search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
    • பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.

    இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.

     

    நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப்  பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட  கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.

     

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யாவின் கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் கவனம் ஈர்த்தது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் எக்ஸ் பதிவில், "செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அவர்களின் மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன்; அவர் ஒரு பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார்; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
    • சவுந்தர்யா மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல்.

    தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார்.

    இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக

    முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.
    • இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.

    இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தலைவருமான ரமேஷ் குதே இன்று சிவசேனா கட்சியில் இணைந்தார். கட்சி தலைவரான உத்தர தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய சிவசேனா கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது 6 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால்,
    • வாட் வரிக்குப் பதிலாக ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது குறித்து மாநில மற்றும் மத்திய அரசு இடையில் வேறுபாடு இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதம் வரும்போது மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என மாநிலங்கள் தெரிவிக்கும்.

    அதேவேளையில் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறையும் என மத்திய அரசு தெரிவிக்கும்.

    இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி வரிக்குள் கொணடு வந்தால் என்ன? என்ற கேள்வியும் எழும்புகிறது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும். அதன்பின் உடனடியாக எங்களால் நடைமுறைப்படுத்தப்படும்.

    பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் குறிப்பிடத்தகுந்த வகையில் விலை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வேறுபாடு உள்ளது. இதற்கு மாநிலங்கள் விதிக்கும் மாறுபட்ட வரி விதிப்புதான் காரணம்.

    பிரதமர் மோடியின் கூற்றுப்படி "பெட்ரோலியப் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மத்திய அரசு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வருவதன் மூலம், இந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்படும், ஏனெனில் இது தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் மிக உயர்ந்த அடுக்கு (Slab) ஆகும்.

    • இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா.
    • இன்னும் 45 விளையாட்டுகளில் சிலவற்றிற்கான டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த

    இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    7,500 விளையாட்டு வீரர்கள், 300,000 பார்வையாளர்கள் மற்றும் விஐபிகளுடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்குகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாரிஸைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கிற்கு மொத்தம் 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையானபோதும், இன்னும் சில போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்கப்படுகிறது.

    முந்தைய டிக்கெட் விற்பனை சாதனையாக, 1996ம் ஆண்டில் அட்லாண்டா இடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் தொடங்கி, உள்ளூர் இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
    • இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல் மந்திரிகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    வரும் 27-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற மம்தா பானர்ஜி, அங்கு கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார். மேலும் அவரது பெற்றோர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ஆம் ஆத்மி எம்.பி.யான ராகவ் சதா உடனிருந்தார்.

    • கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
    • அவர்களின் பயிற்சி மற்றும் மற்ற ஏற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், சீனியர் தடகள பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

    முகமது அனாஸ், முகமது அஜ்மல் (இருவரும் ரிலே அணியில் உள்ளனர்), அப்துல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), ஹெச்.எஸ் பிரனோய் (பேட்மிண்டன்) ஆகியோருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி வீரர்களின் பயற்சி மற்றும் ஒலிம்பிக் தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த முறையில் ஹாக்கி அணி பதக்கம் வெல்லும என நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். பிரனோய் நல்ல ஃபார்மில் உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    • கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்டது.
    • இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல குளறுபடிகள் ஏற்பட்டன.

    பிறகு, உச்ச நீதிமன்ற ஆணையை தொடர்ந்து கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

    • சம்பவ இடம் சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபர் உடலை மீட்டனர்.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இன்று காலை 10.15 மணியளவில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    விசாரணையில், உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் கிரிக்கெட் வீரர் எனவும், டி.என்.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகின.

