search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women arrest"

    • 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.
    • ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) அணுகினார். அவர் தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் சம்பவத்தன்று காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மேலும் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரைப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றி கொண்டனர். மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்று கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர்.

    அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை சித்தாபுதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தி வந்த புரோக்கர் உள்பட 5 பெண்கள் போலீசார் கைது செய்தனர்.
    கோவை சித்தாபுதூர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.

    அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் நேற்று வீட்டில் இருந்த ஒரு ஆண் மற்றும் 5 பெண்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி.என்.பாளையத்தை கண்ணன்(52), சூலூர் சுமதி (45), சரவணம்பட்டி நாகமணி (37), சோமனூர் ‌ஷப்னா(27), எட்டிமடை ரேகா(29), பல்லடம் மகேஸ்வரி(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். அவரையும், 5 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    கைவிட்ட காதலனை கொன்று, சமைத்து, கறிவிருந்து பரிமாறியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிவரும் மொராக்கோ நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். #MoroccoWoman #Womanmincesexlover
    அபுதாபி:

    வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

    ஒருகட்டத்தில் கள்ளக்காதலி மீது கொண்ட காதல் புளித்துக் கசந்துப் போன நிலையில், நான் மொராக்கோவுக்கு சென்று எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அவளிடம் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

    இதனால், இவ்வளவு காலமாக அவர் செய்துவந்த பண உதவிகள் நின்றுப் போகும் என்று ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன்னை கைவிட்ட காதலனை வீட்டுக்கு வரவழைத்து தாக்கிக் கொன்றார். பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக வெட்டி, மிக்சியில் போட்டு, கொத்துக்கறியாக்கினார்.

    அந்த கொத்துக்கறியை கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில் மிகவும் பிரசித்தியான ’மச்பூஸ்’ (நம்மூர் பிரியாணியைப் போல்) கொத்துக்கறிச்சோறு சமைத்தார். அந்த உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுடச்சுட கறிவிருந்தாக பறிமாறி மகிழ்ந்தார்.



    இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன அந்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்றார். என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை என ஆவேசமாக பதிலளித்த அந்தப் பெண் அவரது முகத்தில் அடிப்பதுபோல் வீட்டுக் கதவை வேகமாக அறைந்து சாத்தினார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த நபர், தனது சகோதரரை காணவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின்மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அல் ஐன் நகர போலீசில் புகார் அளித்தார்.

    இதைதொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர். அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில் அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த கதை வெட்டவெளிச்சமானது.

    மிக்சியில் அரைபடாத சில பாகங்களை வெட்டி நாய்க்கு விருந்தாக்கிய விபரமும் தெரியவந்தது.
    உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விசாரணை காவலில் அடைத்து வைத்துள்ளனர். அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாக வளைகுடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #MoroccoWoman #Womanmincesexlover 
    சபரிமலை போராட்டத்தில் நேரலையின் போது முதல்-மந்திரியை ஜாதி பெயரை கூறி திட்டிய மூதாட்டியை ஆரண்முலா போலீசார் கைது செய்தனர். #PinarayiVijayan #Sabarimala

    கொழிஞ்சாம்பாறை, அக்.27-

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தபோதும் கேரளாவில் சில பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்த்து கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    சபரிமலையில் நடைதிறக்கப்பட்டபோது சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அய்யப்பன் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்தன.

    அவ்வாறு ஒரு டி.வி.யில் பத்தினம்திட்டா சிறுகோல் கிராமத்தை சேர்ந்த சிவபிள்ளையின் மனைவி மணியம்மாள் (வயது 66) என்ற மூதாட்டி பேட்டி எடுத்தகொடுத்த நேரலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் ஜாதி பெயரை கூறி திட்டினார்.

    இது நாடு முழுவதும் ஒலிபரப்பானது. இதனைத்தொடர்ந்து சமூக வலை வளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து ஆரண்முலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போராட்டத்தின்போது கேரள முதல்-மந்திரி வெளிநாடு சென்றிருந்தார்.

