என் மலர்tooltip icon
    • மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர்.
    • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

    மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

    இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

    மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

    • பெற்றோர் எதிர்ப்பை மீறி கும்பமேளா அழகி மோனலிசா முஸ்லிம் நபரை காதலித்து திருமணம் செய்தார்
    • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

    மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

    இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

    மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

    • வரும் சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
    • மக்கள்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் மோடி.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தப் போரானது சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன.

    எந்த ஒரு சூழலிலும் இந்திய மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

    வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் எத்தகைய சிறந்த தேசம் என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்தோம். அதேபோல் இந்த சூழலையும் வெற்றிகரமாகக் கடந்து செல்வோம்.

    வரும் சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. மக்கள்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம்.

    தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது என தெரிவித்தார்.

    • மத்தியக் கிழக்கு முழுவதும் போர்பதற்றம் நீடித்துள்ளது.
    • போரால் இந்தியா பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

    ஈரான் மீதான போர் விரைவில் அல்லது எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக "கொஞ்சம் அங்குமிங்கும்... நான் எப்போது இது முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது இது முடிந்துவிடும்," என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

    ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு இனி "இலக்குகள் ஏதும் மிஞ்சவில்லை" என்பதால் இந்த முடிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக்கூறி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. 

    ஈரானும் பதில் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. மேலும் அமெரிக்கா ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள்மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் மத்தியக் கிழக்கு முழுவதும் போர்பதற்றம் நீடித்துள்ளது. மத்தியக் கிழக்கு மட்டுமின்றி இந்தப் போரின் தாக்கம் உலகெங்கும் எதிரொலித்துள்ளது. 

    தாக்குதலால் ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் எரிவாயு, எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு இந்தியா பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலகநாடுகளும் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இதனை கருத்திற்கொண்டு ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. 

    • இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்றவர் காணாமல் போனார்.
    • பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால் இது ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு துணைநிற்போம் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

    "விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும்.
    • நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்

    மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

    "ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முதலானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படுகின்றன. சூழ்நிலையை முன்னுணர்ந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம்.

    பொதுமக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப்புணர்வோடு செயல்படாத ஒன்றிய பாஜக அரசின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றிக் கிடைப்பதற்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  

    ஈரான் நாட்டை அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் தாக்குவதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தபோதே, இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு போற்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை மதிக்காமல் மோடி அரசு அலட்சியமாக இருந்தது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் 'எஸ்மா சட்டத்தை' ஒன்றிய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்படுகின்றன. மாணவர் விடுதிகளில் உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'சில வாரங்களுக்கு கையிருப்பு உள்ளது' என்று ஒன்றிய அரசு சொன்னாலும் பெரும்பாலான மாநிலங்களில் சிலிண்டர் விநியோகம் செய்ய முடியவில்லை. மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லியிருக்கிறோம் என்று மோடி அரசு சொன்னாலும் அது உடனடியாக நடக்கப் போவதில்லை. இந்தக் குழப்பங்களுக்கு மோடி அரசின் கையாலாகத்தனமே காரணம்.

    கொரோனா வந்த போதும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதும் இதே போலத்தான் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி அரசு நடந்து கொண்டது. அதனால் கொரோனாவின்போது இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்போதும் மோடி அரசு அதே போலத்தான் நடந்து கொள்கிறது.

    நாட்டுக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அதில் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்ற விதத்திலேயே மோடி அரசு செயல்படுகிறது. இப்போதும் கூட அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய மோடியின் கூட்டாளி அம்பானிக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அம்பானிக்கு உதவும் மோடி அரசு இந்திய மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதாலே எரிவாயு விநியோகம் முறையாக நடந்து விடும் என்று நம்புவதற்கு இல்லை. எஸ்மா சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தவே மோடி அரசு முயற்சிக்கும். எனவே இப்படி நாடகமாடி மக்களை ஏய்ப்பதை நிறுத்திக்கொண்டு உருப்படியாக மக்களுக்கு உதவுவது எப்படி என ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும்.

    போர் முடிந்தாலும்கூட எரிவாயு விநியோகம் சீரடைய பல மாதங்கள் பிடிக்கலாம். எனவே, மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும். மின்சார அடுப்புகளை மானிய விலையில் கிடைக்கச் செய்யவேண்டும். கிராமப்புற மக்களுக்குக் கூடுதலாக மாதம் 10லிட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கவேண்டும். சோலார் மின்வசதி ஏற்படுத்திக்கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்கவேண்டும்.

    தேவையான இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கவேண்டும். இவற்றுக்கான நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

     

    • இதுதான் கருணாநிதி குடும்பத்தினர் சந்திக்கும் கடைசித் தேர்தல்
    • அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

    திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 

    "இதே திருச்சியில் நேற்று முன்தினம் திமுக மாநாடு நடைபெற்றது. அப்போது தே.ஜ.கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம் செய்தார். இது வெற்றிக் கூட்டணி, அருமையான கூட்டணி. பல்வேறு வார்த்தைப் போருக்கு இடையில்தான் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளன. கெஞ்சி, அடிமையாகி காங்கிரஸுடம் திமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் பரஸ்பர உணர்வோடு தே.ஜ. கூட்டணி இணைந்துள்ளது. நாங்கள் இணைந்து மீண்டும் அற்புதமான ஆட்சியை அமைப்போம். நான்கில் ஒருபங்கு அறிவிப்புகள் கூட தற்போதுவரை திமுகவால் நிறைவேற்றப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி. ஒரே கொள்கையின்கீழ் கூட்டணியில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது இயல்பு. திமுகவை விரட்டத்தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி. 

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மோசமான, கையாலாகத அரசு திமுக அரசு. அந்த அரசை அகற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். திமுக ஒரு குடும்ப கட்சி. இதுதான் கருணாநிதி குடும்பத்தின் கடைசித் தேர்தல்.

    விவசாய நிலங்களை அபகரிக்கும் விதமாக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது மு.க. ஸ்டாலின் அரசு. அந்த விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்தது எங்கள் ஆட்சி. காவிரி குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை முடக்கியது விடியா திமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

    நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி பேசினார். 

    • மதிமுக 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடவுள்ளது.
    • 1 தொகுதியில் மட்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டி போடவுள்ளது

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • தாய் கிழவி படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
    • தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    இந்நிலையில், தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனரை சிவகார்த்தியன் அறிமுகப்படுத்தினார்.

    SK புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 10 ஆவது படத்தை அம்மாமுத்து சூர்யா இயக்குவார் என்று மேடையில் வைத்து அவரை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.

    • முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் CSK அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது.
    • CSK அணி விளையாடும் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

    இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.

    முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

    மார்ச் 30 ஆம் தேதி இரவு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு பெங்களூரில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    ×