என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
    • மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

    கொழும்பு:

    நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

    பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    2021ஆம் ஆண்டிற்கான அதிகரிக்கப்பட்ட செலவீனமான 2,796.4 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 929.4 பில்லியன் ரூபாய் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அனுமதி கோரப்படுகிறது. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு 3,200 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட்டில் இந்த கடன் வரம்பில் 892 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.

    தினசரி மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இடைக்கால பட்ஜெட்டானது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் முடிந்தவரை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறி உள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது இனி நடக்காது என எடப்பாடி தரப்பு வாதம்
    • நாளை எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவு

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

    அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடும்போது, யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார் என்றும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும் குறிப்பிட்டார். தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பயன் அடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயன் அடையும் வகையில் அல்ல என்றும் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வரமாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும். அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.

    கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டி வரும். எனவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.

    பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். "மாவட்ட செயலாளர்கள் தான் ஒற்றை தலைமை கோரியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது, அதனால் தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார் கட்சி துவங்கிய போது 1972-ல் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாது என விதி உள்ளது. 2017ல் இரு பதவிகள் உருவாக்கப்பட்ட போது, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது' என ஓபிஎஸ் வக்கீல்கள் தெரிவித்தனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும், எழுத்துப் பூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்யும்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் இரங்கல்.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள கலம்பெல்லா என்கிற கிராமம் அருகே இன்று அதிகாலையில் டெம்போ ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் ரெய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளர்கள் என்றும், இவர்கள் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து நெஞ்சை உருக்குகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பிரதமர் நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000ம் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஐிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசார இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர்.

    டெல்லி தமிழ் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஐிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பிறகு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

    திருக்குறளில் பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது.

    ஆதி பகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பைவிடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசார இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர்.

    இந்தியா, கலாசாரம் நிறைந்த பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது.
    • நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி. இன்றைய தொழிலாளி , நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்கள்.

    திருப்பூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அரசு, கட்சி விழாக்களில் பங்கேற்று வருகிறார். இதில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

    திருப்பூரில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் வரவேற்றார்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அதன்டி தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், ரூ.100 கோடி மதிப்பில் பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், ரூ.15.34 கோடி மதிப்பிலான திருப்பூர் நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    மேலும் கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22கோடி மதிப்பில் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டிடப்பணி, ரூ.18.13 கோடி மதிப்பில் கோவை சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை கட்டிடப்பணி ( கொசிமா), ரூ. 24.55 கோடி மதிப்பில் அரியாகவுண்டன்பட்டி வெள்ளி கொலுசு பொது வசதி மையம் கட்டிடப்பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    விடுதலை போராட்ட காலத்திலும் , திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடமான திருப்பூரை தி.மு.க. ஆட்சியில் தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். இப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்கள். அப்போதே திருப்பூரை தனிமாவட்டமாக கருணாநிதி அறிவித்தார்.

    திருப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது பின்னலாடைதான். அந்த அளவுக்கு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநில மக்களுக்கும் திருப்பூருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

    தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி. இன்றைய தொழிலாளி , நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்கள்.

    திருப்பூரின் மொத்த பின்னலாடை உற்பத்தி ஏறத்தாழ 60,000 கோடி ரூபாய். இதில் 50 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாவார்கள். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வு செழிக்கிறது. பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் ஊக்கமடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது.

    அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய பங்காற்றுகிறது. தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற முழக்கத்தோடு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். இத்தகைய தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம்.

    அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று நினைக்கும் தமிழக அரசானது தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இத்தகைய முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது. கடந்த 15 மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதன் மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்த்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 1300 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களும் அடங்கும்.

    இன்றைய நாள் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன்களை எளிதாகப் பெறலாம். இணையத் தளம் மூலம் இத்திட்டம் இயங்கும். முதல் கட்டமாக ஆறு வங்கிகளை இணைப்போம். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2092 நிறுவனங்களுக்கு 2113 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 விழுக்காடு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கடன்தொகையை பொறுத்தமட்டில் 86 விழுக்காடு தொகை எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பெருங்குழுமங்களுக்கான பொது வசதி மையங்கள் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கோடு சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 75 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மாநில புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,இளைஞர்கள் படிப்பில் மட்டுமின்றி அறிவில், சிந்தையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 'நான்முதல்வன்' என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத் தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் ஒரு முக்கிய பொருளாதார முன்னேற்றத்திற்கான தொழிலாக விளங்குகிறது.

