என் மலர்
நீங்கள் தேடியது "காதலி தாக்குதல்"
- காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் மேட்டு தெரு அருகே உள்ள கடையில் பணியாற்றி வரும் 24 வயதுடைய பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது26) என்ற வாலிபரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவத்தன்று காலை மதுபோதையில் வந்த அண்ணாமலை கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது காதலியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் காதலி கன்னத்தில் வெட்டி கீறினார். இதில் அவர் வலி தாங்காமல் அலறினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.
இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் சக்திவேல் (25) என்கின்ற இமானு.
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இமானு, காதலியை சந்திப்பது தவிர்த்து வந்தார். இமானுக்கு அவரது பெற்றோர்கள் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த இளம்பெண், காதலன் இமான் வீட்டுக்கு சென்ற தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இமானு, அவரது தம்பி இன்பரசன் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை தாக்கினர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்கு பதிவு செய்து இமானு, இன்பரசன் ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்கள் ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூரை அடுத்த விடையூர் அண்ணை இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் முருகன் (22). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் எதிர் வீட்டை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இருவரும் பல இடங்களில் சுற்றி வந்ததாகவும், அப்போது முருகன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண், முருகன் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு முருகன் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பெண்ணை உருட்டுக்கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். இது தொடர்பாக முருகன், அவரது தாய், தங்கை, அண்ணன் சோமு, அவரது நண்பர் பூவரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






