search icon
என் மலர்tooltip icon
    • கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன.

    சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமினில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.

    கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமினில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு, இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். 

    • கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.
    • ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் என 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆப் தி நேசன் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தின.

    கடந்த மாதம் 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இதில், பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜ.க. கூட்டணி 343 இடங்களை கைப்பற்றும் எனவும், இதில் பா.ஜ.க. மட்டும் 281 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் 78 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என 65 சதவீதம் பேர் விரும்புகிறார்கள் என்பதும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும், இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க பொருத்தமான தலைவர் யார் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தான் இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் என 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரம் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு 14 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 சதவீதம் பேரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?
    • தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

    துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

    தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
    • மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.

    மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்

    பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்

    மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்

    மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள்.
    • உயிரிழந்த 10 பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது

    இந்தியாவில் புனித நதிக்கரைகளில் நடைபெறும் கும்ப மேளாக்களில் சிறப்பு வாய்ந்தது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது.

    அதுவும் தற்போது நடைபெறும் கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதால் இது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான துறவிகளும், சாதுக்களும், ஆன்மிக பெரியவர்களும் பிரயாக்ராஜ் வந்து முகாமிட்டுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த மகா கும்பமேளாவில் இதுவரை புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மகாகும்பமேளாவுக்கு சென்றவர்களின் கார் பிரயாக்ராஜ் - மிர்ஷாபூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்த 10 பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார்.
    • வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

    அண்டை நாடான பூடான் நாட்டின் பணமான குல்ட்ரம் மதிப்பும் நம் நாட்டு ரூபாயின் மதிப்பும் ஒரே மதிப்பு கொண்டதாக உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அர்பாஸ்கான். வௌியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இணைய தளத்தில் இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அர்பாஸ்கான் அண்டை நாடான பூடானுக்கு சுற்றி பார்க்க சென்றார். அப்போது நம் நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளை நிர்வகிக்கும் பாரத் மற்றும் இன்டேன் நிறுவனங்களின் பங்க்குகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அங்கு விற்கப்படும் பெட்ரோல் விலை குறித்து அறிய ஆர்வம் கொண்டார்.

    பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார். அப்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 63.92 என தெரிந்துள்ளது. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படுவதை காட்டிலும் பூடானில் 37 ரூபாய்வரை குறைவாக விற்கப்படுவதை அவர் சுட்டிகாட்டினார். இந்த வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.



    • தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது.
    • படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்.

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஜேஇஇ தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவி பற்றி அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் கவுதம் அதானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உங்கள் அனைவருக்கும் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது - தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது..." என்று தெரிவித்து உள்ளார்.

    மாணவியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், "எதிர்பார்ப்புகளின் சுமையில் ஒரு நம்பிக்கைக்குரிய மகள் இப்படிச் செல்வதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது".

    அந்த மாணவி தனது பெற்றோருக்கு "அவர்களின் கனவுகளை நிறைவேற்றாததற்கு" "மன்னிக்கவும்" என்று ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தார்.

    வாழ்க்கைப் பாடத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், பெற்றோர்கள் தங்களிடமிருந்தும் தங்கள் குழந்தைகளிடமிருந்தும் அழுத்தங்களை விலக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.

    "வாழ்க்கை எந்தத் தேர்வையும் விடப் பெரியது - பெற்றோர்கள் இதைப் புரிந்துகொண்டு தங்கள் குழந்தைகளுக்கும் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் மனம் திறந்து கூறி உள்ளார். அதில்,

    "நான் படிப்பில் மிகவும் சாதாரணமாக இருந்தேன்". மேலும் "படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்".

    "ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை எனக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது" என்று கூறினார்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
    • அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார்.

    சார்ஜ் போடும்போது சூடாகி செல்போன்கள் வெடிப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் எவ்வித பயன்பாடும் இன்றி சாதாரணமாக நம் ஆடையில் வைக்கப்பட்டிருக்கும்போது செல்போன் வெடிப்பது என்பது கொஞ்சம் அரிதாக நடக்கும் நிகழ்வு. அத்தகைய நிகழ்வு ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது.

    காய்கறி சந்தைக்கு இளம்பெண் ஒருவர் தனது தோழருடன் சென்றிருந்தார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட்டின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தொடர்ந்து அவருடைய ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

    இதனால் செய்தறியாமல் அவர் அங்கும் இங்கும் ஓடியபடி அலறி துடித்தார். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான வீடியோ பதிவாகி இருந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    ×