    தமிழகம் முழுவதும் கயிறு குழுமங்கள் உருவாக்கி கயிறு தொழிலை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோர்கள் மட்டுமல்லாமல் தென்னை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை இங்கு வெளியிடலாம் என நினைக்கிறேன். ஹோம் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் ஆண்டொன்றுக்கு 8000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4000 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த வகைப் பொருட்கள் தயாரிப்பை சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் சேர்த்து, எம்.எஸ்.எம்.இ., துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கிறேன். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்பெறும். இதன் மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக சிறு, குறு, நடுத்தர தொழில் செய்யும் வியாபாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட தொழில் திட்டங்கள், நிறைவேற்றப்பட உள்ள தொழில் திட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

    தொழில் முனைவோர்கள் பலர் பனியன் தொழில் உற்பத்திக்கு மூலப்பொருளான பஞ்சு,நூல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்றனர். இணைய வழி மூலமும் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

    முடிவில் தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு புறப்பட்டு சென்றார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மாலை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வந்தார். குமார் நகரில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின் இன்று காலை திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை 9.50 மணிக்கு குமார் நகரில் இருந்து காரில் திருமுருகன்பூண்டிக்கு புறப்பட்டார்.

    வழியில் 60 அடி ரோடு ,எஸ்.ஏ.பி.தியேட்டர் பெரியார்காலனி, அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர் நால்ரோடு ஆகிய இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் குமார்நகரில் இருந்து திருமுருகன்பூண்டி வரை சுமார் 10 கி.மீ., தூரம் வழிநெடுகிலும் கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். இதனால் பொதுமக்கள் வெள்ளத்தில் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனம் தவழ்ந்து சென்றது.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் பயணித்த சாலைகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது.
    • விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும்.

    கத்தார்:

    இந்தியாவில் இருந்து துபாய்க்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் சுற்றுலா செல்வதற்கும் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    அபுதாபி, கத்தார், ஏமன், சார்ஜா ஆகிய பகுதிளில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

    இதையடுத்து துபாய் நாட்டில் இருந்து அதிக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அமிர்தசரஸ், திருச்சி, கோவை , கண்ணூர், கோவா, புவனேசுவர், கவுகாத்தி, புனே ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகிறது.

    இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது.

    2014-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் உள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்று உள்ளது. சரக்கு விமான போக்குவரத்து மூலம் 2 நாடுகளுக்கும் நல்ல லாபமும் கிடைத்து வருகிறது.

    இதனால் இந்தியாவுக்கு மேலும் விமான சேவை தொடங்க துபாய் ஆர்வமாக உள்ளது. வாரம்தோறும் 50 ஆயிரம் விமான இருக்கைகளை அதிகரிக்கவும் உள்ளோம். விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும்.

    இரு நாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது தொடர்பாக முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மேம்பாலத்தில் காரிலேயே மோடி சுமார் 20 நிமிடம் காத்திருந்தார்.
    • பெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி., சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய தவறி விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மேம்பாலத்தில் காரிலேயே மோடி சுமார் 20 நிமிடம் காத்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிப்பட்டது. இதையடுத்து பிரதமர் பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

    இந்த குழு விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் பெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி., சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய தவறி விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிபதி இந்து மல்கோத்ரா குழுவின் அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கை க்கு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடசென்னையை பொருத்தவரை காற்று மாசு அதிகமாக உள்ளது.
    • வட சென்னை பகுதிகளில் இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து காற்று மாசுவை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி நச்சு வாயு கசிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகள் உள்பட வட சென்னையில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த 3 பகுதிகளிலும் நச்சு வாயுவை வெளிப்படுத்தும் 24 நிறுவனங்களில் இருந்து அடிக்கடி நச்சு வாயு கசிகிறது. இந்த நச்சு வாயு காற்றில் கலப்பதால் காற்றும் நச்சாகிறது. இதை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி கியாஸ் கசிவு ஏற்பட்டது போன்ற உணர்வு தென்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் இதை பெண்கள் உணர்ந்தனர்.

