search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social activists"

    • தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய சாலைகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், நடைபாதைகள் உள்ளிட்ட மாநகர பகுதி கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநகர சாலைகளில் மணல் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யில் புதிய சாலைகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், நடைபாதைகள், வடிகால்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகளுடன் மாநகர பகுதி கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு நேரடி கள ஆய்வுகளும் நடத்தி மேயர் ஜெகன் பெரியசாமி வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். சாலைகளில் மணல் சேர்வதை தடுக்க பிரத்யேக வாக னங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போக்கு வரத்தை முறைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநகர சாலைகளில் மணல் குப்பைகள் கொட்டப்படுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்ணாநகர் பகுதி சாலை நடைபாதைகளில் பல இடங்களில் மணல்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன நிறுத்துமிடங்களை பின்பற்றாமல் சாலைகளில் வாகனம் நிறுத்தும் போக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் சாலைகளில் குப்பைகள், மணல்களை கொட்டும் சம்பவம் தொடர்ந்து வருகிறது என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சியில் மாசற்ற நிலையை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 7 மாதங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
    • இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கடந்த ஜனவரி மாதம் தலைமை செயலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் கடந்த 7 மாதங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர்கள் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தனர். கடையநல்லூர் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு நிரந்தரமான புதிய ஆணையாளர் நியமிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கடையநல்லூர் நகராட்சி ஆணையராக சுகந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி பொறியாளர் ஜீவா, இளநிலை பொறியாளர் முரளி, மேலாளர் சண்முகவேலு அல்லி பாத்திமா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கரன், கணக்கர் துரை, ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் நகராட்சி ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்றுப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட 5 கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது.
    • தற்போது கடுமையான வெயில் காரணமாக 2 கிணறுகளிலும் தண்ணீர் வேகமாக வற்றிவிட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தின் வடக்கு எல்லையான சிவகிரி தாலுகா தலைநகர மாகவும், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், தாலுகா மருத்துவமனை, கருவூலம், பொதுப்ப ணித்துறை அலுவலகம் உள்பட அனைத்து அரசு துறை அலுவலகம் உள்ள சிவகிரி பேரூராட்சி வடக்குசத்திரம், தருமபுரி, கொத்தாடப்பட்டி, சிவரா மலிங்கபுரம், குமாரபுரம் உட்பட 18 வார்டுகளைக கொண்டதாகும். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    5 கிணறுகள்

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்றுப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட 5 கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வந்த நிலையில் கோடை காலமாக விளங்குவதால் ஏற்கனவே போடப்பட்டுள்ள 5 கிணறுகளில் 2 கிணறுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. 4-வது கிணற்றில் தண்ணீர் ஊற்று மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. மீதி உள்ள 2 கிணறுகள் மூலமாக தண்ணீர் குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கடுமையாக வெயில் காரணமாக 2 கிணறுகளிலும் தண்ணீர் வேகமாக வற்றிவிட்டது. இதனால் தண்ணீர் கலங்க லாக விநியோகம் செய்ய ப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    பேரூராட்சிமன்ற தலைவர் ஆய்வு

    சிவகிரி பேரூராட்சிமன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள் ஆகியோர் குடிநீர் கிணறுகள் உள்ள கோம்பை பகுதியில் சென்று கிணறுகளை ஆய்வு செய்தனர். நீர் விநியோகம் செய்வத ற்கான ஏற்பாடு களை செய்யப்பட்டு ள்ளதாகவும், அனைவருக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் பழுதாகி உள்ள 3 கிணறுக ளையும் சீரமைக்க வேண்டும். ஆனால் போதுமான நிதி இல்லாத நிலை ஏற்பட்டு ள்ளது. தண்ணீர் பிரச்சனை யை தீர்ப்பதற்கு தற்போது லாரி மூலமாக தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

    எனினும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு கிணறுகளை சீர்படுத்தி ஆழப்படுத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு வேண்டிய நிதி உதவியை மாவட்ட நிர்வாகம் கொடுக்க வே ண்டும் என இப்பகுதி பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.
    • கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், பல்லடத்தில் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி .என் .சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
    • தமிழக அரசு ரூ.45 கோடி நிதியும் ஒதுக்கியது .

