதில் இருந்த சுமார் 180 பேரில் 100-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு ஈரானிய கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை சமிஞ்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கை விமானப்படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விமானப்படை, கடற்படை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் உடலாக கண்டெடுக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் தெற்கு துறைமுக நகரமான காலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இப்போது வழங்க முடியாது எனவும் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு அவர்கள் செல்வதற்குள் கப்பல் நீரில் மூழ்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் இந்த சம்பவம் நடந்தாகவும், ஆனாலும் இலங்கை கடற்படை உதவிகளை புரியும் என தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இந்த தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டது என அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்தது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
- முந்தைய உச்ச தலைவரை போலவே மோசமான ஒருவர் பொறுப்பேற்றால் ஈரானுக்கு மோசமான நிலை ஏற்படும்.
- நாடுகள் அனைத்தும் ஈரானுக்கு எதிராக வலுவாகப் போராடுகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் பெரும்பாலான ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ஈரானில் எல்லாமே முறியடிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் கடற்படை இல்லை. விமானப்படை இல்லை. வான்வழி கண்டறிதல் இல்லை. அவர்களின் ரேடார் முறியடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே முறியடிக்கப்பட்டுள்ளன.
அவர்களிடம் உள்ள அனைத்தும் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஈரானின் ஏவுகணை எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. ஈரானில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் முதலில் நாம் அந்நாட்டு ராணுவத்தை வீழ்த்த வேண்டும்.
முந்தைய உச்ச தலைவரை போலவே மோசமான ஒருவர் பொறுப்பேற்றால் ஈரானுக்கு மோசமான நிலை ஏற்படும். ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா அதிக ரக வெடிமருந்துகளை கொடுத்தாலும் எங்களிடம் வரம்பற்ற நடுத்தர மற்றும் உயர் ரக வெடிமருந்துகள் உள்ளன. ஈரான் தற்போது நடுநிலையாக இருந்த நாடுகளைத் தாக்குகிறார்கள். அந்த நாடுகள் அனைத்தும் ஈரானுக்கு எதிராக வலுவாகப் போராடுகின்றன.
ஈரான் மிரட்டல் விடுத்து வரும் நிலையில் தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுவது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவதால், உலகிற்கு இலவச ஆற்றல் ஓட்டத்தை அமெரிக்கா உறுதி செய்யும் என்று கூறினார்.
- இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
- பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன
ஈரானை குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசில் இதுவரை குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. மேலும் போரில் இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான்மீது சனிக்கிழமை அமெரிக்கா - இஸ்ரேல் தொடங்கிய கூட்டுத்தாக்குதல் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. சனிக்கிழமை ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தொடர் தாக்குதலில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. அதன் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இச்சூழலில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் லெபனான்மீதும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. ஹெஸ்பொல்லா தலைவர் நைம் காசெம் இப்போது 'அழிக்கப்பட வேண்டியவர்' என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்துவருகின்றன.
- ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
- ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதி பலி
இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அடைந்து வரும் வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரே அடியில் (ஒரே நேரத்தில்) 48 தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர். மேலும் இது மிக வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது." என அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இதனிடையே ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இருநாடுகளின் தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
- நாட்டின் தலைவரை வெளிப்படையாகக் கொல்வதும், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது
- 15 மாதங்களில் வீழ்த்தப்பட்ட மூன்றாவது ரஷ்யக் கூட்டாளி கமேனி
அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களில் வீழ்த்தப்பட்ட மூன்றாவது ரஷ்யக் கூட்டாளி கமேனி ஆவார். முன்னதாக சிரியா மற்றும் வெனிசுலாவில் மாஸ்கோவின் ஆதரவு பெற்ற தலைவர்கள் வீழ்ந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
"ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் உயர்மட்டத் தலைவர் சையத் அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மனித அறநெறி மற்றும் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிகளையும் அப்பட்டமாக மீறும் வகையில் படுகொலை செய்யப்பட்டதற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என புதின் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
சீனா
இந்தத் தாக்குதல் "ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறுவதாகும், ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளை மிதிப்பதாகும்" என்று தெரிவித்துள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரை வெளிப்படையாகக் கொல்வதும், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் ஈ தெரிவித்துள்ளார். சீனா இதை கடுமையாக எதிர்க்கிறது மற்றும் வன்மையாகக் கண்டிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
வட கொரியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை "சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் அதன் கூட்டாளியும் "சுயநல மற்றும் மேலாதிக்க அபிலாஷைகளை" நிறைவேற்றுவதற்காக இராணுவ பலத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், "வெட்கமற்ற மற்றும் குண்டர் கும்பல் போன்ற நடத்தையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ஏமன் ஹூத்திகள்
"இந்தக் கொடூரமான குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறலைக் குறிக்கிறது மற்றும் இஸ்லாமிய தேசத்தின் மீதான அநியாயத் தாக்குதலின் தொடர்ச்சியை உள்ளடக்கியது" என்று ஏமனில் உள்ள ஹூத்திகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ்
கமேனியின் மரணத்திற்கும் துக்கம் அனுசரிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. "அவர் எங்கள் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கும், எங்கள் எதிர்ப்பிற்கும் அனைத்து வகையான அரசியல், இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவையும் வழங்கினார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கு எதிரான இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் கொடூரமான குற்றத்திற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, அதன் கடுமையான விளைவுகளுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஒரு அறிக்கையில் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
- வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
இதனால் ஈரான், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களும் இந்தியாவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள்.
இதையடுத்து சவூதி அரேபியா, குவைத் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
- ஈரானில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதனால் ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரானில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. அவசர உதவிக்கு +989128109115, +989128109102, +989128109109, +989932179359 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளனர்.
- இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிரம்ப், ஈரான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல்- அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் குறித்து ஈரான் கூறுகையில், 'நீங்கள் தொடங்கி வைத்து விட்டீர்கள்... இனி முடிவு உங்கள் கையில் இல்லை... இதை தொடங்கியது நீங்கள் தான்... உங்களை எச்சரிக்கிறோம். என்று கூறியுள்ளது. மேலும் தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது. இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவுகணைகளை தடுத்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.