    நள்ளிரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்யும் நேரங்களிலும், அதிகாலையில் பனி தோன்றும் நேரத்திலும் இந்த வாடை வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    விசாரணையில் இந்த வாயு கசிவு தொழிற்சாலைகளில் இருந்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த வாயு கசிவால் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு மயக்கம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மணலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது எண்ணெய் நிறுவனத்தில் சல்பர் ஆக்சைடு அளவுக்கு அதிகமாக சேர்த்ததால் நச்சு வாயு வெளியேறி காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த நிறுவனத்தில் சல்பர் ஆக்சைடு குறைவாக சேர்க்கப்பட்டது. அதன்பிறகு 2 வாரம் வரை அதே பாதிப்பு இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பாதிப்பு குறைந்தது.

    ஆனாலும் மற்ற நிறுவனங்களில் இருந்தும் அவ்வப்போது அம்மோனியா உள்ளிட்ட வாயு வெளியேறி வருகிறது. அங்குள்ள உரத்தொழிற்சாலையில் இருந்தும் அவ்வப்போது நச்சுவாயு கசிகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் மழை பெய்ததால் இந்த நச்சு வாயு காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

    பெரும்பாலும் வட சென்னை பகுதிகளில் இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து காற்று மாசுவை ஏற்படுத்தி உள்ளது. மழை, பனி நேரங்களின்போது அதை பொதுமக்கள் உணருகிறார்கள். இதனால் சுவாச பிரச்சினைகள் தவிர கை மற்றும் உடலில் தோல் அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    வடசென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதால் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியர் டாக்டர் வினோத்குமார் கூறியதாவது:-

    வடசென்னையை பொருத்தவரை காற்று மாசு அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகளால் காற்று மாசு ஏற்படுவது ஒரு புறம் இருக்க கட்டிட பணிகள், பழைய கட்டிடங்களை இடித்தல், வாகன பெருக்கம் காரணமாக ஏற்படும் புகை ஆகியவற்றின் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்றுக்கு முன்பு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினை, நுரையீரல் பாதுகாப்பு காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அது தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரோனா தொற்றுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, சுவாச பிரச்சினை, மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக தினமும் 30 பேர் முதல் 40 பேர் வரை வருவார்கள். ஆனால் தற்போது தினமும் 150 பேர் வருகிறார்கள்.

    கொரோனா தொற்றால் முழு அடைப்பின்போது பெரும்பாலான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவிட்டது.

    ஆனால் சில மாதங்களாக அனைவருமே வெளியே வரத்தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசு காரணமாக அவர்கள் சுவாச பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

    நுரையீரல் பாதிப்பு காரணமாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன தொழில் நுட்ப கருவிகள் உள்ளன. இதன்மூலம் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்.
    • நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.

    பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

    சலுகை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்கக்கூடாது. உயர்ந்த இடத்தில் உள்ள நீதிபதிகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடக்கூடாது. அது சிக்கலை ஏற்படுத்தும். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து மக்கள் கருத்து கேட்பதற்கு முன்பாக முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
    • முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இவரது பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்ட பிரேத பரிசோதனை 14.7.2022 அன்று செய்யப்பட்டது

    இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தனி மருத்துவக் குழு ஒன்றை அமைத்தும் அதில் தடவியல் நிபுணர் ஒருவரையும் அமைத்தும் 19.7.2022 அன்று மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவில் தங்கள் தரப்பில் மருத்துவர் அமைக்கவில்லை எனவும் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது.

    ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது 2 பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் 2 பிரேத பரிசோதனைகளையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை புதுச்சேரி மருத்துவ குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என என உத்தரவிட்டது.

    அதன்படி நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் ஆய்வு அறிக்கை முடிவுகளை தாக்கல் செய்தது. இந்த ஆய்வு அறிக்கைகளை ஸ்ரீமதியின் பெற்றோர் வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் வக்கீல் காசி விசுவநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் 14-ந் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கும், 19-ந் தேதி அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவுகளில் சொல்லாத ஒரு சில தடயங்களை 2-வது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் 2-வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×