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 2-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரடிவாவி உள்வட்டம், சாமளாபுரம் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

    இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதற்கிடையே பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் பல்லடம் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - பல்லடம் பகுதி தொழில் வளம் மிக்க பகுதியாகும். பனியன் கம்பெனிகள், விசைத்தறிக்கூடங்கள், தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி ஆலைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள் என தொழில் நிறுவனங்கள் உள்ளடக்கிய பகுதி ஆகும். மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இதன் காரணமாக பல்லடம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. மேலும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை உயிருக்கு ஆபத்தான நிலைமையில் ஆம்புலன்ஸ் கொண்டு செல்வதற்கு கூட முடியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க புறவழிச் சாலை அமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலமுறை போராட்டங்கள் நடத்திய காரணத்தால் கடந்த ஆட்சியில் பல்லடம் நகரை சுற்றி புறவழிச் சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக தமிழக அரசு ரூ.45 கோடி நிதியும் ஒதுக்கியது .கடந்த ஓராண்டுகளாக இந்த திட்டம் சம்பந்தமாக எவ்வித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது கைவிடப்பட்டுள்ளதா? என்ற அச்சம் பல்லடம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை உடனே நிறைவேற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கலெக்டர் பல்லவி வர்மா, பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார்,பல்லடம் துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
    • போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமையுடன் ரம்மியமாக காட்சியளித்து வரும் இந்த மாவட்டத்தில் புளியரை பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையானது ஆரம்பமாகிறது.

    இதனால் கேரளாவில் இருக்கும் சீதோஷண நிலையை ஒன்றியதாக தென்காசி மாவட்டம் விளங்கி வருகிறது. அதுமட்டும் அல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாயும் முக்கிய அருவிகளை கொண்டதும், பிரசித்தி பெற்ற கோவில்களை கொண்ட நகரமாகவும் தென்காசி விளங்கி வருகிறது.

    தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் பலரும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்த தென்காசியை கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவித்தார்.

    தென்காசியில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு காய்கறிகள், சிமெண்ட் மற்றும் ஏராளமான அத்தியாவசிய பொருட்கள் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது சாதாரணமாக திரும்புவது இல்லை.

    கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் எண்ணற்ற இறைச்சி கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வருவதும், அதனை தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், புளியங்குடி, ஆலங்குளம், சங்கரன்கோவில், குருவன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு சில டிரைவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தமிழகத்திற்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

    தென்காசி மாவட்டத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தினாலும், அதனையும் மீறி ஒரு சில அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதித்து விடுகின்றனர்.

    இதனால் பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பழைய இரும்பு பொருட்களை அனுப்புகிறோம் என்ற பெயரில் மர்ம கும்பல் அதனுடன் சேர்த்து நச்சுத்தன்மையுடன் விளங்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை லாரிகளில் ஏற்றி அனுப்புகின்றனர்.

    அவர்கள் அனுப்பும் பொருட்களை தென்காசி மாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் தனி தனி செட்டுகளை அமைத்து தரம் பிரித்து பொருட்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கிருந்து மீண்டும் கனிம வளங்களை ஏற்றுவதற்கு தென்காசி மாவட்டத்திற்கு நுழையும் கனரக வாகனங்களும் கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் காட்டு பகுதியில் கொட்டி செல்வதாக புகார்கள் கூறப்படுகிறது.

    சமீபத்தில் கூட ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் இருந்து பனையங்குறிச்சி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டு கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் கரும்பனூர் அருகே காட்டுப்பகுதியில் கழிவு பொருட்களை இரவு நேரங்களில் தீ இட்டு எரித்ததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கரும்பனூர் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடையம் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தென்காசி மாவட்ட மக்களின் மனங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு கேரளா கழிவுகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
    • வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.

    இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
    • பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மக்கள், இளநீர், மோர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். திருப்பூர் நகரத்தை பொறுத்தவரை வருடத்தில் சில நாட்கள் மழை பெய்கிறது. மற்ற நகரத்தை போல் அல்லாமல் இங்கு வெயில் அதிகம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    திருப்பூரில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள், பனியன் கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். திருப்பூர் சுற்றுவட்டார நகரங்களான உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம், உள்ளிட்ட நகரங்களுக்கு தினந்தோறும் பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் மதிய நேரங்களில் வெயில் தாக்கத்தால் அவதி அடைகின்றார்கள். சிலருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி தனியார் ஓட்டல்கள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அடைத்து விற்கப்படும் பாட்டில் நீரின் விலை நிர்ணயித்ததை விட கூடுதலாக விற்கிறார்கள். தரம் அப்படி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதனால் மதிய நேரங்களில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வருவோர், வேலை காரணமாக அலையும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாகத்தால் அவதி அடைகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பைச் சேர்ந்த சிலர் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தீர்க்க வழி செய்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். நீர் மோர் அருந்துவதால் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், ரிபோப்ளேவின் பாஸ்பரஸ், புரோட்டீன், என்சைம்கள் கிடைக்கின்றன. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ள கொழுப்பு சத்து மற்றும் கலோரி இதில் மிக மிக குறைவு. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் விட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். அதே போன்று உடல் வறட்சி போன்றவற்றால் நீரிழப்பு ஏற்படுகிறது .அதிலும் கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்யும் அருமையான மருந்து இந்த நீர்மோர். இது சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே தினமும் மோர் குடிப்பது நல்லது . எலும்புகளின் வலிமைக்கு பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.

    இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முக்கிய மார்கெட் பகுதிகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் வகையில் தற்காலிக நீர் மோர் பந்தல்களை அமைக்கலாம். இதற்கு என்று பெரிதாக செலவுகள் ஓன்றும் ஆகாது. பொதுமக்களும் வெப்பத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள நீர் மற்றும் மோரை வாங்கி பருகி செல்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
    • சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை.

    பல்லடம் :

    பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில், சுமார் ரூ.52 லட்சம் செலவில் மின்கம்பங்களுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் 3 மின் கம்பங்களை காணவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளின் மத்தியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் கம்பங்கள் வைக்கப்பட்டு விளக்குகள் ஒளிர்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதில் இருந்த 3 மின்கம்பங்களை காணவில்லை. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் விபத்துகளும் நேரிடுகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுத்து கழற்றப்பட்ட மின்கம்பங்களை மாட்டி அந்தப் பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
    • இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ம்றறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இருப்பினும் அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.

    இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே மாணவர்கள் நின்று செல்லும் நிலையில், முன், பின் படிக்கட்டுகளிலும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் புத்தக பைகளை டிரைவரே வாங்கி வைத்து கொள்கிறார். அதனால் கண்டிரக்டர், டிரைவர் உதவியுடனே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

    • நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன
    • மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் திரண்டு வந்து கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

    அலங்கார விளக்குகள்

    நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தின் தலைவர் முகமது அய்யூப் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாலையோர கடைகளும் அடங்கும். இந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் சிறிய அளவிலான அலங்கார மின்விளக்கு சரங்களை அமைத்துள்ளனர்.

    இவற்றை முறையாக வயரிங் செய்து அமைக்காமல், தற்காலிகமாக தள்ளுவண்டிகளிலும், கடைகளுக்கு வெளியே மரங்கள், இரும்பு பைப்புகளிலும் சுற்றி அமைத்துள்ளனர். இந்த மின் விளக்குகளின் வயர்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்.

    சில நேரங்களில் அந்த வயர்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கசிவு ஏற்பட்டாலோ பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் இதுபோன்ற மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இடைநிற்றல் ஊக்கத்தொகை

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உத்திரநாயகம் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாளையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2020-21-ம் ஆண்டில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 141 பேருக்கு இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களள் அலட்சியமாக இருந்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×