என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல்"

    • தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான்.
    • சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அந்த இளம்பெண், தனது கணவரை பிரிந்து சென்று விட்டார். கணவரை பிரிந்த அவர், 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் கலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த வீட்டுக்கு சிறுவனின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் அடிக்கடி வந்து சென்றபடி இருந்துள்ளார்.

    இது அந்த சிறுவனுக்கு பிடிக்கவில்லை. தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான். அவன் இரவு நேரத்தில் தனது தாயுடன் படுத்து தூங்கியிருக்கிறான். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாக இருந்திருக்கிறது.

    சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அவர் தாயுடன் இருந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் கையை பிடித்துக்கொண்டு, அவனது தலையை சுவர் மற்றும் குளியலறை கதவில் மோதச் செய்துள்ளார்.

    மேலும் சிறுவனின் மார்பு பகுதியில் அவனது தாய் கைவிரல் நகங்களால் பிரண்டி காயப்படுத்தி உள்ளார். சிறுவனில் நிலை குறித்து அறிந்த அவனது தந்தை, சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மேலும் அவர் தனது மகன் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து போலீசிலும் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிறுவனின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என கருதினர்

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல், இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அஞ்சலிக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதை அறிந்த ராகுல் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அஜய்யுடன் நெருக்கம் காட்டி வந்தார்.

    கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறார் என அஞ்சலி அஜய்யிடம் கூறினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ராகுலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று அஜய், ராகுலை ஊருக்கு வெளியில் இருக்கும் வயல்வெளி பகுதிக்கு வாருங்கள் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது என்று அழைத்தார்.

    நடக்கப் போகிற விபரீதம் தெரியாமல் ராகுல் அவர் சொன்ன வயல் வெளிபகுதிக்கு சென்றார். அப்போது அஜய் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலை 3 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    உடனே அஜய் அவரது உடலை வயல் வெளியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அஞ்சலியும் எதுவும் தெரியாதது போல இருந்தார். தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக அவர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என கருதினர். மேலும் இது தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. கிராமத்தினரிடம் விசாரித்த போது அஜய்யுடன் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதனால் இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அஜய்யை தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அஞ்சலியுடனான கள்ளக்காதலால் ராகுலை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக கள்ளக்காதல் விவகாரத்தால் தொடர்ச்சியாக பெண்கள் கணவரை கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

    தற்போது கொலை சம்பவம் அரங்கேறி உள்ள மீரட் மாவட்டத்தில் கடந்த மாதம் காஜல் என்ற பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றார். கணவருக்கு மயக்க மருந்து கொடுத்த அவர் கள்ளக்காதலனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் நீண்ட தூரம் சென்றனர்.

    பின்னர் ஒரு கால்வாய் அருகே கணவரை காஜல் தனது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து கணவர் உடலை கால்வாயில் வீசி விட்டு தப்பினார்.

    கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் சாஹித் என்ற கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் சவுரப்பை கொன்றார். அதன்பிறகு கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய டிரம்மில் அடைத்து சிமெண்டால் மறைத்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கணவனை விட்டு கள்ளக்காதலுடன் சில காலம் தங்கியபோது கர்ப்பம்.
    • வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையாக கள்ளக்காதலன் விரும்பியதால் ஏற்பட்ட விபரீதம்.

    கள்ளக்காதலில் கர்ப்பம்: கணவன், 2 குழந்தைகளுடன் வாழ விரும்பிய பெண்- கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு/ An Extramarital Affair Pregnancy Then Double Murder In Delhi

    டெல்லியில் கள்ளக்காதலியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, கள்ளக்காதலன் விபரீத முடிவு எடுத்ததால் இருவருடைய உயிரும் பறிபோனது.

    மத்திய டெல்லியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஷாலினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக ஷாலினுகும் ஆஷு என்ற சைலேந்திரா (வயது 34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது, ஆஷு உள்ளூர் கிரிமினல் எனத் தெரிகிறது.

    கள்ளக்காதலால் ஷாலினி கர்ப்பம் அடைந்துள்ளார். ஷாலினி வயிற்றில் உள்ள குழந்தைக்கு தான் தந்தையாக போகிறோம் என ஆஷு சந்தோசம் அடைந்துள்ளார். அந்த நிலையில்தான் ஷாலினியும், ஆகாஷும் சமரசம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

    தன்னை விட்டு ஷாலினி பிரிந்து செல்ல முடிவு செய்ததால் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவனை தீர்த்துக்கட்ட ஆஷு முடிவு செய்துள்ளார்.