    • கொலை செய்யப்பட்ட நபரின் உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார்.
    • அதில் இடம் பிடித்துள்ள ஒருவர் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

    மும்பையில் நீண்ட காலமாக குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அவருக்கு திங்கு விளைவித்த எதிரிகளின் 22 பேரை பச்சை குத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆர்டிஐ ஆர்வலர் எனக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த குரு வாக்மார் (வயது 38) மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் புதன்கிழமை அதிகாலை மத்திய மும்பையில் உள்ள வோர்லி என்ற இடத்தில் உள்ள ஸ்பாவில் (Spa) கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடலை பரிசோதனை செய்தபோது, அவரது தொடையில் 22 பேர் பெயரை பச்சைக்குத்தியது தெரியவந்துள்ளது. இந்த 22 நபர்களால் துன்புறுத்தப்பட்டிருந்ததால் தன்னுடைய உடலில் பச்சைக்குத்தி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அதில் ஷெரேகர் பெயர் குரு வாக்மார் உடலில் பச்சைக் குத்தப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குரு வாக்மாரின் பணம் பறிப்பு தொடர்பாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்து கொலை செய்ய ஷெரேகரை தூண்டியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது பெரோஷ் அன்சாரி (26) என்பவருக்கு குரு வாக்மாரை கொலை செய்வதற்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

    அன்சாரியும், ஷெரேகரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் ஆனவர்கள். அன்சாரி மும்பை அருகே நள சோபாரா என்ற இடத்தில் ஸ்பா நடத்தி வந்தவர். ரெய்டு காரணமாக கடந்த வரும் ஸ்பாவை மூடிவிட்டார். அதிகாரிகளுக்கு குரு வாக்மார் புகார் அளித்ததன் மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அன்சாரி ஷெரேகரை அணுகி ஸ்பா உரிமையாளர்களிடம் இதுபோன்று வாக்மார் புகார் அளிப்பது மற்றும் மிரட்டி பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது வாக்மாரை ஒழிக்க வேண்டும் என ஷெரேகர் தெரிவித்துள்ளார்.

    அதன்பின் அன்சாரி சகிப் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார். சகிப் அன்சாரி டெல்லியை சேர்ந்தவர்கள். அதன்பின் கொலை செய்ய சதி திட்டம் மூன்று மாதங்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.

    மூன்று மாதங்கள் குரு வாக்மாரின் நடமாட்டத்தை நோட்டமிட்ட அவர்கள், அதன்பின் ஷெரேகர் ஸ்பாவில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    சியோன் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு வெளியில் வாக்மார் தனது பிறந்த நாளை 21 வயது தோழியுடன் செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடியிருந்தபோது ரெயின்கோட் அணிந்த இருவர் அவரை பின்தொடர்ந்தனர். பின்னர் ஷெரேகர் ஸ்பா இருக்கும் இடம் வரை வாக்மோரை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தில் முகமது பெரோஸ் அன்சாரி ஈடுபட்டதை, அருகில் உள்ள கடையில் பொருள் வாங்கி UPI மூலம் பணம் செலுத்தியது, பின்னர் UPI ID-யில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரில் இருந்து ஷெரேகருக்கு போன் செய்தததில் இருந்து போலீசார் கண்டுபிடித்தனர்.

    பெரோஷ், சகிப் அன்சார் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஸ்பாவிற்கு வந்து, வாக்மாரின் தொழியை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்ற பிறகு, வாக்மார் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் கழுத்தை பிளேடால் அறுக்க, மற்றொருவர் வயிற்றில் குத்தி கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை குறித்து வாக்மாரின் தோழி காலை 9 மணிக்கு தெரிந்து கொண்டு, ஷெரேகரிடம் கூற அவர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    மும்பை, நவி மும்பை, தானே, பல்கார் போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் கடந்த 2010-ல் இருந்து மிரட்டி பணம் பறித்ததாக வாக்மார் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கற்பழிப்பு, பாலியல் தொல்லை கொடுத்தல் போன்று வழக்குகள் உள்ளன. அடையாளம் காணப்பட்ட 8 வழக்குகளும், சந்தேகத்தின் அடிப்படையிலான 22 வழக்குகளும் உள்ளன.

    • அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் பொன்முடியின் சொத்துகள் முடக்கம்.
    • வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் பொன்முடியின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதேபோல், அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ×