என் மலர்
நீங்கள் தேடியது "police investigation"
- சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
- தீ விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்தவர்கள் சம்பங்கி ராமையா மற்றும் ரமேஷ் பாபு. இவர்கள் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான ஸ்கிராப் குடோன் அதே பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான பழைய இரும்பு சாமான்கள் பழைய பெயிண்ட் டப்பாக்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நீண்ட நேரம் எரிந்தவாறே இருந்தது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இன்று அதிகாலையில் சாலை தடுப்பில் மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளரான அன்பழகன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து காருக்குள் இருந்து அன்பழகனின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
- விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்றிரவு நினைவு வாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
அப்போது திடீரென அலங்கார நினைவு வாயில் பொக்லைன் இயந்திரம் மீது விழுந்ததில் பொக்லைன் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நுழைவு வாயிலை இடித்ததால் விபத்து நேரிட்டதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பொக்லைன் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
#WATCH | Tamil Nadu: One person injured after a structure collapsed during the demolition of an arch, onto the JCB that was involved in the work. JCB driver trapped under the debris, rescue operation underway: Madurai Police
— ANI (@ANI) February 12, 2025
(Video source - Police) pic.twitter.com/6OI3hplwAp
- ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திரிபுராவில் குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 40 வயதான ஷியாமல் தாசு என்பவருக்கும் மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் ஸ்வப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து செய்வதறியாது ஷியாமல் இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் தங்கினார்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அம்தாலி காவல் நிலையத்திற்கு சென்ற ஷியாமல் தாஸ் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறி சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.
- தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மைதிலி. 60 வயதான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவரது மகள் ரித்திகா. 26 வயது இளம்பெண்ணான இவர் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ரித்திகா ஷியாம் (28) என்ற வாலிபரை காதலித்து வந்து உள்ளார். இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இது போன்ற நேரங்களில் ரித்திகா இரவில் தாமதமாகவே வீட்டுக்கு வந்துள்ளார்.
இது தாய் மைதிலிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளை கண்டித்து வந்துள்ளார். இப்படி வெளியில் சுற்றி விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவது சரி இல்லை.
இந்த வழக்கத்தை மாற்றிக் கொள் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் தாய் மைதிலிக்கும், ரித்திகாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.
ஆனால் தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.
நேற்றும் ரித்திகா, ஷியாமுடன் வெளியில் சென்று உள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் இரவு 9 மணி அளவிலேயே ரித்திகா வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மைதிலி மகளை கண்டித்துள்ளார். நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா? இது போன்று வீட்டுக்கு தாமதமாக வருவது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியும் ஏன் கேட்க மறுக்கிறாய் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் தாய்-மகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக முற்றியது.
இதனால் கோபம் அடைந்த ரித்திகா தனது காதலன் ஷியாமுக்கு போன் செய்து தாய் திட்டுவது பற்றி கூறியுள்ளார். மேலும் உடனே நீ வீட்டுக்கு வா என்றும் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷியாம் முகப்பேர் கிழக்கில் உள்ள காதலியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
காதலியின் தாய் மைதிலியிடம், "நீங்கள் எப்படி அவளை திட்டலாம்" என்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஷியாம், மைதிலியை கீழே தள்ளி விட்டு காதலியின் கண்முன்னே கழுத்தை நெரித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மைதிலி, ஷியாமின் பிடியில் இருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் ஷியாம் விடாமல் கழுத்தை நெறித்ததால் மைதிலி துடிதுடித்து பலியானார். பின்னர் ஷியாம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெ.ஜெ.நகர் போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய ஷியாமை கைது செய்தனர். இது தொடர்பாக கொலையுண்ட மைதிலியின் மகள் ரித்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைதான வாலிபர் ஷியாம் அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் தங்கி இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். அப்போதுதான் ரித்திகாவுடன் காதல் ஏற்பட்டு ஷியாம் கொலை வழக்கில் சிக்கி உள்ளார். இந்த கொலை சம்பவம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஷியாமுடன் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
- பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது,
கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலை தொடுவதாகவும், மேலும் முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.
மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ஐயாபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி(வயது 45). அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார். இவர் காலையில் வீடுகள் முன்பு கோலம் போடுவது வழக்கம். அதே பகுதியில் தனலட்சுமியின் அக்காள் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கும் தனலட்சுமி கோலம்போட்டு வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தனலட்சுமி வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்து விட்டு அக்காள் வீட்டு முன்பு கோலம்போட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியின் கணவர் காளிமுத்து வந்தார். ஏற்கனவே செல்விக்கும், காளிமுத்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததால் தனலட்சுமி அவரை கண்டித்தார். இதனால் தனலட்சுமிக்கும், காளிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி சரிந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த போது தனலட்சுமி உயிருக்கு போராடிய படி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதில் குடும்ப தகராறில் காளிமுத்து தனது மனைவி செல்வியை தீர்த்து கட்ட வந்து இருந்த நிலையில் தனலட்சுமியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருப்பூரை சேர்ந்த காளிமுத்துவும், கொலையுண்ட தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியும் பேஸ்புக் மூலம் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காளிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
திருப்பூரில் இருந்தபோது செல்வி மீது காளி முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து திருவொற்றியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
எனினும் காளிமுத்து தொடர்ந்து இங்கு வந்து மனைவியுடன் மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மனைவி செல்வியை தீர்த்து கட்ட கத்தியுடன் அவரது வீட்டின் அருகே நோட்டமிட்டு சுற்றி வந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை செல்வியுடன் மோதலில் ஈடுபட காளிமுத்து வந்த போது அங்கு வீட்டு வாசலில் கோலமிட்ட தனலட்சுமி அவரை தடுத்து "இங்கே நீ ஏன் வருகிறாய்" என்று கூறி கண்டித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
தலைமறைவான கொலையாளி காளி முத்துவை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வீட்டு வாசலில் கோலமிட்ட பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார்.
