என் மலர்tooltip icon
    • முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இதில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    மார்க்ரம், சான்ட்னர் ஆகியோரின் பங்களிப்பால் அவர்களது அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

    எனவே, இன்றைய போட்டி இரு அணிகளின் கேப்டன்கள் இடையில் நடக்கும் உக்கிரப் போராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2015ல் உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளின்போது நடந்த அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவும், நியூசிலாந்தும் மோதின. அந்தப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை நியூசிலாந்து அணி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

    சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழும் மார்க்ரம் நடப்பு தொடரில் 268 ரன்கள் குவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணியில், குவின்டன் டி காக், டெவால்ட் புரூவிஸ், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக உள்ளனர்.

    சிறந்த ஆல் ரவுண்டரான சான்ட்னரின் பந்துவீச்சு எகானமி ரேட் 6.35 ஆக உள்ளது. தனது அற்புத பந்துவீச்சால், எதிரணி பேட்டர்களை திணற அடிப்பவராக சான்ட்னர் திகழ்வது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

    தென் ஆப்ரிக்கா அணியில் குவின்டன் டி காக், டெவால்ட் புரூவிஸ், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக உள்ளனர்.

    நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கொன்சி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களை கொண்ட நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என எதிர்பார்க்கலாம்.

    இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற மல்லுகட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்தது.
    • வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்

    மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

    ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதலைத் தொடர்ந்தது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்துவருகின்றன.

    இந்நிலையில், ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளது என ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. போரில் இதுவரை 130க்கு மேற்பட்ட நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின எனவும் தெரிவித்துள்ளது.

    • மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் பல நாடுகள் தங்கல் வான்வழிப் பாதைகளை மூடின.
    • இதனால் வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமானநிலையங்களில் சிக்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

    இதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 80 சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகின.

    மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கின. டெல்லியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

    மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த 3 நாளில் இந்திய நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ரத்துசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
    • QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி.

    த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு உட்கோட்டம், செங்கிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் பகல் 11.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.

    காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    1. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    2. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

    3. குறிப்பாக பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

    4. பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.

    5. காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    6. நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனி நபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.

    7. QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    8. குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    9. அதேபோல், பங்கேற்பாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, 80% அளவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    10. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்தப் போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ரேணுகா, உள்நாட்டுப் போட்டிகளிலும், மகளிர் ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரேணுகா சிங் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பூஜா வஸ்த்ராகர் மற்றும் அறிமுக வீராங்கனை காஷ்வீ கௌதம் ஆகியோர் வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமெரிக்கா- ஈரான் மோதலால் வளைகுடா நாடுகளில் பயணிகள் தவிப்பு.
    • சிறப்பு விமானங்கள் மூலம் பயணிகள் இந்தியா திரும்பி வருகின்றனர்.

    மத்திய கிழக்கு பகுதி மோதல் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வர ஜெட்டா மற்றும் துபாய்க்கு இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.

    இன்று மும்பையில் இருந்து ஜெட்டா 350 இருக்கைள் கொண்ட போயிங் 777 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. 300 இருக்கைகள் கொண்ட போயில் 787-9 விமானம் டெல்லியில் இருந்து துபாய்க்கு இன்றிரவு புறப்பட்டுச் செல்லும். 250 இருக்கைகள் கொண்ட போயிங் 787-8 விமானம் மும்பையில் இரந்து துபாய்க்கு நாளை அதிகாலை புறப்பட்டுச் செல்லும்.

    நாளை இந்த விமானங்கள் மும்பை மற்றும் டெல்லி வந்தடையும். ஓமன், சவுதி அரேபியா, எகிப்து வான்வெளியாக செல்ல இருக்கிறது.

    • 2024-ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.
    • சுமார் 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.

    2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரும் மார்ச் 6 அல்லது 7-ஆம் தேதிகளில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, 2024-ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.

    அதன்படி தொடக்கப் போட்டியில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலான சுமார் 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.

    தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாம் கட்ட மற்றும் இறுதிப்போட்டிக்கான முழுமையான அட்டவணை இறுதி செய்யப்படும்.

    பாதுகாப்புப் பணிகளுக்காகப் பெருமளவிலான காவல்துறையினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளில் போட்டிகள் நடத்துவதைத் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    இதன் காரணமாகவே, முழு அட்டவணையை ஒரே நேரத்தில் வெளியிடாமல் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், டிக்கெட் விற்பனை மற்றும் அணிகளின் பயிற்சி முகாம்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • கவுரவ் கோகாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களோடு அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஏப்பரல் மாதம் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    அசாம் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 42 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்காத் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் தேபப்பிரதா சைகியா நஜிரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிபுன் போரா பார்சல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 2016-ம் ஆண்டு ஆட்சியை இழந்தது.

    • தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.

    கடந்த சனிக்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் மினாப் பள்ளியின் மீதான தாக்குதல்.

    தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளிமீது சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியது அமெரிக்கா மற்றும் ஈரான். இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    ஈரான்மீது கடந்த நான்கு நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் என இரண்டு நாடுகளும் தாக்குதலை தொடர்ந்தாலும், இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்ப இடத்தில் இருந்து சிலர் பேசிய வீடியோக்களும், ரத்தக் கறைகளுடன் உள்ள பள்ளிப்பை புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.


    இறந்த குழந்தைகளின் சடலங்கள் 

    இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது. அமெரிக்கத் தரப்பில் அமெரிக்கா பள்ளிகளை குறிவைக்காது, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை புதைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது. இது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்,

    "அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள். அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன

    மிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த 'மீட்பு' (rescue) என்பது நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறது. காசா முதல் மீனாப் (Minab) வரை, அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • ஈரானில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.
    • தெஹ்ரானில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவதால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர தெஹ்ரானில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    தெஹ்ரானில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை இந்திய தூதரகம் தெஹ்ரானில் இருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

    அவர்களுக்கு போக்குவரத்து, உணவு தங்கும் வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது. மிகவும் குறைந்த அளவிலான மாணவர்களே மட்டுமே தூதரக வாய்ப்பை பயன்பெற முடியாமல் உள்ளனர் என்று தெரிவித்தள்ளது.

    ஈரானில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவித்த பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்னர். ஜன்னல் அருகே இருப்பதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்தியர்கள் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் புதிதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரானில் சுமார் 9 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

    ×