என் மலர்
- நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.
- நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.
சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து காரில் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வந்த அவருக்கு வழி நெடுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜயை கண்டதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.
* தைரியம் தான் அனைத்திற்கும் அடிப்படை.
* நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.
* எந்த விஷயத்தில் நம்மை கிண்டல், கேலியாக பேசுகிறார்களோ அதை வெற்றியாக மாற்றிக்காட்டுவோம்.
* என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன், என் தாய் நாடாக தமிழ்நாடு தான் எனது வீடு.
* விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா?
* என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
- முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
வெல்வோம்_ஒன்றாக!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள்.
- அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை கண்டதும் தொண்டர்கள உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் மாற வேண்டும், பணத்தை கொடுத்தால் ஏமாறுவீர்களா?
வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க உரிமையில்லை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.
எந்த கட்சியையும் அழிக்க, ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.
அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா, அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தை தாண்டி என்ன செய்தார்கள்?
அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல் வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால்.
என்னைப்போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க உங்களுக்கு தில், திராணி இருக்கிறதா?
75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.
- விஜய் செய்த தவறு தான் என்ன?
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.
* விஜய் செய்த தவறு தான் என்ன? என்னை நேசித்த மக்களுக்காக வந்த விஜய் செய்த தவறு தான் என்ன?
* மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும்போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?
* மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.
* வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.
* பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
- இனிமா கொடுத்துப் பார்த்தும் நகை வெளியே வரவில்லை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் நலம் பாதித்த தனது 2 வயது பெண் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க, நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றிருந்தார். அப்போது குழந்தை மருத்துவமனையின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை கிராம் எடையுள்ள தங்க நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், அந்த பகுதியில் தேடிப்பார்த்தார்.
ஆனால் குழந்தையின் நகை கிடைக்கவில்லை. காணாமல் போன தனது குழந்தையின் நகை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் சென்று குழந்தையின் தாய் கேட்டார்.
ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை. ஆனால் அந்த பெண்தான், குழந்தையின் நகையை திருடியிருக்க வேண்டும் என்று அனைவரும் கருதினர். ஆகவே அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, குழந்தையின் தாய் உள்ளிட்டோரால் குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் அவர் தனக்கு தெரியாது என்றே கூறினார். இருந்தபோதிலும் அவரின் மீதான சந்தேகம், போலீசாருக்கு விலகவில்லை. ஆகவே அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
அப்போது காணாமல் போன குழந்தையின் தங்க நகை, இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்தது தெரிந்தது. அந்த பெண் நீலம்பூர் பகுதியை சேர்ந்த சமீனா (வயது35) என்பது கண்டறியப்பட்டது. கிளினிக்கில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது.
பின்பு மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, திருடிய நகையை தனது வாய்க்குள் போட்டு விழுங்கியிருக்கிறார். அது அவரது வயிற்றுக்குள் இருந்தது எக்ஸ்ரேயில் தெரிந்துவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சமீனா வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுப்பதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து இனிமா கொடுத்தனர். ஆனால் பல முறை முயற்சி செய்தும், இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து தங்க நகை மட்டும் வெளியே வரவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திவருகின்றனர். இனிமா கொடுத்து எடுப்பது எளிமையான விஷயம் என்பதால், அந்த முறையே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
- அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
- காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.
பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வருகிறார்.
காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் காலை 11 மணியளவில் அமித்ஷா வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு சாலை வழியாக சென்று, நகராட்சி திடலில் மதியம் 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.
பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றார். அமித் ஷாவின் வருகையையொட்டி சாலை முழுவதும் பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் இருந்து 350 போலீசார் வர உள்ளனர். மேலும் 7 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.
6 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். செண்டை மேளம், தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மேலும், அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களில் கொடி, தோரணங்கள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விழா கோலம்போல காட்சியளிக்கிறது.
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மாநில பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் காரைக்காலிலேயே முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.
- ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களான ப்ரியன் பென்னெட், தடிவனஷெ ரன்குவிப்பில் கவனம் செலுத்தினர். தடிவனஷெ 21 பந்துகளில் 35 ரன்கள் (7 பவுண்டரிகள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 30 பந்துகளில் 35 ரன்களை (4 பவுண்டரிகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராஸா தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார். போட்டி முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
- ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மர்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் கனடாவை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தோற் கடித்தது. 2-வது சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெற முடிந்தது.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் அயர்லாந்து- ஓமன் (கொழும்பு, காலை 11 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (கொல்காத்தா, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
அயர்லாந்து, ஓமன் அணிகள் முதல் 2 ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றி யாருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் 2-வது வெற்றி யாருக்கு ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நூறுநாள் திட்டமும், மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்றுதான்
- ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள மகளிருக்கு மாதா மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ரூ.1000 அளித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான தொகை, மற்றும் கோடை சிறப்பு தொகை என மொத்தம் ரூ.5000 இன்று மகளிரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் திருமாவளவன் இதனை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000. கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 என ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைத் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தபோது இது சாத்தியமே இல்லை என்று அதிமுக விமர்சித்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வழிமொழியப்பட்டது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தபோது அதேபோல் மகளிருக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தன. தமிழ்நாட்டில் திமுக அரசு நடைமுறைப்படுத்தும் இந்தத் திட்டத்தைப் பார்த்து இப்போது அசாம், டெல்லி, ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் முதலான மாநிலங்களில் மாதம் தோறும் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படி இந்தியாவுக்கே முன்மாதிரியாக இந்தத் திட்டம் அமைத்துவிட்டது.
உரிமைத் தொகையைப் பெறும் பெண்கள் அந்தத் தொகையை சிறு சிறு கடன்களை அடைப்பதற்கும் தமது குழந்தைகளின் கல்வி, முதியோரின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிறிய அளவில் அவர்கள் சேமிக்கவும் செய்கின்றனர். இந்த உரிமைத் தொகை பெண்களுக்கு குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்குப் பொருளாதாரத் தற்சாற்பை அளித்திருக்கிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக - அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாகத் தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக 1000 ரூபாயும், கோடை காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிருக்கு இன்று கிடைத்திருக்கிறது இது அவர்களுடைய மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பும் ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது இந்திய ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற மகளிருக்கு அந்தத் தொகை கூலியாகக் கிடைப்பதற்கு வழி செய்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சற்று பாதுகாக்கப்பட்டது.
'கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் தடுத்ததில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முக்கிய பங்கு வகித்தது' என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர். அதைப் போலத்தான் மகளிர் உரிமைத் திட்டமும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 74% பேர் கிராமப்புறப் பெண்களாவர்.
பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் தான் செலவு செய்வார்கள். அது பண சுழற்சியை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழ்நாட்டில் அதைத்தான் செய்திருக்கிறது.
'அடுத்து அமையப் போகிற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்' என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் 'மீண்டும் திமுகவைத்தான் ஆட்சியில் அமத்துவோம்!' என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அது பொய்யான வாக்குறுதி என்பது அம்பலமானது. 15 லட்சம் அல்ல 15 ரூபாயைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை.
மோடியைப் போல வாயால் வடை சுடுபவரல்ல நமது முதலமைச்சர். மிகச் சிறப்பாக மகளிர் உரிமைத் திட்டத்தை அவர் செயல்படுத்திக் காட்டியுள்ளார். எனவே, அடுத்துவரும் திமுக ஆட்சியில் 2000 ரூபாயும் உறுதியாக வழங்கப்படும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். 2021 இல் தான் அளிற்ற வாக்குறுதிகளை மட்டுமின்றி அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் நமது முதலமைச்சர். காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மக்கள் நல அரசாக, சமூக நீதி அரசாக, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், சுகாதாரக் கட்டமைப்பில் முதல் மாநிலம் என்ற பெருமைகொண்ட அரசாகத் தமிழ்நாடு அரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். அவருடைய சாதனை தொடர்வதற்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவரது தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைய ஆதரவு தரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடக்கிறது.
- நிர்வாகிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ், தொப்பி அடங்கிய மஞ்சப்பை கொடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.
சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தாளமுத்து நடராஜன் திடலுக்கு வருகை தந்த விஜய்க்கு பூத்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சந்திப்பு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ், தொப்பி அடங்கிய மஞ்சப்பை கொடுக்கப்பட்டு வருகிறது.











