என் மலர்
நீங்கள் தேடியது "Anbumani ramadoss"
- தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
- பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது.
- தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. பா.ம.க. மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்கும் போராட கூடிய கட்சி. இதில், பின்னடைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இருவரிடையே சில விஷயங்கள் நடக்கிறது.
பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பா.ம.க. தன்னை தற்போது புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நான் உணர்கிறேன். அதற்குள் இருக்கும் நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும். மாற்று அரசியலை பா.ம.க. முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆணை முத்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.
- பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெரியளவில் சாதனை செய்த ஆனைமுத்து அய்யாவிற்கு தமிழக அரசும், மத்திய அரசும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.
ஆணை முத்து அய்யாவிற்கு நாம் சிலையை நிறுவுவோம். சமீபத்தில் நடந்த மாநாடு வன்னியர் மாநாடு அல்ல சமூக நீதிக்கான மாநாடு. அந்த மாநாட்டில் தீர்மானங்கள் சமூக நீதி அடிப்படையிலேயே போடப்பட்ட தீர்மானங்கள்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு போன்ற மற்ற சமூதாயத்திற்கும் பின்தங்கிய நிலையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும், போதையை அழிக்க வேண்டும் என்றெல்லாம் போடப்பட்ட தீர்மானம்தான் வன்னியர் சங்க மாநாடு.
சமூகநீதியின் மும்மூர்த்திகள் என்றால் தந்தை பெரியார், பேரறிஞர் ஆனை முத்து, மருத்துவ ஐயா ராமதாஸ் அவர்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.
சென்னையில் சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
* பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தவறு.
* 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* ஆனால் வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீடு இடஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது.
* வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தருவோமென நம்பவைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.
* இடஒதுக்கீடு தொடர்பாக திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாமென முதலமைச்சர் கூறினார்.
* பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.
* தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
* பின்தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலைவாய்ப்பும் வேண்டும், அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
- வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண்.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்தக் கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவக் கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுனரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுனரையோ, நடத்துனரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்கிறது திராவிட மாடல் அரசு.
பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்; தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும். இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு! என்று கூறியுள்ளார்.
- என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
- 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
* என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
* நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன்.
* இ.பி.எஸ். ஒரு மாதத்திற்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
* கடைசி நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை.
* 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
- சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
அப்போது, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் விரைவில் பூரண குணமடைய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரார்த்தனை செய்தனர்.
- அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.
- போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்.
சென்னை:
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: பா.ம.க.வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தி.மு.க. தான் காரணம் என அன்புமணி பேசியிருந்தது குறித்து...
பதில்: பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்.
கேள்வி: அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே?
பதில்: அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.
கேள்வி: மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
பதில்: போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்.
- என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அன்புமணி கூறியிருந்தார்.
- ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார்.
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது.
இதை அடுத்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சு உள்ள வரை நான் தான் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணியை பார்த்தாலே ரத்தம் ஏறுகிறது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடைமையும் கூட. என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார். அந்த வகையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அப்போது இருவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டார். தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ள ராமதாஸ், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ. அருள் ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.
- டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை என்று பழனிவேல் கூறினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிற்துறை வளர்ச்சியில் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற பிற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாடு தீவிரம் காட்டவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மதுரையில் நேற்று நடைபெற்ற புதுமதுரை 2035 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஆவணம், இலட்சினை ஆகியவற்றை வெளியிடுவதற்கான நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். அண்மையில் சட்டப்பேரவையில் பேசும் போது, டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை என்று கூறினார். தமிழகத்தில் 50% மது பாட்டில்கள் வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.
நிதித்துறை அமைச்சராக இருந்த போது ஒரு தொலைபேசி உரையாடலில் ,'' உதயநிதியும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்து விட்டனர்" என்று கூறியதாக சர்ச்சைகள் வெடித்தன. எனவே, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன என்று பாமக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.
- சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது.
- தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
வேலூர்:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி கலந்து கொண்டார்.
சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது. வன்னியர்களுக்கு தி.மு.க. நம்பிக்கை துரோகம் இழத்தது.
நம் கட்சிக்குள் சூழ்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள் டாக்டர் ராமதாசிடம் தேவையில்லாததை சொல்லி சூழ்ச்சி செய்கிறார்கள் இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. அவர்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.
இதனை தொடர்ந்து இன்று காலை அன்புமணி வேலூர் வந்தார். தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.