என் மலர்
- சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்.
- விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுத் தயாரிப்பு போர்விமானமான 'தேஜஸ்' மீண்டும் விபத்தில் சிக்கி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு விமான தளத்தில் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
விமானத்தின் Airframe கட்டமைப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தை இனி பயன்படுத்த முடியாத அளவிற்கு அது சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்
2024 மார்ச் மாதம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே முதல் விபத்து நிகழ்ந்தது. இதில் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம், துபாய் விமானக் கண்காட்சியின் போது நிகழ்ந்த தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நமான்ஷ் சியால் உயிரிழந்தார்.
தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேஜஸ் விமானங்களையும் விரிவான தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள்.
எங்களை 'வி்ரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக 'தி வெடிங் ஆஃப் வி்ரோஷ்' என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே!" என்று பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும் எப்போது திருமணம் என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால் தகவலின்படி, பிப்ரவரி 26 அன்று மிக நெருக்கமானவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.
மேலும் மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
- விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
- மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இந்த போரானது கடந்த 5 வருடங்களாக முடிவின்றி நடந்து வருகிறது. போரை நிறுத்த கடந்த வருடம் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் கடுமையாக முயன்று வருகிறார்.
பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே நேற்று உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோவை நோக்கி வந்த 10 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மறுபுறம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கைப்பற்றிய பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ரஷியா மறுப்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
- சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக
மலேசியாவின் போர்னியோ தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சபாவின் தலைநகரான கோட்டா கினபாலுவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சபாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் மிக ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தின் ஆழம் அதிகமாக இருப்பதால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
- பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
- கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.
கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.
காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
- இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
- போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.
டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.
அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ் கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.
வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது
காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது.
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.
இதில் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர்.
வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட GKM தமிழ்குமரன், 788 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்.
- இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
- அபிஷேக் சர்மா 15 ரன்கள் அடித்து அவுட்டானார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.
அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் - ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் வெளியேறினார்.
18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியாவால் 111 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை சுவைத்தது.
- ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
- இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ஷெராபுதீன் தனது மனைவி மற்றும் 22 மாதக் குழந்தை (1.8 வயது) ஆலன் ரூமி உடன் வசித்து வந்தார்.
கடந்த வாரம் ஒரு மாலை வேளையில், ஷெராபுதீனின் மனைவி மற்றும் குழந்தையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
தாய் தன்னை துரத்தி வருவதை கண்ட குழந்தை, அது ஒரு விளையாட்டு என நினைத்து வேகமாக ஓடியபோது, அந்தப் பாதையில் வந்த காரின் அடியில் சிக்கினான்.
காரை ஓட்டி வந்த இந்திய நபர், உடனடியாகக் குழந்தையை தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஆலன் ரூமி உயிரிழந்தான்.
குழந்தையை இழந்த துக்கத்திலும் அந்தப் பெற்றோர் காட்டிய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை என ஷெராபுதீன் தம்பதியினர் முடிவெடுத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை மன்னிப்பதாக அவர்கள் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய ஷெராபுதீன், "எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தக் குடும்பம் வரும் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் உம்ரா செல்லவும், பின்னர் ஈத் பண்டிகையைக் கொண்டாட இந்தியா வரவும் திட்டமிட்டிருந்தது.
ஈத் முடிந்து மீண்டும் அமீரகம் வந்ததும், நிரந்தரமாக அங்கேயே செட்டில் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர். ஆனால், ஒரு விபத்து அவர்களின் அனைத்துக் கனவுகளையும் கலைத்துவிட்டது.
"இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்" என்ற ஷெராபுதீன் கண்ணீருடன் தெரிவித்தார்.
- காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா
- ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசிற்கு தெலங்கானா மக்கள் தகுதியானவர்கள் அல்ல
காந்திக் குடும்பத்திற்குத் தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் தொண்டர்கள் ரூ.1,000 கோடி திரட்டி தருவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் நாட்டிற்காக மூன்று தலைமுறைகளாகத் தியாகம் செய்தவர்கள். உண்மையில், காந்தி குடும்பத்திற்கு பணம் தேவை என்றால், காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்காக ரூ. 1,000 கோடியை ஏற்பாடு செய்ய முடியாதா? காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா எனப் பேசியிருந்தார்.
இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா,
"தெலுங்கானா இளைஞர்கள் டி.எஸ்.சி (ஆசிரியர் தேர்வு) அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், விவசாயிகள் ரைது பரோசா (விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்) உதவிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், காந்தி குடும்பத்தின் 'நிதித் தேவைகளுக்காக' ரூ.1,000 கோடியைத் திரட்டி தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார்.
சிறிது காலத்திற்கு முன்புதான், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார். தெலங்கானா மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய் பொது நலனுக்கா அல்லது டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வம்சத்தினருக்கா?
காங்கிரஸ் கட்சிக்கு, தெலங்கானா என்பது வளர்ச்சி பெற வேண்டிய ஒரு மாநிலமா அல்லது வெறும் 10 ஜன்பத்க்கான ஏடிஎம் இயந்திரமா?
தெலங்கானா மக்கள் தங்கள் அபிலாஷைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அரசிற்கு தகுதியானவர்கள்; ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசாங்கத்திற்கு அல்ல." என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்திற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், மோடி அரசாங்கம் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுப் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.











