என் மலர்
- பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான்
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. துரை வைகோவிடம் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த துரை வைகோ, "பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான். நான் இந்து பக்தன் தான். எல்லா கோவிலுக்கும் போவேன். அதேநேரத்தில் தந்தை பெரியார் இல்லாமல் சமூகநீதி கிடையாது. சமூக வளர்ச்சி கிடையாது. குறிப்பாக பெண்கள் படிக்கலாம், வேலை செல்லலாம் என்று சம உரிமை கொடுத்தது பெரியார் தான்.
நம்முடைய இளைஞர்களுக்கு ஆங்கிலப்புலமை இருப்பதற்கு இருமொழி கொள்கை தான் காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான். நமக்காக பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்" என்று தெரிவித்தார்.
- மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்.
- மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 படகுகளில் சென்ற 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி கலந்துக் கொண்டார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய மகிழ் திருமேனி, "உங்கள பத்தி பேசாம போக முடியாது. பத்ம பூஷன் விருது பெற்றிருக்கும் அஜித் சாருக்கு வாழ்த்துகள். அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி விடா முயற்சி வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக உருவாகி இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய பிரித்விராஜ், "சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த டிரெய்லர்களுள் ஒன்று 'விடாமுயற்சி' டிரெய்லர். அந்த படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுவன் சகிப் உதீன் கடந்த 12ம் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டான்.
- சிறுவனை மீட்ட ரெயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்களையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டுள்ளான்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் சகிப் உதீன் கடந்த 12ம் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டான்.
சிசிடிவி காட்சிகள் மூலம் சகிப் உதீனை 5 பெண்கள் வடமாநிலம் செல்லும் ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
சிறுவன் சகிப் உதீன் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரெயில் நிலையம் அருகே இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று மீட்டனர்.
மேலும், சிறுவனை மீட்ட ரெயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்களையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
- சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
- சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறியாமல் அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் இபிஎஸ் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
அப்போது, மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும் இ.பி.எஸ்-ம் மென்று கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பாவோஸில் தமிழ்நாட்டு பிரதிநிதகள் மேற்கொண்ட தொழில் முயற்சிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பட்டியலிட்டார்.
அப்போது அவர், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு குறித்து சிங்கப்பூர் துணை பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம்.
மருத்துவ தொழில்நுட்பம், மருந்து, உணவு ஏற்றுமதி பற்றி சிங்கப்பூர் துணை பிரதமருடன் விவாதித்து, சாதக பதிலை பெற்றுள்ளோம்.
உணவு ஏற்றுமதி, தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஐக்கிய அரபு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.
- வேங்கைவயல் வழக்கில் மறுவிசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
- சாதியத்தோடு நடந்தேறிய குற்றத்தை தனிநபர் விரோதமாக திசைத்திருப்ப முயற்சி.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், "வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா? திராவிட மாடலா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தமிழகக் காவல்துறையின் போக்கு ஏற்கவே முடியாத கொடும் அநீதியாகும். சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என வாய்கிழியப் பேசும் திமுக அரசின் சமூக நீதி இதுதானா? பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் எல்லா மக்களுக்குமான திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்! அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
ஆதித்தமிழ் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் நடந்தேறிய சாதிய வன்மம் கொண்ட இக்குற்றச்செயலினை முற்றிலுமாக மடைமாற்றி, தனிநபர் நோக்கம் கொண்ட மோதல்போல சித்தரித்து, அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய தம்பிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும்.
ஏற்கனவே, குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதில் உடல்நலக்கேடும், மன அழுத்தத் தாக்குதல்களுக்கும் ஆளான வேங்கைவயல் மக்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வெட்கக்கேடானது.
முரளிராஜா எனும் ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த தம்பி, நீரின் தன்மை சீரழிந்தது குறித்து ஆராய்கையில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டதனைக் கண்டறிந்து புகார் அளித்தவராவார். மனிதக்கழிவு கலந்த நீரினை உட்கொண்டுப் பாதிக்கப்பட்ட அவரையே இறுதியில் குற்றவாளியாக மாநிலப்புலனாய்வுத்துறை வழக்கில் சேர்த்திருப்பது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குறியாக்குகிறது. மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி, மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கக்கூடிய இவ்வழக்கிலேயே புகார் அளித்த மக்கள் மீது காவல்துறை குற்றம் சுமத்தி இருக்கிறதென்றால், இனி எந்த வன்கொடுமைக்கு புகார் அளிக்க உழைக்கும் மக்கள் முன்வருவார்கள்? வேங்கைவயலில் நிலவும் சாதியச் சிக்கலினை மூடி மறைத்து, தனிநபர் பழிவாங்கல் போக்கலினால் இக்கொடுமை நடந்திருப்பதாக முடிவெழுதுவதுதான் பெரியார் வழியிலான ஆட்சியா பெருமக்களே? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அம்மக்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் ஸ்டாலின் முன்வராததுதான் விளிம்பு நிலை மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையா?
சாதியத்தோடு இக்குற்றம் நடந்தேறி இருப்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், அதனைத் தனிநபர் விரோதத்தினால் விளைந்தது என திசைதிருப்ப முற்படுவது உண்மையானக் குற்றவாளிகளைத் தப்பவிடும் கொடுஞ்செயலாகும். இது குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததற்கு நிகரான வன்கொடுமையாகும். வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் அலைபேசி உரையாடல்களும், புகைப்படங்களும் வெளியே கசிய விட்டிருப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும். பாதிக்கப்பட்ட மக்களைக் குற்றப்படுத்த இந்த இழிவான செயலில் ஈடுபடுகிறதா காவல்துறையும், அதிகார வர்க்கமும்? எனும் ஐயம் எழுகிறது. வெளியே விடப்பட்ட ஒலிநாடாவை வைத்து வழக்கின் கோணத்தையே மாற்றி முடிவெழுத முற்படுவது மிக மோசமான அதிகார முறைகேடாகும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட ஆதிக்குடி மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இதனைத் தடுத்து, அடித்தட்டு மக்களைக் காக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சுமத்துவது வரும் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என்பது உறுதியாகும்.
ஆகவே, மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இவ்வழக்கில் சிறப்புக் கவனமெடுத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, மறுவிசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் நடித்துள்ளனர்.
- டிராகன் திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் வழித்துணையே பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'டிராகன்' படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய 'ஏன் டி விட்டு போன' என்ற பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உடன் சிலம்பரசன் ஜாலியாக பாடல் குறித்து உரையாடுகின்றனர்.
சிலம்பரசன் பாடிய இந்த பாடல் வருகிற 28 ஆம் தேதி வெளியாகும் என டிராகன் படக்குழு அறிவித்துள்ளது.
டிராகன் திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கும் என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
- பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஜதின் ராம்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
- டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பாக திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினர்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தான நிலையில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது.
டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திறகு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை.
மக்களின் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கும்போது இங்கேயே நிற்கலாம் போல உள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் தான்.
மக்களுக்கு விரோதமான செயல்களை மத்திய பாஜக அரசு செய்கிறது. தமிழக அரசின் அனுமதியின்றி ஏலம் நடத்த மத்திய அரசு இயற்றியது.
விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் டங்ஸ்டன் போராட்டம் 3 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அதிமுக பேசவில்லை. டங்ஸ்டன் திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தோம்.
டங்ஸ்டன் விவகாரத்தில் நமக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி. இதை நான் அரசியல் பிரச்சினையாக பார்க்கவில்லை, நமது பிரச்சினையாக பார்க்கிறேன்.
பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை.
டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் இன்று வெளியிட்டார். அதில் சசிகுமாரும் சைத்ராவும் பீடி பிடிக்கும் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.