என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக அரசு"
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
- மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
- திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.
திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும்.
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில் தான். இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
- அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.
- தி.மு.க. ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
* முறியடிக்க முடியாத சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பது தான் எனது பாலிசி.
* மக்களின் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
* இன்று தொடங்கி அடுத்த 30 நாட்கள் தன்னார்வலர்கள் குழு மக்களை நேரடியாக சந்திக்க உள்ளது.
* மத்திய அரசு நிதி வழங்காத போதும் தி.மு.க அரசு அளித்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.
* உங்கள் வீடு தேடி வரும் தன்னார்வலர்களிடம் உங்கள் கனவுகளை சொல்லுங்க, 2030-க்குள் நிறைவேற்றி தரப்படும்.
* மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன்.
* தி.மு.க. ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
* எந்த ஆதிக்கத்திற்கும் தலைகுனியாமல் வெல்வோம் ஒன்றாக என தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
* உங்கள் எண்ணங்களுக்கு நான் உருவம் கொடுப்பேன்.
* சொன்னால் சொன்னதை செய்பவன் தான் உங்கள் முன்பு நிற்கும் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு, அடகு வைத்தது அ.தி.மு.க.
- பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டேன்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு, அடகு வைத்தது அ.தி.மு.க.
* தமிழ்நாட்டின் கஜானாவை அ.தி.மு.க.வினர் சுரண்டினர்.
* அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழில் நிறுவனங்கள் அஞ்சி ஓடினார்கள்.
* கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஆட்சிக்கு வந்தபோதும் தமிழ்நாடு முதலிடம்.
* மகளிருக்கு மாதம் ரூ.1000 தர முடியாது என அ.தி.மு.க கூறியது. ஆனால் உரிமைத்தொகை வழங்கினோம்.
* மக்களின் உயிர்களை வீடுகளுக்கே சென்று காக்கும் வகையில் திராவிட மாடல் அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.
* பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டேன்.
* முட்டுக்கட்டை போடுவதே தனது முதல் வேலை என ஆளுநர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
* பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டித்தேர்வு என அனைத்திலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாள்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உங்கள் கனவை கேட்டு அதனை நிறைவேற்றும் தொடக்க நாள் இன்று.
* 2030-ம் ஆண்டில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதற்கான திட்டம்.
* மக்களின் கனவுகளை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று கேட்டறிவும் வகையில் புதிய திட்டம்.
* 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.
* பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் நினைக்கும்போது அவர்களின் முதல் தேர்வு தமிழகம் தான்.
* விவசாயம், கல்வியிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்.
* இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
* மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது. பல மாநில மக்களும் சிறந்த மருத்துவத்திற்காக தமிழகம் வருகின்றனர்.
* பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளரும். தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக வளர்ச்சி.
* அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், முதலில் விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்தார். ஒரு புறம் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்க்கு பிரச்சனைகள் ஆரம்பித்து என்றே சொல்லலாம். அதாவது 'தலைவா', 'மெர்சல்' படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படங்கள் வெளியாகின.
இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'தமிழ வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது அரசியல் திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். இதற்கு பிறகு அவரை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய், கட்சியை பலப்படுத்தும் வேளைகளிலும், சட்டசபை தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனிடையே, தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கினார். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை ஆஜராகும் படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் சென்சார் போர்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முறையிடுவதாகவும் அதனை வருகிற திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டு உள்ளது. இதனால் 'ஜன நாயகன்' படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்சார் போர்டு வழக்கை தாக்கல் செய்தால் இன்றே விசாரிப்பதாக நீதிமன்றமே கூறும் நிலையில், தணிக்கை குழு ஏன் திங்கட்கிழமைக்கு விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறது என்ற வினா எழச்செய்கிறது. அதாவது, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற திங்கட்கிழமைசி.பி.ஐ. விசாரணை முன்பு விஜய் ஆஜராகிறார். இவ்விரு விஷயங்களை வைத்து விஜய்க்கு அழுத்தம், நெருக்கடி தரப்படுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து பா.ஜ.க.வும், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து காங்கிரசும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தன.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு விஜயை கூட்டணியில் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
சென்னை:
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் தேவைகளான பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருவாய்த்துறை சான்றிதழ்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அதற்கான பெயர் மாற்றங்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு தீர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான 'நான் முதல்வன்' திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய் மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்து உள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன்மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன் கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஒருங்கிணைக்கும்.
தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 2 முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.
தன்னார்வலர்கள், 2 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர் பெருமக்களால் அன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும்.
- தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
* உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
* தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
* திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
* யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள்.
* இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்?
* பிரச்சனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
- நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-
* கொரோனா தொற்றில் இருந்து தமிழக அரசு மீண்டு பொருளாதாரத்தில் இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
* இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக உள்ளது.
* நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* தமிழக அரசின் புதிய திட்டம் ஒன்றை பற்றி பேசுவதற்காக வந்துள்ளேன்.
* உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், காலை உணவு, தாயுமானவர் திட்டம் என அனைத்து திட்டங்களாலும் பெருமை.
* மக்கள் வரியிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு பயனுள்ள திட்டங்களையே செயல்படுத்துகிறோம்.
* ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
* 'உங்க கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவினை தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
* தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்றுஅவர்களின் கனவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள்.
* தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்களின் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
* மேலும், இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம். அயலக தமிழர்களிடமும் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறிய உள்ளோம்.
* செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும்.
* உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் கனவை அறிய முயல்கிறோம்.
* அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தீட்டப்படும்.
* 2030-ம் ஆண்டிற்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக உங்க கனவை சொல்லுங்க திட்டம்...
* 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை வருகிற 9-ந்தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
* ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி மக்களின் கனவுகளை கேட்டறிய உள்ளதாக கூறினார்.
- தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
- தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.
பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.
இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்தரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். எனவே தமிழக அரசு சுமார் 6½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.
முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.






