என் மலர்tooltip icon

    இந்தியா

    • பஞ்சாப் மாநில முதல்வர் இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • மத்திய வெளியுறவுத்துற அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை எனத் தகவல்.

    முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், இதுபோன்ற அனுமதி மறுப்பு இது முதல்தடவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல உள்ளனர். அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் செல்ல உள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டால் சரியான தேதி இறுதி செய்யப்படும். எனினும் மத்திய அரசு அரசியல் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சீனியர் தலைவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறுவது அவசியமாகும்.

    • நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருகின்றன
    • உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல.

    உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரியில் ஒரு வார்டில் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    அந்தப் பதிவில், 

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மருத்துவக் கல்லூரியின் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். இங்கே, மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில், எலிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குண்டாகவும், மெலிந்தும், உருண்டையாகவும்... என அனைத்து வகையான எலிகளும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த மருத்துவக் கல்லூரி வார்டு மனிதர்களுக்கானது அல்ல, எலிகளுக்கானது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது. 

    கோண்டா மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் வார்டில், நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், ஆக்சிஜன் குழாய்கள் மீதும் எலிகள் ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நிரஞ்சன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். உடனடியாக வார்டில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல. பலமுறை இதுபோன்ற புகார்வது எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

    இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஜபல்பூர் மருத்துவமனைகளிலும் சமீப காலங்களில் எலித் தொல்லை மற்றும் நோயாளிகளை எலிகள் கடித்த புகார்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    • இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
    • ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

    சீனாவின் சுங்கத்துறை வருடாந்திர வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வர்த்தக பற்றாக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    * இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

    * கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 9.7 சதவீதம் அதிகமாகும்.

    * அதேவேளையில் சீனா இந்தியாவுக்கு 135.87 அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 12.8 சதவீதம் அதிகமாகும்.

    * ஆனால் இந்தியா- சீனா வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 116.12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2023-க்குப் பிறகு 2-வது முறையாக வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலருக்கு மேல் தாண்டியுள்ளது.

    * 2024-ல் வர்த்தக பற்றாக்குறை 99.21 பில்லியன் டாலராக இருந்தது. சீனா 113.45 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 14.24 பில்லியனுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

    • மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார்.
    • அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தின் அனைத்து துறைகளின் அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    பொதுவாக பட்டியலின மக்களை, பழங்குடியின மக்களை குறிப்பிட ஹரிஜன் மற்றும் கிரிஜன் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.

    அனைத்து துறை செயலார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் " இந்திய அரசியலமைப்புச் சட்டம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரைக் குறிக்க இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில்லை" என்று அந்தக் கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் மாநில அரசால் ஆய்வு செய்யப்பட்டபோது, சில துறைகள் மேற்கூறிய அறிவுறுத்தல்களைக் கடுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கவிட்டது.

    மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார். அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களை தலித் என அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • 9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது
    • SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மருத்துவ மேற்படிப்புக்கான காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் NEET-PG 2025-க்கான தகுதி மதிப்பெண்களை (Cut-off) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை குறைத்துள்ளது. 

    "மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கலந்தாய்வு மற்றும் சேர்க்கைக்கான தகுதியை விரிவுபடுத்துவதற்காக, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் அனைத்துப் பிரிவினருக்குமான தகுதித் தேர்ச்சி சதவீதத்தை மாற்றியமைத்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 2.4 லட்சம் மாணவர்கள் NEET-PG தேர்வெழுதிய போதிலும், தகுதி மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில் ஏழில் ஒரு பங்கு இடங்கள் காலியாக விடப்பட்டால், அது போதனா மருத்துவமனைகளை (மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனைகள்) பலவீனப்படுத்தும் என்றும், குறிப்பாகப் பயிற்சி மருத்துவர்களை பெரிதும் நம்பியுள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவையைப் பாதிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருமளவிலான இடங்கள் காலியாவதைத் தவிர்க்க, தகுதி மதிப்பெண்களை முறையாக மாற்றியமைக்கக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் கடந்த ஜனவரி 12-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனையொட்டி தொடர்ந்தே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரிய அதிகாரிகள், "இந்த நுழைவுத் தேர்வு ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்குவதற்காகத்தானே தவிர, ஏற்கனவே MBBS மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களின் தகுதியை மறுமதிப்பீடு செய்வதற்காக அல்ல" என்று கூறினர்.

