search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
    • ரோகித் தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பெயர் அதிகமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயமடைவதால் அவரை கேப்டனாக அறிவிக்க முடியாது என தேர்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில போட்டிகள் மட்டுமே கேப்டனாக பணியாற்றிய சூர்யகுமாரை நியமித்தது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நான் தான் எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளிப்படையாக பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து பும்ரா கூறியதாவது:-

    நான் தான் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன். சில போட்டிகளில் நானும் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதே சமயம் இங்கே மகத்தான கேப்டன்களும் உள்ளனர். இருப்பினும் நான் என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வேன்.

    இந்தியாவுக்காக அறிமுகமான போது எம்எஸ் டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார். எனர்ஜியால் செயல்படக்கூடிய விராட் கோலி ஆர்வத்துடன் பிட்னஸை பின்பற்றுமாறு தள்ளினார். ரோகித் சர்மா வீரர்களின் உணர்வுகளை அறிந்து அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து உதவினார்.

    அந்த வகையில் அனைவரும் இந்திய அணி முன்னோக்கி செல்வதற்கு உதவினர். குறிப்பாக ரோகித் சர்மா இளம் வீரர்களிடம் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகுவார். குறிப்பாக அவர் இளம் வீரர்களை நாம் அணியில் இல்லை என்று நினைக்க விட்டதில்லை. எனவே ரோகித் சர்மா கேப்டனாக கிடைத்ததற்கும் அவருடைய தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கருதுவேன்.

    என பும்ரா கூறினார்.

    • மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி சிஎஸ்கே அணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மீண்டும் நடக்கவுள்ளது.

    ஏற்கனவே பல்வேறு அணிகளும் தங்களின் கருத்துகளை கூறியுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நிறைய வீரர்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

    கடந்த சீசனில் குஜராத் அணியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை திடீரென மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அதற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். ஐபிஎல் விதிகளின்படி 3 இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியால் தக்க வைக்க முடியும். இதனால் ரோகித் சர்மாவை தக்க வைக்க முடியாது என்றே பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    அதன்படி மெகா ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால், பல்வேறு அணிகளும் அவரை வாங்க முயற்சிப்பார்கள். சீனியர் வீரர் என்றாலும் பிராண்ட் மதிப்புமிக்க என்பதும், டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பெயரும் ரோகித் சர்மாவுக்கு சாதகமாக அமையும்.

    அதேபோல் ஆர்சிபி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட 3 அணிகளும் சரியான கேப்டன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவுடன் ரோகித் சர்மா நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். இதனால் லக்னோ அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மா ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

    ரோகித் மட்டுமல்லாமல் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் மும்பை அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    போன ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணி உரிமையாளர் மைதானத்தில் வைத்து கேஎல் ராகுலை கடுமையாக கண்டித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப உள்ளார்.

    இதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், சிஎஸ்கே அணிக்கு மாற உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

    அடுத்த ஐபிஎல் தொடரில் 4 அணியின் கேப்டன் மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
    • நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    மும்பை:

    நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் (இந்தியா தகுதி பெற்றால்) விராட் மற்றும் ரோகித் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா உடல்தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்.

    ஒருவேளை பிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
    • இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார்.

    இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று அவர் வழிநடத்த இருக்கும் முதல் தொடரை ஒட்டி, கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தலைமை பயிற்சியாளர் காம்பீர், மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தனர். பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் காம்பீர் பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவே.

    "நான் மிகவும் வெற்றிபெற்ற அணியை வழி நடத்துகிறேன். டி20 உலக கோப்பை சாம்பியன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பல வெற்றிகளை நாம் காண வேண்டும்."

    "விளையாட்டு வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கும், வீரர்ளுக்கும் நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு பின்னால் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்."

    "ரோகித் மற்றும் விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். டி20 ஆகட்டும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியாகட்டும், அவர்களுக்குள் இன்னும் நிறய கிரிக்கெட் மீதம் இருக்கிறது."

    "அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பையிலும் விளையாடும் சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம்," என்று கூறியுள்ளார்.

    • அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
    • உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.

     

    இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:

    டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.

    எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.

    இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றனர்.
    • அந்த இருவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கபில் தேவ் கூறினார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். அதேசமயம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என தெரிவித்துள்ளனர்

    டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.டோனியை போன்று விராட் கோலி, ரோகித் சர்மாவின் இடத்தையும் இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய அணியில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேலையாட்கள். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளனர்.

    அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கென்று தரத்தை உருவாக்கிய விராட் கோலியை இந்தியா கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிஸ் செய்யும்.

    அந்த இருவருமே சச்சின், தோனியைப் போன்றவர்கள். அந்த இருவரின் இடத்தை யாரையும் வைத்து மாற்றமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஔக்கு அறிவிப்பார் என தெரிகிறது.

    ரோகித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித், கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறவில்லை என்றால், உள்நாட்டு தொடரில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்தார். ஆனால் ரோகித், விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    மேலும் வங்காள தேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னோடியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத மற்ற அனைத்து டெஸ்ட் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-

    இந்த முறை துலீப் டிராபிக்கு மண்டலத் தேர்வுக் குழு இல்லை. தேசிய தேர்வுக் குழு மட்டுமே துலீப் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். அனைத்து டெஸ்ட் அணி வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். ரோகித், விராட், பும்ரா ஆகியோர் விளையாடுவது அவர்களின் விருப்பம்.

    என கூறுகின்றது. 

    • இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
    • இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து ஒருநாள் தொடரும் அதன் பின் டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் ரோகித், விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்தனர். இதனால் ரோகித், விராட் மட்டுமின்றி பும்ரா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    மேலும் டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாக பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன்.
    • கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் ரோகித் பாய் அல்லது மஹி பாய், விராட் பாய், ஹர்திக் பாய் போன்ற அனைவரிடமிருந்தும் குணங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் சிறந்த குணங்கள் உள்ளன. இருப்பினும் ரோகித் பாய் தலைமையில் நான் அதிகமாக விளையாடியுள்ளேன். எனவே கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன். 

    அவர் தலைமையில் நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். உண்மையில் அது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது.

    ஏனெனில் அது என்னை போட்டியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது. அதே சமயம் அழுத்தமும் இருக்கும். ஆனால் அதை எக்ஸ்ட்ரா அழுத்தம் என்று சொல்ல மாட்டேன். பேட்ஸ்மேனாக இருக்கும் போது கூட நீங்கள் நன்றாக செயல்படவில்லையெனில் அழுத்தம் ஏற்படும். கேப்டனாக இருக்கும் போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அதில் அழுத்தமும் ஒன்றாகும். அதைத் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் போது கிடைக்கும் திருப்தி அற்புதமானது.

    இவ்வாறு கில் கூறினார்.

    • விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    2013 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு அடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

    2019 ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார். அப்போது இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்தது குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

    "இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தபோது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று என்று சவுரவ் கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது
    • முதல் அரையிறுதிப் போட்டியை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது விம்பிள்டன் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டேனில் மெத்வதேவ் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதி வருகின்றனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் அரையிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா பங்கேற்ற முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×