    நேற்றிரவு ஷாலின் தனது கணவன் இ-ரிக்ஷாவில் தாயாரை பார்க்க சென்றுள்ளார். இ-ரிக்ஷாவில இருவரையும் பார்த்த ஆஷு கத்தியால், கணவனை குத்த முயன்றுள்ளார். அப்போது, ஷாலின் கணவர் சுதாரித்து தடுக்க முயன்றுள்ளார். இதனால அவர் மீது கத்தி குத்து விழுந்துள்ளது. இருந்தாலும் பெரிய காயமின்றி தப்பிவிட்டார்.

    உடனே, ரிக்ஷாவில் இருந்து ஷாலியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அப்போது ஆகாஷ் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆஷு அவரை வெறிக்கொண்டு தாக்க முயன்றுள்ளார். ஆனால், ஆகாஷ் நேர்த்திய தடுத்து கத்தியை அவரிடம் இருந்து பறித்துள்ளார். அத்துடன் ஆஷுவை சரமரியாக குத்தியுள்ளார். இதில் ஆஷுவும் படுகாயம் அடைந்துள்ளார்.

    பின்னர் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஷாலினி மற்றும் அவரது கள்ளக்காதலன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகாஷ் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சமப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

    இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.

    இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.

    அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.

    இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    • 18 வயது வாலிபர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.

    இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
    • இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அக்காள்-தம்பி பாசம் குறித்து பல சினிமா படங்கள் வந்துவிட்டன. கள்ளக்காதல் வைத்திருக்கும் அக்காள் கணவரை திருத்துவதற்காக அவருடைய மைத்துனர் படம் முழுவதும் போராடுவார். முடிவில் அனைத்தும் சுபமாக முடியும்.

    இதுபோன்ற காட்சிகளை பல படங்களில் பார்த்து இருப்போம். ஆனால் உண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா! என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனாவுக்கும் (19) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    கேசவ் குமாரின் இந்த செயல், அவருடைய மைத்துனரான ரவீந்திரனுக்கு (22) ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அக்காள் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், நம் தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாரே என்று கருதினார்.

    எனவே அக்காள் கணவரை பழிவாங்க, அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டமிட்டார். அவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். அக்காள் கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடினார்.

    இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    இதையடுத்து இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

    பிரச்சனை சுமுகமாக முடிந்தாலும், பாதிக்கப்பட்டது என்னவோ கேசவ் குமாரின் மனைவிதான். இந்த விவகாரம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் நேஹா. தன் கணவர் நாகேஷ்வருடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணம் முடிந்த நாளில் இருந்து மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். நேஹா விவகாரத்து கேட்டும் நாகேஷ்வர் மறுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகேஷ்வருக்கு அதிகளவில் மதுவாங்கி கொடுத்து நேஹாவும் ஜிதேந்திராவும் கழுத்தை நெரித்து அவரை கொைல செய்தனர்.

    பின்னர் நாகேஷ்வர் உடலை பைக்கில் 25 கி.மீ. தூரம் கொண்டு சென்று விபத்தில் அவர் இறந்தது போல் சித்தரிக்க திட்டமிட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையோரம் கிடந்த பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் நேஹாவும், ஜிதேந்திராவும் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருவருடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது உறவினர்கள் பார்த்து ஆத்திரம்.
    • மாமியாருக்கு சொந்தமான நபருடன் சென்ற போதிலும், உறவினர்கள் கள்ளக்காதல் என சந்தேகப்பட்டு தாக்குதல்.

    ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    மார்க்கெட்டுக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது, பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்துள்ளனர். அப்போது அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி தகராறு செய்தனர்.

    அப்போது கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாக தாக்கினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்களில் ஏற்றிச் சென்ற இரண்டு பேர்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய நபரும், சகோதரன் போன்றவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தந்தை வழி மாமா உள்பட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

    • போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது.
    • புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்.

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி மம்தா. தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகன் சரண்(வயது 4) மகள் தனுஸ்ரீ (3). கருத்து வேறுபாடு காரணமாக மம்தா அவருடைய கணவரை பிரிந்தார்.

    தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவு செய்தார்.

    கடந்த ஜூன் மாதம் மம்தா தனது மகனை தாய் வீட்டில் விட்டு விட்டு மகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.

    அப்போது கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி குழந்தை தனுஸ்ரீயை மம்தா மற்றும் பயாஸ் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். யாருக்கும் தெரியாமல் குழந்தை உடலை புதைத்து விட்டனர். இதற்கிடையே மனைவி குழந்தை காணாமல் மாயமானது குறித்து பாஸ்கர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். மம்தா, பயாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
    • கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலை கோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. விவசாயியான இவர் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்ற வாலிபருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

    அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால் லட்சுமியும், தங்கராசுவும் நெருங்கி பழகினார்கள். கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவி லட்சுமியை கண்டித்த கொளஞ்சி நீ செய்யும் செயலால் என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. பெரிய அவமானமாக உள்ளது. தங்கராசுவுடன் பேசி பழகுவதை நிறுத்திக்கொள் என்று கூறியுள்ளார்.