    மேலும், "9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்தார். தகுதிச் சதவீதத்தை இவ்வளவு அதிகமாகக் குறைப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி, அதே சமயம் மாணவர் சேர்க்கை சுழற்சி ஏற்கனவே தாமதமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

    "முன்பெல்லாம் தகுதி மதிப்பெண்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. ஆனால் இந்த முறை நாம் தாமதமாக இருக்கிறோம். இப்போது எங்களின் முக்கிய நோக்கம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதும், நாட்டின் மருத்துவ வளங்கள் வீணாவதைத் தடுப்பதும் தான்" என்று அவர் தெரிவித்தார்.

    "தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்", தகுதி மதிப்பெண் மாற்றம் என்பது தேர்வு மதிப்பெண்களையோ அல்லது தரவரிசையையோ மாற்றாது என்றும், யார் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பதை மட்டுமே தீர்மானிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே தகுதி பெற்ற மருத்துவர்களை வரிசைப்படுத்தவே இந்த 'பெர்சென்டைல்' முறை பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மேற்படிப்பு இடங்களையும் நிரப்புவதற்கு போதுமான விண்ணப்பதாரர்கள் இருப்பதை உறுதி செய்யவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.

    தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • கிராமப்புறங்களில் தகுதியான பெண்களை தேர்வு செய்து துப்பாக்கிச்சுடும் பயிற்சியை இந்திய ராணுவம் அளிக்கிறது.
    • பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் மலைகளுக்கு மிக அருகில் வசிக்கும் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இந்திய ராணுவம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்து வருகிறது.

    பயங்கரவாதிகள் நுழைந்தால் எதிர்த்து போராட கிராமப்புற ஆண்களுக்கு முன்னதாக ராணுவம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்திருந்தது.

    கடும் குளிர்காலங்களில் வேலைக்காக கிராமப்புற ஆண்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது பெண்கள், முதியோர் தனியாக உள்ளனர்.

    கடும் குளிர், ஆண்கள் துணையின்றி பெண்கள் இருப்பதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் தகுதியான பெண்களை தேர்வு செய்து துப்பாக்கிச்சுடும் பயிற்சியை இந்திய ராணுவம் அளிக்கிறது.

    துணிச்சலான பெண்களை தேர்வு செய்து கிராம பாதுகாப்பு காவலர்கள் என்ற பெயரில் அவர்களுக்கு ராணுவம் அங்கீகாரம் வழங்குகிறது.

    பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுவது, கிராமத்தில் உள்ளவர்களை காப்பது, ராணுவத்திற்கு தகவல் அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    • வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பங்கு சந்தை செயல்படும்
    • நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், நாளை மும்பை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று செயல்படும் பங்கு சந்தைக்கு இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலால் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ்
    • அருண் பிரகாஷ் 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்

    பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

    இந்நிலையில் கோவாவின் SIR திருத்தத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷ் நேரில் ஆஜராகி தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கணினி பிழை காரணமாக முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அருண் பிரகாஷ் அதிருப்தி தெரிவித்தார்.

    1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்ற அருண் பிரகாஷ், ஜூலை 31, 2004 முதல் அக்டோபர் 31, 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கடல்சார் அறக்கட்டளை ஆகியவற்றில் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.

    * தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

    * விவசாயிகளுடனான உறவை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

    * கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது.

    * விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

    * விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பை பற்றி பேசுகிறது திருக்குறள்.

    * விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    * விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * சுற்றுச்சூழலை பாதுகாப்பதே எங்களின் முதல் நோக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது.
    • இளைஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.

    ஊழலை கட்டுப்படுத்த நாட்டின் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் ஊழல் வழிகளில் ஈட்டும் செல்வத்தைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.

    2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 17A அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பளித்தார். இருப்பினும், மற்றொரு நீதிபதி விஸ்வநாதன் இது அரசியலமைப்பிற்கு எதிராக வில்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    அப்போது பேசிய நாகரத்னா, "நம் நாட்டின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பாதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கும் செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்

    ஒருவரின் பேராசை மற்றும் பொறாமை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலிருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று, ஆன்மீக மனநிலையை வளர்த்து மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்" என்று தெரிவித்தார்.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் கூட இதே போன்றதொரு கருத்தை தான் கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.
    • உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    * மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.

    * உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

    * வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளத்தை பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

    * இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    * பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×