என் மலர்
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.
- ஷிவம் துபே அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார்.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஷிவம் துபெ அதிரடியாக
ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னும், திலக் வர்மா 31 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.
நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. பாஸ் டி லீட் 33 ரன்னும், ஜாக் லயன் 26 ரன்னும், மைக்கேல் லெவிட் 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4வது வெற்றியைப் பதிவு செய்தது
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ஷிவம் துபெ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு என்று கருதப்படாது.
- தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது
புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட, தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' (மூளையின் வலது பக்க தமனியில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் வந்த பக்கவாதம்) பாதிப்பு, ராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணிச் சூழலால் தீவிரமடைந்ததோ அல்ல என்று மருத்துவக் குழு அறிக்கை சமர்பித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து, ஊனமுற்றோர் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்த ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்தது.
அவரது பக்கவாதத்திற்கு புகைபிடித்தலே காரணம் என்று மருத்துவக் குழு உறுதி செய்தது. அவர் ஒரு நாளைக்கு சுமார் 10 பீடிகள் புகைக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ரத்த உறைவு அல்லது கொழுப்புப் படிவம் மூளைக்குச் செல்லும் தமனியை அடைக்கும்போது, ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுத்து இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது என்றும், இதன் காரணமாக மூளைத் திசுக்கள் பாதிப்படைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதற்கான முக்கிய காரணிகளாக உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கற்ற நிலை ஆகியவை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து "முதல் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவக் குழுவின் கருத்துகளை நாங்கள் ஆய்வு செய்ததில், அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' எனும் பாதிப்பானது இராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணியின் காரணமாகத் தீவிரமடைந்ததோ அல்ல என்பதில் எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மேல்முறையீடு செய்தவர் ஒரு நாளைக்கு பத்து பீடிகள் என்ற கணக்கில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது இரண்டு அறிக்கைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்," என்று நீதிமன்றம் கூறியது.
இராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் 2002 ஆகியவற்றின் அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு" (Attributable to service) என்று கருதப்படாது.
- எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை.
- படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை வீரர்களே சுத்தம் செய்தார்கள்.
பாகிஸ்தானின் ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். சிட்னியில், அவர்கள் தங்குவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு ஹோட்டல் கட்டணங்களை செலுத்தாததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வீரர்கள் சரியான தங்குமிடம் இல்லாமல் தவித்தனர்.
உள்ளூர் வசதியில் தங்குமிடத்தைக் கண்டுபிடித்தது. ஆனால் போட்டி நாட்களில்கூட, அவர்களே தங்களது பாத்திரங்களைக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். மேலும் தங்களது துணிகளை துவைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகினர்.
இதன் காரணமாக, நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தங்களது நாடும் அணியும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி, ஹாக்கி அணியின் கேப்டனான அம்மாத் ஷகீல் பட், அப்படியெல்லாம் நடக்கவில்லை என உண்மையை மறைத்து பொய்யாகப் வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பரிதாப நிலை வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதற்கிடையே தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, தாயகம் திரும்பியது. ஆனால் அதை வரவேற்க எந்த அதிகாரிகளும் விமான நிலையம் செல்லவில்லை.
இதனால் கடுப்பான அவர் லாகூர் விமான நிலையத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால் அனாதையாக 10-12 மணி நேரம் சுற்றித் திரிந்தோம். சரியான நேரத்தில் உணவும் வழங்கப்படவில்லை. வீரர்களே உணவைத் தயார் செய்துகொண்டனர். இரண்டு முதல் மூன்று மணி நேரம் பாத்திரங்களைக் கழுவினார்கள். படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு நேரம் இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? இது, விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது.
முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். அதற்காக இங்கு (ஆஸி.) எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் உண்மையே என கூறினார்.
- ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
- பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
பெங்களூருவில் மதிய உணவிற்காக வெளியே சென்ற வங்கி ஊழியர் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் லக்கேரே அருகே உள்ள கெம்பேகவுடா லேஅவுட்டில் வசிக்கும் யோகேஸ்வரி (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் ராஜாஜிநகரில் உள்ள HDFC வங்கியில் பணிபுரிந்தார். திங்கட்கிழமை, மதியம் 12:30 மணியளவில், யோகேஸ்வரி தனது சக ஊழியருடன் அருகிலுள்ள உணவகத்திற்கு மதிய உணவு வாங்க சென்றுள்ளார்.

உணவு வாங்கிக்கொண்டு இருவரும் ராஜ்குமார் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனத்தைக் கண்டு அவரது சக ஊழியர் பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனால், யோகேஸ்வரி வாகனத்தின் வேகத்தைக் கணிக்கத் தவறி ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த அவரைமீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சக ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அதிக ரத்த இழப்பு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
- ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி, பாஜகவின் பட்ஜெட்டை ஆண்குழந்தை என்றும், காங்கிரஸின் பட்ஜெட்டை பெண்குழந்தை என்றும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவையில் பேசிய அவர்,
"எங்களது முதல் பட்ஜெட் வந்தது, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் அதனைப் பாராட்டியது. இரண்டாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது. மூன்றாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது.
எங்கள் அரசு முதல் பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, இரண்டாவது பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, மூன்றாவது பட்ஜெட்டிலும் ஒரு மகனைப் பெற்றெடுத்தது. இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அவர் தனது கடைசி பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார், அதனால்தான் அது ஒரு மகனைப் பெறவில்லை; ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்," என்று கோலி கூறினார்.
பெண் குழந்தையை ஒரு தோல்வியாகவும் அல்லது பலவீனமாகவும் சித்தரிக்கும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சு பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி,
"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்டமன்றத்திலேயே இப்படிப் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், சிந்தனைப் போக்கையும் காட்டுகிறது. காங்கிரஸை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். இது பாலினத்திற்கு எதிரான அவர்களின் பாரபட்சமான மனநிலையைக் காட்டுகிறது, இது ஒரு பாலியல் ரீதியான (sexist) கருத்தைத் தவிர வேறில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
- ஷிவம் துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 3-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 18 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து திலக் மற்றும் சூர்யகுமார் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். திலக் 27 பந்தில் 31 ரன்னிலும் சூர்யகுமார் 28 பந்தில் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து ஷிவம் துபே - பாண்ட்யா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். துபே முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியாக வந்த ரிங்கு சிங் தனது பங்குக்கு ஒரு சிக்சரை பறக்கவிட்டார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான்
- நேற்று சவுதி அரேபியாவில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது.
தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது.
இன்று மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். ரமலான் மாதம் வழக்கமாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். மார்ச் 18 அல்லது 19 அன்று ரமலான் முடிவடைந்து, அதைத் தொடர்ந்து ஈத்-அல்-பித்ர் (ரம்ஜான் பண்டிகை) கொண்டாடப்படும்.
- நமீபியா உடனான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது.
- இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போட்டியில் அதிரடியாக விளையாட முயன்ற சல்மான் அலி ஆகா, 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியதும், அவரது ஷாட் தேர்வைக் குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏதோ கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சத்தில் அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தார். இந்த காட்சிகள் நேரலையில் கேமராக்களில் பதிவாகின.
ஏற்கனவே இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த நமீபியா போட்டி அவர்களுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது. இந்த அதீத அழுத்தமே இத்தகைய மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
இந்த சம்பவத்தின் போது முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அருகே அமைதியாக அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- விண்ணப்ப கட்டணம் மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு -புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப். 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திமுக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காட்டில் இலைகள் சேகரித்துக் கொண்டிருந்தபோது கரடி கூட்டம் சுற்றி வளைத்தது.
- ஒரு கரடி கணவனை கடுமையாக தாக்தியதால், மனைவி கரடியுடன் சண்டையிட்டார்.
ஒடிசா மாநிலம் கரன்ஜியாவில் உள்ள மிலு என்ற கிராமத்தில் மால்டே சோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி லிலி சோரனுடன் சேர்ந்து காட்டில் இலைகள் சேகரிப்பதற்கான சென்றார்.
அடர்ந்த காட்டிற்குள் இலைகள் சேகரித்துக் கொண்டிருக்கும்போது திடீரென 6 கரடிகள் அடங்கிய கூட்டம் அவர்களை சுற்றிக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடன் நின்றனர்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கரடிகளில் ஒன்று மால்டே சோரன் மீது பாய்ந்து கடுமையான தாக்கியது. கரடிகள் சுற்றி நிற்க, ஒரு கரடி தனது கணவனை கடுமையாக தாக்கிய நிலையில் லிலி சோரன் அஞ்சி ஓடவில்லை. தனது கையில் வைத்திருந்து கோடரி போன்ற ஆயுதத்தால் துணிச்சலாக தாக்கினார். இதனால் கரடி பயந்து மால்டே சோரனை விட்டுவிட்டு ஓடியது.
பலத்த காயம் அடைந்த மால்டே சோரன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கேர்க்கப்பட்டது. பின்னர் உயர்சிகிச்சைக்கான கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஒடிசாவில் யானைக் கூட்டம் கிராம மக்களை மிதித்து கொலை செய்ய நிலையில், தற்போது கரடிக்கூட்டம் மக்களை தாக்க தொடங்கியுள்ளது.











