என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anbumani Ramadoss"
- மேடையில் இருந்த அன்புமணியுடன் செல்பி எடுக்க அந்த சிறுவன் ஆசைப்பட்டு உள்ளான்.
- வா... உனக்கு ‘செல்பி’ தானே தேவை என்றபடி செல்போனில் படம் பிடித்தார்.
சென்னை:
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகளை பார்க்க நேர்ந்தால் அவர்களுடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். இதில் வயது வித்தியாசம் என்பது கிடையாது.
அரசியல் தலைவர்களும் அவ்வாறு வருபவர்களுடன் சளைக்காமல் போஸ் கொடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்றி வைப்பது வாடிக்கை.
அப்படியும் கூட்டத்தில் சிக்கி முண்டியடித்து போட்டோ எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்பவர்களும் உண்டு. அவ்வாறு ஏமாறுபவர்கள் பெரியவர்கள் என்றால் சரி பரவாயில்லை என்று விட்டு விடுவார்கள்.
சிறுவர்கள் என்றால் தாங்க முடியாமல் அழுதே விடுவார்கள். அப்படி அழுத சிறுவனை பார்த்து அன்புமணி நெகிழ்ந்த சம்பவம் பெண்ணாகரத்தில் நடந்தது. பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் பெண்ணாகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேடை அலங்கார பணியை ரமேஷ் என்பவர் செய்திருந்தார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் அவருடன் அவரது மகன் ஜெயம் உடன் சென்று உள்ளார். அவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மேடையில் இருந்த அன்புமணியுடன் செல்பி எடுக்க அந்த சிறுவன் ஆசைப்பட்டு உள்ளான்.
அதற்காக அடிக்கடி மேடை அருகே செல்வதும், என்னடா... இப்படி அங்கும் இங்கும் ஓடாதே என்று பெரியவர்கள் விரட்டுவதுமாக இருந்துள்ளது. இதை மேடையில் இருந்து கவனித்து கொண்டிருந்த அன்புமணி ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் ஏன் அழுகிறான் என்று தெரியாமல் அவனை மேடைக்கு அழைத்து வரும்படி கூறினார்.
மேடைக்கு வந்ததும் அன்புடன் அவனை தட்டிக்கொடுத்த அன்புமணி ஏன் அழுகிறாய்...? நல்லாத்தானே ஓடிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார். அப்போது 'செல்பி' எடுக்கணும் என்று அழுதபடியே கூறியதை கேட்டதும் நெகிழ்ந்த அன்புமணி அவனை அருகில் அழைத்து அரவணைத்தபடியே கண்ணீரை துடைத்து விட்டார்.
வா... உனக்கு 'செல்பி' தானே தேவை என்றபடி செல்போனில் படம் பிடித்தார். ஆனால் அவன் மிகவும் குள்ளமாக இருந்ததால் அன்புமணியும் முட்டு போட்டு நின்றார். அப்போது அழாதேடா... சிரி என்று ஆசுவாசப்படுத்தி 'செல்பி' எடுத்துக்கொண்டார். அப்போது அந்த சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
சிறுவனின் அன்பில் நெகிழ்ந்து அவனது ஆசையை நிறைவேற்றி வைத்த அன்புமணியை அனைவரும் பாராட்டினார்கள்.
- மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
- அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்காக இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தொடர் விபத்துக்கள் நடைபெற்று வரும் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை பகுதியை உடனடியாக சீர்படுத்த வேண்டும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அல்லது சேலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மொரப்பூர்-தருமபுரி ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அரசு விரைவு படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவிடத்தில் தார்சாலை ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. எவ்வித தொழிற்சாலைகளும் இதுவரை வரவில்லை.
விவசாய விளை நிலங்களை அழித்து அங்கு தொழிற்சாலைகள் அமைத்து ஏற்படும் வளர்ச்சி தேவையில்லை. சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.
மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. ஆனால் இதுவரையில் இதை செயல்படுத்தவில்லை.
பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறையில் உள்ள மது ஒழிப்பு பிரிவிற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும். பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை செய்வதை அரசு தீவிர நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. இதை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 75 சதவீதமாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து சமூக நீதி குறித்து பேசிவரும் தி.மு.க ஏன் சாதிவாரியை கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது?
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும். கூட்டணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
ஆவின் பால் விற்பனை குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானது எனில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் பால் கொள்முதலில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு நேரடியாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் பணிகள் விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- எங்கும் ‘தமிழ்’, எதிலும் ‘தமிழ்’ என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அது பேச்சில்தான் உள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஐகோர்ட்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஐகோர்ட்டு வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. தாய் மொழியிலேயே விவாதம் செய்தால் அது உணர்வுபூர்வமாக இருக்கும். அலகாபாத் நீதிபதி கூட தமிழை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்திலோ தமிழில் பேசுவதை கேவலமாக நினைக்கின்றனர். எங்கும் 'தமிழ்', எதிலும் 'தமிழ்' என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அது பேச்சில்தான் உள்ளது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
- போராட்டத்தின் போது அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- ஜாமினில் வெளிவந்த விவசாயிகள் வேலூர் கோர்ட்டில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி விவசாயிகள் 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி இன்று காலை 14 பேரும் வேலூர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் அனைவரும் வேலூர் கோர்ட்டில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த விவசாயிகள் கூறியதாவது:-
நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். வன்முறையில் ஈடுபட மாட்டோம். ஜெயிலில் உள்ள மற்ற விவசாயிகளுக்கும் ஜாமின் வழங்க வேண்டும். அரசு சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்யாறில் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டு சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரளான கட்சியினர், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- 2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
கோவை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கவர்னர், முதலமைச்சர் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இருவரும் இரண்டு பக்கம் சென்றால் பாதகம் தமிழக மக்களுக்கு தான். எனவே மக்கள் நலன் கருதி கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
கவர்னர் கட்சி சார்ந்தவராக இருக்க கூடாது. ஒரு கட்சியின் கொள்கையை அவர் கடைபிடிக்கவோ, பேசவோ கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல்வாதி கிடையாது. அவர் அரசியல் பேசினால் மக்களுக்கு தான் பாதிப்பு.
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை இந்த கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். சமூக நீதி பேசும் தி.மு.க.வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்?
தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளும் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். அதில் பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கும் முன்பிருந்தே மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தி வருகிறார். மது விலக்கை எல்லா கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்கும் நிலைக்கு வர பா.மக. தான் காரணம். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகளை மூடும் எண்ணம் தமிழக அரசிற்கு துளியும் கிடையாது. மதுக்கடைகளை மூடினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும்.
2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டின் போது முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் அசோக், கோவை ராஜ், தங்கவேல் பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.
- சம்பா மற்றும் தாளடி நெல் நடவு செய்துள்ள மீதமுள்ள 30 சதவீதம் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
- கடந்த ஆண்டை போலவே, நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போது தான் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளை நவம்பர் 15-ம் நாளுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஏறக்குறைய 70 சதவீதம் உழவர்கள் மட்டுமே காப்பீடு செய்திருக்கும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நாளையுடன் முடித்துக் கொள்வது நியாயமாகாது. அதனால், சம்பா மற்றும் தாளடி நெல் நடவு செய்துள்ள மீதமுள்ள 30 சதவீதம் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே கடந்த ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
- மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.
சென்னை:
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்கு கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர். , அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
தீபாவளி பண்டிகை நாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.
பா.ம.க. தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ்:-
நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-
நம்நாடு இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞானம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் என்று அனைத்து துறைகளிலும் நம்நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளது. நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று சபதம் ஏற்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
தீபாவளி திருநாளில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள். தீபஒளி ஏற்றி இஷ்ட தெய்வங்களை வணங்கி அனைவரும் புத்தாடைகள் அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.
தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-
தீபாவளி நன்நாளில் பரஸ்பர நல்லுறவுடன் ஏழை, எளியோர்க்கு உதவிகள் செய்து, நண்பர்கள் உறவினர்கள் இடையே இனிப்புகள், பரிசுகள் வழங்கி நம் இதய அன்பைப் பகிர்ந்து கொள்வோம். இந்த இன்பத் திருநாளில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் நல்லுறவுடன் ஒருமைப்பாட்டைக் காத்து வாழவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:-
அனைவரின் வாழ்க்கையிலும் இருளும், துன்பமும் நீங்கி மத்தாப்பு போல வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைத்திட தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
சாதி, மத, இன, மொழி, பேதங்கள் கடந்து, இந்திய மக்கள் மனதில் சமத்துவம் என்னும் புனித எண்ணம் தழைத்தோங்கட்டும். எளியவர்க்கான தேவையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உரிமையும் கிடைக்கப்பெற்று, எல்லாரும் எல்லாமும் பெறும் நிலைக்கு உயர உறுதியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-
ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களை சூழ்ந்திருக்கும் கொடிய துன்பங்கள், வறுமைகள் என்கிற நரகாசுரனை வீழ்த்தி அனைவரது வாழ்விலும் தீபாவளி திருநாளில் தீபமாக ஒளி ஏற்றுவோம்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி, அரசு அறிவுறுத்தல் படி விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம். தீபாவளி திருநாள் காணும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன்:-
உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் கரைந்து இன்பங்கள் மலர்ந்து ஒளிமயமான எதிர்காலம் அமைந்து உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க.... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன்:-
தீப ஒளியினை போல் தமிழக மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்க்கை பிரகாசமாக மேம்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜயகுமார் என்ற விஜய் வசந்த், திரிணாமுல் காங்கிரஸ் தமிழக பொருளாளர் மு.மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபு பக்கர், தமிழக சமாஜ்வாதி கட்சி தலைவர் லோகநாதன் யாதவ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணி அரசன், தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.
அரூர்:
தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரூரில் செய்திகளை சந்தித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு, புளி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். சென்னை அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் கோரிக்கையை அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும். சித்தேரி, வத்தல்மலையை சுற்றுலா தலமாகவும், தீர்த்தமலையை ஆன்மீக தலமாகவும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.
அரூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர்தான் பா.ம.க.வின் முன்னோடிகள். எனவே, எங்கள் கட்சியின் வழிகாட்டிகள், முன்னோடிகளை எதிர்பவர்களை பா.ம.க. எதிர்க்கும். இந்தியாவில் சமூக நீதியை கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழக கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியபோது சாதி, மதம், அரசியல் கட்சிகளை அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திட்டனர்.

அதேபோல நீட் என்பது தமிழகத்தில் பொது பிரச்சனை ஆகையால் தி.மு.க.வின் நீட் எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு நாங்களும் ஆதரவு தருவோம் என்றும் நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது.
- தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர், மதுரையில் பேசும்போதும் சிலை விவகாரத்தை கையில் எடுத்தார்.
தொடர்ந்து பெரியார் குறித்த கருத்தை முன்வைக்கும் அண்ணாமலைக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பா.ம.க. கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தந்தை பெரியாரின் மண் இது. இந்த மண்ணில் இவ்வாறு பேசுவது தவறு. தந்தை பெரியால் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் கட்சியின் முன்னோடிகள்.
எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அவர்கள் அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தவறாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.