திருமண வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகவும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பலரது வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், பலரது வாழ்க்கையை சோகமானதாகவும் மாற்றுகிறது. திருமண வாழ்வு இனிதாக இல்லாமல் போவதற்கு கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் இல்லாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது.
அதேபோல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தவறான தொடர்பும் பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. கணவனோ மனைவியோ, தனது இணை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அவர் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால், அதனை உண்மையாக நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அது அந்த நபருக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தை தரும் பட்சத்தில் அவர் ஒரு கொலையாளியாகவோ அல்லது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் பரிதாபமான நபராகவோ மாறிவிடுகிறார். இதில் இரண்டாவதாக கூறியதைப் போன்று ஒரு நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து தாங்க முடியாத துக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சோகம் குமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின்(வயது47). இவருக்கும், சுனிதா (45) என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் சவுதி அரேபியாவில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதா கொன்னக் குழிவிளையில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து வந்தார்.
மனைவி சுனிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பெஞ்சமின் அவருக்கு பிடித்த எல்லாம் செய்து கொடுத்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தனது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். பெஞ்சமின் வெளிநாட்டுக்கு சென்று விடும் நிலையில், அந்த வீட்டில் சுனிதா மட்டும் குடியிருந்தார்.
இந்தநிலையில் சமீப காலமாக சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றும் ஏற்பட்டது. அதனை கண்டுபிடித்த பெஞ்சமின், அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து தகவல் இருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான சுனிதாவை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுனிதா எங்கு சென்றார்? என்று பெஞ்சமின் விசாரித்தார். அப்போதுதான் தனது மனைவிக்கும், திருவந்திக்கரை பகுதியைச் சேர்ந்த சைஜு என்பவருக்கும் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.
மேலும் தான் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் ஆசையாக கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி சென்றுவிட்டதை அறிந்தார். மிகவும் பாசம் வைத்திருந்த தனது மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மிகவும் பாதித்தது.
இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதே நேரத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெஞ்சமின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது செல்போனில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார். தனது மனைவியின் இந்த செயலை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஆகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதில் பேசினார்.
மேலும் தனது தற்கொலைக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, தனது மனைவி சுனிதா, அவரது சகோதரி ஷீலா ஆகியோரே காரணம் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆவேசமாக அதில் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்ட சிறிய நேரத்தில் தனது வீட்டில் வைத்து பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெஞ்சமின் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் பரிதாபமாக இருந்தது. அவரது பேச்சில் அவர் தனது மனைவி மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் தெளிவாக தெரிந்தது. அதனை தாங்க முடியாமல் அவர் தளுதளுத்த குரலில் நடுங்கியபடியும், கதறிய படியும் பேசியது அனைவரையும் பரிதாபப்பட செய்து விட்டது.
அதே நேரத்தில் பெஞ்சமின் தான் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக கேட்டுக்கொண்டார். இதனால் பெஞ்சமின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பெஞ்சமின் தற்கொலை செய்வதற்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். பெஞ்சமின் மனைவி சுனிதா, மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி ஷீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பெஞ்சமின் மனைவி சுனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னதாகவே சைஜூவுடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் சைஜுவுடனான தொடர்பை சுனிதா விடவில்லை. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நேரத்தில் கணவர் பெஞ்சமினுக்கு சந்தேகம் எதுவும் வராதபடி நடந்து கொண்டுள்ளார். அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு சைஜுவுடன் சேர்ந்து சுற்றி திரிந்தபடி இருந்திருக்கிறார்.
தனது மனைவியின் விவகாரம் அரசல்புரசலாக பெஞ்சமினுக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் சுனிதா தனது போக்கை விடவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் சுனிதா நிரந்தரமாக குடும்பம் நடத்த சென்று விட்டார்.
இதனை அறிந்த பெஞ்சமின் உடனடியாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். தனது 19 ஆண்டுகால உழைப்பில் கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்துடன் மனைவி மாயமானது அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று சுனிதா கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பெஞ்சமினின் மனைவி சுனிதா போலீசாரிடம் சிக்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுனிதாவின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி சீலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெஞ்சமின் எதுவும் கூறாமல் தற்கொலை செய்து இருந்தால் அவரது சாவு சாதாரண தற்கொலை வழக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அதற்கு காரணமான தனது மனைவி உள்ளிட்டோரை பற்றி மிகவும் தெளிவாக பேசி வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
இதன் காரணமாகவே பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு முக்கியமான காரணமாக இருந்த அவருடைய மனைவி சுனிதாவும் சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
பரபரப்பான சென்னையில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதனால் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரில் மிகுந்த ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை சிவராஜ் என்பவர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு பணிக்குச் செல்லும் வழியில் ஆவடி CRPF காவலர் துப்பாக்கியை தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு CRPF-யிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர் கே.பி.சவுத்ரி.
- அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை:
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி.சவுத்ரி(44 வயது). இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர்.
இவர், கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான்.
- சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி விமானப் படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக விளையாடியபோது கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இதையடுத்து நண்பர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவனை பரிசோதித்த டாக்டர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர்.
- தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.
மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.
இதன்பின், மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர்.
அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.