என் மலர்
- முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது
- பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை வரும் 14ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் கடந்தாண்டு ஜூன் மாதம் லக்னோவில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.
முதலில் நவம்பர் 2025-இல் நடைபெறவிருந்த இந்தத் திருமணம், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் விளையாடிய காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தநிலையில், திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான ஹல்தி மற்றும் மெஹந்தி விழாக்கள் மார்ச் 13 அன்று தொடங்கும் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
- பா.ஜ.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை இல்லை.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் ஏற்கனவே 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகும் படி நேற்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சிபிஐ-க்கு விஜய் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், கரூர் வழக்கு விசாரணைக்காக வருகிற 15-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அன்றைய தினம் சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜராக உள்ளார் என்று த.வெ.க. இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பா.ஜ.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றார்.
- வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12-ந்தேதி முதல் 15-ந்தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- இந்தியர்கள் தங்களது ஓட்டல் முன்பதிவு முடிந்து விட்டதால் அங்கு தங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
- உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு இந்தியர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கில் போர் காரணமாக விமான போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. துபாயில் விமான போக்குவரத்து பாதிப்பால் இந்தியர்கள் உள்பட பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்தியர்கள் தங்களது ஓட்டல் முன்பதிவு முடிந்து விட்டதால் அங்கு தங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய வம்சாவளி தொழில் அதிபர் ஒருவர் உதவி உள்ளார்.
துபாயில் மிசான் குழுமத்தின் தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த யோகேஷ் தோஷி, துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் இலவசமாக தங்கி கொள்ள தனது 64 குடியிருப்புகளை கொண்ட கட்டிடத்தை வழங்கி உள்ளார்.
உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு இந்தியர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக யோகேஷ் தோஷி கூறும் போது, அடுக்குமாடி குடியிருப்பை இலவசமாக வழங்கும் முயற்சி இந்திய மக்கள் மன்றம்-ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இது 125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடம் கிடைக்க உதவியுள்ளது.
- திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
- எம்.ஜி.ஆர் அதிமுக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தந்த ஆதரவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி. தவெக-வின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவளித்து வந்த ஜேஎம்எம்கே, கடந்தாண்டு முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் இந்த முடிவில் இருந்து விலகி, தற்போது திமுகவிற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.எஃப். தமீம்,
'கடந்த எட்டு மாதங்களாக தவெகவோடு பயணித்தோம். அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அறிவுறுத்தியும் விஜய் போகவில்லை. வரும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு தர இருக்கிறோம். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
இக்கட்சி தனது ஆதரவை திரும்பிப் பெற்றாலும், தமிழ்நாடு முஸ்லீம் லீக், எம்.ஜி.ஆர். அதிமுக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
- இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையுடன் 'ஆவேஷம்' பட காட்சியை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி! ரீக்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
- மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடர்ந்தது. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் அரசு, தனியார் மதுபான கடைகள், பார்களை 3 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததை தொடர்ந்து 3-வது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி மதுபான கடைகள், பார்கள் 3 நாட்களுக்கு மூடுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- மத்திய அரசு மக்களுக்கு தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்
- தமிழ்நாடு அரசு அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை கோரியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் மாநில அரசும் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியுள்ளதாவது,
"ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழ்நாட்டில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார்.
மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மந்திரிகளின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கியைத் தவிர அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார்.
- கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
களக்காடு:
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ந் தேதி இரவில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவல்துறையில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அஜித்குமாரும், ஆகாசும் இதனால்தான் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நாங்குநேரி சம்பவம் அரசின் தோல்வியை காட்டுகிறது. முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை முன் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.











