என் மலர்
இந்தியா
- புதிதாக போட்ட சாலை பெயர்ந்து வந்ததால் பெண் மந்திரி அதிர்ச்சி.
- பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ரைகான் தொகுதிக்கு உட்பட்ட சாட்னாவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் மந்திரியான பிரதிமா பக்ரி ஆய்வுக்கான சென்றார்.
அப்போது அவர் செல்லும் போடி- மங்காரி பகுதியில் சாலை போடப்பட்டிருந்தது. அந்த சாலையில் தரம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தார். உடனடியாக தனது காரில் இருந்து இறங்கினார்.
நேராக சாலையின் கரையோரம் சென்று தனது காலால் சாலையை மிதித்தார். அப்போது சாலை பெயர்ந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது காலால் மிதிக்க மிதிக்க சாலையோரம் பெயர்ந்து கொண்டே சேதமானது. இதனால் கோபம் அடைந்து, இதுதான் புதிய சாலையின் லட்சணமா என திட்டினார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- காவல்நிலையத்தில் இருக்கும்போது பெண்ணின் தந்தை உயிரிழந்தார்
- விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு வழக்குகள் மாற்றப்பட்டன
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
- அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு
- ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா?
மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஊர்முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசிடம் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, போலீசார் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் சவிதாவை குடும்பத்தினருடன் செல்ல கூறியுள்ளனர். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சவிதா, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துக்கத்திலும், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப்பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் இதுதொடர்பாக பேசியுள்ள சவிதாவின் சகோதரர், "எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல வருட வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு" என தெரிவித்தார்.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.
ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-
நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.
மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?
இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
- பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன.
- ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 15-ந்தேதி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளிநாட்டுக்கு சென்றதால் அவரை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ, அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும், அரசியலமைப்பை ஒழிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த வாரம் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் மாணவர்களுடனான உரையாடலின் போது அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-
நமது அரசுத்துறைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சி.பி.ஐ, உளவுத் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜ.க. ஒரு ஆயுதம் போல் பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக சி.பி.ஐ, அமலாக்கத்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன. ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி தான் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை உருவாக்கியது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாக பார்க்கவில்லை. ஆனால் பா.ஜ.க. இதை இப்படி பார்க்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமானதாக பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும். அரசியல் அமைப்பை ஒழிப்பதற்கு பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. மாநிலங்கள் இடையேயான சமத்துவம் என்ற கருத்தை ஒழிப்பது, அரசியலமைப்பு மைய கருவான ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரே மதிப்பு உண்டு என்ற கருத்தை ஒழிப்பது என்பது பா.ஜ.க. நிலைப்பாடாகும்.
நாங்கள் பா.ஜ.க.வை எதிர்த்து போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற துறைகளை காப்பாற்றுவதற்காகவே போராடுகிறோம்.
ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடக்கும் போது எதிர்க்கட்சிகள் அதை எதிர்கொள்ள வழிகளை கண்டறிய வேண்டும். இந்திய நிறுவன கட்டமைப்பை கைப்பற்றியதற்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தேர்தல் எந்திரத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதலை பற்றி பேசும்போது அதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் அது உண்மையில் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. உலக ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை கொள்கையுடன் உடன்படவில்லை. அந்த கேள்வியில் நாங்கள் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் சில விஷயங்களில் போட்டிகள் உள்ளன. அவை தொடரும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இருப்பதை பாராளுமன்றத்தில் பார்த்து இருப்பீர்கள்.
நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் உடன்படாத சட்டங்கள் குறித்து பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு ராகுல்காந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிக்கப்பட்டது.
- விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
நாடு முழுவதும் இந்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
கடந்த டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இதனையடுத்து , டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்தது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி (வயது 12) கடந்த சில ஆண்டுகளாக அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் படிப்படியாக கல் போன்று மாறி வருகிறது. இவருக்கு 4 வயதாக இருந்தபோது இந்த நோயின் அறிகுறிகள் தோன்றின. முதலில் உடலில் செதில்கள் உருவாகின. பின்னர் அது படிப்படியாக மரப்பட்டை போல கடினமாகி பின்னர் கல் போல கடினமாக மாறியது. இந்தப் பிரச்சனை முதலில் கைகளுக்குப் பரவியது.
