என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக வங்கி"

    • புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
    • பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.

    இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.

    இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.

    ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 

    மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.

    தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.  

    • கடந்த ஜூன் மாதம் 6.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
    • தற்போது 6.5 சதவீதமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

    உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

    வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.

    • தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
    • வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும்

    இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

    தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், இது 2070 ஆம் ஆண்டுக்குள் 14-30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.

    பெரும்பாலும் நகர்ப்புற விரிவாக்கம், வெள்ள அபாயம் மற்றும் வெப்ப பாதிப்பு உள்ள பகுதிகளில் நடைபெறுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லி, சென்னை, சூரத், லக்னோ போன்ற நகரங்கள் அதிக வெப்ப அலை மற்றும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

    வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    எனவே இந்த அபாயங்களைத் தடுக்க, 2050க்குள் 2.4 டிரில்லியன் டாலரும், 2070க்குள் 10.9 டிரில்லியன் டாலரும் வீட்டு வசதி, போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

    தற்போது இந்தியா GDPயில் 0.70% மட்டுமே நகர்ப்புற உள்கட்டமைப்பில் செலவிடுகிறது. இது மற்ற நாடுகளை விடக் குறைவாகும்.

    • இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது.
    • அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

    இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியாவில் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.

    * இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 2040-ம் ஆண்டுவாக்கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.

    * அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.

    * மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

    * போக்குவரத்தின்போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி) அளவுக்கு ஏற்படலாம்.

    * தற்போதைய அளவுடன் ஒப்பிடுகையில் 2037-ம் ஆண்டுக்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பு நிதிஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
    • இ்ந்திய பொருளாதார வளர்ச்சியை உலக அமைப்பு உயர்த்தி கணித்திருப்பது இது முதல்முறை ஆகும்.

    புதுடெல்லி:

    நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்து இருந்தது. அதை கடந்த அக்டோபர் மாதம் 6.5 சதவீதமாக குறைத்தது.

    இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும் என்று உயர்த்தி கணித்துள்ளது.

    கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மீண்டு எழுந்ததுதான் இதற்கு காரணம் என்று உலக வங்கி கூறியுள்ளது.

    இ்ந்திய பொருளாதார வளர்ச்சியை உலக அமைப்பு ஒன்று உயர்த்தி கணித்து இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    • விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
    • நீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரிவேடு ஊராட்சியில் உலக வங்கி நிதியின் வாயி லாக வேகவதி உபவடி நில பகுதியில் நீர்வளத்துறையின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் கரிவேடு ஏரி, தாமல் கால்வாய், கட்டுமானங்கள், தாமல் கசக்கால்வாய் புனரைமைப்பு பணிகளை உலக வங்கியின் நீர்வள வளர்ச்சி நிபுணர் யூப் நேற்று ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது ஏரிகள் மற்றும் கால்வாய்களில் நடைபெறும் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரிகள் சிறப்பாக தூர்வாரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் ஏரிகளின் கீழ் செல்லும் பாசன கால்வாய்களை அதிகாரிகள் உடனிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத் தரவும் கோரிக்கை வைத்தனர்.

    ஏரிகளில் புதிதாக செயல்பாட்டிற்கு வந்துள்ள நீர் பாசன சங்கங்கள் வாயிலாக நிதி ஆதாரம் திரட்டி பாசன கால்வாய்களை சீரமைத்து கொள்ளவும், பணிகள் முடிக்கப்பட்டவுடன் ஏரிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், ஒற்றை பயிர் சாகுபடி போன்ற பயிர்கள் செய்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் விவசாய ஏரி நீர்பாசன சங்கங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ், உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் பிரபாகர் மற்றும் காவேரிப்பாக்கம் பாசன பிரிவு உதவி பொறியாளர் மெய்யழகன், பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செபஸ்டின் ரகோத்தமன் மற்றும் வே ளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் மற்றும் சார்பு துறை அலுவ லர்கள் விவசா யிகள்ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 2023-ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.
    • உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.

    கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போரால் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருவதாக உலக பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக பொருளாதாரம் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை களைவதற்கு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

    • உலக வங்கி தலைவர் பதவிக்கு அஜய் பங்காவை பரிந்துரைத்தார் அதிபர் பைடன்.
    • இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

    • 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
    • உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலும் 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான பஸ்களை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

    "உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பஸ்களும் 2025-ம் ஆண்டில் 500 பஸ்களும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

    'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்களை தனியார் வழங்கவும், டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    சென்னையில் பஸ்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யவும் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் வழி வகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் ஆலோசனை குழு அமைக்க டெண்டர் விடப்படுகிறது. இக்குழு இத்திட்டத்தில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.

    • அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும்.
    • கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும்.

    புதுடெல்லி:

    உலக வங்கி தனது அறிக்கையில், ''அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும். கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே காரணங்கள்'' என்று கூறியுள்ளது.

    அதே சமயத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

    • நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.
    • 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.

    கொலராடோ:

    1948-ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து, இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது.

    உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு முகவர்களிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கும் 4 பில்லியன் டாலர்கள் வரை கூடுதல் நிதியை IMF கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் பிணை எடுப்பிற்கு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

    மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) செய்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

    நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான இயக்குனர் பாரீஸ் ஹேடட்- செர்வோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " ஒரு கட்ட அணுகுமுறையின் மூலம், உலக வங்கி குழுவின் மூலோபாயம் ஆரம்பகால பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

    இந்த சீர்திருத்தங்கள் நாட்டை மீண்டும் பசுமையான, நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும்" என்றார்.

    • ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
    • பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென் அமெரிக்காவில் உள்ள சிலி குடியரசு நாட்டிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று உள்ளார். சிலி குடியரசு நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சான்டியாகோ மாநகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றார்.

    சிலி குடியரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் கார்லோஸ் மான்டெஸ் சிஸ்டர்னாஸ் புதிய தொழில் நுட்பம் குறித்து பேசினார்.

    இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒரு குடியிருப்புக்கு ரூ.1.5 லட்சம் மானியமாகவும் தமிழ்நாடு அரசு ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள தொகை பயனாளிகளால் ஏற்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் திறனுக்கேற்ற வாடகை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முன்னோடியாக 6 திட்டப் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள், தங்கும் இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து 5 லட்சம் குடியிருப்புகள், தனி வீடுகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.30 லட்சம் குடும்பங்களுக்கு மனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×