என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka"

    • உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
    • இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில், இலங்கை அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல முடியாததற்காக ரசிகர்களிடம் அந்நாட்டு கேப்டன் தசுன் ஷனகா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ஷனகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீங்கள் விரும்பியதை எங்களால் வழங்க முடியவில்லை. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய நிலைமையை எங்களால் நிச்சயம் மாற்ற முடியும்.

    என் மீதும், இலங்கை அணி மீதும் உங்களுக்கு இருக்கும் வேதனை, கோபத்தை நன்கு அறிவேன். இதனால் எழுந்துள்ள அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட்டு விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 107 ரன் மட்டுமே எடுத்தது.
    • இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற இலங்கை அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் களத்தில் உள்ளன.

    • மார்க் அடேர் மற்றும் பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
    • ஸ்பின்னர் ஜார்ஜ் டோக்ரெல் சிக்கனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

    2026-ம் ஆண்டு ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இன்னிங்ஸின் நடுப்பகுதியில் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு இலங்கை அணியைக் கட்டுப்படுத்தினர் (ஒரு கட்டத்தில் 87/4).

    இருப்பினும், கடைசி ஓவர்களில் கமிந்து மெண்டிஸின் அதிரடி மற்றும் குசல் மெண்டிஸின் அரைசதம் காரணமாக இலங்கை அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது.

    தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷாரா நிதானமான தொடக்கத்தைத் தந்தனர்.

    கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 44 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்து அணியின் ஸ்காரை உயர்த்தினார்.

    மார்க் அடேர் மற்றும் பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்பின்னர் ஜார்ஜ் டோக்ரெல் சிக்கனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

    இந்நிலையில், 164 வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

    இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    தசன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசால் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹேஷ் தீக்சனா, துஷ்மந்த சமீரா, மதீஷ பதிரன, ஈஷான் மலிங்கா.

    இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 8-ம் தேதி அயர்லாந்துடனும், 12-ம் தேதி ஓமனுடனும், 16-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ம் தேதி ஜிம்பாப்வே உடனும் மோதுகிறது.

    • பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது.

    பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

    • இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.
    • பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இதனிடையே புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ரூ.4041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

    இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

    இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீண்டெழ உதவுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியையும் தெரிவித்தேன்.

    ஆபரேஷன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா இலங்கையின் கீழ்கண்ட மறுகட்டமைப்புக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள்.
    • இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது. இதில் முதலில் ஆடிய இலங்கையை 121 ரன்னில் மடக்கிய இந்தியா அந்த இலக்கை ஜெமிமா ரோட்ரிக்சின் அரைசதத்தால் (69 ரன்) 14.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள். பீல்டிங் தான் சற்று மந்தமாக இருந்தது. 4 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடக்க ஆட்டத்தில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்தார். விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இலங்கை பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

    இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற தனது நனவு நனவான உற்சாகத்தில் உள்ள 20 வயதான வைஷ்ணவியின் செயல்பாடு 2-வது ஆட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 

    • கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
    • இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இந்தநிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    • சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
    • வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

    ×