என் மலர்

    செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நீண்ட நாட்களாக பஸ் நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

    ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்து உள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் மதன்மோகன், பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளைகுடா நாடான துபாயில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருபவர் லஹிர் ஹாசன். கோடீஸ்வரர்.
    • ஹபீஸ், மாமனாரின் வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.107.99 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடான துபாயில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருபவர் லஹிர் ஹாசன். கோடீஸ்வரர்.

    இவரது ஒரே மகளுக்கும் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த வாலிபர் ஹபீசுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர், லஹிர் ஹாசனின் தொழில் நிறுவனங்களின் வரவு-செலவுகளை ஹபீஸ் பார்த்து கொண்டார்.

    அப்போது லஹிர் ஹாசனின் வங்கி கணக்குகளில் இருந்து பலகோடி பணம் எடுக்கப்பட்டது. இதுபற்றி அவர் கேட்ட போது, நிறுவனத்தில் நடந்த சோதனைகள், வருமான வரித்துறைக்கு அளித்த தொகை என ஹபீஸ் பல்வேறு சாக்குபோக்குகளை கூறினார்.

    இதுபற்றி லஹிர் ஹாசன், தனது மகளிடம் கூறினார். அவர், தந்தையின் நிறுவன கணக்குகளை ஆய்வு செய்த போது பலகோடி பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. மேலும் வருமான வரித்துறையினர் அளித்த நோட்டீசு என ஹபீஸ் அளித்த கடிதங்கள் அனைத்தும் போலி எனவும் தெரியவந்தது.

    மேலும் இந்த போலி கடிதங்கள் மூலம் ஹபீஸ், மாமனாரின் வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.107.99 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி ஹபீசின் மனைவி கேரளா போலீசில் புகார் செய்தார். கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஹபீசின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் போலி நோட்டீசு தயாரித்து அதனை காண்பித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து கேரளாவின் ஆலுவா மற்றும் கோவா மாநில போலீசார் ஹபீஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 465, 468, 471 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதை அறிந்ததும் ஹபீஸ் தலைமறைவாகி விட்டார். அவரை கோவா போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற கோவா போலீசார் ஹபீசை கைது செய்தனர். பின்னர் அவரை போன்டாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று முதல் அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

    விழாவிற்கு உள்துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் பெரிய ஏரியின் தென்கிழக்கு பகுதி தூர்வாரும் பணியினை ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், தேத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார் கோவில் குளம் தூர்வாருதல், திருக்கனூர் பெரிய ஏரி கிழக்கு பகுதியினை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருக்கனூர் பெரிய ஏரியில் பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும், திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும், திருக்கனூர் பள்ளிக்கூடத்தினை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு முறையாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பிரமுகர்கள் போட்டோ ராஜா, முத்தழகன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் தமிழிசையிடம் மக்கள் பேரியக்க தலைவர் மனு
    • முறைகேடுகள் மாநில விளையாட்டுக் கவுன்சிலில் நடைபெற காரண மானவர்கள் யார்?

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை முறைகேடாக உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பில் இணைப்ப தற்கான முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    43 ஆண்டுகளாக இயங்கி வரும் மாநில விளையாட்டுக கவுன்சில் மற்றும் 36 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை மூட முயற்சிப்பதின் காரணம் என்ன? பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் மாநில விளையாட்டுக் கவுன்சிலில் நடைபெற காரண மானவர்கள் யார்? பணம் மற்றும் இதர மோசடிகள் 1980-ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிய கவர்னர் மத்திய புலனாய்வு சி.பி.ஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    அப்போது தான் உண்மை குற்றவாளிகள் யார்? என்பது தெரிய வரும். ஏன் இந்த ஸ்போர்ட்ஸ் டெவெலப் மெண்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பை பல்வேறு முறைகேடுகள் செய்து சட்டத்திற்கு புறம்பாக ரெஜிஸ்டர் ஆப் சொசைட்டியில் பதிந்துள்ளனர் என்ற உண்மை தெரியவரும். சட்டத்திற்கு புறம்பான இந்த ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற அமைப்பிற்கு வரும் 14-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசைக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, விளையாட்டு துறை அமைச்சர், தலைமை செயலர் கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் முறையான நடவடிக்கை எடுத்து கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடாக பதிந்த பதிவையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் பல தொடர் போராட்டங்களை புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்னீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பி.எச்.டி. படிப்புகளில் உள்ள இடங்கள் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பிற மாணவர்களுக்கு ரூ.1000, எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை சலூன் கடைக்காரருக்கு குவியும் பாராட்டு
    • புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    கால மாற்றத்திற்கேற்ப தொழில்களிலும் நவீன மாற்றங்கள் உருவாகி வருகிறது.

