என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
    • இதில் ரூப்லேவை வீழ்த்தி சின்னர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை.
    • மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங், மாட்டு வண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டு வண்டி பந்தயம் பிரபலம் என்று தெரிவித்து, நாட்டில் மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை உள்ளடக்கிய விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதித்துள்ளதா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்.

    இதற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது:

    ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை.

    கேலோ இந்தியா உள்பட எந்தத் திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ஆய்வு செய்வதற்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. அங்கு மட்டும் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாஜக தனது அரசியல் பயணத்தை வெறும் 2 மக்களவைத் தொகுதிகளில் தொடங்கியது.
    • பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக மட்டுமின்றி, சிறந்த எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தின் விரிவாக்க கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

    பாஜக ஒரு சிறிய அரசியல் அமைப்பாக இருந்து, உலகின் மிகப்பெரிய அமைப்பாக உயர்ந்ததற்கு தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகமே காரணம்.

    பாஜக தனது அரசியல் பயணத்தை வெறும் 2 மக்களவை உறுப்பினர்களுடன் தொடங்கியது. 2019-ல் அது 303ஐ எட்டியது. இப்போது பல மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறோம். குடும்பங்களால் இயக்கப்படும் அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பான் இந்தியா கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் செல்வாக்கு மிக்க ஒரே பான் இந்தியா கட்சியாக பாஜக திகழ்கிறது.

    பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக மட்டுமின்றி, சிறந்த எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது. நவீன மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே கட்சியின் ஒரே குறிக்கோள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.
    • கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.


    சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகை டாப்சி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன் இந்து கடவுள் மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கையை கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


    இந்தப் புகார் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
    • போராட்டத்தின்போது தீ வைக்கப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் வடக்கு பகுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி சியூதத் ஜூவாரஸ் என்ற இடத்தில் புலம்பெயர்ந்தோருக்கான மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால், உள்ளே தங்கியிருந்த பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 39 பேர் பலிகினர். 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

    இந்த மையத்தில் தங்கியிருந்த நபர்கள், அதிகாரிகள் மீது கோபத்தில் இருந்ததாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் கூறியிருக்கிறார். அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிஎஸ்கே அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம்
    • டோனியின் வீடியோவை சென்னை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 3-ந் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். சென்னை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை அவ்வப்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறது. முக்கியமாக தல டோனியின் வீடியோவை சென்னை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    மேலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்கள் பயிற்சியை பார்ப்பதற்காக அனுமதி வழங்கியுள்ளது. பயிற்சியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். நேற்றைய பயிற்சியின்போது டோனி மெகா சிக்சர் அடித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

    கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.

    இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள்தான் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும், இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
    • இவர் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.


    பிரியங்கா சோப்ரா

    கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், ஏன் பாலிவுட்டில் இருந்து விலக என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர்.


    பிரியங்கா சோப்ரா - நிக்ஜோனஸ்

    இதற்கு பிரியங்கா கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. நான் சிலருடன் மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன.
    • எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இது கடும் விவாதப்பொருளாகி உள்ளது. ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டதாக பா.ஜ.க, சிவ சேனா ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்தால், மகாராஷ்டிராவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) அதிருப்தி அடைந்துள்ளது. ராகுல் பேசியதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு பேசியபின் கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவின் சிவ சேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நாங்கள் ராகுல் காந்தியுடன் பேசினோம். நமது போராட்டம் சாவர்க்கருக்கு எதிரானது அல்ல, மோடிக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்தப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பானவை. நம் ஒற்றுமை அப்படியே இருக்கட்டும். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. நேற்று இரவு காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×