டிரம்பை விட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் - மம்தா பானர்ஜி கணிப்பு

நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 8,807 பேருக்கு கொரோனா தொற்று: 80 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி தமிழில் டுவீட்

நாளை தமிழகம் வரும் நிலையில், பிரதமர் மோடி தேச வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது எனத் தமிழில் பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.
கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2-வது முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர் உயிரிழப்பு

கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது - மம்தா பானர்ஜி

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
சபரிமலை, சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள் திரும்பப் பெறப்படும்: கேரள அரசு

சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சபரிமலை விவகாரம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவமனை லிப்டில் சிக்கிக் கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர்

இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரை பார்க்க சென்ற போது, முன்னாள் முதல்வர் லிப்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்களுடன் வலைவிரித்து மீன் பிடித்த ராகுல் காந்தி: திடீரென கடலில் நீந்தி அதிர்ச்சி அளித்தார்

கேரளாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீனவர்களுடன் நடுக்கடல் சென்று மீன்பிடித்தார்.
மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: ஜவடேகர்

மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு செலவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா கட்சியில் இணைந்தார்: சட்டசபை தேர்தலில் போட்டி

மேற்கு வங்காள கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- தமிழகத்துக்கு சிறப்பு குழுவை அனுப்பியது மத்திய அரசு

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழகம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு மீண்டும் மத்திய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது- ராகுல் காந்தி

தங்க கடத்தல் வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் செல்கிறது. மத்திய ஏஜென்சிகள் விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்,
அகமதாபாத் மைதானத்துக்கு ‘நரேந்திர மோடி’ பெயர்

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் ‘நரேந்திர மோடி’ மைதானம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் வாக்களிக்க பரிசீலனை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுபோட தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.