    அவர் நாடு திரும்பியதும் உயர் போலீஸ் அதிகாரிகள் இது குறித்து அவரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்-மந்திரியை ஜாதி பெயரை கூறி திட்டிய மூதாட்டி மணியம்மாளை ஆரண்முலா போலீசார் நேற்று கைது செய்தனர். * * * கைது செய்யப்பட்ட மணியம்மாள்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஐஸ்வர்யா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 4 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனது பெற்றோர் வீட்டில் தங்கி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பர்த்து வருகிறார். வடிவரசு தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    ஐஸ்வர்யா வேலை பார்த்த மில்லில் சின்னாளப்பட்டி அடுத்துள்ள கோட்டைப் பட்டியைச் சேர்ந்த சரத்குமார் (25) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இவர்கள் இருவரும் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சுற்றி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடிவரசிடம் கூறினர். தனது மனைவி வேறு ஒரு வாலிபருடன் சுற்றி வருவதை அறிந்த அவர் ஆத்திரமடைந்தார்.

    மனைவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோர்களிடம் சத்தம் போட்டு அவரை ஒழுக்கமாக இருக்குமாறு கண்டித்து சென்றார். தொடர்ந்து சரத்குமாரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக பழகி வந்த விபரம் தெரிய வரவே அடிக்கடி ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி சத்தம் போட்டார்.



    இதனால் ஐஸ்வர்யா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக சரத்குமாரிடம் ஆசையாக பேசி நாம் இதே போல் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என கூறினார். அதன்படி சரத்குமாரும் வடிவரசை கொலை செய்ய ஒத்துக் கொண்டார்.

    அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் ஒரு வீடு கட்டப் போவதாகவும் அதனை எந்தஅமைப்பில் கட்ட வேண்டும் என பார்த்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி சாதிக் கவுண்டன் பட்டியில் உள்ள ஒரு இடத்துக்கு வடிவரசை சரத்குமார் அழைத்துச் சென்றார்.

    பேசி முடித்து விட்டு சடையாண்டிபுரம், பகுதிக்கு வரவழைத்து 2 பேரும் மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவரசின் கழுத்தை அறுத்தார். உடனே அவர் சத்தம் போடவே சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய வடிவரசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்ய முயன்ற சரத்குமாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஐஸ்வர்யாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    நாமக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வியாபாரியை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, பெருமாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கொக்கி கிருஷ்ணன் (வயது 47). இவர் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 21-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தில் மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் வீசப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொக்கி கிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் பொட்டணம் கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, ஆத்துக்குழிப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்திரா (47) என்பருக்கும், கொக்கி கிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக போலீசார், ஆத்துக்குழிப்பள்ளம் பகுதிக்கு சென்று சந்திராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கொக்கி கிருஷ்ணனும், சந்திராவும் சேந்தமங்கலம், நாமக்கல், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழங்கு வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சந்திராவின் கணவர் கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்தார். இதனால் சந்திரா தனிமையில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவர் கிழங்கு வியாபாரம் தொடர்பாக கொக்கி கிருஷ்ணனுடன் பேசி பழகி வந்தார். நாளடைவில் இது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

    கொக்கி கிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திரா வீட்டிற்கு வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கொக்கி கிருஷ்ணன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் சென்றபோது, அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனால் சந்திரா வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார். இது பற்றி கேட்க அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார்.

    இதற்கிடையே சந்திராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கடந்த மாதம் 20-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் திடீரென சந்திரா வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவரிடம், ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அதற்கு சந்திரா முடியாது. நீ வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளாய். என்னுடைய வீட்டிற்கு இனிமேல் வராதே என்று கூறினார்.

    இதனால் கொக்கி கிருஷ்ணன் அவருடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உடனே உதவிக்கு சந்திரா, பக்கத்தில் வசித்து வரும் கள்ளக்காதலன் வடிவேலை அழைத்து வந்தார். வீட்டில் வைத்து தகராறு கடுமையாக ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரா, வடிவேல் இருவரும் சேர்ந்து கொக்கி கிருஷ்ணனை கட்டையால் தாக்கினர். தலையிலும் தாக்கி ,கீழே தள்ளினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த கொக்கி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர், இறந்து விட்டதை அறிந்த இருவரும் என்ன செய்வதென தெரியாமல் பதறினர்.

