என் மலர்
நீங்கள் தேடியது "social activists"
- நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
- வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.
பல்லடம் :
பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.
இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
- பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மக்கள், இளநீர், மோர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். திருப்பூர் நகரத்தை பொறுத்தவரை வருடத்தில் சில நாட்கள் மழை பெய்கிறது. மற்ற நகரத்தை போல் அல்லாமல் இங்கு வெயில் அதிகம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
திருப்பூரில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள், பனியன் கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். திருப்பூர் சுற்றுவட்டார நகரங்களான உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம், உள்ளிட்ட நகரங்களுக்கு தினந்தோறும் பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் மதிய நேரங்களில் வெயில் தாக்கத்தால் அவதி அடைகின்றார்கள். சிலருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி தனியார் ஓட்டல்கள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அடைத்து விற்கப்படும் பாட்டில் நீரின் விலை நிர்ணயித்ததை விட கூடுதலாக விற்கிறார்கள். தரம் அப்படி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதனால் மதிய நேரங்களில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வருவோர், வேலை காரணமாக அலையும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாகத்தால் அவதி அடைகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பைச் சேர்ந்த சிலர் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தீர்க்க வழி செய்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். நீர் மோர் அருந்துவதால் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், ரிபோப்ளேவின் பாஸ்பரஸ், புரோட்டீன், என்சைம்கள் கிடைக்கின்றன. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ள கொழுப்பு சத்து மற்றும் கலோரி இதில் மிக மிக குறைவு. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் விட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். அதே போன்று உடல் வறட்சி போன்றவற்றால் நீரிழப்பு ஏற்படுகிறது .அதிலும் கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்யும் அருமையான மருந்து இந்த நீர்மோர். இது சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே தினமும் மோர் குடிப்பது நல்லது . எலும்புகளின் வலிமைக்கு பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.
இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முக்கிய மார்கெட் பகுதிகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் வகையில் தற்காலிக நீர் மோர் பந்தல்களை அமைக்கலாம். இதற்கு என்று பெரிதாக செலவுகள் ஓன்றும் ஆகாது. பொதுமக்களும் வெப்பத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள நீர் மற்றும் மோரை வாங்கி பருகி செல்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
- சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை.
பல்லடம் :
பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில், சுமார் ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் 3 மின் கம்பங்களை காணவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளின் மத்தியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் கம்பங்கள் வைக்கப்பட்டு விளக்குகள் ஒளிர்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் விபத்துகளும் நேரிடுகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுத்து கழற்றப்பட்ட மின்கம்பங்களை மாட்டி அந்தப் பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
- இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை ம்றறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இருப்பினும் அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.
பஸ்சின் உள்ளே மாணவர்கள் நின்று செல்லும் நிலையில், முன், பின் படிக்கட்டுகளிலும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் புத்தக பைகளை டிரைவரே வாங்கி வைத்து கொள்கிறார். அதனால் கண்டிரக்டர், டிரைவர் உதவியுடனே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
- நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன
- மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் திரண்டு வந்து கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
அலங்கார விளக்குகள்
நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தின் தலைவர் முகமது அய்யூப் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாலையோர கடைகளும் அடங்கும். இந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் சிறிய அளவிலான அலங்கார மின்விளக்கு சரங்களை அமைத்துள்ளனர்.
இவற்றை முறையாக வயரிங் செய்து அமைக்காமல், தற்காலிகமாக தள்ளுவண்டிகளிலும், கடைகளுக்கு வெளியே மரங்கள், இரும்பு பைப்புகளிலும் சுற்றி அமைத்துள்ளனர். இந்த மின் விளக்குகளின் வயர்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்.
சில நேரங்களில் அந்த வயர்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கசிவு ஏற்பட்டாலோ பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் இதுபோன்ற மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இடைநிற்றல் ஊக்கத்தொகை
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உத்திரநாயகம் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாளையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2020-21-ம் ஆண்டில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 141 பேருக்கு இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களள் அலட்சியமாக இருந்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
- பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் தலைமையில் நிர்வாகிகள் மைதீன், சித்திக், சம்சுதீன், செய்யது முகம்மது சேட் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தரைப்பாலம்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் நத்தம் தாமிரபரணி தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் இந்த பாலம் சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கோரிக்கை
இந்த பாலத்தில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது. இதனால் இரவு நேரங்களிலோ, வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்பட்டாலோ ஆற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக இந்த பாலத்தின் தரைப்பகுதியை சீரமைத்து பாலத்தின் இருபுறமும் முழுமையாக தடுப்புச்சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய பாலம் அமைத்திட திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது.
- அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி டவுண் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அந்த பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நின்ற பொதுமக்கள் யாரும் பிணத்தை தூக்க முன்வராததால் மற்ற போலீசார் முன்னிலையில் டவுன் போலீஸ் நிலைய ரோந்து வாகன டிரைவர் ஏட்டு பாரதி தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினார்.பின்பு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. யாரும் முன்வராத நிலையில் போலீசாரே பிணத்தை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றியதை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
- பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
- விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
பல்லடம் :
பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் பல்லடம் கிராம சாலைகள் உதவி பொறியாளர் பழனிகுமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட அவசரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புறவழிச் சாலை திட்டப்பணி அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், புறவழிச் சாலை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டு வருவதை ஏற்க முடியாது. அடுத்த 10 நாட்களுக்குள் புறவழிச் சாலை திட்டத்தை துவங்காவிட்டால்,பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.
தஞ்சாவூர் :
இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சுதந்திரத்திற்கான வேட்கை அதிகரித்து போராட்டங்கள் தொடங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் சிறைகளை அமைத்த ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலையை அமைத்தனர்.
இங்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை அடைத்து வைத்து சித்திரவதை நடத்தியதாக வரலாறு உண்டு.
ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைச்சாலை பின்பு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியாக மாற்றப்பட்டு குற்றச்செ–யல்களில் ஈடுபடும் சிறார்கள் வைத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது .
மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்குமிடமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கேயே 8-ம் வகுப்பு வரை ராஜாஜி நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி் தற்பொழுது இயங்கி வருகிறது.
நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக 12 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது.
இதனால் தென்புறம் உள்ள சிறைப்பகுதிகளில் பாதி சிறைப்பகுதிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல அறைகளும் உடைக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.
தற்போது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் அவர்களின் நினைவு கூறும் வகையில் இந்த சிறைச்சாலையை புனரமைத்து 140 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இந்த சிறைச்சாலையை பாதுகாக்க வேண்டும். நினைவு சின்னமாக ஆக்க வேண்டும்.
வளாகத்தில் உள்ள சுதந்திரதேவி சிலை கூட சிதிலமடைந்து உள்ளது . அதனையும் சீரமைக்க வேண்டும் என்று தஞ்சை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.