    இதில் சலூன் கடைகளும் தப்பவில்லை. கிராமங்களில் மரத்தடியிலும், புறநகர் பகுதிகளில் சிறிய கடைகளிலும் இருந்த முடி திருத்தகங்கள் இன்று நவீனமயமாகியுள்ளது. நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றன.

    இந்த கடைகளில் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை முடி திருத்தம், முகம் அழகுபடுத்துதல், தாடியை அழகுபடுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது.

    தற்போதைய இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தோடு உலா வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் முடி திருத்தம் செய்ய ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கிறார். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணத்தில் முடி திருத்தம் செய்கிறார்.

    தினமும் காலையில் 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் இந்த சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார். அதன்பிறகு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான பணியை தொடங்குகிறார். புதுவையில் ஒரு சில தினங்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் இந்த கடையை பற்றி தெரிந்த பெற்றோர், மாணவர்களோடு காலையிலேயே இங்கு வந்து விடுகின்றனர்.

    ரூ.10-க்கு டீ குடிக்கக்கூட முடியாத நிலையில் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக முடிதிருத்தம் செய்யும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது, ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வது தனக்கு திருப்தியளிக்கிறது. தானும் அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகையை அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பால்டிக் கடல் எல்லையில் ரஷியாவின் நடவடிக்கையை தடுக்க சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது
    • சுவீடன் முழுநேர உறுப்பினராக துருக்கி தடையாக உள்ளது

    நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

    நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார்.

    சுவீடன் மண்ணில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ தளவாடங்களை இறக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கவும் இந்த கூட்டு முயற்சியில் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த செய்தி ரஷியாவுக்கு விடப்பட்ட ஒரு சமிக்ஞை செய்தியாகவும், சுவீடனின் தற்பாதுகாப்புக்கும் உதவும் ஒரு நிகழ்வாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது.

    சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும் எனபதால், சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.

    சுவீடன் நாட்டின் நேட்டோ உறுப்பினருக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவில் 2022-ம் வருடத்திலிருந்து சுவீடன் இணைய அழைப்பு இருந்தும் அதை உறுதி செய்ய வேண்டிய 31 உறுப்பினர் நாடுகளில், துருக்கி மற்றும் ஹங்கேரியும் சம்மதிக்கவில்லை.

    நேட்டோவின் சட்டப்பிரிவு 5-ன்படி ஒரு உறுப்பினர் நாடு மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்டதாக கருதப்படும். ஆனால், இந்த பாதுகாப்பு அம்சம் முழு உறுப்பினர்கள் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    கடந்த மே மாதம், துருக்கி நாட்டின் அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் சுவீடனின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து இதுவரை அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் சுவீடன் நிறைவேற்றி விட்டதால் விரைந்து முடிவெடுக்கும்படி துருக்கியை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கேட்டுக் கொண்டுள்ளது. இதில் துருக்கி நாட்டால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குர்திஷ் இன போராட்டக்காரர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது சுவீடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

    ஆனால், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் குடியேறியுள்ள ஒரு சில துருக்கி நாட்டு ஆர்வலர்களையும், சுவீடன் வெளியேற்ற வேண்டும் என துருக்கி நிர்பந்திக்கிறது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் சுவீடன், தங்கள் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தலையிட முடியாதெனவும் அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவீடன் தமது நாட்டின் ராணுவத்திற்கான செலவினங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார்.
    • ரேஷ்மா திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கொழிஞ்சாம்பாறை:

    பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர் பிரதேஷ். இவர் படித்து முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது33) என்பவர் அறிமுகம் ஆனார்.

    அவர், அந்த வாலிபரிடம், நான் ஒரு அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். நீங்கள் வேலை தேடுவதாக அறிந்தேன். எனக்கு குருவாயூர் கோவிலில் முக்கிய அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலமாக உங்களுக்கு நான் குருவாயூர் கோவிலில் வேலை வாங்கி தருகிறேன். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றார்.

    வாலிபரும் வேலை கிடைக்க உள்ளது என நம்பி, அந்த பெண் தெரிவித்த அனைத்திற்கும் தலையாட்டினார். மேலும் வேலை வாங்கி தருவதற்காக அந்த பெண்ணிடம் 2 தவணையாக ரூ.10 லட்சத்தை கொடுத்தார்.

    அவர் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் வாலிபர் சந்தேகம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

    அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை வாலிபர் உணர்ந்தார்.

    உடனடியாக அவர் சம்பவம் குறித்து ஆலத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரேஷ்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

    ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார். அவர் வைத்திருந்த காரிலும் கோவில் நிர்வாக விஜிலென்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியபடியே வலம் வந்தார்.

    அப்போது, அவர் வேலை தேடி வரும் வாலிபர்கள், இளம்பெண்களை குறி வைத்து அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்து விட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

    மேலும் திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த மாதம் கோட்டயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரேஷ்மா, அதில் உள்ள எண்ணை எடுத்து அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசினார். அடிக்கடி செல்போனில் அந்த வாலிபரிடம் பேசி வந்தார்.

    அப்போது, ஒருநாள் வாலிபரிடம் உங்களை எனக்கு பிடித்துள்ளது. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தையை அள்ளி தெளித்தார். நாம் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு சிறிய பிரச்சினை மட்டும் உள்ளது.

    அதனை சரி செய்து விட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ரேஷ்மாவின் பேச்சில் மதி மயங்கிய அந்த வாலிபர், அவர் என்ன கேட்டாலும் செய்ய தயார் என்ற மனநிலையிலேயே இருந்தார்.

    பெண் பிரச்சினை என்று சொன்னவுடன் என்ன வென்று அவரிடம் கேட்டார். அப்போது அந்த பெண் எனக்கு 6 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அதனை கட்டிவிட்டால் நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். பெண்ணின் பேச்சில் மயங்கி கிடந்த வாலிபரும், அவர் கேட்ட உடனே பணத்தை எடுத்து கொடுத்தார்.

    பணம் கொடுத்த மறுநாளில் பெண்ணிடம் இருந்து போன் வரவில்லை. தினமும் போன் செய்து பேசும் பெண் திடீரென பேசாததால், வாலிபர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    அப்போது தான் அந்த வாலிபருக்கு, இளம்பெண் தன்னை ஆசைவார்த்தை கூறி அவரது வலையில் வீழ்த்தியதும், அதன் மூலம் தன்னிடம் இருந்து பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாலிபர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் ரேஷ்மா, இதுபோன்று 20-க்கும் மேற்பட்டோரிடம் திருமணம் செய்வதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.50 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில், ரேஷ்மா ஆலத்தூரில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • காய்கறி மார்க்கெட், பூக்கடை, மளிகை கடைக்கு தனிதனி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களின் நலனுக்காக சுமார் ரூ.36 கோடியில் மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணியை அரசு முன்னெடுக்கும் போது வியாபாரிகள், வியாபாரிகள் போர்வையில் உள்ள குத்தகை தாரர்களும் மார்க்கெட்டை கட்ட விடாமல் தடுப்பது தவறானது.

    மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மார்க்கெட்டை முழுமையாக இடித்து நவீன முறையுடன் கீழ் பகுதி முழுவதும் பார்க்கிங் வசதியும், சிறுகடைகளும் உள்ளடக்கி 2 அடுக்கு மார்க்கெட் கட்ட வேண்டும்.

    கலெக்டர் 8 மாதத்திற்குள் கடையை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறுவது அரசை வியாபாரிகள் மிரட்டுவதாக தெரிகிறது. இதே நிலை நீடித்தால் எந்த திட்டத்தையும் எந்த அரசாலும் செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அங்கு தற்போது வியாபாரம் செய்யும் கடைகளின் விபரங்களை யும், மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகள், நடைபாதை வியாபாரிகள் விபரங்களை யும் அரசு உடனடியாக கணக் கெடுக்க வேண்டும். ஒரு தேதியை நிர்ணயம் செய்து கடைகளில் இருக்கிற பொரு ட்களை அப்புறப்ப டுத்தி மார்க்கெட் கட்டும் பணி அரசு தொடங்க வேண்டும்.

    மாற்றுஇடமாக ரோடியர் மைதானம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள இடம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. எதிரில் உள்ள நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே காய்கறி மார்க்கெட், பூக்கடை, மளிகை கடைக்கு தனிதனி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    அம்பேத்கர் சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில காலியாக உள்ள துறைமுகம் மைதானத்தில் அங்குள்ள கடைக்கு மாற்று இடமும் அமைக்கலாம். காலம் மாற்றத்திற்கு ஏற்ப மக்களுடைய நலனுக்காக செயல்படுத்த கூடிய திட்டங்களுக்கு வியாபாரிகள் தடங்கள் ஏற்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    புதிதாக மார்க்கெட் கட்டும் பணியில் எவ்வித சமர சத்துக்கும் இடமளிக்காமல் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக வி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் புதிய பொறுப்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர்.

    இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக வி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    துணை தலைவர்களாக ந.ஆதி கேசவன், ப.திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளா ளராக மு.அருள்செல்வம், துணைச் செயலாளராக தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பி னர்களாக அ.உசேன், எம்.எஸ்.ராஜா, பொறிஞர் சுரேசு குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டு ள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்  6 மணி அளவில் மேனாள் நீதியரசர் சேது.முருக பூபதி தலைமையில் நடைபெற உள்ளது.

    முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஜான்குமார், வக்கீல் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    பொதுப்ப ணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print