search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.

    தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டு ராஜன். இவரது மகன் சீனு (வயது 19).

    இவர் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேல திடியூரில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் படித்து வந்தார். இதற்காக அங்கு உள்ள கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது அறையில் விஷம் குடித்து சீனு மயங்கி கிடந்தார். சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கல்லூரி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். கூலி தொழிலாளி. இவருக்கு தங்கத்தாய்(வயது 20) என்ற மகளும், முத்து(18) என்ற மகனும் உள்ளனர். முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் இது தொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த முத்து அரிவாளால் சகோதரி என்று கூட பாராமல் தங்கத்தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

    இதுகுறித்து அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கத்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.

    விசாரணையில் காதல் விவகாரத்தில் தங்கத்தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிளஸ்-2 வரை படித்திருந்த தங்கத்தாய், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்ய பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், அதனை தங்கத்தாய் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்றும் மாப்பிள்ளை பார்ப்பது சம்பந்தமாக காலை முதல் வீட்டில் இருந்தவர்கள் சண்டையிட்டு வந்த சூழலில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து வீட்டின் முன்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் கஜேந்திரன் (வயது 40).

    விவசாயியான இவருக்கு திருமணமாகி புஷ்பா (33) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோசிகா என்ற மகளும் உள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் விளை நிலத்தில் மாற்று பயிர் பயிரிட கஜேந்திரன் அவரது சொந்த டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த புஷ்பாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    கணவர் கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது உறவினர்கள் புஷ்பா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் திடீரென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இறந்த புஷ்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பா எதிர்பாராத விதமாக டிராக்டரில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது அவரது கணவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் புஷ்பாவின் கணவர் கஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா(வயது6) கடந்த 27-ந்தேதி மாலை, தனது சகோதரருடன டியூசனுக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டாள்.

    சிறுமியை கடத்திய கும்பல், சிறுமியின் தாயை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ10லட்சம் கேட்டு மிரட்டியது. சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டனர். சிறுமியின் சகோதரன் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் கண்டறியப்பட்டது.

    சிறுமியின் சகோதரன் மற்றும் பலர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொல்லம் பகுதியில் தனியாக நின்ற சிறுமி சாராவை போலீசார் மீட்டனர்.

    அவளை கடத்தல்காரர்கள் அந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவளை கடத்தியவர்களை பிடிக்க போலீஸ் டிஐ.ஜி. நிசாந்தினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமியிடம் கடத்தல்காரர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர்.

    அப்போது சிறுமி கடத்தல்காரர்களில் ஒரு ஆண் மொட்டை மாமா என்று கூறினார். போலீசார் வரைந்த வரைபம், சிறுமி கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்த போது சிறுமியை கடத்தியது சாத்தனூரை சேர்ந்த பத்ம குமார்(52) என்பது தெரிய வந்தது.

    அவரை தேடி போலீசார் சென்றபோது அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்ட விவரம் தெரிந்தது. அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரையில் அவர்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அங்குள்ள ஒரு உணவகத்தில் வைத்து பத்மகுமார், அவரது மனைவி அனிதா, மகள் அனுபமா ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். பத்ம குமாரிடம் விசாரித்த போது, சிறுமியை கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

    சிறுமியின் தந்தையுடன் தனக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அதன் காரணமாகவே சிறுமியை கடத்தியதாகவும் தெரிவித்தார். பத்மகுமார் தனது மகளை நர்சிங் சேர்ப்பதற்காக ரெஜி ஜானிடம் ரூ5லட்சம் கொடுத்திருக்கிறார்.

    ஆனால் அவர் நர்சிங் சேர்க்கை வாங்கித் தரவில்லை. மேலும் அதற்காக வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவில்லை. அந்த பணத்தை திரும்பி வாங்குவதற்கு ஒரு ஆண்டாக ரெஜி ஜானிடம் கேட்டு வந்திருக்கிறார். ஆனால் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை.

    இதன்காரணமாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினை காரணமாகவே ரெஜி ஜானின் மகளை பத்மகுமார் கடத்தியது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர். சிறுமி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடத்தலில் தனது மனைவி மற்றும் மகளுக்கு தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் பத்மகுமார் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும் பத்ம குமார், அவரது மனைவி மற்றும் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பத்ம குமார், அவரது மனைவி மற்றும் மகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.

    அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நகர் என்கிற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இருபாலரும் பயிலும் இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

    அதன்படி நகர் கிராமத்தை சேர்ந்த பவித்திரன் (வயது 13), அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார். இதனை ஆசிரியர்கள் கண்டித்ததுடன், பவித்திரனை முட்டி போட வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.
    • பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக ஒரு கார் அனாதையாக நின்றது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுபற்றி பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். அப்போது காரில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. ரத்தக்கறையுடன் ஒரு சுத்தியலும் கிடந்தது. மேலும் ஒரு போர்வை, துண்டு ஆகியவையும் இருந்தது.

    ரத்தக்கறையுடன் சுத்தியல் கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த கார் யாருக்கு சொந்தமானது என விசாரித்தபோது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது என தெரியவந்தது. பாலமுருகனின் மனைவி தீபா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 17-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு காரில் புறப்பட்டுச் சென்று இருக்கிறார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தான் தீபா வந்த கார் கோவையில் அனாதையாக நின்றது தெரியவந்தது. தீபாவுடன், ஆசிரியர் ஒருவரும் வந்ததாக கூறப்படுகிறது. தீபா பணியாற்றிய அதே பள்ளியில் தான் அவரும் பணியாற்றி இருக்கிறார். தீபா மாயமான அன்று அவரும் மாயமாகி உள்ளார். இதனால் தீபாவையும், அந்த ஆசிரியரையும் போலீசார் தேடி வந்துள்ளனர்.

    தற்போது தீபா வந்த காரில் ரத்தக்கறை படிந்துள்ளதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தீபாவுக்கும், அவருடன் வந்த ஆசிரியருக்கும் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் தாக்கிக் கொண்டதில் காரில் ரத்தக்கறை ஏற்பட்டதா அல்லது எதனால் ரத்தக்கறை ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் மாயமான ஆசிரியை தீபாவின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரையும், ஆசிரியரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கை பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருவதால் கோவை மாநகர போலீசாருக்கு அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin