என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதல்"
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர். பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற 4 பிள்ளைகள் உள்ள நிலையில் 4பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.நேற்று முன் தினம் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் கண்டமங்கலம் எல்லை பகுதியில் உள்ள ராஜசேகர் கரும்பு தோட்டத்தில் மலர் மர்மமான முறையில்போர்வை மூடப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை நவமால்மருதூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்கும் போது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாடு மேய்த்தவர்கள்மூலம் ஊர் பொதுமக்களுக்கு தகவல் காட்டு தீயாய் பரவியது. மேலும் மலரின் தாலி கயிறு பிணம் கிடந்த இடத்தில் இருந்து சுமார்3 மீட்டர் தூரத்தில் கிடந்தது.உடனடியாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் -இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்தங்கம், ஜோன்ஸ் ரவி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மலர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் கொலை செய்யப்பட்ட மலர் கணவர் பாண்டியன் கொலையாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்த பாண்டியனை நேற்று காலை 7 மணிக்கு கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பாண்டியன் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார். அவர் கூறியதாவது:- விபரம் வருமாறு.நான் எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு வராததால் கூலி வேலை மற்றும் டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தேன்.
கடந்த 28 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த அஞ்சாபுலி மகள் மலர் என்பவரை முறைப்படி பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் எனது மனைவி மலருடன் கடந்த 24 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். நான் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். ஊரில் என்னை ஏளனமாக பார்த்து கேவலமாக ஊர்காரர்கள் பேசி வந்தது எனக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. அவளை உயிரோடு விட்டால் தொடர்ந்து அசிங்கப்படுத்துவாள் என்பதால் அவளை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.கடந்த 20- ந் தேதி இரவு சுமார் 9 மணிக்கு டீக்கடையில் இருந்து வீட்டிற்கு வந்து எனது மனைவி மலரிடம் குளிக்க சுடு தண்ணீர் வைக்க சொன்னேன். அவள் என்னால் முடியாது என்று மறுத்து விட்டாள். எங்களுக்குள் சண்டை வந்தது. அதனால் நான் வீட்டின் முன்பு சுடு தண்ணீர் வைத்து குளித்துவிட்டு படுத்து விட்டேன். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் என் மனைவி மலர் வீட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். நான் சிறிது நேரம் கழித்து பின்தொடர்ந்து சென்றேன். அப்போது கோவில் குளம் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் என் மனைவியும் கள்ளக்காதலனும் இருப்பதை நான் பார்த்து விட்டு அருகில் சென்றேன்.என்னை பார்த்ததும் அவளது கள்ளக்காதலன்அங்கிருந்து ஓடி விட்டான் . என் மனைவி சேலையால் அவள் கழுத்தில் பின்புறமாக நின்று கொண்டு இருக்கினேன். எழுந்து திமிறினாள். அவளை கீழே தள்ளி இருக்கினேன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் அவள் இறந்து விட்டால் என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்து நடந்து திருவாண்டார்கோவில் சென்று சாராயம் குடித்துவிட்டு பின் நடந்தே விழுப்புரத்தில் நான் வேலை செய்யும் ஓட்டல் முன்பு படுத்து தூங்கிவிட்டேன். என்னை போலீசார் பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
- இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் ஜாலியாக இருந்தனர். வாலிபர் வீட்டில் இருப்பதை பார்த்த சிலர் வேண்டும் என்றே திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டு முன்பு ஊர் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாகவும் அவர் அழைத்ததின் பேரில் வந்ததாகவும் வாலிபர் கூறினார். இளம்பெண்ணும் தான் அழைத்ததின் பேரில் தான் வாலிபர் வந்ததாகவும், எனவே நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறினார்.
இதனையடுத்து போலீசார் வாலிபரை விடுவித்தனர்.
வெளியே சென்ற வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விஷம் குடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்து விட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நிலைக்கு வாலிபர் தான் காரணம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார்
- கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், எஸ் ராயவரத்தை சேர்ந்தவர் கொண்டல ராவ் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் காக்கிநாடாவில் பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், பேக் உள்ளிட்டவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி கடைக்கு சென்ற உமாவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவரிடம் சிரஞ்சீவி தனது தூரத்து உறவினர் என அறிமுகம் செய்து வைத்தார்.
சிரஞ்சீவியும் உமாவும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கொண்டல ராவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கொண்டல ராவ் மனைவியை துன்புறுத்தி வந்தார்.
கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
சம்பவத்தன்று கொண்டலராவை காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றார்.
சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு காரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். ராகில கொத்தூர் என்ற இடத்தில் வந்தபோது தயாராக இருந்த சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர் சைதுர்கா ஆகியோர் காரை நிறுத்தினர். அவர்களுடன் உமாவும் சேர்ந்து கொண்டலராவை கழுத்து இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் ராவுல பாலம் அருகே உள்ள கோதாவரி ஆற்றில் கொண்டலராவின் பிணத்தை வீசினர். கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.
கொண்டலராவின் உறவினர்கள் உமா, சிரஞ்சீவி என்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிரஞ்சீவி கொண்டலராவை அவரது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமா, அவரது கள்ளக்காதலன் சிரஞ்சீவி, அவரது நண்பர் சைதுர்கா ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் கூறி வாங்கியுள்ளார்.
- செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் முகம்மது அசாருதீன்(வயது 35). இவர் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவர் நேற்று இரவில் பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
முகம்மது அசாருதீனுக்கும், அவரது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் டிரைவரான மகாராஜன் என்பவரது மனைவி பகவதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை மகாராஜன் கண்டித்ததால், பகவதி வீட்டை விட்டு வெளியேறி அசாருதீன் ஏற்பாட்டில் பேட்டை வி.வி.கே. தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஜன் எப்படியாவது முகம்மது அசாருதீனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதையடுத்து டவுனை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் செல்வம், மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகாராஜன் நேற்று இரவு வி.வி.கே. தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீட்டில் பகவதியிடம் முகம்மது அசாருதீன் பேசிக்கொண்டிருந்தார்.
அவரை மகாராஜன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
முகம்மது அசாருதீன் மீது ஏற்கனவே போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய டவுனை சேர்ந்த செல்வமும், அசாருதீனால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் கூறி வாங்கியுள்ளார். ஆனால் ரூ.14 லட்சம் மட்டுமே செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும் செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றுள்ளார். அந்த விவகாரத்தில் செல்வம் சமீபத்தில் கைதாகி சிறைக்கு சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகாராஜனுடன் சேர்ந்து அசாருதீனை செல்வம், அவரது மற்றொரு நண்பர் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய மானவராக கருதப்படும் மகாராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39), பாளை சிவந்திபட்டி நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (25), சபரி மணி (23) ஆகிய 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
- கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வெங்கடேசன் மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
திருவள்ளூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் பாக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேசன்(வயது45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசனுக்கு சென்னையில் வேலை பார்த்த போது திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலியை அழைத்து வந்து திருவள்ளூரை அடுத்த ராமதண்டலம் கிராமத்தில் தங்க வைத்து கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை, அவரது கணவர் சமாதானம் பேசி அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வெங்கடேசன் மிகவும் மனவருத்தம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு ராம தண்டலம் ஏரி அருகே உள்ள கரிசூலை பகுதிக்கு வெங்கடேசன் வந்தார்.
திடீரென அவர் அங்கு போடப்பட்டிருந்த மின்விளக்கின் வயரை துண்டித்து அதனை பிடித்தபடி தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரம் என்பதால் வெங்கடேசன் இறந்து கிடந்தது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் வெங்கடேசன் மின்வயரை பிடித்தபடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர்தான் வழக்கில் துப்பு துலங்கியது.
- அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது எரிந்து கொண்டிருந்த உடலின் மீது அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் சாக்கு, தார்ப்பாய் போன்றவற்றை போட்டு தீயை அணைத்தனர்.
இருப்பினும் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் காட்சியளித்தது. இதனால் எரிக்கப்பட்டது ஆணா?, பெண்ணா? என்பது உடனடியாக தெரியாத நிலை இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கு போலீஸ் மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது.
முந்திரி தோப்பில் இருந்து மோப்பம் பிடித்த படி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நாய், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் எரிக்கப்பட்டவர் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எரிக்கப்பட்டவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீண்டும் முந்திரி காட்டிற்கே கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
அப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள தத்தனூர் குடிகாட்டில் இருந்து வடகடல் செல்லும் பாதையில் மெயின்ரோட்டில் ரத்தம் சிதறி கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேசை அவரது மனைவியே கொன்று எரித்த அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.
ஜெயங்கொண்டம் அருகே வடகடல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுப்பிரியா.
இவரது சித்தப்பா மகன் ஆலவாயை சேர்ந்த வேல்முருகன். அனுப்பிரியாவுக்கு வேல்முருகன் அண்ணன் முறை ஆகும்.
இந்த நிலையில் சகோதர, சகோதரி உறவு முறையை கடந்து அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுரேஷ் வியாபாரத்துக்காக சென்னை சென்ற வேளையில் வேல்முருகனும், அனுப்பிரியாவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விவரம் சுரேஷுக்கு தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதனால் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுரேசை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
இதை தொடர்ந்து சம்பவத்தன்று அனுப்பிரியா சென்னையில் இருந்து சுரேஷை வரவழைத்தார். அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் அனுப்பிரியாவும், சுரேசும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்றனர்.
வடகடல் பிரிவு சாலையில் வந்தபோது அங்கு வேல்முருகன் வழிமறித்தார். அப்போது அனுப்பிரியாவும், வேல்முருகனும் சேர்ந்து சுரேசை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்தனர். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் மூட்டை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேல்முருகன், அனுப்பிரியாவை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் காஞ்சனா தேவி (வயது 26). இவருக்கும் சென்னையை சேர்ந்த சோலைராஜ் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (6), கெவின்ராஜ் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஞ்சனா தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார்.
இதற்கிடையே காஞ்சனா தேவிக்கு திடீர் உடல்நலக்கு றைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற வசதியாக சோலைராஜ் தனது மனைவியை, குழந்தைகளை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காஞ்சனாதேவியின் தந்தை தள்ளு வண்டியில் அப்பளம் வியாபாரம் செய்து வந்தார்.
அவர் தனக்கு உதவியாக பெரம்பலூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். அவர் அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்துசென்றபோது காஞ்சனாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாரிமுத்து செந்திலையும், மகள் காஞ்சனா தேவியையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனாதேவி, தந்தை வீட்டில் இருந்து வெளியேறி அதே பகுதியில் குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். மகளை மறக்க மனமில்லாத மாரிமுத்து அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்றும் அவர் சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கக் பக்கத்தில் விசாரித்தபோது காஞ்சனாதேவி வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அப்போது மாரி முத்துவை செல்போனில் தொடர்பு கொண்ட காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காஞ்சனாதேவி மற்றும் செந்திலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த சீனிவாசராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் வாரி தோட்டாவை சேர்ந்தவர் சீதாராமாஞ்சேயலு. இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேலை செய்த பெண் டாக்டருடன் சீதாராமாஞ்சேயலுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதுகுறித்து டாக்டரின் தந்தை சீனிவாசராவுக்கு தெரியவந்தது. சீனிவாசராவ் தனது மகளை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் பெண் டாக்டர் தனது தந்தைக்கு தெரியாமல் மீண்டும் குண்டூர் வந்து பிசியோதெரபி டாக்டருடன் தங்கினார்.
வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
சீதாராமாஞ்சநேயலு வீட்டிற்கு சென்ற சீனிவாச ராவ் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.
இதனால் என்னுடைய மகளுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இதற்கு சீதா ராமாஞ்சேயலு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தான் தயாராக எடுத்து வந்த மிளகாய் பொடியை டாக்டரின் முகத்தில் வீசினார். டாக்டர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த சுத்தி எடுத்து டாக்டரின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் டாக்டரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சீனிவாச ராவ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதா ராமாஞ்சேயலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார்.
- வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி என்கிற சாந்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாந்திக்கும் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த 2 பேரின் வீட்டினர் கண்டித்தனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்தனர். திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கணேசன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்தநிலையில் சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் சாந்தி மீது கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணேசன் வேலைக்கு சென்றதும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் சாந்தி வெளியில் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிய கணேசன் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வேலைக்கு செல்வதாக கூறிய கணேசன், சாந்தியை நோட்டமிட அங்கு ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.
கணேசன் வேலைக்கு சென்றதாக நினைத்து கொண்ட சாந்தி, வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து கணேசன் சென்றார். அப்போது சாந்தி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அங்கு வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன், சாந்தியிடம் நான் இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் பழகலாம் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியை சரமாரி குத்தினார். இதில் சாந்தியின் தலை, கை, உடல்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு நின்ற பயணிகள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.