search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவித்தொகை"

    • கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது.

    சேலம்:

    மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்கக்கூடிய உதவிக்காக ரூ.2000 கேட்டு விண்ணப்பித்து பயனாளிகளை தேர்வு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் ஆயிரக்கணக்கான பேருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    மாவட்டம் முழுவதும் மாற்றித்திறனாளிகள் உதவி தொகை கேட்டு விண்ணப்பம் செய்ய செல்லும்போது சர்வர் வேலை செய்யவில்லை என காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    இதனை கண்டித்தும், உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத்திறனாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அவருடைய உடல் ஊன தன்மைகேற்ப வேலை வழங்க வேண்டும் எனவும் அதுவும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் முறையான ஊதிய வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுத்து வருகின்றனர் . இதுகுறித்து அதிகாரிகளும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க கேட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் கொடுத்தனர். ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தால் உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த யூ.டி.ஐ.டி. கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே கார்டு வந்துள்ளது. இதனால் பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது. எனவே கலெக்டர் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
    • மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.

    கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.

    தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.

    ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.

    கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுப்பிரிவு பதிவுரார்கள் கல்வித்தகுதி யினை இவ்வலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத வர்கள் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவு தாரர்களுக்கு தற்போது உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 45 வயது, இதர வகுப்பினர் 40 வயது இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டி லேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும்.

    உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்த பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று பயில் பவராகவோ இருக்க கூடாது.

    மேலும் அனைத் துவகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடை முறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரர் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்த வர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் நவ.30-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள் ளார்.

    • தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
    • .பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஒரு வருடத்திற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421-2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொண்டு 30-11-2023-க்குள் www.ksb.gov.in என்ற கே.எஸ்.பி., இணையதளத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
    • 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-10-2023 முதல் 31-12-2023 வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான ந டவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30-9-2023 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31-12-2023 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படா மல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து 30-9-2023 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றி ருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

    பொதுப்பிரிவு பதிவு தாரர்களைப் பொறுத்த வரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ. 750-ம், பட்டதாரிகளுக்கு ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதாரர்களுக்கும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.

    தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக் கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற்று வரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையினை தொடர்ந்து பெற வேண்டுமானால் (மாற்றுத் திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    • மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி பட்டப்படிப்பு மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த கல்வி உதவி தொகைக்கு 2023-2024 கல்வி ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள்ளும் மற்றும் புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள்ளும் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம் சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது 044 - 29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com ல் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைமாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
    • நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டு படகு இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 3 படகு உரி மையாளர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொ கைக்கான காசோலைகளை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமை ச்சரால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்ப டகுகள் இலங்கை அரசினால் கைப்ப ற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்ப டை த்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 2 விசைப்படகு உரிமை யாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மரிய சாமுவேல் ஆகியோரின் 2 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மற்றும் ஜெயஇருதயம் என்பவரின் 1 நாட்டுப்படகு உரிமையாளருக்கும் என மொத்தம் 3 படகு உரிமையாளர்களுக்கு, ரூ.1,லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலைமச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை இயக்குநர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    • 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.25-

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலை சந்தில் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரங்கத்தில் தேவாங்கர் சமூக நல மன்றம் மற்றும் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.முன்னதாக ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த மூத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து 2023 -ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதன்படி 10-ம் வகுப்பில் 11 மாணவர்களுக்கும், பிளஸ்-2வகுப்பில் 6 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.அத்துடன் 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேஜிக் ஷோ நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தேவாங்கர் சமூக நல மன்றத்தலைவர் மாணிக்கம்(பொறுப்பு), செயலாளர் திருமலைசாமி(பொறுப்பு), பொருளாளர் சீனிவாசன், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன்,செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ,தேவாங்கர் சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் காத்திருக்கும் இளை ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதா ரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதி வினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடைய லாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 535 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்
    • கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,  

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது,

    தமிழ்நாடு அரசு, சமுதா யத்தில் நலிவடைந்த பிரிவி னர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஓய்வூ திய திட்டங்களைச் செய ல்படுத்தி வருகிறது. அதும ட்டுமல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் ஓய்வூதிய திட்டங்களை வழங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்க ள் நடைமுறையில் இருக்கி ன்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி கைம்பெண்கள் ஓய்வூ தியத் திட்டம், மாற்றுத்தி றனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 10 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக ப்பா துகாப்புத் திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட க்கூடிய உதவித்தொகையை, தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையு டன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமை ச்சர் முதியோர் உதவித்தொ கை உள்ளிட்ட பல்வேறு சமூகப்பாதுகாப்பு திட்டங்க ளின் வாயிலாக வழங்கப்ப ட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தொகையான 1000 ரூபாயை 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில் 14,759 மண்மங்க ளம் வட்டத்தில் 7,085, புகளூர் வட்டத்தில் 5469, அரவக்குறிச்சி வட்டத்தில் 7.474. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 6,328 குளித்தலை வட்டத்தில் 9,349, கடவூர் வட்டத்தில் 4,071, என மொத்தம் 54 ஆயிரத்து 535 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர்.

    திருப்பூர்:

    அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

    இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    • அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். அப்போது மகாலிங்கம் என்ற மாணவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலிப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., மாணவர் மகாலிங்கத்தை சந்தித்து கல்வி உதவித்தொகையாக தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தங்கபாண்டியன்

    எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறினார். அப்போது தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், சிறந்த முறையில் மருத்துவக்கல்வி பயின்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    ×