பின்னர் முழு உடலுக்கும் பரவியது. இந்த நோயின் காரணமாக சிறுமியால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவள் நாளுக்கு நாள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறாள்.
பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். ராஜேஸ்வரிக்கு இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் என்ற மரபணு தோல் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது அரிதானது. இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொற்று அல்ல தற்போது நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சரைசர் தடவுவது நோயின் விளைவுகளை ஓரளவு குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
- ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
விண்வெளி நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் ஏவுவதற்கு முன்பாக திருப்பதி திருமலை வெங்கடேசுவர சாமி கோவிலில் பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்தவகையில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுடன் திருமலைக்கு நேற்று சென்று கோவில் சடங்குகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவித்தது.
- தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன்போது இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
டெல்லி தவிர, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள விசா சேவை மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் வங்கதேச தூதரகம் அருகே பாஜக, காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தின.
இதற்கிடையே வங்கதேசத் தூதரகம் முன்பு நடந்த போராட்டம் மிகவும் சிறியது என்றும், பாதுகாப்பு மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் பாதுகாப்பு காரணம் காட்டி சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- 'F-777 DBS Wealth Equity Research Group' என்ற பெயரில் தொடர்பு கொண்டனர்.
- இவருக்கு லாபம் கிடைப்பது போலக் காட்ட போலி இணைய டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளனர்.
பஞ்சாபில் பங்குச்சந்தை மோசடியில் பணம் இழந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஜி-யான அமர் சிங் சாகல், பாட்டியாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்திற்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், மோசடி குறித்து விவரித்துள்ளார்.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் 'F-777 DBS Wealth Equity Research Group' என்ற பெயரில் தொடர்பு கொண்ட கும்பல், தங்களை நிதி ஆலோசகர்கள் என்று கூறிக்கொண்டு இவரை ஏமாற்றியுள்ளனர்.
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஐ.பி.ஓ பங்குகள் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி இவரை கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இவருக்கு லாபம் கிடைப்பது போலக் காட்ட போலி இணைய டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளனர்.
லாபத்தைப் பெற வேண்டும் என்றால் வரி மற்றும் சேவைக்கட்டணம் என மேலும் பல கோடிகளைச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் பல தவணைகளாக 8.10 கோடி ரூபாய் வரை செலுத்தியும், அவர்களால் ஒரு ரூபாயைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த மோசடி குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
பாட்டியாலா போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு மூத்த காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் நோயாளி ஒருவரை மருத்துவர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாசக் கோளாறு காரணமாகச் ஞாயிற்றுக்கிழமை ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அந்த சமயத்தில், மருத்துவர் மிகவும் அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், நோயாளியைத் தாக்கியுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளி மீது தாக்குதல் நடத்திய மருத்துவரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சவாலை ஏற்றார்.
- ஜெய்தீப் கர்னிக் திடீரென அதிரடி காட்டினார்.
யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்வில் பங்கேற்றார்.
ஜெய்தீப் கர்னிக் என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் தன்னுடன் மல்யுத்தத்திற்கு வரும்படி ராமதேவ் சவால் விடுத்தார். ஜெய்தீப் மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சவாலை ஏற்றார்.
போட்டியின் தொடக்கத்தில் பாபா ராம்தேவ் ஆதிக்கம் செலுத்தினாலும் ஜெய்தீப் கர்னிக் திடீரென அதிரடி காட்டினார்.
பாபா ராம்தேவ் ராம்தேவை ஜெய்தீப் கர்னிக் தரையில் தள்ளி போட்டியில் வென்றார். இருவரும் தரையில் விழுந்தாலும், சிரித்தபடியே எழுந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.






