என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர்"

    • ஆறுமுகம் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.
    • தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.

    அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தீயணைப்புத் துறையினர் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க கோவில் கோபுரம் மீது ஏறியபோது தானே வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.

    கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கியபோது மாற்றுத்திறனாளி ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர்.
    • கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.

    அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறார்கள். 

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
    • கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் மீது பயங்கரவாதிகள்  என சந்தேகிக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

    நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டி காஸில் வசித்து வந்த சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரேயின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரசூலைக் கொன்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படும் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
    • சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை.

    பல்லடம் :

    பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில், சுமார் ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் 3 மின் கம்பங்களை காணவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளின் மத்தியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் கம்பங்கள் வைக்கப்பட்டு விளக்குகள் ஒளிர்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் விபத்துகளும் நேரிடுகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுத்து கழற்றப்பட்ட மின்கம்பங்களை மாட்டி அந்தப் பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
    • ஆதரவற்ற மனிதர்களை தேடி சென்று முடி வெட்டி, குளிக்க வைத்து அழகு படுத்தி புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி திரியும் ஆதரவற்றோர் மற்றும் நாகூர் தர்ஹா, நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம், சாலைகள், இரயில் நிலையங்கள், சுற்றுலாத்தளங்களில் அழுக்கடைந்து, கிழிந்த உடைகளோடு, தாடி, முடி வளர்ந்து கவனிப்பாளர்களற்று அழுக்கடைந்து கிடக்கும் மனிதர்களை நாம் கடந்து சென்று இருப்போம்.

    ஆனால் கலைவாணனோ அப்படிப்பட்ட மனிதர்களை தேடி சென்று அவர்களுக்கு தானே முடி வெட்டி, தாடி, மீசை எடுத்து, குளிக்க வைத்து அழகு படுத்தி அவர்களுக்கு புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.

    மேலும் உறவுகளால் கைவிடப்பட்ட வர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அவர்க ளுக்கு மறுவாழ்வுஅளித்து பராமரித்து வருகிறார்.

    இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்றவர்க ளுக்கு மறு வாழ்வு அளித்துள்ள கலைவாணன் எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார்.

    உறவுகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களின் உறவுகளிடம் சேர்ப்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து தொடர்ந்து அவர்களை பராமறித்து தினம் தோறும் உணவளித்து வருகிறார்.

    இதுகுறித்து கலைவாணன் கூறும் போது இது போன்று சாலைகளில் உள்ள மனிதர்கள் ஒருக்காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்க கூடியவர்கள்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி இருக்கும் அவர்களைம் சக மனிதர்களாக நினைத்து அரவணைக்க வேண்டும் என்றார்.

    ஆதவறவற்ற மனிதர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் கலைவாணன் செயல் பலராலும் பாராட்டு வருகிறது.

    • மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும் நல்லது என்றார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் கொண்டு வந்தது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக ஆர்வலரும், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான சண்முகசுந்தரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டு கிற கலங்கரை விளக்கமாக அமைந்தி ருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசு நிதி பற்றாக்குறையை ரூ.62கோடியில் இருந்து ரூ.30கோடியாக குறைத்தி ருப்பது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    மதுரை மாநகரை சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும், அதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதும் மதுரை மக்களிடம் கோடை மழையை போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோன்று ஏழை, எளிய மக்கள் நிலம் வாங்குவதற்கு ஏதுவாக பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலமாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
    • வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.

    இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    • கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும். அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படும்.

    இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து மாதவரம் குடியிருப்பு நலசங்க தலைவர் நீலகண்ணன் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை தான் நீடிக்கிறது. 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் இப்பகுதி குப்பை கூடமாக மாறியது. 2020-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுபணித் துறைக்கு நீர்தேக்கத்தை தூர்வாரி அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டது. நாரவாரி குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே ஒரு மயானம் உள்ளது. தற்போது அவர்கள் நீர்தேக்கத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் இரவு நேரங்களில் தான் கழிவுகளை கொட்டுகின்றனர் என்றார்.

    இதுகுறித்து நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • அடையாளம் தெரியாத 3 பேர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
    • அன்பரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் அன்பரசு (வயது 45). சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கோட்டப்பாளையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத 3 பேர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த அன்பரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இது குறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமூக ஆர்வலரை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சமூக ஆர்வலரான பிராங்க்ளின் ஆசாத் காந்தி இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது.

    சேலம்:

    சேலம் அத்வைத ஆசிரம ரோடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி (90). சமூக ஆர்வலரான இவர் இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினசரி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து போராடத்தை தொடங்கி உள்ளேன். அதன்படி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். இதற்கு தீர்வு கிடைக்கும் வரை அல்லது சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சாக்கடை நீர் புகுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது.

    எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ளகிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் வாயு கசிந்தஉடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார்.
    • மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான ஒவைசி எம்.பி. போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து அவர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 4-வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

    ஐதராபாத் தொகுதியை கைப்பற்றவும் ஒவைசியை தோல்வியடைய செய்ய பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ஐதராபாத் தொகுதியில் பிரபல நடன கலைஞரான சமூக ஆர்வலர் மாதவி லதா என்பவரை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. முதுகலை பட்டதாரியான மாதவிலதா பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார். மேலும் அவர் பல்வேறு முஸ்லிம் பெண்கள் குழுக்களுடன் தொடர்பில் உள்ளார். அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்காக சிறிய விடுதியையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

    ஒவைசிக்கு இந்த முறை பா.ஜ.க வேட்பாளர் மாதவிலதா கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×