    நடந்த இந்த சம்பவம் குறித்து திருமலைப்பட்டியில் வசித்து வரும் தனது மகள் புவனேஸ்வரிக்கு தெரிவித்து, உடனே வீட்டிற்கு வருமாறு கூறினார். மகள் புவனேஸ்வரியும், இரவோடு இரவாக புறப்பட்டு தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு பிணமாக கிடந்த கொக்கி கிருஷ்ணனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி ஒரு மொபட்டில் வைத்து, தாயும், மகளும் நேராக கொண்டு சென்றனர். பின்னால் வடிவேல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் உடலை போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டனர்

    இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சந்திரா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அவரை போலீசார் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது மகள் புவனேஸ்வரி மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். #tamilnews
    பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும், அதை தவறான செயலுக்கு பயன்படுத்தி பணம் பறிக்கும் செயல்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைனில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இளம்பெண்களின் படங்களை அவர்களுக்கு அனுப்பி அதன் மூலம் விபசாரம் செய்யும் கும்பல்கள் கேரளாவில் பல இடங்களில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக வரும் புகார்களை சைபர்கிரைம் போலீசார் விசாரித்து அந்த கும்பல்களை தொடர்து கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருச்சூர் அருகே தலச்சேரி பகுதியை சேர்ந்த இளம் என்ஜினீயர் ஒருவர் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். பேஸ்புக்கில் அவர் பார்வையிட்டு கொண்டிருந்த போது 2 இளம் பெண்கள் தங்களின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு இருந்தனர். மேலும் அதை பார்ப்பவர்கள் ஆசையை தூண்டும் வகையில் சில வாசகங்களை வெளியிட்டு தங்களது செல்போன் நம்பர்களையும் அதில் பதிவிட்டு இருந்தனர். இதை பார்த்ததும் சபலமடைந்த அந்த என்ஜினீயர் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டு பேசினார்.

    அப்போது அவரிடம் ஒரு இளம்பெண் பேசினார். அவர் கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முகவரியை கூறி அங்கு வந்தால் தன்னை சந்திக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனால் அவரும் அந்த பெண் கூறிய முகவரிக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் அந்த என்ஜினீயரிடம் நெருக்கமாக அமர்ந்து அவரை மயக்க தொடங்கினார்கள்.

    அப்போது திடீரென்று கதவு தட்டப்பட்டதால் அந்த பெண்கள் கதவை திறந்தனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். மேலும் அந்த வாலிபரை நிர்வாணமாக்கி 2 அழகிகளுடன் நெருக்கமாக நிற்க வைத்து செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    அப்போது அந்த பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல கண்ணீர் விட்டு கதறினார்கள். தங்களை விட்டு விடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். உடனே 4 வாலிபர்களும் அந்த என்ஜினீயரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஏ.டி.எம். கார்டையும் பறித்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கு ரூ.3 லட்சம் கொடுக்காவிட்டால் இந்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட என்ஜினீயர் கொடுங்கல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அங்கு நசீமா (வயது 26), சமீனா (26) என்ற 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த 2 பெண்களும் பேஸ்புக்கில் படங்களை போட்டு வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

    உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மோகன்(34), பாபு (35), சிங்கித் (29), அக்பர்ஷா (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல பல வாலிபர்களை ஏமாற்றி அவர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்துப்பேட்டை அருகே பெண்ணிடம் நகை, பணத்தை திருடிய விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    ஜூன்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ஆனந்தவள்ளி (வயது 35). இவர் தனது மகளுடன் நாகப்பட்டினம் சென்றார். பின்னர் முத்துப்பேட்டைக்கு பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த ஒரு பெண், ஆனந்தவள்ளி கையில் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு சங்கேந்தி அருகே பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது ஆனந்தவள்ளி தனது கையில் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது பஸ்சில் தனது அருகில் அமர்ந்து இருந்த பெண் தான் தனது பையை எடுத்து சென்றுள்ளார் என்றும், அதில் 25 பவுன் நகை மற்றும் பணம் இருந்ததாகவும் கூறினார். இதனையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பயணிகள் ஆனந்தவள்ளியிடம் பையில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்ற பெண்ணை தேடினர். இந்தநிலையில் அங்கு பயணிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி (52) என்பதும், ஆனந்தவள்ளியிடம் பையில் இருந்த 25 பவுன்நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×