என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தைகள் கொலை"
- சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது.
- எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அரியானா மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை திடீரென காணவில்லை.
சிறுமியின் உறவினர்கள் அவளை தேடினர். திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் அவளை காணவில்லை. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு உண்டானது. சிறுமியை காணாததால் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.
இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி தலை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பளிச் என்று உடை அணிந்து அங்கும் இங்கும் விளையாடி திரிந்த சிறுமி அலங்கோலமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறினர்.
உடனடியாக என்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குழந்தையின் தாத்தா பால் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
அப்போது சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது. அந்த பெண் திருமண வீட்டினரின் அத்தை பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பூனம் தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. திருமண வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் அழகு கொலையாளி பூனத்துக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
தனது குடும்பத்தில் இப்படி ஒரு அழகான சிறுமியா என்று அவளிடம் பேச்சு கொடுத்த பூனம் பின்னர் அவளை ஏமாற்றி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.
தன் உயிரையே பறிக்கத்தான் தண்ணீர் கொண்டுவர பூனம் சொல்கிறார் என்பதை அறியாத சிறுமி வாளியில் தண்ணீரை மாடிக்கு கொண்டு சென்றார். ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. பூனத்துக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயல்பாகவே பூனத்துக்கு தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற கர்வம் இருந்தது. 2023-ம் ஆண்டில் அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதை அவரது 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான்.
அவன் இஷிகா கொலையை வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றார். அடுத்தடுத்த இந்த கொலைகளை உறவினர்கள் தற்செயலாக நடந்த விபத்து என்று நம்பப்பட்ட நிலையில் சிறுமி கொலை தொடர்பாகப் பூனத்திடம் போலீசார் விசாரித்த போது, பொறாமையின் காரணமாகத் தான் இந்த கொலைகளைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.
அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
திருச்சி:
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி விக்டோரியா (35) ரெயில்வே ஊழியர். இந்த தம்பதியருக்கு ஆராதனா( 9), ஆலியா( 3) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
அலெக்ஸ் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கீழ கற்கண்டார் கோட்டை மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. புதிய வீடு கட்ட வாங்கிய கடனுக்கான தவணை தொகையை அலெக்சின் மாமியார் தனது பென்சன் தொகை மூலமாக செலுத்தி வந்தார்.
சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் பென்சன் நின்றுபோனது.
இதற்கிடையே அலெக்ஸ் தஞ்சையில் உள்ள தனது சகோதரர் ஒருவருக்கு கடனுக்கு ஜாமின் கொடுத்து, அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அலெக்சின் தயார் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு செலவழிக்க நேரிட்டது.
இதற்கிடையே ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜவுளிக்கடையை மூடியுள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்தாலும் கடன்காரர்கள் மனைவி, குழந்தைகளை தொந்தரவு செய்வார்களே என கருதிய அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகள் ஆராதனா, ஆலியா ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் குழந்தைகளின் அதே அறையில் அலெக்ஸ் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பக்கத்து அறையில் விக்டோரியா தூக்குப்போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இன்று காலை வழக்கம் போல் கடன்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எந்த சப்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தாயும், மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
- தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்குமார். இவரது மனைவி தாரா கிருஷ்ணன் (வயது36). இவர்களது மகள்கள் அனாமிகா(6), ஆத்மிகா(1 ).
கிரிஷ்குமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தாரா தனது 2 மகள்களுடன் குலசேகரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வசித்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் நேற்று மாலை தாராவின் தந்தை கோபாலகிருஷ்ணன் டீ குடிப்பதற்காக டீக்கடைக்கு சென்றிருந்தார். தாரா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களது வீட்டின் உள்ளே இருந்து குபுகுபுவென புகை வந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்து வீட்டினர், கதவை உடைத்து தாராவின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு தாரா மற்றும் அவரது 2 மகள்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இதுகுறித்து கருநாகப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீணை அணைத்தனர். பின்பு வீட்டுக்குள் உயிருக்கு போராடியபடி கிடந்த தாரா மற்றும் அவரது மகள்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அதில் தாரா தனது 2 குழந்தைகளின் உடலில் தீவைத்துவிட்டு தானும் தீவைத்துக்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாரா மற்றும் அவரது 2 மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
தாரா தனது 2 குழந்தை களை எரித்துக் கொன்று தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. தாராவுக்கும் அவரது கணவரின் குடும்பத்தின ருக்கும் பிரச்சினை ஏற்பட் டுள்ளது. இதனால் தாரா தனது கணவரின் வீட்டில் வசிக்காமல், தனியாக வந்து தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தாராவின் கணவர் கிரிஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வர இருந்தார். அவர் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு வர இருந்த நிலையில், சில காரணங்களுக்காக அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் சொத்து தொடர்பாக தாரா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே நேற்று பிரச்சினையும் நடந்துள்ளது. அப்போது தாரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இந்தநிலையில் தான் தாரா தனது குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்தி ருக்கிறார்.
கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
- தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன், விவசாயி. இவரது மனைவி பாண்டீஸ்வரி(வயது35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி(11) என்ற 2 மகள்களும், 1 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் வைத்தீஸ்வரி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கடும் அவதியடைந்தார். பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் மகள்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈஸ்வரனின் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்கள் இறுதி சடங்குகளை முடித்து விட்டு சென்றபின் வீட்டில் பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக இருந்தார். கணவர் இறந்தபின் வாழ விருப்பமில்லாத அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டதாக தெரிகிறது.
தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு கோட்டையூரில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு மகள்கள் மற்றும் மகனை அழைத்துச் சென்ற பாண்டீஸ்வரி அங்குள்ள கிணற்றில் முதலில் 2 மகள்களை தள்ளிவிட்டும், பின்னர் மகனை கிணற்றில் போட்டும் கொன்றார். அதன் பின் அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.
இன்று காலை வீட்டில் பாண்டீஸ்வரி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.
ஒரே கிணற்றில் 4 பேர் இறந்து கிடப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் இறந்த 3 நாளில் தனது 2 மகள்கள், மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சுனு-சவுமியா தம்பதியரின் ஒரு குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததும், அதற்காக தான் சவுமியா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தாளவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சக்குளம் மூலேபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுனு. இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு ஆதி மற்றும் ஆதில் (வயது 3) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த சவுமியா, சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இன்று காலை அவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.
அப்போது அங்கு சுனு அவரது மனைவி சவுமியாவுடன் தூக்கில் தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கணவன்-மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதும் மற்றொரு அறையில் 2 குழந்தைகள் பிணமாக கிடப்பதும் தெரியவந்தது.
4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சுனு-சவுமியா தம்பதியரின் ஒரு குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததும், அதற்காக தான் சவுமியா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனவே 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, சுனு-சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
- தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.
அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.
அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.
4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.
அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் சுப்ரமணியம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு அடுத்த திகுவபல்லியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). தம்பதியின் மகன் பரமேஸ்வர ரெட்டி (4), மகள் மோஷிதா (2).
இவர்கள் மதனப்பள்ளி அடுத்த குர்ரம் கொண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
சுப்ரமணியம் ரெட்டி அங்குள்ள மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.
இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியம்ரெட்டி நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இங்கிருந்து வரமாட்டேன் என்கிறாய் என லாவண்யாவை சரமாரியாக தாக்கினார்.
இதையடுத்து லாவண்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பூதலப்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறால் லாவண்யா மனம் உடைந்தார். நேற்று தனது குழந்தைகளுடன் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து உயிருக்கு போராடினார்.
கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அப்பகுதி மக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர்.
இது குறித்து குர்ரம் கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






