என் மலர்tooltip icon
    • முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
    • இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் சமீபத்தில் முடிந்தன.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

    அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்: உத்தரகாண்ட், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பெங்கால்

    முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.

    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.

    ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    • அதிபர் மேக்ரான் பிரான்சில் இருந்து 16-ம் தேதி இந்தியா வருகிறார்.
    • 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் திங்கட்கிழமை இந்தியா வருகின்றனர். அதிபர் மேக்ரான் இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. (AI Impact Summit) உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது.

    • உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை தக்கவைத்தது.
    • சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

    புதுடெல்லி:

    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

    சமீபத்தில் வெளியான ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் இந்தியா 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் முன்னேறியுயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

    விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு,தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

    ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

    அதன்பிறகு, ஜப்பான் மற்றும் தென் கொரியா (187 நாடுகள்) இரண்டாவது இடத்தையும், ஸ்வீடன் மற்றும் யுஏஇ ஆகியவை (186 நாடுகள்) அடுத்த இடங்களைப் பிடித்தன.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்தன.
    • அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்.

    லண்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021 முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

    இதற்கிடையே, அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. ஏற்கனவே,

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் உறுதிசெய்தன.

    இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபிபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்குள்ள விஷம் என இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச சட்ட விதிகளைப் புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளது எனக்கூறிய இந்த நாடுகள், ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தன.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
    • செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா இறுதிச்சுற்றில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

    சிறப்பாக ஆடிய முசோவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • மார்க்கிராம் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.
    • தென்ஆப்பிரிக்கா 17.1 ஓவரில் இலக்கை எளிதாக எட்டியது.

    டி20 உலகக் கோப்பையில் இன்றைய 3-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார். மார்க் சாப்மேன் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யான்சன் 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம்- குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்க்கிராம் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி காக் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3 ஒவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. மார்க்கிராம் 19 பந்தில் அரைசதம் அடித்தார். ரிக்கெல்டன், டெவால்டு பிரேவிஸ் தலா 21 ரன்கள் சேர்த்தனர்.

    மார்க்கிராம் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 86 ரன்களும், டேவிட் மில்லர் 17 பந்தில் 24 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!
    • ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்.

    திருப்பத்தூரில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு திமுக தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்!

    * 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!

    * ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்

    * நம்முடைய திராவிட மாடல் அரசு, சாதனைகளின் அரசாக இருப்பதுதான், பழனிசாமி அவர்கள் இவ்வளவு வேதனையுடன் புலம்புவதற்குக் காரணம்.

    * தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு என்று இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்!

    * நம்முடைய இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள்! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன தேவை? ஓய்வில்லாத உழைப்பு!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
    • வங்கதேச அரசு அவரை நாடுகடத்த இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

    வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

    அதன்பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தியது. ஆனால், இந்தியா ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவில்லை.

    இந்த நிலையில்தான் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்று வங்கதேச தேசியவாத கட்சி (BNP) ஆட்சியை பிடித்துள்ளது. இந்த கட்சியின் மூத்த தலைவரான மிர்சா பக்ருல் இஸ்லாம், ஷேக் ஹசீனா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடதும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் இருநாட்டு உறவுக்கு தடையாக இருக்காது. சர்வதேச விதிப்படி நாங்கள் இந்த விவகாரத்தில் செல்வோம். ஏற்கனவே வங்கதேசம் இந்த கோரிக்கையை இந்தியாவிடம் வைத்துள்ளது.

    இவ்வாறு இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

    2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஷேக் ஹசீனா டெல்லியில் வசித்து வருகிறார்.

    • 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இதனிடையே, 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தாய் கிழவி படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    ×