என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 210, கும்பகோணம் மாகராட்சியில் 60 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொசு ஒழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் காய்ச்சல் கண்டறியக்கூடிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தஞ்சை மானம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக இந்த மருத்துவமனையை அணுக வேண்டும். உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒரு பகுதியில் இருந்து அதிக அளவு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வருவதால் உடனடியாக அந்த பகுதி குழு அனுப்பவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .

    யாருக்கேனும் காய்ச்சல் இருந்தாலோ அந்த பகுதியில் அதிக அளவு காய்ச்சல் பரவுவதாக அறிந்தால் தாமாக முன்வந்து மருந்தகங்களில் சென்று மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் ஆலோசனைபடியே மருந்து உட்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சஞ்சய் ராஜாவிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் கூறியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்திருந்தோம்.
    • துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை ரவுடி சஞ்சய் ராஜா என்பவர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசார் தங்களை தற்காத்து கொள்வதற்காக பதிலுக்கு சுட்டனர். இதில் சஞ்சய் ராஜாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இன்று காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர்.

    சஞ்சய் ராஜாவிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் கூறியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்திருந்தோம்.

    மற்றொரு துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்தனர். சரவணம்பட்டி பகுதியில் தான் சஞ்சய் ராஜா தங்கி இருந்தார். இதனால் இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர்.

    இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போல இருக்கிறது. மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுட தொடங்கி விட்டார். போலீசாரை குறிவைத்து சுட்டார். நல்வாய்ப்பாக போலீசார் தப்பி விட்டனர்.

    தற்பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் சுட்டதில் சஞ்சய் ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் 10 நிமிடத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார். சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது.

    துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்தபோது, பீகார், ஒரிசா என சொல்லி இருக்கின்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கின்றார்.

    இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே இருக்கிறது. இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

    இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1956-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 37,256 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை என்.எல்.சி பறித்துள்ளது.
    • உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனி நிலங்களை கையகப்படுத்தப்போவதில்லை என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.

    என்.எல்.சிக்கு நிலம் எடுக்க கடலூர் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் திரைமறைவில் செய்து வருகிறது.

    1956-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 37,256 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை என்.எல்.சி பறித்துள்ளது. அந்த நிலங்களை வழங்கிய மக்களுக்கு இன்று வரை உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. அண்மையில் 299 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.

    இப்போது அமைச்சரால் வழங்கப்பட்ட பணி ஆணை என்பது தினக்கூலி பணிக்கானது மட்டுமே. அடுத்த 3 மாதங்களில் ஒப்பந்தக்காரர்கள் நினைத்தால், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத ஆணையை வழங்கித்தான் மக்களை அமைச்சர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

    கடலூர் மாவட்டத்தை பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பா.ம.க. எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது.
    • நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வருகிறார். இன்று 10-வது அமர்வில் 'வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பேசினார்.

    இந்தியா, நிதி ஒழுக்கம்-வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி நகர்கிறது. இன்று உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது.

    2021-22-ம் ஆண்டில் இந்தியா அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றது. இந்தியாவின் வங்கி அமைப்பில் உள்ள பலத்தின் பலன்கள் அதிகபட்ச மக்களை சென்றடைய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும். பத்தாண்டுகளுக்கு முன் நெருக்கடியில் இருந்த வங்கித்துறை தற்போது லாபகரமாக உள்ளது.

    நிதி உள்ளடக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களை முறையான நிதி அமைப்பின் பகுதியாக ஆக்கியுள்ளன.

    நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் நாடு அதிக பட்ச நன்மைகளை பெறும்.

    வெவ்வேறு புவியியல் பகுதிகள் மற்றும் பொருளாதார துறைகளின் முன்னேற்றத்திற்காக பணிபுரியும் தனியார் துறைக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம்.

    ஜி.எஸ்.டி., வருமான வரி குறைப்பு மற்றும் கார்ப்பரேட் வரி காரணமாக இந்தியாவில் வரிச்சுமை கடந்த காலத்தைவிட கணிசமாக குறைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு மொத்த வரி வருவாய் சுமார் ரூ.11 லட்சம் கோடியாக இருந்தது.

