என் மலர்
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 169 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 19வது லீக் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது.பிரியன் பென்னட் அரை சதம் கடந்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசராபானி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டி20 உலகக் கோப்பையின் இரு போட்டிகளிலும் முசராபானி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
இந்நிலையில், முசராபானி ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
- சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை கூகுள் நிறுவனம் கொண்டாடி வருகிறது.
- பண்டிகை காலங்களில் கூகுள் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும்.
வாஷிங்டன்:
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமாக விளங்குவது கூகுள் நிறுவனம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூகுள் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும்.
சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கொண்டாடியும், அனுசரித்தும் வருகிறது. தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ அரையிறுதியில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டோரியா எம்போகோ, லாத்வியாவின் ஜெலெனா ஆஸ்டபென்கோ உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய விக்டோரியா எம்போகோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
- மோசமான சாலைகள், போக்குவரத்து விதிமீறலால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே M9 நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் உள்ள மோசமான சாலைகள், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.
- முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 196 ரன்கள் குவித்தது.
- நெதர்லாந்து 103 ரன்னில் சுருண்டது.
டி20 உலகக் கோப்பையில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள அமெரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய அமெரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சைதேஜா முக்காமல்லா 51 பந்தில் 79 ரன்கள் விளாசினார். சுபம் ரஞ்சனே அதிரடியாக விளையாடி 24 பந்தில் 48 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. அமெரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து 103 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீட் அதிகபட்சமாக 23 ரன்கள் சேர்தார். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 20 ரன்கள் அடித்தார். அமெரிக்க அணி சார்பில் சர்மீத் சிங் 4 விக்கெட்டும், வான் ஸ்கால்வைக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தசைப் பிடிப்பு காரணங்களால் பிரண்டன் டெய்லர் விலகியுள்ளார்.
- இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண், டாம் கரண் ஆகியோரின் சகோதரர் பென் கரண்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த குரூப்-ல் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண் மற்றும் டாம் கரண் ஆகியோரின் சகோதரரான பென் கரண் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான பிரெண்டன் டெய்லருக்கு பதிலாக பென் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றபோது விளையாடிய பிரண்டன் டெய்லர் (40 வயது) தற்போது தசைப் பிடிப்பு காரணங்களால் விலகியுள்ளார்.
கடந்த 2004-ல் அறிமுகமான பிரண்டன் டெய்லர் இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.
பென் கரண் நல்ல ஆல்ரவுண்டர் என்பதால், ஜிம்பாப்வே அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் எனக் கருத்தப்படுகிறது.
- 3 மாவட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- கடந்த சில நாட்களாக கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபேக் மாவட்டத்தில் திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேரை மிதித்துக் கொலை செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கங்கள், வளர்ச்சிக்காக காடுகளை அழித்தல் போன்றவற்றால் காட்டில் இருக்கும் யானைகள் உணவுக்காக ஊருக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் யானைகள் மக்களை கொடூரமாக மிதித்து கொலை செய்யும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
சுர்சு பிளாக்கில் உள்ள கோந்த்வார் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு யானைக் கூட்டம் நுழைந்தது. ஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் வீடுகளை இடித்து சூரையாடியது. இதனால் வீட்டில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். இருந்தாலும் வீட்டில் இருந்து ஓடி தப்பிக்க முயன்ற மக்களை யானைக் கூட்டம் தாக்கியது.
இதில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்த சேர்ந்த 4 பேரை யாரைக் கூட்டம் மிதித்து கொன்றன. மேலும் இருவரையும் மிதித்து கொன்றன. ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிர் பிழைத்தது. அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போகாரா, ராம்கார்க், ஹசாரிபேக் மாவட்டங்களில் காட்டு யானைகள் பிளறிக் கொண்டு அட்டகாசம் செய்து வருவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். துரதிருஷ்டவசமாக மக்கள் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறும்போது, 6 பேரை மிதித்துக் கொன்றுள்ளது.
- குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும்.
- கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா?
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில் "நாம் வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை. அடுத்த வர்களின் முகவரியில் அர சியல்வாதிகளாக இருந்து கொண்டிருக்கிற இவர்கள் எல்லோருக்கும் ஒரு சவால்.
என்னை மாதிரி தனியாக சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டுகிற "தில்" இருக்கிறதா? "திராணி" இருக்கிறதா?" என்றார்.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-
பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும். குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா? (த.வெ.க.-வுக்கும் திமுக-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி என விஜய் சொன்னதற்கு பதில் அளித்தபோது). ஒருக்காலம் முடியாது. ஒரு கவுன்சிலர் கூட இல்லை. 30 சதவீதம் வாக்கு 2 வருடத்தில் வந்திருச்சி எனச் சொல்கிறார். அனுபவத்தில் பார்க்க வேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். 32 சதவீதம் வாக்கு இருக்கு என்பதை நடிகர் என்பதனால் சொல்ல முடியுமா?.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.
- தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
- 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.










