என் மலர்
- நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
- அந்த அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் சரிவர ஜொலிக்கவில்லை.
மெல்போர்ன்:
நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் சரிவர ஜொலிக்கவில்லை.
வருங்காலத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவது பற்றியும், அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என பலரிடமும் சந்தேகம் காணப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்ற நிலைப்பாட்டில் மேக்ஸ்வெல் உறுதியுடன் உள்ளார். இதுதொடர்பாக மேக்ஸ்வெல் கூறியதாவது:
அடுத்த 12 மாதத்தில் குறைவான அளவிலேயே டி20 போட்டிகள் உள்ளன. வருங்காலம் பற்றி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. தற்போது எந்த முடிவையும் அறிவிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து விளையாடுவது பற்றி முடிவு செய்யும் முன், என்னுடைய உடல்தகுதி மற்றும் விளையாட்டு திறன் எப்படி உள்ளது என தன்னாய்வு செய்யவேண்டும். வருங்காலத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது பற்றி யோசிக்க வேண்டும்.
2028 டி20 உலக கோப்பை தொடர், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளும் வரவுள்ளன. அந்தப் போட்டிகளில் விளையாட நான் தகுதியுடனும், அதிரடியாக விளையாடும் திறமையுடனும் இருக்கிறேன் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்தார்.
- தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போபால்:
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தேவி அகல்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விமான நிலைய வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பகுதியில் காய்ந்த புற்களில் திடீரென தீ பற்றியது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- கர்தவ்ய த்வார் என தெற்கு ரெயில்வே இந்தியில் பெயர் வைத்தது.
- பல்வேறு அரசியல் கட்சிகள் தெற்கு ரெயில்வேக்கு கண்டனம் தெரிவித்தன.
சென்னை:
புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என தெற்கு ரெயில்வே இந்தியில் பெயர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
"கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் "கடமையின் நுழைவுவாயில்" என பொருள். தெற்கு ரெயில்வேவின் இந்தச் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து திருச்சி மண்டல ரெயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழில் எழுதப்பட்ட இந்திப் பெயர் அகற்றப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், அகற்றப்பட்டது இந்தி எழுத்து மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்.
டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு என்றுமே Out of Control தான் என பதிவிட்டுள்ளார்.
- நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து வென்றது.
- பின் ஆலன் 33 பந்தில் 8 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 100 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. யான்சென் அதிரடியாக ஆடி 30 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 55 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து வென்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. பின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் பின் ஆலன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2016-ம் ஆண்டில் கிறிஸ் கெயில் 47 பந்தில் சதமடித்து இருந்தார்.
மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் சதமடித்தோர் பட்டியலில் பின் ஆலன் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு முன் நமீபியாவின் ஜான் நிகோல் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோர் 33 பந்துகளில் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது.
யான்சென் அதிரடியாக ஆடி 30 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 55 ரன்கள் குவித்தார். பிரேவிஸ் 34 ரன்னும், ஸ்டப்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்ரி , மெக்கன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு பின் ஆலன்டிம் சைபர்ட் ஜோடி 117 ரன்கள் சேர்த்த நிலையில் டிம் சைபர்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- மார்.12 நெட்ஃபிளிக்ஸில் படம் வெளியாகிறது.
- சமீபத்தில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் Made in Korea. இப்படத்தை ஆர்.ஏ. கார்த்திக் இயக்கியுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுவயது முதல் கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தென்கொரியா செல்கிறார்.
அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அங்கு கிடைக்கும் நட்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு ஃபீல்குட் மூவியாக உருவாகி உள்ளது படம்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. மார்ச் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
- லீடர் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
- இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது..
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் நாளை காலை 10:40 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திமுக தரப்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுத்து நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தரப்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு சீட்டுகளை கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கும், காங்கிஸுற்கும் ஒதுக்கியுள்ளது திமுக.
- ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
- யூடியூபர் ஹர்ஷத்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் Aura 10/10 வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.
- ஸ்டப்ஸ்- யான்சன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.
- யான்சன் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 7 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெக்கோன்சி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக் 3-வது பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ரிக்கெல்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 1.5 ஓவரில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தென்ஆப்பிரிக்கா பவர் பிளேயான முதல் 6 ஓவரில 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்தது.
அதன்பின் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மார்க்கிராம் (18), டேவிட் மில்லர் (6) ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தனர். பிரேவிஸ் (34) நீஷம் பந்தில் ஆட்டமிழந்தார்.
தென்ஆப்பிரிக்கா அணி 77 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. யான்சன் அதிரடியாக விளையாடி ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார்.
பின்னர் ஸ்டப்ஸ் அதிரடியை தொடங்கினார். 18-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கும், 3-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். யான்சன் 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் கிடைத்தன. தென்ஆப்பிரிக்கா 18 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது.
19-வது ஓவரை பெர்குசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டப்ஸ் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 24 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ்- யான்சன் ஜோடி 73 ரன்கள் குவித்தது. 19-வது ஓவரில் யான்சன் இரண்டு சிக்சர்கள் அடுத்தடுத்து பறக்கவிட்டு 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.
கடைசி ஓவரை ஹென்றி வீசினார். 3-வது பந்தில் போஸ் க்ளீன் போல்டானார். அடுத்த பந்தில் ரபடா ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. யான்சன் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்றி, மெக்கோன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.