    2023-24-ம் ஆண்டில் 200 சதவீதம் அதிகரித்து ரூ.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2013-14 முதல் 2020-21 வரை தனிநபர் வரி கணக்குகளின் எண்ணிக்கை 3.5 கோடியில் இருந்து 6.5 கோடியாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்துவது ஒரு கடமையாகும். இது தேசத்தை கட்டியெழுப்புவதில் நேரடியாக தொடர்புடையது. வரி அடிப்படை அதிகரிப்பு என்பது மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு சான்றாகும். அவர்கள் செலுத்தும் வரி பொது நன்மைக்காக செலவிடப்படுகிறது என்று நம்புகிறார்கள்.

    வரி விகிதங்களை குறைத்ததால் வரி வசூல் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரூ பே, யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது. இது உலகில் நமது அடையாளமாக உள்ளது.

    டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டில், இந்தியா யுபிஐ வழியாக ரூ.75 ஆயிரம் கோடியை பண பரிவர்த்தனை செய்துள்ளது.

    சமையல் எண்ணையில் தன்னிறைவு அடைய வேண்டும். உயர்கல்வித் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். இதனால் இந்தியா அன்னிய செலாவணியை சேமிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டி நடக்கும் இடத்தின் முன்னால் அனுமன் உருவப்படம் இருந்துள்ளது.
    • அனுமன் படத்தின் முன்பு நின்று பெண் பாடி பில்டர்கள் போஸ் கொடுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ரத்லம்:

    மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் 13-வது மிஸ்டர் ஜூனியர் உடல் கட்டமைப்பு போட்டி (பாடிபில்டிங்) கடந்த 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெற்றது.

    இதில் பெண் பாடிபில்டர்கள் பங்கேற்றனர். அப்போது போட்டி நடக்கும் இடத்தின் முன்னால் அனுமன் உருவப்படம் இருந்துள்ளது. அந்த படத்தின் முன்பு நின்று பெண் பாடி பில்டர்கள் போஸ் கொடுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதன் மூலம் பிரம்மச்சரிய கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியதோடு, போட்டி நடந்த இடத்தில் நேற்று கங்கை நதி நீர் தெளித்து அனுமன் மந்திரங்கள் ஓதினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயங்க் ஜாட் கூறுகையில், இதில் ஈடுபட்டவர்களை அனுமன் தண்டிப்பார் என்றார்.

    அதே நேரத்தில் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிதேஸ் பாஜ்பாய் கூறுகையில், பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பதிலடி கொடுத்தார்.

    மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ்காரர்கள் பெண்கள் மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக் அல்லது நீச்சல் ஆகியவற்றில் பங்கேற்பதை பார்க்க முடியாது. அவர்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் பெண்களை அழுக்கான கண்களுடன் பார்க்கிறார்கள் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும்.
    • தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும்.

    திருச்சி:

    திருவாரூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டமானது அ.தி.மு.க.வின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை. இந்த திட்டத்தில் மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.

    தமிழகத்தில் வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது தவறு. ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை திசை திருப்பவும், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்ப வேண்டும் என சிலர் செய்த சிறுபிள்ளைத்தனமான செயல்.

    தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும். தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களையும் தி.மு.க. அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறும் போது செய்த செயல்பாடுகளை முடக்கப் பார்ப்பார்கள். ஆனால் தி.மு.க. அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சஞ்சய் ராஜா யாரும் எதிர்பாராத விதமாக தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட தொடங்கினார்.
    • ரவுடி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதும், பதிலுக்கு போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியா பாண்டி.

    ரவுடியான இவரை கடந்த மாதம் 12-ந்தேதி இரவு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.

    இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்.

    மேலும் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் கடந்த வாரம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராஜாவை போலீசார் கடந்த 2-ந்தேதி முதல் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையின் போது, சஞ்சய் ராஜா, சத்தியபாண்டியை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி சீன நாட்டு துப்பாக்கிகள் என்பது தெரியவந்தது.

    இன்றுடன் அவரது காவல் முடிவதால் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான போலீசார் அவரிடம் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அதிரடி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது அவரிடம் உங்களுக்கு சீன துப்பாக்கியை வாங்கி கொடுத்தது யார்? கொலை சம்பவத்தில் 2 துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளீர்கள். ஆனால் ஒரு துப்பாக்கி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு துப்பாக்கியை எங்கு வைத்துள்ளீர்கள் என கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சஞ்சய் ராஜா, நான் துப்பாக்கியை கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேட்டில் உள்ள மலைச்சரிவில் வைத்திருப்பதாகவும், அங்கு அழைத்து சென்றால் துப்பாக்கியை எடுத்து தருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர் சத்தியமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சஞ்சய்ராஜாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு சரவணம்பட்டி நோக்கி அழைத்து சென்றனர்.

    சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடுக்கு சென்றதும், ஜீப்பை விட்டு இறக்கி மலையை நோக்கி அழைத்து சென்றனர்.

    அப்போது போலீசார் துப்பாக்கியை எங்கு வைத்துள்ளாய் என சஞ்சய்ராஜாவிடம் கேட்டனர். அதற்கு அவர் இந்த மலைச்சரிவில் தான் வைத்துள்ளேன். வாருங்கள் எடுத்து தருகிறேன் என கூறிக்கொண்டே சென்றார்.

    ஒரு மலை இடுக்கின் அருகே சென்றதும் சஞ்சய்ராஜா நின்று விட்டார்.

    ஏன் நின்று விட்டாய் என போலீஸ் கேட்டபோது இங்கு தான் வைத்துள்ளேன் என கூறிக்கொண்டே மலை இடுக்குக்குள் சென்றார்.

    அங்கு துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் வெளியில் வந்தார். அவரிடம் போலீசார் துப்பாக்கியை எங்களிடம் கொடு என கேட்டனர்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்து நின்று கொண்டே இருந்தார். போலீசார் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் கொடுக்காமல் அப்படியே நின்றார்.

    சிறிது நேரத்தில் சஞ்சய் ராஜா யாரும் எதிர்பாராத விதமாக தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட தொடங்கினார்.

    துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து வருவதை பார்த்த இன்ஸ்பெக்டர், உடனடியாக தன்னை பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்த மரத்திற்கு பின்னால் சென்று மறைந்து கொண்டார். மற்ற போலீசாரும் மரங்களுக்கு பின் சென்று மறைந்தனர்.

    அங்கிருந்தவாறு, துப்பாக்கியை கீழே போட்டு விட்டு சரண் அடையுமாறு சஞ்சய் ராஜாவை எச்சரித்தனர். ஆனால் அவரோ அதனை எல்லாம் காதில் வாங்காமல் மீண்டும் ஒருமுறை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்வதற்காக போலீசார் மறைந்து, மறைந்து முன்னோக்கி சென்றனர். தொடர்ந்து சஞ்சய் ராஜா துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றியும், தங்களை தற்காத்து கொள்வதற்காகவும், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சஞ்சய் ராஜாவின் இடது காலை நோக்கி சுட்டார்.

    காலில் குண்டு பாய்ந்ததும் சஞ்சய் ராஜா தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே போட்டார்.

    மேலும் வலி தாங்க முடியாததால் அப்படியே கீழே சுருண்டு விழுந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரின் அருகில் சென்று, கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் தூக்கி கொண்டு கீழே வந்தனர். தொடர்ந்து அவரை ஜீப்பில் ஏற்றி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலையில் மலைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எதற்காக துப்பாக்கிச்சூடு நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். ஏராளமானோர் கரட்டுமேடு பகுதியில் குவிந்து விட்டனர். போலீசார் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கீழே அழைத்து வந்த பிறகே மலையில் போலீசார் இருந்தது மக்களுக்கு தெரியவந்தது. இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியே பதற்றமாக காணப்பட்டது.

    கோவையில் இன்று அதிகாலை ரவுடி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதும், பதிலுக்கு போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.
    • தனியார் பஸ்களை மீண்டும் இயக்க போவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் 50 ஆண்டுகளாக அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களை இயக்கவும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 500 தனியார் பஸ்களை நிபந்தனை அடிப்படையில் இயக்க அரசு வந்துள்ளது.

    இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச. கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. சி.ஐ. டி.யூ. தொழிற்சங்கம் நேற்று பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எம்.எல்.எப்., தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அந்த கடிதத்தில் சென்னையில் தனியார் பஸ்களை இயக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

    ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் இதை மீறும் வகையில் தனியார் பஸ்களை மீண்டும் இயக்க போவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புவதால் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச குழுவான ஏசிஐ மூலம் டெல்லி விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகவும் தேர்வு.
    • 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் தேர்வு.

    டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத் தரம் வாய்ந்த சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இதனை சர்வதேச குழுவான சர்வதேச விமான நிலைய கவுன்சில் அறிவித்துள்ளது.

    இதேபோல், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தூய்மையான விமான நிலையமாகவும் டெல்லி விமான நிலையம் தேர்வாகியுள்ளது.

    மேலும், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார்.
    • நிறுவனத்தில் 147 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபகாலமாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    இன்று நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடி சென்ற போது காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார்.

    அங்கு 147 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர்களிடம் உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வழக்கம்போல் தாங்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×