என் மலர்tooltip icon
    • குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்தனர்.
    • உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்.

    2024 ஆம் ஆண்டு கார் ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிஜேந்திர குமார் இன்று தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்தீப் மற்றும் பிந்து சவுகான் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தவுடன், குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்து நீதிமன்ற அறையிலேயே நீதிபதியை மிரட்டனர்.

    "உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்" என்று அவர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.

    குற்றவாளிகளின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சங்க்ராம் சிங் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றதிலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.   

    நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசை படத்திற்கு கச்சிதம்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது.

    ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே வந்து பார்த்துவிட்டு செல்கிறது.

    அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளதாக மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ராதிகா படத்தில் தாய் கிழவியாகவே வாழ்ந்திருக்கிறார். ஊரில் கடன் வாங்கியவர்களிடம் வட்டியை மிரட்டி வசூல் செய்யும் காட்சிகளிலும், அவருக்கான கதாப்பாத்திர காட்சிகளிலும் மிரள வைத்திருக்கிறார்.

    ராதிகா மட்டுமில்லை பால சரவணன், அருள் தாஸ், சிங்கம்புலி இவர்களுடைய மகள்கள் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அசர வைத்துள்ளனர். கமல் ரசிகராக வரும் சிங்கம்புலி, அவர் போடும் பாடல்கள், இடைவேளை, கிளைமேக்ஸ் எல்லாம் சரவெடி.

    இயக்கம்

    தாய் கிழவி மூலம் பெண்ணியம், சம உரிமை என்று நமக்கு மிரட்டலான பாடம் எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் கதைக்கரு முதல் கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை சரியான தேர்வு. படத்திற்கு கூடுதல் பலம்.

    பெண்கள் சும்மா இல்லாமல் எதாவது வேலை செய்ய வேண்டும்.. அது தான் உண்மையான சுதந்திரன் போன்ற வசனங்கள் அதிரவைத்துள்ளது. படம் முழுவதும் நகைச்சுவை, எமோஷ்னல் என அறிமுக படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் இயக்குனர்.

    மொத்தத்தில், குடும்பங்கள் கொண்டாடும் படம் இந்த தாய் கிழவி.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் அப்படியே அந்த ஊர் மக்கள், இடம் , கலாச்சரம் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார்.

    இசை

    நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசை படத்திற்கு கச்சிதம்.

    ரேட்டிங்-4/5

    • தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் பீதியடைந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்
    • சிக்கிம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாக்காவிலிருந்து 188 கி.மீ தொலைவில், 9.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த மின்விசிறிகள், சோபாக்கள் ஆடியதாகவும், மேஜையில் இருந்த பாட்டில்கள் கீழே விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

    கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகம், சட்டமன்றம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிலநடுக்கத்தால் பீதியடைந்தனர். அச்சத்தில் அவர்கள் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

    மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    முன்னதாக மதியம் 12:02 மணியளவில் சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி பகுதியிலும் ரிக்டர் அளவில் 2.7 கொண்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான உயிரிழப்புகளோ அல்லது கட்டிட சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.  

    • பிரான்ஸ் போர்க்கப்பல் பயிற்சிக்காக சுவீடன் சென்றுள்ளது.
    • திடீரென டிரோன் தென்பட்டதால், அதை இடைமறித்து தாக்குதல் நடத்த ராணுவம் தயாரானது.

    உக்ரைன்- ரஷியா இடையே 4 வருடங்களை கடந்து சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சில சமயம் ரஷியாவின் அண்டை நாடுகளின் வான் பகுதிகளிலும் ரஷியாவின் டிரோன்கள் பறப்பதாக நேட்டோ உறுப்பினர் நாடுகளான டென்மார்க் போன்றவை குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் சுவீடன் நாட்டில் உள்ள மல்மோ துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேட்டோ நாடுகளின் பயிற்சிக்காக பிரான்ஸ் போர்க்கப்பல் வந்துள்ளது.

    டென்மார்க்கில் இருந்து சுவீடனை பிரிக்கும் ஒரேசுந்த் ஜலசந்தியில் சுவீடன் ராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது டிரோன் ஒன்று வருவதை கண்டறிந்தனர். உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்துவதற்கு சுவீடன் ராணுவம் தயாரானது. அதற்குள் அந்த டிரோன் மாயமானது. ஒருவேளை ரஷியா இந்த டிரோனை ஏவியிருக்கலாம் என சுவீடன் ராணுவம் சந்தேகிக்கிறது.

    பால்டிக் கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் உள்ளது. அதில் இருந்து டிரோன் ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் சுவீடன், டென்மார்க் உடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு உக்ரைன் மீது ரஷியா நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்ன வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை முதல் 5-ந்தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதற்கிடையே நாளை முதல் 1-ந்தேதி வரை தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய நெருங்கிய அண்டை நாடுகள்.
    • தற்போதைய மோதல் போக்கு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் போர் அண்டை நாடான தங்களுக்கு கவலை அளிக்கிறது என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாயோ நிங் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய நெருங்கிய அண்டை நாடுகள். மற்றும் சீனாவின் அண்டை நாடுகள். அண்டை நாடுகள் மற்றும் நண்பர்கள். தற்போதைய மோதல் போக்கு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மிகுந்த கவலை அளிக்கிறது.

    பயங்கரவாதத்திற்கு எதிராக சீனா எப்போதும் ஆதரவு அளிக்கிறது. இரண்டு நாடுகளும் அமைதியையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்களுடைய வேறுபாடு மற்றும் மோதல்களை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேதங்களை தவிர்க்க போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு மயோ நிங் தெரிவித்துள்ளார்.

    • படத்தை நெல்சன் இயக்குகிறார்.
    • ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக 'KH x RK Reunion' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்திற்கு அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இன்பநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படத்தின் புரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது. ஆனால் ரசிகர்கள் பலருக்கும் இருக்கும் கேள்வி படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன்? என்பதுதான். புரோமோவில் கூட கமலும் இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். இந்நிலையில் இருவருமே வில்லன் இல்லை எனவும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டிதான் இப்படத்தின் வில்லன் எனவும் தற்போது தகவல் வெளியாகிவருகிறது.  ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

    ரஜினி தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2' மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

    தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    • தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கருத்து.
    • வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

    டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கூறியதாவது:-

    உண்மை வென்றுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர்.
    • கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தன்யா பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் மோகித் ( வயது 20) மற்றும் பிரதீப் (24). இவர்கள் டாக்சி டிரைவர்கள்.

    பக்கத்து வீட்டினர் என்பதால் சிறுமி அவர்களிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று சிறுமி அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மோகித், பிரதீப் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர். ஹால்ட்வானியின் கத்கோடம் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் சென்றபோது சிறுமியை அவர்கள் கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். பின்னர் காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதனிடையே கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பின்னர் அவர்கள் கத்கோடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது கத்கோடம் சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தனர்.

    உள்ளே சிறுமி அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி டாக்சி டிரைவர்கள் மோகித், பிரதீப் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×