என் மலர்
- ஈரான்-அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஈரான்-அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தை 20 சதவீதம் கையாளும் ஹார்மூஸ் நீரிணையும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தற்போது எரிபொருளுக்கு கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது.. உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது.
ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்தக் கூடுதல் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதேநேரம் தவிர்க்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று கட்டமாக இந்தக் கூடுதல் கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணமாக 10 டாலர் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான சர்ஜார்ஜ் 30 டாலரில் இருந்து 90 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கான கட்டண உயர்வு 20 டாலரில் இருந்து 60 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் கட்டணம் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, நிலமை மேம்பட்டால் அதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
- மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
புதுடெல்லி:
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
போர்ச்சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தாய்லாந்தில் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட்டது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்பட்டது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நட்பின் அடிப்படையில் வங்கதேசத்துக்கு 5,000 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்பட்டது என இந்தியா அறிவித்துள்ளது.
- 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி
- அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் நான் இன்னும் நம்புகிறேன்.
பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர் மூலம் மாநில கட்சிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது.
அப்படித்தான் மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்த ஆனந்த போஸ், மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். இருந்தபோதிலும் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வந்தார். ஏப்ரல் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த 5-ந்தேதி திடீரென ஆனந்த போஸ் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து தமிழக கவர்னராக இருந்து ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில கவர்னராக பதவி ஏற்றுள்ளார்.
ஆனந்த போஸ் நாளை மேற்கு வங்கத்தில் இருந்து தனது அலுவலகத்தை காலி செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இன்று அரசு மாளிக்கையில் மம்தா பானர்ஜி, ஆனந்த போஸ்-ஐ சந்தித்து பேசினார்.
அப்போது, ஆனந்த போஸ் நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அரசியல் உள்நோக்கம் கொண்டது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
அவர் நாளை புறப்பட இருக்கிறார். நான் அவருடன் நீண்ட காலம் பணியாற்றியதால், எங்களுக்குள் நல்ல உறவு நிலவுகிறது. அவரைச் சந்திக்க நான் இங்கு வந்துள்ளேன். அவரது குடும்பத்தினரை நான் அறிவேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.
அவர் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் நான் இன்னும் நம்புகிறேன். தேர்தலுக்கு சற்று முன்பு, ஆளுநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டார்.
அவர் மாநிலத்தை நன்றாகப் புரிந்துகொள்வதால், வங்காளத்திற்குத் திரும்பி வருமாறு நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது.
- தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர் காவல் துறையினரின் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும், காவல்துறையும்.
4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும், ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது.
"அரசியலில் நாம் 'ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு' என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது" என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார்
- டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
இந்த உலககோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சனுக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 கோடி பின்தொடர்பவர்கள் இருந்தனர். உலகக்கோப்பையில் அவரின் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து சஞ்சு சாம்சனின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.78 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட கேரளாவை சேர்ந்த ஆண் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். 1.59 கோடி பின்தொடர்பவர்களை கொண்ட துல்கர் சல்மானை முந்தி இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
அதே சமயம் கேரளாவை சேர்ந்தவர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட நபர்களில் கீர்த்தி சுரேஷ் 1.88 கோடி பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 1.78 பின்தொடர்பவர்களுடன் சஞ்சு சாம்சன் 2 ஆம் இடத்திலும் 1.66 பின்தொடர்பவர்களுடன் அனுபமா பரமேஸ்வரன் 3 ஆம் இடத்திலும் 1.59 கோடி பின்தொடர்பவர்களுடன் துல்கர் சல்மான் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.
வரும் ஐபிஎல் தொடர் முடிவதற்குள் கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட கேரளாவை சேர்ந்த நபர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ராகுல் காந்தி பேசும்போது 20 முறை குறுக்கிடப்பட்டதாக கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.
- நாட்டிற்கு எதிராக நீங்கள் பேசினால், 200 முறை குறுக்கிடு செய்வோம்.
இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இன்று ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் பேசுகையில் "பிப்ரவரியில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேச விரும்பியபோது சபாநாயகர், மற்றும் சபாநாயகர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் கருவூல பெஞ்சுகளின் மூத்த உறுப்பினர்களால் 20 முறை குறுக்கீடு செய்ததாக நாங்கள் கூறினோம். முன்கூட்டியே திட்டமிட்டு அவர் குறுக்கிடப்பட்டார். சபாநாயகர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை. சில முக்கியமான பிரச்சினைகளை அவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்போது மீண்டும் மீண்டும் குறுக்கிடப்பட்டது" என்றார்.
இந்த நிலையில் சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, நாட்டுக்கு எதிராக பேசினால் 200 முறை குறுக்கிடு செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறுகையில் "குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசும்போது 20 முறை குறுக்கிடப்பட்டதாக கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன், நாட்டிற்கு எதிராக நீங்கள் பேசினால், 200 முறை குறுக்கிடு செய்வோம். அவர்களுடைய கொள்கை இந்தியா எதிர்ப்பு. ராகுல் காந்தியின் பேச்சு பாகிஸ்தானில் காட்டப்பட்டது. அவருக்கு ஆர்வம், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விட, பாகிஸ்தான் எத்தனை விமானங்களை வீழ்த்தியது, அதை உலகிற்குச் சொல்வது என்பதில்தான் இருந்தது. பிரதமரை கோகோய் பலவீனமானவர் என்று அழைத்தார். எந்த நாடும் பலவீனமான நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன" என்றார்.
- மக்களவை தேர்தலில் மைக் சின்னம் நாதகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே இடம்பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தேர்தலில் போட்டியிட தனி சின்னம் ஒதுக்கக்கோரி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே-விற்கு இந்தத் தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடும் பட்சத்தில் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காரணம் அதிமுக கூட்டணியில் கட்சிக்கு 5க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்டார். மேலும் மக்களவைத் தேர்தலில் 'மைக்' சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் மனுத்தாக்கலின் போது இரு பிரிவினருக்கு இடையில் மோதல்.
- பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் மனுதாக்குதலின்போது இரு பிரிவனருக்கு இடையில் அதாவது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வன்முறையாக வெடித்துள்ளது.
இதனால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மனுதாக்கலின்போது ஏற்பட்ட வன்முறையின்போது வன்முறை கும்பலை கலைக்க பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனை காலம் (Column) குவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிட நிர்வாகம் மறுத்துள்ளது. ஒரு Column என்பது 60 முதல் 80 வீரர்கள் கொண்ட குழு ஆகும்.
இந்த சம்பவம் சிபினாங் என்ற பகுதியில் நடைபெற்றதாக மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார்.
- தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- வட கொரியா- சீனா இடையிலான ரெயில் சேவை கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
- வருகின்ற வியாழக்கிழமை முதல் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.
வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற வியாழக்கிழமை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இநத ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும்.
தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில் இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.









