என் மலர்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் : எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசேலம் நகர், சர்ச் சாலை, ரத்ன குமார் அவென்யூ, மருதம் குடியிருப்பு, ஏ.எஸ்.ராஜன் நகர், ஜிகே மூப்பனார் அவென்யூ, சிட்லபாக்கம் ஜோதி நகர், சிட்லபாக்கம் 1-வது மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, ரங்கநாதன் சாலை, கண்ணதாசன் தெரு மற்றும் அய்யாசாமி தெரு.
பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை குடியிருப்பு வாரியம், டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎச் நியூ காலணி 13-14, 17-வது குறுக்கு தெரு, மல்லிகா நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்கேவி அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் சாலை, பங்காரு நகர்.
தரமணி: அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் குடியிருப்பு (கிரியாஸ் அருகே), தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி, சாஸ்திரி நகர், பார்க் அவென்யூ.
- இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.
- மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
கணேஷ் பூஜாரி சங்கரநாராயணா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி ரேகா தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை தொடர்ந்து ஆர்வமாக மணிக்கணக்கில் பார்த்து வந்தார். இதனால் அவரை கணவர் சத்தம் போட்டார். ஆனால் ரேகா கேட்கவில்லை. தொடர்ந்து ரீல்களை பார்ந்து வந்தார்.
இது குறித்து தம்பதியினர் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணேஷ் பூஜாரி பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கோபமடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கணேஷ் பூஜாரி, ஒரு கத்தியை எடுத்து மனைவி ரேகாவின் கழுத்தில் குத்தி கொலை செய்தார். சம்பவம் நடந்த உடனேயே பூஜாரியை போலீசார் கைது செய்தனர்.
டிஜிட்டல் மோகம் ஒரு குடும்பத்தை இருண்ட பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பி.ஜி. பால்யா பகுதியை சேர்ந்தவர் குமார் (33).
இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இதனால் குமாரின் குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனால் குமாரின் மனைவி கண்டு கொள்ளவில்லை. மேலும் கணவர் தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்திய போதிலும், அவரது மனைவி தொடர்ந்து ரீல்களை உருவாக்கி பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
வாக்குவாதம் உச்சத்தை எட்டியதை தொடர்ந்து குமார் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களில் அதிகப்படியான ஈடுபாட்டை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
- விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
- "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
"புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அனைத்து வகையான மின்னணு தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகமான உதவியாளர் மூலம் மட்டுமே இராணுவத் தளபதிகளுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது.
காமேனி இன்னும் இந்த உலகில் இருக்க கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சில விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பின் உயர் தலைவர் பதவிக்கு மூன்று மூத்த மதத் தலைவர்களின் பெயர்களை காமேனி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அந்த பட்டியலில் அவரின் மகன் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்தது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, காமெனியின் சொந்த மகன், திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய நபராகக் கருதப்படும் மோஜ்தபாவும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம்...
- அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
சென்னை:
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
- இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது.
- தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. பா.ம.க. மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்கும் போராட கூடிய கட்சி. இதில், பின்னடைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இருவரிடையே சில விஷயங்கள் நடக்கிறது.
பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பா.ம.க. தன்னை தற்போது புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நான் உணர்கிறேன். அதற்குள் இருக்கும் நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும். மாற்று அரசியலை பா.ம.க. முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது
- அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டது.
ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் நேதன்யாகு நெகிழ்ந்தார்.
டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது" என்று கூறிய நேதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
"ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நேதன்யாகு சிலாகித்தார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை.
- இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை என்பதால் இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள். எத்தனை மாநாடு போட்டாலும் இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடிதான் போய் நிற்க வேண்டும் என்றார்.
- அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
- பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.
ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.
ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.
கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்" என்று கூறினார்.