என் மலர்
கிருஷ்ணகிரி
- வசந்தா சற்று மனநலம் பாதிக்கபட்டவர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தர்கா அருகே உள்ள கே.ஏ.நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது63). இவர் சற்று மனநலம் பாதிக்கபட்டவர். இதற்காக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.
சம்பவத்தன்று மனவிரக்தியில் இருந்த வசந்தா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பிக்கனம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் ஓட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக் கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- கண்டெய்னர் லாரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- கட்டுபாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
கிருஷ்ணகிரி,
உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டம் ஷோரா ஸ்பங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசன் (வயது33). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் நானாசந்த் (வயது 33).
சம்பவத்தன்று இருவரும் கண்டெய்னர் லாரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி ேதசிய ெநடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ராம்கிசன் படுகா யமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றனர்கள் நானாசந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை முடிந்து இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு ெசன்றார்.
- மர்ம நபர்கள் 7 பவுன் தங்க தாலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வக்கினம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி தென்றல் (வயது 33). இவர் செல்லம்பட்டி பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் வேலை முடிந்து இரவு சுமார் 9.30 மணியளவில் வீட்டிற்கு ெசன்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தென்றலை சாலையில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 7- பவுன் தங்க தாலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து தென்றல் போச்சம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகன்றனர்.
- கீரனஅள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- மருத்துவமனையில சிகிச்சை பலனின்றி கெம்பம்மா உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்தள்ள அஞ்சலகிரி பகுதியை சேர்ந்தவர் கெம்பம்மா (வயது80). இவர் கீரனஅள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கெம்பம்மா உயிரிழந்தார்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 100 பேர் காங்கிரசில் இணைந்தனர்.
- தளி தொகுதி தலைவர் அக்மல் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில், கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் வழிகாட்டுதலின்படி, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 100 பேர் இளைஞர் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான், மாநில காங்கிரஸ் செயலாளர் தேன்கு அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தளி தொகுதி தலைவர் அக்மல் தலைமையில், அக்கட்சியிலிருந்து விலகியவர்கள் இளைஞர்
காங்கிரசில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர்.
- இந்த நிலையில் வீட்டின் முன்பு ராஜேந்திரனுக்கு சொந்தமான ஒரு இருசக்கர வாகனம், மற்றும் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களின் மூன்று இருசக்கர வாகனங்கள் என மொத்தம் நான்கு இருசக்கர வாகனங்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது
- இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ராஜேந்திரன். இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இவர் மேல் தளத்தில் வீடு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் முன்பு ராஜேந்திரனுக்கு சொந்தமான ஒரு இருசக்கர வாகனம், மற்றும் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களின் மூன்று இருசக்கர வாகனங்கள் என மொத்தம் நான்கு இருசக்கர வாகனங்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளார்.
இந்த தீயானது அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் பரவி மள மள என கொழுந்து விட்டு எரிந்தது. நள்ளிரவு என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் எரிந்து வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல்கள் எரிந்து ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதற துவங்கியுள்ளது.
இந்த சத்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்து வெளியில் வராத அளவிற்கு தீ கொழுந்து விட்டு தெரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அருகில் இருந்தவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.
மேலும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப் புத்துறை தீயை முழுமையாக கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அனைத்து இருசக்கர வாகனங்க ளும் தீயில் எரிந்து எலும்பு கூடாக கருகின.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து ஆனது முன் விரோதம் காரணத்தால் ஏற்பட்டதா? என பல கோணங் களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பர பரப்பை யும் ஏற்படுத்தி உள்ளது.
- ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
- கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அதிமுக ஒன்றியம் சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ரவர்த்தி, தேவராசன், வேடி, வேங்கன் மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், துணைத் தலைவர் கனகராஜ், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ஊத்தங்கரை நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய தேவேந்திரன் முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முரளி பிரசாத், ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, இளம் பாசறை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பூபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- கோழி பண்ணையில் மின் ஒயர்கள் தீ பற்றி எரிய தொடங்கியது.
- 3000 கோழி குஞ்சுகள், குடோன் மற்றும் கோழி தீவனங்கள் தீ விபத்தால் சேதம் அடைந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்சம்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் கோழி பண்ணை நடத்தி வந்தார்.
இதில் நேற்று இரவு கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக சுமார் 3000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கோழி பண்ணையில் மின் ஒயர்கள் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பண்ணையில் இருந்த வைத்திருந்த 3000 கோழி குஞ்சுகள், குடோன் மற்றும் கோழி தீவனங்கள் உட்பட சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தால் சேதம் அடைந்தது.
இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
- 8 இடங்களில் நாளை பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
- பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 8 இடங்களில் பொது வினியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட கிராமங்களி பொது விநியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, கிருஷ்ணகிரி வட்டத்தில் கம்மம்பள்ளி தரப்பு எம்.கொல்லப்பள்ளி கிராமத்திலும், பர்கூர் தாலுகாவில் சின்னமட்டாரப்பள்ளி தரப்பு பசவண்ணகோயிலிலும், போச்சம்பள்ளி தாலுகா மகாதேவகொல்லஅள்ளி தரப்பு சாமல்பட்டியிலும், ஊத்தங்கரை தாலுகா காட்டேரி, ஓசூர் தாலுகா ஒன்னல்வாடி, சூளகிரி தாலுகா காமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை தாலுகா ரத்தினகிரி தரப்பு சாத்தனக்கல், அஞ்செட்டி தாலுகா அஞ்செட்டி மேற்கு தரப்பு எருமத்தனப்பள்ளியிலும் நடைபெறுகிறது.
எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.