என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா 2 பதக்கங்களை வென்றார்.
    • துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    ஆனால் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • தினத்தந்தி குழுமத்தினர் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
    • கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, அம்மாவின் அரசு 22.2.2021 அன்று, 9,613 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கியது.

    இதைத்தொடர்ந்து 5,237 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கான விதிகள் அமலுக்கு வந்ததால், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

    தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், அம்மா அரசால் கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங் களை நடத்தி தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர்.

    இன்றுவரை தங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படாத தால், தங்களது கோரிக்கையினை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 20ந்தேதி கொளத்தூரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது காவல்துறை அவர்களைக் கைது செய்தது.

    மேலும், போராடிய அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல்துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும், அரசு வேலை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல் லும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் தி.மு.க. அரசின் காவல்துறை,

    அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

    மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

    இந்தூர்:

    உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா களமிறங்குகிறார்.

    இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.
    • நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன.

    நெல்லை:

    இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, உலகத்தரத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    பயண தூரத்தை அதிவேகத்தில், கடப்பதால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

    நாடு முழுவதும் இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரெயிலான சென்னை-கோவை ரெயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிகள் கோரிக்கை வலுத்தது. அதன் அடிப்படையில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது. அதற்கு ஏற்ப பிட்லைன், தண்டவாளங்கள் பலப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 21-ந்தேதி இந்த ரெயில் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. பிறகு மறுமார்க்கமாக சென்னையில் இருந்து இரவு நெல்லைக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கத்தின் தொடக்க விழா இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ரெயிலை காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மதியம் இந்த வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயிலுடன் விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-ஐதராபாத் (கச்சிகுடா), காசர்கோடு-திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா), பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் (சபர்மதி) ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து வந்தே பாரத் ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பத்மநாபன் அனந்த், சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    முன்னதாக நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பிரதமர் பேசுகின்ற மன் கீ பாத் நிகழ்ச்சியை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியிலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர்.

    நெல்லை சந்திப்பில் இருந்து தற்போது ரெயில் புறப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை ரெயிலில் பயணம் செய்தார். இதேபோல மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சி வரை பயணம் செய்தார்.

    தொடர்ந்து இந்த ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று செல்கிறது. அந்தந்த ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் இந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இந்த ரெயிலில் வழக்கமான சேவையானது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வந்தே பாரத் ரெயில் பராமரிப்பு பணிக்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

    இந்த பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் இந்த ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.

    நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன. இந்த ரெயிலில் சாதாரண ஏ.சி. பெட்டிகளில் உணவுடன் சேர்த்து பயணிக்க ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டிகளில் ரூ.3,005 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளுக்கு காலையில் டீ, காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ரெயிலில் டீ, ஸ்நாக்ஸ், இரவு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உணவு தேவை இல்லை என்றால் டிக்கெட் எடுக்கும்போதே அதனை தவிர்க்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 652 கிலோமீட்டர் தூரத்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து 7 மணி நேரம் 50 நிமிடத்திற்குள் அடைந்துவிடும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்னகத்தில் அதிக வருவாயை அள்ளிக்கொடுக்கும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயிலில் 1 வி.ஐ.பி. பெட்டி மற்றும் 7 சாதாரண பெட்டிகள் உள்ளன.

    வி.ஜ.பி. பெட்டியில் 52 இருக்கைகள் உள்ளன. மற்ற பெட்டிகளில் தலா 76 இருக்கைகள் உள்ளன. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பெட்டிகளில் சார்ஜர் வசதி, சாப்பிட தேவையான வசதி, நவீன கழிப்பிட வசதி, வை-பை வசதி, சுழலும் இருக்கைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ரெயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளில் மற்ற ரெயில்களை விட கூடுதலாக சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி பெண்கள் தங்களது கை குழந்தைகளுடன் தனியாக பயணம் செய்யும் போது கழிப்பறைக்கு செல்லவேண்டி இருந்தால் குழந்தையை அங்கு கொண்டு சென்று உட்கார வைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 8 பெட்டிகளிலும் பாதுகாப்புக்காக தலா 2 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசல் பகுதியிலும் தலா 2 சி.சி.டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    முற்றிலும் சென்சார் மயமாக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வந்தால் மட்டுமே ரெயிலில் ஏற முடியும். மற்ற ரெயில்களை போல ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய முடியாது. அவ்வாறு படிக்கட்டில் நின்றால் ரெயில் அங்கிருந்து நகராத வகையில் இந்த ரெயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்ற பின்னர் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். அதன்பின்னரே ரெயில் புறப்பட முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் போர், தேசப்பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது
    • மாணவர்கள் துப்பாக்கிகளை கையாளுவதற்கு நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்

    கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள்.

    உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

    மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

    இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலகதரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது.
    • ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ரெயில்வே தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை சாதனை அளவாக ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.

    தமிழ்நாட்டு மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 18-ம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

    நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது. ரெய்டு பூச்சாண்டிகளுக்கு அ.தி.மு.க.வினர் பயப்பட மாட்டோம்.

    அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் மீண்டும் கூட்டணி தொடர்பாக கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமலையில் இயக்கப்பட்ட டீசல் பஸ்கள் நிறுத்தப்பட்டு மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
    • மின்சார பஸ் திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் திருமலையில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    டீசல் பஸ்களை இயக்குவதால் திருமலை மாசு அடைந்து வருவதை தடுக்க தேவஸ்தானம் சார்பில் மின்சார பஸ்கள் வழங்க தொழிலதிபர்கள் முன் வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து தொழிலதிபர்கள் ஒவ்வொரு பஸ்சும் ரூ.2 கோடி மதிப்பில் 10 மின்சார பஸ்களை தேவஸ்தானத்திற்கு வழங்கினார்.

    இதனால் ஏற்கனவே திருமலையில் இயக்கப்பட்ட டீசல் பஸ்கள் நிறுத்தப்பட்டு மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

    நேற்று இரவு இலவச பஸ்கள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. டிரைவர் பஸ் நிலையம் அருகே உள்ள ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 3:30 மணிக்கு வந்த மர்மநபர் ஒருவர் மின்சார பஸ்சை திருடிக் கொண்டு சென்றார்.

    திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாயுடு பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்ற போது பேட்டரியில் இருந்த மின்சாரம் தீர்ந்து போனது. இதனால் செய்வது அறியாது தவித்த மர்மநபர் பஸ் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

    ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்த பஸ் டிரைவர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டிக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் பஸ்ஸில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஆர்எஸ் கருவியை ஆராய்ந்த போது பஸ் நாயுடு பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் உதவியுடன் நாயுடு பேட்டைக்கு சென்ற தேவஸ்தான அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ் மீட்டு திருமலைக்கு கொண்டு வந்தனர். மின்சார பஸ் திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் பஸ் திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் பக்தர்களுக்காக இயக்கப்பட்டு வந்த மின்சார பஸ்ஸை திருடி சென்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திராவில் ஏற்கனவே பயணிகள் ஏற்றி சென்ற பஸ் உணவு இடைவேளைக்காக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மர்மநபர் ஒருவர் பஸ் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூலித்துக் கொண்டு பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவத்தில் கொள்ளையனை இதுவரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.
    • ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    கோவை:

    2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. 2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றுகிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் ஓட்டலுக்கு செல்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காளப்பட்டி பகுதியில் உள்ள துளசி கார்டன் பகுதிக்கு சென்றார். அங்கு நடந்து வரும் சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் 2 அடி தோண்டி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அங்கு நடக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அங்கு ஆய்வை முடித்து விட்டு, நேராக விளாங்குறிச்சி நஞ்சப்பா சாலையில் நடந்து வரும் சாலை பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் கரட்டுமேடு வி.கே.நகர் பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்து வரும் சாலை பணியையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் அவர் கார் மூலமாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நடக்கும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார்.

    திருப்பூர் செல்லும் வழியிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று இரவில் கோவை மாநகர் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.