என் மலர்
துபாய்
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
துபாய்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.
- ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின.
லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
- சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார்.
துபாய்:
சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நவி மும்பையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் 87 ரன் குவித்ததுடன் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் ஷபாலி வர்மா முக்கிய பங்கு வகித்தார்.
அவரது இந்த அபார ஆட்டத்தால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
- முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 408 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் அபிக்யான் குண்டு இரட்டை சதமடித்து அசத்தினார்.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியா உடன் மோதியது. டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 408 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக அபிக்யான் குண்டு சிக்சர், பவுண்டரிகளாக விளாசி 209 ரன்கள் குவித்தார்.
மலேசியா சார்பில் முகமது அக்ரம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசிய அணி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில், 32.1 ஓவரில் மலேசிய அணி 93 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக அபிக்யான் குண்டு தேர்வு செய்யப்பட்டார்.
- இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது.
- பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக ஹூசைபா அஹ்சான் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, ஃபர்ஹான் யூசப் 23 ரன்களிலும், உஸ்மான் கான் 16 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். தொடர்ந்து, அலி ராசா, சமீர் மின்ஹாஸ், அகமது ஹூசைன், ஹம்சா சாஹூர், அப்துல் சுபன், முகமது சய்யம், நிக்கப் சாஃபிக் உள்ளிட்டோர ஒற்றை இலக்கில் ஆவுட் ஆகினர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
- இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
- 2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தைக் கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கிடையே, 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 10 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 10 வீரர்களின் விவரம் குறித்த தகவல் வெளியானது.
அதன்படி, இந்தியாவின் விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அடில் ரஷீத், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிச்செல், மேட் ஹென்றி மற்றும் மிட்சல் சாண்ட்னர், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால் இந்த பட்டியல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதன் வருடாந்திர விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்து எந்தஅதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
- சூர்யவன்ஷி 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.
துபாய்:
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் பீகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அவர் 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 32 பந்தில் 100-ஐ கடந்து டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர்களில் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் (14 சிக்சர்) அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ஏற்கனவே, ஐ.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
- 20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
துபாய்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடித்த அணிகள், டி20 தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வானது. இவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும். அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
40 லீக் ஆட்டம், சூப்பர் 8 சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.
இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு, கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் நேற்று மாலை 6.15க்கு தொடங்கியது.
குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.150, ரூ.250, ரூ.300, ரூ.500, ரூ.600, ரூ.750 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும்.
விற்பனை தொடங்கிய உடனே ஏராளமான ரசிகர்கள் இந்த இணைய தளத்தை அணுகியதால் சிறிது நேரம் இணைய தளமே முடங்கியது.
- நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் இடம்பெற்றுள்ளார்.
- நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் சிமோன் ஹார்மர், பாகிஸ்தானின் முகமது நவாஸ், வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தாய்லாந்தின் திபாட்சா புத்தவோங், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈஷா ஒசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.






