என் மலர்
நீங்கள் தேடியது "police investigation"
- கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா மாவட்டம், கட்வால் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கட்வாலில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். மாணவியிடம் பைக்கில் அழைத்துச் சென்று பள்ளியில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
சிறிது தூரம் சென்ற போது வாலிபர்கள் வேறு வழியாக பைக்கை திருப்பி வெறிச்சோடிய பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். இருவரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் காட்வால் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பள்ளிக்கு செல்லும் மாணவிகள் யாரையும் நம்பி செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
- திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.
சென்னை:
சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் மனைவியை மயக்கி அதே குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் சென்னை அண்ணா சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 36 வயதான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்தான் தொழிலதிபரின் மனைவியுடன் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்த திலீப் என்ற 34 வயது வாலிபர் பழகியுள்ளார்.
வாலிபர் திலீப்பின் தாய் சங்கீதா தான் முதலில் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் நெருங்கி பழகி இருக்கிறார். இதன் பிறகு தொழிலதிபரின் மனைவியும் வாலிபர் திலீப்பின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட திலீப் தொழில் அதிபர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையிலும் தொழிலதிபர் மனைவி தனது குடும்பத்தை மறந்து கள்ளக்காதலுடன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
கடந்த ஓராண்டாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில் வாலிபர் திலீப் தொழிலதிபர் மனைவியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அதிக அளவில் பறித்துள்ளார்.
தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தொழிலதிபர் மனைவியிடம் சென்று வாலிபர் திலீப் பணம் வாங்குவதை வழக்கமாகவே வைத்திருந்து உள்ளார்.
இப்படி தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து திலீப் 850 கிராம் தங்க நகைகள் 120 கிராம் வைர நகைகள் 2½ கிலோ வெள்ளி பொருட்கள்,ரூ.20,000 ரொக்க பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
இதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்று குடியேறி உள்ளார். இருப்பினும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு மேலும் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்.
நான் கேட்கும்போதெல்லாம் பணத்தை கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தொழிலதிபர் மனைவியை வாலிபர் திலீப் மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த சம்பவம் பற்றி வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திலீப்பின் தாய் சங்கீதா, அவரது தம்பி அங்கித் ஆகிய இருவரையும் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
தொழிலதிபர் மனைவியை மயக்கி நகை, பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்ற மன்மத வாலிபர் திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தொழிலதிபர் மனைவியிடம் இருந்து வாலிபர் திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள திலீப்பை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலூகா, வ.உ.சி நகரைச்சேர்ந்தவர் அழகர். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் புவியரசு (வயது 15). இவர் அருகில் வேங்கடாகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் தனது வீட்டில் இருந்து பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஒருசில சமயங்களில் அவரது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெறுவதால் புவியரசு பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கி காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டார்.
பின்னர் அவர் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் அந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மாணவர் புவியரசு முன்பக்க படிக்கட்டின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அந்த பேருந்து ஆலங்குடியை அடுத்த மங்களாபுரம் அருகே குப்பக்குடி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து புவியரசு படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து புவியரசுவை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் புவியரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் புவியரசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதாகவும் இந்த வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிக்கு சென்ற மகன் இறந்தது குறித்த அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதவாறு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.
- வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்துவிட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார்.
- மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
பேராவூரணி:
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியை சோ்ந்தவர் ராஜன். இவரது மகன் மிதுன்குமாா் (வயது 30).
சம்பவத்தன்று காலை மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலின் முன்பு காரை நிறுத்தியவா் காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். அந்த காரின் என்ஜின் நீண்ட நேரமாக இயங்கியபடி இருந்துள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.
உடனடியாக அவர்கள் மிதுன்குமாரை மீட்டு, பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மாணவி தனது தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் அவருக்கு தாயே தூக்கமாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு விருந்தாக்கினார். இதில் கர்ப்பம் அடைந்த மாணவி தாயின் பிடியில் இருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கொடூர தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.
இதையடுத்து பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
- இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதன் மூலம் தெரிந்தவர்கள்-தெரியாதவர்கள் என பலருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களை பெரும்பாலானோர் நட்பு ரீதியாக பழகுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சில மோசடி ஆசாமிகள், அதனை தங்களின் மோசடிக்கான தளமாக சமூகவலைதள பக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அது போன்ற நபர்கள், தங்களின் சிந்தனைக்கு ஏற்ப பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஒரு நபர், இன்ஸ்டாகிராமின் மூலம் கிடைத்த இளம்பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ்(வயது38). சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் அவருக்கு, அதன் மூலமாக ஏராளமான புதிய நண்பர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்களில் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களும் அடங்குவர்.
அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட யது கிரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வலையில் சிக்கவைத்து சீரழித்துள்ளார். தான் கூறும் ஆசை வார்த்தையில் ஏமாந்து பழகும் பெண்களை தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை காண்பித்து மிரட்டி அந்த பெண்களுடன் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறார். யது கிரிசின் வலையில் சிக்கி ஏமாந்த இளம்பெண்களில் 3பேர், அவரைப்பற்றி திருச்சூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் யது கிரிஷ் ஏராளமான இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகிய 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பணமும் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யது கிரிசின் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
யது கிரிஷ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அவரிடம் சிக்கி ஏமாந்த மற்ற பெண்கள், அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அவர்களையும் கண்டுபிடித்து வாக்கு மூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டவரை போன்று காணப்பட்டார்.
இதையடுத்து மாணவியை அவரது தந்தை, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு மனநல பாதிப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிகிச்சை அளித்த டாக்டர், பள்ளி மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தார்.
அப்போது தன்னை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை டாக்டர் மற்றும் தனது தந்தையிடம் மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தனது மகள் படித்த பள்ளி ஆலோசகருக்கு தகவல் கொடுத்தார்.
அவர் அதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது அவர் தன்னை உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக தெரிவித்தார்.
அதில் உறவினர் ஒரு முறையும், பக்கத்து வீட்டுக்காரர் பல முறையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் 2024-2025 காலக்கட்டத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து மாணவியின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, கடந்த இரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் மாணவியின் சாவுக்கு வேறு எதுவும் காரணமாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மாணவி மரணம் தொடர்பாக "இயற்கைக்கு மாறான மரணம்" என்று போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
- மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தாணியை சேர்ந்தவர் தேவரகொண்டா மகேஷ் (வயது 32). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம், திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மகேஷ் மற்றும் சுனிதா ஆகியோர் கனடா சென்றனர். கனடாவிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் 8 மாதத்திற்கு பிறகு சுனிதா இந்தியா திரும்பினார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேஷுக்கு அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 2024-ம் ஆண்டு மகேஷ், சுனிதா ஜோடி விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு சுனிதா ஐதராபாத் வந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (32 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதல் திருமணம் குறித்து சுனிதா தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மகேஷின் தாயார் இறந்து விட்டதால் மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். மீண்டும் கனடா செல்ல முயன்ற போது சுனிதா கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரது விசா முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் சுனிதா மீது மகேஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சுனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐதராபாத் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சுனிதாவின் இருப்பிடம் குறித்து சமூக வலைத்தளத்தில் தேடிய போது பேஸ்புக்கில் அவரது முகவரி இருந்தது. சுனிதாவை கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் படங்களை பார்த்தார்.
மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார். சில நாட்கள் கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்தார்.
பின்னர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். கடந்த 5 நாட்களாக சுனிதாவின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் அவரது கணவர் எப்போது வெளியே செல்வார், எப்போது சுனிதா தனியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டார்.
நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்துக் கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார்.
கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனிதா மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த ரம்பத்தை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மாமியார் வந்து பார்த்த போது சுனிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அழைத்தார்.
குடியிருப்பாளர்கள் வந்த போது மகேஷ் ஓடி சென்று கழிவறையில் கதவை உள்புறமாக பூட்டி கொண்டார். பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேசை கழிவறையில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால் மகேஷ் தன்னை பிடிக்க வந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டினார்.
போலீசார் கதவை உடைக்க முயல்வதை அறிந்த மகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். போலீசார் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மகேஷ் லைட்டரால் உடலில் தீ வைக்க முயன்றார். போலீசார் மகேஷை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். நெசவு தொழிலாளி. இவரது மகள் ரிஷிகா பிரியா (வயது 7). பெற்றோர்கள் இருவரும் தனித்தனியாக வேலைக்குச் சென்று தங்களது 2 குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரஷிகா பிரியா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று இருந்தனர்.
சிறுமியின் எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் குல்வர்தன் (30). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை குல்வர்தன் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்தார்.
யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை அடைத்து வைத்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவன், மனைவி இருவரும் பதறி அடித்து கொண்டு வந்து அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மதனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் குல்வர்தன் வீட்டின் கதவை தட்டினர். மது போதையில் இருந்த குல்வர்தன் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது குல்வர்தன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குல்வர்தன் ரிஷிகா பிரியாவை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மீண்டும் குல்வர்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குல்வர்தன் போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரிஷிகா பிரியாவின் உடலில் ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியின் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குல்வர்தனை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குல்வர்தனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
- கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 32). இவருடைய மனைவி ராமு (28). இவரது வங்கிக்கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம். கோடை கால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
இந்த பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ராமு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






