search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private bus"

    • பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
    • பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடுபாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது.

    பஸ்சை கார்த்திக் என்பவர் ஓட்டினார். நடுப்பாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி விட்டு, பட்டணம் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றுவதற்காக கார்த்திக் பஸ்சை அங்கு ஓட்டி சென்றார்.

    அப்போது ஜே.ஜே.நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் கார்த்திக், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது. இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
    • பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.

    மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

    தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.

    • சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன.

    அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.

    இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர்.

    பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    ருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் - திருச்செங்கோடு வழித்தடத்தில் பஸ்கள் திடீர் என ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதும், பஸ் படியில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்து இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக தனியார் பஸ்சின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பஸ் கண்டக்டரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றி சென்றாலும், படியில் நின்று பயணம் செய்வதற்கு பயணிகளை அனும தித்தாலும் கண்டக்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன் பஸ்சின் பர்மிட் மீதும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது.
    • பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள அவினாசிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). வேன் ஓட்டுநர். இவர் நேற்று (திங்கட்கிழமை) மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல காங்கயம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் பொன்னுசாமி பேருந்திற்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

    உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னுசாமியை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் ஆவேசம் அடைந்து அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கயம் பஸ் நிலைய சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது
    • தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது.சமீப காலமாக தனியார் பஸ் தங்கள் பகுதிக்கு வருவதில்லை எனக்கூறி நேற்று மாலை வி.அய்யம்பாளையம் பகுதிக்கு வந்த தனியார் பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மங்கலம் போலீசார் தனியார் பஸ்சை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியார் பஸ் நிர்வாகத்தினர் வி.அய்யம்பாளையம் பகுதிக்கு பஸ் இயக்கப்படும் என பொதுமக்களுக்கு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து வி.அய்யம்பாளையம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • பஸ் கட்டுப்பாட்டை இழந்து நரசிம்மன் மீது மோதி பின்னர் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.
    • போக்கு வரத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    புதுச்சேரி:

    கடலூரில் இருந்து புதுவைக்கு இன்று காலை பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை பட்டாம்பாக்கத்தை சேர்ந்த குணாளன் ஓட்டி வந்தார்.

    பஸ் கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நரசிம்மன் என்பவர் கடலூர்-புதுச்சேரி ரோட்டை கடக்க முயன்றார். இதனால் அவர் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் குணாளன் இடது பக்கம் திருப்பினார்.

    ஆனாலும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நரசிம்மன் மீது மோதி பின்னர் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளும் காயம் அடைந்தனர்.

    மேலும் பஸ் கண்ணாடி உடைந்து சேதம் ஆனது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த னர். தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஙபின்னர் காயம் அடைந்த நரசிம்மன் மற்றும் பஸ் பயணிகளை மீட்டு ஆம்பு லன்ஸ் மற்றும் ஆட்டோவில் ஏற்றி பிள்ளை யார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போக்கு வரத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் ரூ.4,460 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடி வடைந்து பெரும்பாலானோர் தங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.இதனால் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது.

    வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரு மடங்கு விலை உயர்வு ஏற்பட்டு ரூ.4,460 வரை விற்பனையாகிறது. இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ் டிக்கெட் விலை சாதாரண நாட்களில் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,200 முதல் ரூ. 2500 வரை விற்பனை ஆகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது
    • வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு அந்த தம்பதி பஸ்சை சிறை பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காவல்பிறை தெருவை சேர்ந்தவர் அருண்மணி. இவர் இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாளையில் இருந்து டவுனுக்கு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வண்ணார் பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் பாளையங் கால்வாய் அருகே வந்த போது, புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் நோக்கி வந்த தனியார் பஸ் அதிவேகமாக வந்தது.

    அப்போது தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இது போல் 2 முறை மோது வது போல் பஸ் இயக்கப் பட்டதால், அச்சமடைந்த அந்த தம்பதி வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு பஸ்சை சிறை பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் பஸ்சை அதிவேகமாக ஓட்டிய டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிவேகமாக ஓட்டியது, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நெல்லையில் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதி களையும் ஒழுங்காக பின்பற்று வதில்லை. அதிக ஒலி எழுப்புவதோடு, அதிவேகத்திலும் தொடர்ந்து தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர்ந்து சாலையில் செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தனியார் பஸ்கள் இயக்கப் படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமம் என்ற விதியை மீறி நெல்லையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
    • சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் உயிர்தப்பினர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து இன்று மதியம் 12 மணி அளவில் சேலம் நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் குமார் (40) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருநாவுக்கரசு (35) என்பவர் பணியாற்றினார். பஸ் எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை ரிங்-ரோடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் பஸ்சில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பகுதியிவ் கொட்டி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சில் எரிந்த தீயை பொதுமக்கள் அணைத்துவிட்டனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் உயிர்தப்பினர். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார்.
    • விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    நெல்லை:

    சாத்தான்குளம் அருகே உள்ள முதலுரை சேர்ந்தவர் கோட்டியப்பன். இவர் நெல்லையில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    பள்ளத்தில் இறங்கியது

    தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரையாறுக்கு செல்லும் அந்த பஸ்சில் இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணி களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டு சென்றது.

    பேட்டை ஐ.டி.ஐ அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் கோட்டியப்பன் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்குள்ள தனியார் நிறுவன சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.

    டிரைவர்- பயணிகள் காயம்

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து டிரைவர் கோட்டியப்பன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோட்டியப்பன் மற்றும் பயணிகளை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×