என் மலர்tooltip icon

    துபாய்

    • அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளனர்.

    இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

    மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. 

    மேலும் துபாயின் பாம் ஜுமேராவில் உள்ள பாம் ஹோட்டல் கட்டிடத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அதேபோல துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. இதில் நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர்.

    துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் பிற முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    துபாய்:

    நடப்பாண்டு ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தத் தொடர் ஜூன் 12-ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடங்குகிறது. இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    குழு 1-ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளும், குழு 2-ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. மகளிர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன.இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துடன் தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி ஹெட்டிங்லியில் நெதர்லாந்து அணியையும், ஜூன் 21-ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் தென் ஆப்பிரிக்க அணியையும் எதிர்கொள்கிறது. ஜூன் 25-ம் தேதி வங்கதேசத்துடனும், ஜூன் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா மோதவுள்ளது.

    தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    • ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டது.
    • பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

    துபாய்:

    ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

    சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் அசத்திய சாதியா இக்பால் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் 2 இடம் முன்னேறி முதலிடம் பிடித்தார். கடைசி போட்டியில் 3 விக்கெட் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

    கடந்த 2024-ல் முதலிடம் பிடித்த இவர், சதர்லேண்ட் 2025-ல் முதலிடத்துக்கு வந்த பிறகு தரவரிசையில் கீழிறங்கினார்.

    பாகிஸ்தானின் சாதியா இக்பால் 743 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 729 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 727 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் 721 புள்ளிகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றனர்.

    • ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் 2வது இடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 3வது இடத்திலும் உள்ளனர்.

    சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் 1 விக்கெட்டும், பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சிக்கந்தர் ராசா ஒருநாள் போட்டியின் ஆல் ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
    • அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் தொடருக்காக ரேசர் அஜித் குமார் துபாயில் இருக்கிறார். அஜித் குமாரின் ரேசிங்கை நேரில் காணவும், அவரை வாழ்த்தவும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் துபாய் சென்று வருகின்றனர். இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார்.

    ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், அஜித் குமாரை சந்தித்தது, பந்தய களத்தில் கிடைத்த அனுபவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.



    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
    • அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித் குமார். நடிப்பு ஒருபக்கம், ரேசிங் ஒருபக்கம் என பம்பரமாக சுழன்று வருகிறார். அந்த வகையில், தற்போது துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். ரேசிங் ஒருபக்கம், ரசிகர்கள் ஒருபக்கம் என சமூக வலைத்தளங்களில் அஜித் குமார் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    அடிக்கடி ரேசர் அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் என துபாயில் தமிழ் நடிகர்கள் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார். ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    துபாய்:

    அயர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    துபாயில் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆடியதன் மூலம் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் புதிய சாதனை படைத்தார். இது அவருக்கு 160-வது ஆட்டமாகும்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சாதனையை இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் (159 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 47 ரன்னில் அவுட்டானார். மேத்யூ போர்டு 27 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அதிரடியாக ஆடி 71 ரன்கள் குவித்தார். இப்ராகிம் ஜட்ரன் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கல் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஸ்பிரிங்கர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. டார்விஷ் ரசூல் 68 ரன்னும், செதிகுல்லா அடல் 53 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 17 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
    • சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வோர்ட் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • பந்துவீச்சில் தீப்தி சர்மா தரவரிசைக்கான 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
    • பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

    இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

    இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரை சதம் கடந்தார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஷபாலி வர்மா 6வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு புள்ளி குறைந்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    • முதலில் ஆடிய டெசர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சாம் கர்ரன் 51 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    துபாய்:

    4-வது சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் எம்.ஐ.எமிரேட்ஸ், டெசர்ட் வைபர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய டெசர்ட் வைபர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சாம் கர்ரன் 51 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடுத்து ஆடிய எம்.ஐ.எமிரேட்ஸ் 18.3 ஓவரில் 136 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெசர்ட் வைபர்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.

    கடந்த 2 தொடர்களில் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த வைபர்ஸ் இந்த தடவை முதல் முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×