என் மலர்tooltip icon
    • நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்க தொடங்கி இருக்கிறார்.
    • சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி? என யோசித்து பார்க்க வேண்டும்.

    வெள்ளாவி வச்சு வெளுத்த மேனி கொண்ட நடிகையான தமன்னா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தற்போது நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்க தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்யலாம்? என்பது குறித்து 'டிப்ஸ்'களை நடிகர்- நடிகைகளுக்கு அறிவுரையாக வழங்கியுள்ளார்.

    அவர் கூறுகையில், "சினிமா பிரபலங்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி? என யோசித்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும். எனவே சரியான முதலீடு தான் நம்மை காப்பாற்றும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

    என்ன ஒரு தொலைநோக்கு பார்வை...

    • மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
    • நிர்வாகிகள் விவாதங்களில் பங்கேற்பதோ, நேர்காணல் வழங்குவதோ கூடாது.

    த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

    பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.

    முன்அனுமதி பெறாமல், எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள்.
    • தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந்தேதி பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.

    அதைத் தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளன. டோட்லா, ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பால் விலையை உயர்த்தி வருகின்றன.

    கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 78 ரூபாய் ஆகவும், டீ ஸ்பெஷல் பால் 68-ல் இருந்து 70 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் 66 ரூபாயில் இருந்து 68 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் 60 ரூபாயில் இருந்து 62 ஆகவும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ஆகவும் உயர்ந்துள்ளது.

    இதே போல தயிர் ஒரு கிலோ ரூ. 74-ல் இருந்து 76 ஆகவும் 450 கிராம் தயிர் ரூ. 38-ல் இருந்து ரூ.40 ஆகவும் இரு முறை சமன்படுத்தப்பட்ட தயிர் ஒரு கிலோ ரூ. 70-ல் இருந்து 72 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள். தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது. அரை லிட்டருக்கு 10 ரூபாய் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ஆவின் பால் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் ஆவின் பாலுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் வந்தவுடன் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைந்தது காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன. இதன் காரணமாக பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தனியார் பால் நிறுவனங்கள் பால் விவசாயி ளிடம் இருந்து அதிக விலை கொடுத்து பாலை வாங்குவதால் விலையை உயர்த்தி உள்ளனர் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும் போது, பால் உற்பத்தியில் ஆவின் நிறுவனம் கவனம் செலுத்தவில்லை. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

    • திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அமைக்கப்படும்.
    • ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதமாக சென்னை நகரின் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், திருவான்மியூர்-உத்தண்டி வரையிலான சாலை மேம்பால பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கியூபாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது.
    • அமெரிக்காவிற்கும் கம்யூனிச நாடான கியூபாவிற்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை.

    கியூபா நாட்டின் கடலோர காவல்படைக்கும், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகில் வந்தவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் படகில் வந்த நால்வர் உயிரிழந்தனர். 

    கியூபாவின் வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள பால்கன்ஸ் கே பகுதியிலிருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணப் பதிவு எண்ணைக் கொண்ட அந்தப் படகு, கியூபாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது.

    கடலோர காவல்படை அந்தப் படகை அடையாளம் காண நெருங்கியபோது, படகில் இருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் கியூபா கப்பலின் கமாண்டர் காயமடைந்தார். இதற்குப் பதிலடியாக கியூபா படையினர் நடத்திய தாக்குதலில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்த ஆறு பேருக்கும் தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவிற்கும் கம்யூனிச நாடான கியூபாவிற்கும் இடையே ஏற்கனவே உறவு சுமுகமாக இல்லாத நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

    "தனது கடல் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் கியூபா உறுதியாக உள்ளது" என்று அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.  

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.
    • மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இந்த நிலையில், பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'அன்பே டயானா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    • சுமன் பால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • 6 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை சவுகார்பேட்டையில் சாய் வாக்ஸ் என்ற நகைப்பட்டறையில் சிலிண்டர் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில், படுகாயமடைந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும், நகைப்பட்டறை ஊழியர்கள் அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட 6 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நல்லகண்ணு நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவு.
    • ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் விலைமதிப்பற்ற வாக்குரிமையைப் பயன்படுத்த அதிக மக்கள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டுமென்றால், வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிய மனுக்களை விசாரித்தபோது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி அடங்கிய அமர்வு இந்த கருத்தைத் தெரிவித்தது.

    மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய, கடுமையானதாக இல்லாவிட்டாலும், ஒரு கட்டாய நடைமுறை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.

    எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவாக இருப்பதாக தனது அனுபவத்தில் உணர்வதாக நீதிபதி பாக்ஜி குறிப்பிட்டார்.

    கிராமங்களில் வாக்குப்பதிவு நாள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, குழுவாகப் பாட்டுப் பாடியும் ஆடியும் வாக்குச்சாவடிகளுக்கு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்திற்கு பதிலளித்த நீதிமன்றம், "நோட்டா முறையினால் வாக்குப்பதிவு சதவீதத்திலோ அல்லது வேட்பாளர்களின் தரத்திலோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பியது.

    ஒரே ஒரு வேட்பாளர் போட்டியிடும் இடத்தில், அந்த வேட்பாளருக்கு நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே கிடைத்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது. இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

    ×