என் மலர்
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதில், ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்தார்.
டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் விவரம்:
லசித் மலிங்கா (இலங்கை)
டிம் சௌதி (நியூசிலாந்து)
பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
ரொமாரியோ ஷெப்பர்ட் (வெஸ்ட் இண்டீஸ்)
- பீகாரின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை எம்.பி.யாக பப்பு யாதவ் உள்ளார்.
- பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புதுடெல்லி:
பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சன், பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை மக்களவை உறுப்பினராக உள்ளார்.
பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். 1995-ம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நிலத்தகராறு வழக்கு தொடர்பாக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பப்பு யாதவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.
இந்நிலையில், பப்பு யாதவ் கைதுக்கு காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்..
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாட்னாவில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவி மர்மமான முறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும், இந்த ஆட்சியில் உள்ள ஆழமான சீரழிவை வெளிப்படுத்தியது. அந்த மகளுக்கு நீதி கோரி குரல் கொடுத்த பப்பு யாதவ் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது ஒரு அரசியல் பழிவாங்கல் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.
- ரஷியாவில் இந்தியர் உள்பட 8 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகினர்.
- இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்கோ:
ரஷியாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த மாணவர்கள் மீது திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். மேலும் தனது உடலையும் கத்தியால் கிழித்துக் கொண்டார்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசாரையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீசார், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இருநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
- மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் நிதின் நபின் கலந்துகொண்டார்.
திருவனந்தபுரம்:
பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் நபின் பேசியதாவது:
இந்த ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். மாநில மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.
கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு நிறைய செய்துள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாநிலத்திற்கு வழங்கப்படும் மானிய உதவிகளை இரட்டிப்பாக்குதல் ஆகியவை அடங்கும்.
மத்திய அரசு ஒருபோதும் மாநிலத்தின் மீது கஞ்சத்தனமான அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் அதைக் குறிக்கின்றன என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
மும்பை:
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.
அமெரிக்காவின் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சஞ்சய்கிருஷ்ணமூர்த்தி 37 ரன்னும், மிலிந்த் குமார் 34 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஷுபம் ரஞ்சனே 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. .
- மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.
இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.
அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.
இந்திய விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்த்தக அமைச்சர் தற்காத்துப் பேசுவது, மிகத் தந்திரமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.
முதலாவதாக, இந்த அறிக்கையில் "கூடுதல் பொருட்கள்" என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை எவை என்று விளக்கப்படவில்லை.இது மிகவும் வெளிப்படைத்தன்மை இன்றி, ஏதோ ஒன்று மறைக்கப்படுவதையே இது காட்டுகிறது.
இரண்டாவதாக,மெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops) மற்றும் பால் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று இதற்குப் பொருள் கொள்ளாமல் வேறு எப்படிப் புரிந்துகொள்வது?
மூன்றாவதாக, அமெரிக்காவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் DDGS (Distillers Dried Grains with Solubles) இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது.
ஆனால், இந்த DDGS என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.
நான்காவதாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சோயாபீன் விவசாயிகள், இந்த DDGS மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகி சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார் சாய் தன்ஷிகா. அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாதா கபீர் துஹான் சிங்குடன் தன்ஷிகாவுக்கு நேரடி மோதல் உருவாகிறது.
மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணன் ஷாயாஜி ஷிண்டேவின் அரசியல் ஆதரவுடன் வில்லன் கபீர் சிங் அராஜகம் செய்து வருகிறார்.
இறுதியில் கபீர் சிங் செய்யும் அராஜகங்களுக்கு தன்ஷிகா எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக யோகிடாவை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கவுதம் கிருஷ்ணா. ஆனால், கதையும் திரைக்கதையும் புதுமை இல்லாத வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிக்கிறது. தாதா வில்லன், அரசியல் ஆதரவு, நேர்மையான அதிகாரிக்கு எதிரான சதிகள் என ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்களே அதிகம் இடம்பெறுகின்றன. வில்லன் கபீர் சிங், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பல கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்த்த அளவு அழுத்தமான காட்சிகள் அமையவில்லை.
பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மாலைமலர் ரேட்டிங்: 2 / 5
- ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தது.
- விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரியானா மாநிலம் பரிதாபாத், சூரஜ்குண்ட்-இல் பொருட்காட்சி மேளா நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மேளாவில் ராட்சத ராட்டினம் திடீரென நடுப்பகுதியில் உடைந்து விழுந்தது. ராட்டினம் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
அவர் ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தால் படுகாயமடைந்துய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேளாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்
- அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்
- தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 6 ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும் திலக் வர்மா 25 ரன்னிலும் அவுட்டாக துபே முதல் பந்தில் டக் அவுட்டானார்.
அடுத்ததாக இறங்கிய ரிங்கு சிங் 6 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும் அக்சர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.









