என் மலர்
- கியாஸ் சிலிண்டரின் விலை நள்ளிரவில் திடீரென உயர்த்தப்பட்டது.
- இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் 835 ரூபாய்க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் 913 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், நள்ளிரவில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது என்பது குறிக்கப்பட்டது.
- நேற்று டெக்ஸ்லா படத்தின் பூஜை நடைபெற்றது.
- டெக்ஸ்லா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்
3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது டெக்ஸ்லா என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் 9வது படமான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஜெய், சுராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர்களை ஜெய் வெளியிட்டுள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம்.
ரிஷபம்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்ற குழப்பம் அகலும்.
மிதுனம்
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கடகம்
விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாங்கல். கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.
கன்னி
பாக்கிகள் வசூலாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் வளர்ச்சிக்கு உதவுவர். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. சகோதர ஒற்றுமை பலப்படும்.
மகரம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
கும்பம்
தனவரவு திருப்தி தரும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திட்ட மிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள்.
மீனம்
அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். வரவை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம்.
- அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
- அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள முண்டாலியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 57-வது நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது அமித்ஷா பேசியதாவது:
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி உள்ளனர்.
பெரிய சவால்கள் இருந்தபோதும் பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு பணியையும் ஒழுக்கத்துடனும், உறுதியுடனும் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்த்தேக்கங்கள் முதல் நாடாளுமன்றம் வரை முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கியாகப் பயன்படுகிறது.
அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். தொழில்துறை அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துணையாக உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும் என தெரிவித்தார்.
- வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
- இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.
காத்மண்டு:
நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.
பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.
தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இதற்கிடையே, வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்தது. இதில் 160 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் அதிக இடங்களில் வென்று நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரது வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
- எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்டது.
புதுடெல்லி:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நள்ளிரவில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 1768.50 ரூபாய்க்கு விற்ற வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1883 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 1929 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் 2043.50 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. இதனால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டு உபயோக சிலிண்டர் 60 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலை 115 ரூபாய் அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் நாட்டின்மீது போர் தொடுத்தன.
- டிவி சேனல்கள் பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகளை வெளியிடுகின்றன.
புதுடெல்லி:
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து சில டிவி சேனல்கள் டி.ஆர்.பி. மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மக்களின் நலனுக்காக டிவி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பெர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-16 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
- மரியன் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்தார்.
- அங்கு தற்காப்புக் கலையான களரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரியன் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது, பழங்கால தற்காப்புக் கலையான களரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, களரி பயிற்சி செய்த மாணவியுடன் இணைந்து தானும் களர் பயிற்சி செய்தார் ராகுல் காந்தி.
மாணவியுடன் ராகுல் காந்தி களரி பயிற்சி செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- எம்.எல்.எஸ். கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி வெள்ளை மாளிகைக்கு சென்றது.
- லயோனல் மெஸ்சி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் நிற கால்பந்து, எண் 47 கொண்ட ஜெர்சியை பரிசளித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்த மாஸ்டர் லீக் சாக்கர் எனும் கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி
முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கிடையே, முதல் முறையாக எம்.எல்.எஸ். கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். அப்போது, லயோனல் மெஸ்சி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் நிற கால்பந்தினையும், எண் 47 கொண்ட ஜெர்சியும் பரிசாக அளித்தார். அங்கு அதிபர் டிரம்ப் பேசியதாவது:
இதுவரை எந்த ஓர் அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு வருக, லயோனல் மெஸ்சி.
இன்று எனது மகன் என்னிடம் யார் வருகிறார் என்று தெரியுமா கேட்டான்? எனக்கு நிறைய வேலை இருப்பதால் தெரியவில்லை என்றேன். அவன், மெஸ்சி எனக் கூறினான். அவன் கால்பந்தின் மிகப்பெரிய ரசிகன். உங்களது தீவிரமான ரசிகன்.
ரொனால்டோவும் சிறந்த வீரர். நீங்களும் சிறந்தவர். சிறந்தவர் மெஸ்சியா அல்லது பீலேவா? பீலேவை விட மெஸ்சி சிறந்தவர் என தெரிவித்தார்.










