என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கூட்டணி"

    • எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
    • எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.

    தென்காசி:

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.

    மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.

    எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    • காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.
    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

    இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-

    காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அசோகா தெரிவித்தார்.

    கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    • ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
    • அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.

    நாளை மறுதினம் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இலாகா பிரிப்பதில் பாஜக- நிதிஷ் குமார் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.-க்களின் கடிதத்தை வழங்குவார்.

    நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றும் விழாவில பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
    • இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

    இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.

    • காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.

    பீகார் தேர்தல் வெற்றி பாஜக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், பொது நலனையும் துரிதப்படுத்தும் என நம்புகிறேன்.

    பல்வேறு விமர்சனங்கள், எஸ்ஐஆர் முறைகேடுகள் என கூறப்பட்ட பொய்களையும் தாண்டி பீகாரில் சிரத்திர வெற்றிப் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
    • காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் 10 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது

    காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். 

    • வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மீதி உள்ள 122 இடங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டின் மிகவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் பீகாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் கண்டிருக்கிறார்கள்.

    லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் பீகாரை பின்னோக்கி இழுத்து சென்றனர். ஆனால் இன்று அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.

    இதுவே முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர்கள் கூறுவார்கள். கங்கை நதியின் கீழ் 4 பாலங்களை கட்டினோம். இன்னும் 10 பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.

    கடந்த ஆட்சியில் விவாதங்கள், கொள்ளை, கொலை, வழிப்பறி பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று விவாதங்கள் முன்னேற்றம் பற்றி மாறியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.

    நாங்கள் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் செல்வதை பல முறை தெளிவுப்படுத்தினோம். அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்கு பிறகு அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். எங்கள் பலத்தை பற்றி நினைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பா.ஜ.க.,-வின் கொள்கை.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2 கோடிக்கும் அதிகமான வேலை கொடுக்க வேண்டுமானால் பி, சி, டி பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகமாகும். சாத்தியமில்லாத இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும், லாலுவுதான் அளித்திருப்பார்கள்.

    புலம்பெயர்வு குறைய பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே மக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும்.
    • மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

    பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துபவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    • 3 தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர்கள் வாபஸ்.
    • பீகாரில் என்டிஏ-வை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம்.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது.

    அந்த கட்சியின் மூன்று வேட்பாளர்கள் திடீரென தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர கூறியதாவது:-

    கடந்த சில வருடங்களாக யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பாஜக-தான் ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது. ஜன் சுராஜ் வெறும் வாக்கை பிரிக்கம் கட்சி, எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை என்று கூறிய கட்சியின் நிலையைப் பாருங்கள். வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அச்சத்தில் உள்ளது.

    மக்களை பயமுறுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்தும் லாலு கட்சி கூட்டணிக்கு அவர்கள் பயப்படுவதில்லை. மக்களுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், லாலு யாதவின் 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த முறை, மக்களுக்கு ஒரு புதிய வழி இருக்கிறது, அது ஜன் சுராஜ்.

    லாலுவின் பயத்தால் மக்கள் பாஜகவிற்கும் நிதிஷ் குமாருக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜகவின் பயத்தால் லாலு ஜிக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த 30 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி ஜன் சுராஜ்தான்.

    தனபூர், பிரஹாம்பூர், கோபால்கஞ்ச்ஆகிய தொகுதிகளில் வலுக்கட்டாயமாக ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர். ஜன் சுராஜ் தலைவர்கள் ஓடிப்போகிறார்களா அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறதா என்பதை பீகார் தெரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள்..

    எங்கள் கட்சியில் 240 வீரர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். அவர்கள் NDA-வை வேரறுக்கும் வரை ஓய மாட்டார்கள். நவம்பர் 14 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று எல்லாம் தெளிவாகிவிடும். பிரசாந்த் கிஷோரும் அவரது ஜன் சுராஜ் கூட்டாளிகளும் பயப்படப் போவதில்லை. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வாங்கினாலும், அச்சுறுத்தினாலும் அல்லது கட்டுப்படுத்தினாலும் தேர்தலில் வலுவாகப் போராடும்.

    இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    • பாஜக, நிதிஷ் குமார் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடும்.
    • ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்தார். இவரது கட்சி மக்களவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. அதனால் 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    ஆனால் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி 25 முதல் 30 இடங்களுக்குள்தான் கொடுக்க முன்வந்தன. இந்த சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில்தான் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

    அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும், லோக் ஜனதா கட்சி 29 தொகுதியில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.

    • பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியாக மாறியுள்ளது.
    • ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் புனித பூமியான பீகார் பெருமளவிலான வாக்குகளையும் வழங்கும்.

    பீகார் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜே.பி. நட்டா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பீகார் தேர்தல் மாநிலத்தின் தொடர் வளர்ச்சி, ஊடுருவல்காரர்களை அகற்றுதல், மீண்டும் காட்டு ராஜ்ஜியம் வருதை தடுப்பதற்கானது.

    ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் புனித பூமியான பீகார், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதன் ஆசீர்வாதங்களையும், பெருமளவிலான வாக்குகளையும் வழங்கும் என நாள் முழுமையான நம்புகிறேன்.

    பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியாக மாறியுள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் 2 கட்டங்காளக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று தேதி அறிவித்தது.

    ×