    ஆனால் கணவரின் பேச்சை கேட்காத லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் ஊர் உறங்கிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருப்பதை தொடர்ந்துள்ளார். கணவருடன் வீட்டில் ஒன்றாக தூங்கினாலும் லட்சுமியால் தங்கராசுவுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை. பக்கத்து வீடு என்பதால் கணவர் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் தங்கராசுவுடன் லட்சுமி தனிமையில் சந்தித்து மறைவான இடங்களில் வைத்து செக்ஸ் இன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதன்படி நேற்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்காக சென்ற லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து நள்ளிரவில் வீட்டுக்கு வா என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து லட்சுமியின் வீட்டுக்கு சென்ற தங்கராசு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மெய் மறந்த நிலையில் ஆசை தீர உல்லாசம் அனுபவித்தனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து பார்த்த கொளஞ்சி லட்சுமி வீட்டில் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. மனைவி லட்சுமியும், கள்ளக்காதலன் தங்கராசுவும் அரைகுறை ஆடையுடன் கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த கொளஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி லட்சுமியையும், கள்ளக்காதலன் தங்கராசுவையும் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்தபடியே உயிருக்கு போராடினார்கள். அப்போது கொளஞ்சியின் வெறி அடங்கவில்லை. 2 பேரின் தலையையும் துண்டித்து எடுத்து கொளஞ்சி அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு மாடியில் இருந்து இறங்கியுள்ளார்.

    பின்னர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கொளஞ்சி அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற பஸ்சில் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால் கொளஞ்சியின் பையில் இருப்பது என்ன? என்பதை டிரைவரும், கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம் துண்டித்த தலைகளுடன் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி பயணம் செய்து வேலூரில் போய் இறங்கிய கொளஞ்சி நேராக வேலூர் சிறைக்கு சென்றார்.

    அங்கு சிறைவாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று பையில் வைத்திருந்த 2 தலைகளையும் காட்டி நடந்த சம்பவத்தை கூலாக கூறியுள்ளார். பையில் இருந்த தலைகளை பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் பதட்டம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று கொளஞ்சியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று லட்சுமி, தங்கராசு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலூருக்கு விரைந்து சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளை மீட்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவியின் காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், பூபால பள்ளி மாவட்டம், ஒடிதலா கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது முதல் மனைவி இறந்த பிறகு தடிசர்லாவை சேர்ந்த கவிதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    தம்பதிக்கு வர்ஷினி, ஹன்சிகா என 2 மகள்கள் இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

    மனைவியின் காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை விடுமாறு குமாரசாமி மனைவியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்காதலுக்கு இடையூராக உள்ள கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்தார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார்.

    கவிதா கணவரின் கால்களை பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    பின்னர் கணவர் உடல்நலகுறைவால் இறந்து விட்டதாக நாடகமாடினார். இதனையடுத்து குமாரசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்த தந்தை எப்படி திடீரென இறந்து விட்டார். ராஜ்குமார் ஏன் அடிக்கடி நமது வீட்டிற்கு வந்து செல்கிறார் என வர்ஷினி தாயிடம் கேள்வி எழுப்பினார்.

    கணவர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பியதால் மகளையும் கொலை செய்ய கவிதா முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த மாதம் 2-ந் தேதி வர்ஷினி நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது கவிதா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    மகளின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் முள்புதரில் பிணத்தை வீசினர். மகள் காணாமல் போனதாக சித்யாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கள்ளக்காதலன் ராஜ்குமார் கடந்த மாதம் 25-ந் தேதி முள்புதரில் இருந்த வர்ஷினியின் பிணத்தை மீண்டும் மூட்டை கட்டினார். பின்னர் பிணத்தை தனது பைக்கில் வைத்து கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்றார். சாலையோரம் வர்ஷினியின் பிணத்தை வைத்து பிணத்தின் மீது மஞ்சள் குங்குமம் பூக்களை தூவினார். உடலை சுற்றியிலும் ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை யாரோ கொலை செய்ததாக சித்தரிக்க முயன்றனர்.

    மேலும் வர்ஷினியின் பிணத்தின் அருகே ஆதார் அட்டையை வீசிவிட்டு வந்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதார் அட்டை அடையாளத்தை வைத்து கவிதாவுக்கு போன் செய்து வரவழைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற கவிதா யாரோ தனது மகளை கொலை செய்து விட்டதாக கதறி துடித்து நாடகம் ஆடினார். கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    விசாரணையின் போது கவிதா தனது கள்ளக்காதலன் ராஜ்குமார் உடன் சேர்ந்து கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×