என் மலர்tooltip icon

    துபாய்

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
    • இதில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்ற நிலையில் 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.

    இலங்கை அணி 3-வது இடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.

    கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
    • கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் உயிரிழப்பு.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    மேலும், துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தேஜஸ் போர் விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது. விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    முந்தைய நாள் தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தேஜஸ் போர் விமான்ததில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் இல்லாத பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
    • இதில் இந்தியா அணி எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025 - 2027) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில் 100 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடருகிறது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி (66.67 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி (66.67 சதவீதம்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்த இந்திய அணி (54.17 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்கா வீரர் வென்றார்.
    • அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்கா கேப்டன் வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.

    சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானின் நோமன் அலி, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இடம்பெற்றனர்.

    இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றார்.

    சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
    • இரட்டையர் பிரிவில் 2வது முறையாக குடர்மெடோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா-பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் ஜோடி, பிரேசிலின் லூயிசா-ஹங்கேரியின் டைமியா பாப்ஸ் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய குடர்மெடோவா ஜோடி 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

    கடந்த 2022-ம் ஆண்டிலும் இதே ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும், 2வது அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்காவும் வென்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    ரிபாகினா பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலையாக அனிசிமோவா 2வது 6-3 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 6-3 என கைப்பற்றி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சபலென்கா, ரிபாகினாவை எதிர்கொள்கிறார்.

    • மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
    • ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.

    துபாய்:

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இதையடுத்து, ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.

    இந்நிலையில், வரும் 2029-ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

    மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2029-ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • சபலென்கா அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவாவை இன்று சந்திக்கிறார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அனிசிமோவா, இத்தாலியின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ரிபாகினா, பெகுலாவை சந்திக்கிறார். இரண்டாவது அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவாவை சந்திக்கிறார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ×