என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

    இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.

    நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. 

    • பெங்களூருவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்.
    • புல்டோசர் ஆக்சன் என பினராயி விஜயன் கண்டனம்.

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை சித்தராமையா அரசு அகற்றியது. இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புல்டோசன் ஆக்சன் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "கர்நாடக மாநில விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவதை தவிர்கக் வேண்டும்" எனப் பதில் அளித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர்கள், பெங்களுருவை பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். பெங்களுருவில் ஆக்கிரமிப்புக்காரர்கள் குடிசைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. பினராயி விஜயன் அவரது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    சித்தராமையா, அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
    • பள்ளிகளில் பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது.

    கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சாதி, மதம் கடந்து கல்வி கற்கும் இடம் பள்ளி, அங்கு பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜனநாயக உணர்வு மிக்க கேரளாவில் பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.

    • உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது.
    • கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வென்றுள்ளது. இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:

    எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து விரிவாக ஆராயப்படும்.

    தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னோக்கி செல்வோம்.மதவாத சக்திகளின் தவறான தகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் இரையாகிவிட கூடாது என்பதை உறுதிசெய்ய கூடுதல் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மக்களின் இந்த தீர்ப்பு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    இடதுசாரிகள் 45 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் பா.ஜ.க. தன்வசப்படுத்தியுள்ளது. பாலக்காடு திரிபுனிதுரா நகராட்சிகளையும் பா.ஜ.க. வென்றுள்ளது.

    • போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்
    • நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது முழு திருப்தி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு கேரள அரசு ஆதரவாக உள்ளது. நடிகைக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி இருந்தது. இனியும் அது தொடரும் என்றார். அப்போது அவரிடம், ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் நடிகர் திலீப்புக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது ஜனநாயக முன்னணியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நடிகர் திலீப் மீது சதி திட்டம் தீட்டி குற்றம் சுமத்தப்பட்டதாக அடூர் பிரகாஷ் கூறியுள்ளார் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால், அதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.

    • கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.
    • இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள அரசு 2019 ஆம் ஆண்டு மசாலாப் பத்திரங்களை வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற பத்திரங்களை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா ஆனது.

    கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.

    இந்த நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதாகவும், அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது.

    அதே வழக்கில், பினராயி விஜயன், அவரது தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கும் பெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அடுத்தாண்டு கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்ட சம்மன்  பாஜகவின் அரசியல் விளையாட்டு என ஆளும் இடதுசாரி கூட்டணி விமர்சித்துள்ளது.  

    • இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
    • ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இ

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பின் பாடலைச் சேர்ப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

    இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.

    ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.

    அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.  

    • சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி.
    • இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்.

    கேரளா பைரவி அல்லது கேரள மாநிலம் உருவான நாளைத் தொடர்ந்து, இன்று அம்மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் "கேரள மாநிலம் தீவிர வறுமையில் இருந்து விடுபட்டுள்ளது" என அறிவித்தார்.

    இதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பினராயி விஜயன் அறிவிப்பு ஒரு மோசடி என சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சியின் வெளியேறினர்.

    காங்கிரஸ் தலைமையிலான UDF "பினராயி விஜய் கூறுவது மோசடி. சட்டசபையை புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் "சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி. சட்டசபை விதியை அவமதிப்பதாகும். இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மோசடி எனச் சொல்வது அவர்களுடைய பழக்கம். எங்களால் அமல்படுத்த முடியும் என்பதை மட்டுமே சொல்கிறோம். நாங்கள் சொன்னை அமல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கான பதில் என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.

    • 2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தபட்டது.
    • மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது.

    இன்று நடைபெற்ற கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், "கேரளா தீவிரமான வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக மாறியுள்ளது" என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

    சட்டமன்றத்தில் பேசிய பினராயி விஜயன், "2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது. அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் வார்டு குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டன. இது சூப்பர் செக்கிற்கு உட்படுத்தப்பட்டு வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து, 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 நபர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

    உணவு, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

    முதல் கட்டமாக ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் தவித்த 21,263 பேருக்கு அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டன.

    20,648 மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் வழக்கமான உணவு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள், மருந்துகள், தடுப்பூசிகள், நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உறுதி செய்யப்பட்டன.

    4,677 குடும்பங்களுக்கு வீடுகளும் 2,713 குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டன. 35,041 குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

    • இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
    • தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்

    திருவனந்தபுரம்:

    இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.

    கேரளாவிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தும் முடிவை எடுத்து இருக்கிறது.

    இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.

    தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்

    பழைய தேர்தல் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு, அத்வேகமாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை செய்ய முயற்சிப்பது முற்றுமில்லாத கவலைகளை எழுப்புகிறது.

    ஜனநாயகத்தை பாதிக்க நினைக்கும் இந்த முயற்சியை கேரளா கடுமையாக எதிர்க்கிறது.

    ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
    • மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.

    விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று கூறினார்.

    பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

    • ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.

    கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கான மத்திய அரசின் நிதி உதவி குறித்துதகவல் தெரிவித்தார்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

    இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.260.65 கோடி நிதி உதவி இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.

    பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து மத்திய அரசு ரூ.260.65 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த தொகையுமே இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும் எனவும் பினராயி விஜயன் வலியுறுத்தினார். 

    ×