search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aap"

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது.
    • மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் பேசினார்.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது:

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது சமூகத்தின் சில பிரிவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இம்முறை அரசாங்கம் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள்கூட அதிருப்தியில் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் மூலதன ஆதாய வரி போன்ற வரிகள் மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது.

    நாங்கள் இங்கிலாந்தைப் போல வரி செலுத்துகிறோம். ஆனால் சோமாலியாவைப் போல சேவைகளைப் பெறுகிறோம்.

    உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், போக்குவரத்து, கல்வி போன்றவற்றை அரசாங்கம் நமக்கு வழங்குகிறதா?

    2019-ல் பா.ஜ.க. அரசுக்கு 303 இடங்கள் கிடைத்தன. ஆனால் மக்கள் அந்த இடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யை விதித்து அவற்றை 240-க்கு கீழே கொண்டு வந்தனர்.

    கடந்த 25 மாதங்களில் உண்மையான கிராமப்புற ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    உணவுப் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றால் தான் குறைவான இடங்கள் கிடைத்தன.

    இந்தப் போக்குகள் தொடர்ந்தால் வருங்கால தேர்தல்களில் பா.ஜ.க. இன்னும் குறிப்பிடத்தக்க இடங்களைவிட சரிந்து 120 இடங்களுக்குக் குறையக் கூடும் என தெரிவித்தார்.

    • உடல்நிலையை குறைக்க வேண்டுமென்றே கலோரி உணவுகளை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்ளவில்லை.
    • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகு கெஜ்ரிவால் 2 கிலோ எடை குறைந்துள்ளார்- துணை நிலை ஆளுநர்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கதுறை டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும்போது சிபிஐ-யால் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கெஜ்ரிவாலின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாகவும், பலமுறை இவ்வாறு நடந்ததாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

    இந்த நிலையில் டெல்லி மாநில துணை நிலை ஆளுநரான வி.கே. சக்சேனா கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து சிறைத்துறை கண்காளிப்பாளர் அறிக்கை அடிப்படையில் தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அப்போது கெஜ்ரிவால் சிறைக்குள் வேண்டுமென்றே மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை தவிர்த்திருக்கலாம். போதுமான அளவு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வர் கெஜ்ரிவால் உடல்நிலையை குறைக்க குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் அநத் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மருத்துவ பரிசோதனையில் உள்ள வேறுபாட்டை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிய துணை நிலை ஆளுநர் போதுமான கலோரி உணவை எடுக்காததன் காரணமாக கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஜூன் 2-ந்தேதியில் இருந்து 2 கிலோ எடை குறைந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் குற்றச்சாட்டை திட்டவட்டாக மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி மந்திரி அதிஷி "முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 8 முறைக்கு மேல் 50 mg/dL-க்கு கீழ் வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கோமா நிலைக்குக் கூட செல்ல முடியும். பிரைன் ஸ்ட்ரோக் ஆபத்து கொண்டது." என்றார்.

     ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சங் சிங் "என்ன வகையிலான ஜோக்கை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் துணைநிலை ஆளுநர் சார்?, ஒரு மனிதன் இரவில் சர்க்கரை அளவைக் குறைப்பானா? இது மிகவும் ஆபத்தானது. துணைநிலை ஆளுநர் சார், உங்களுக்கு இந்த நோய் பற்றி தெரியவில்லை என்றால், அதன்பின் நீங்கள் இது போன்ற கடிதம் எழுதக் கூடாது. அப்படி ஒரு காலம் உங்களுக்கு வராமல் கடவுள் தடுக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணைநிலை ஆளுநர் சிமென்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் நீரிழிவு நோயில் நிபுணத்துவம் பெற்றவரா என்பது எனக்குத் தெரியாது என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது.
    • கைது செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தல்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில முதல்வராக இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபான கொள்ளை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

    இதனைத் தொடர்நது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர். போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    ஆனால், சிறையில் இருந்து கொண்டே மக்களுக்காக பணியாற்றுவேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக உள்ளார்.

    அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் மதுபானக் கொள்கை உருவாக்கி அதை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.

    அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இந்த வழக்கு விசாரணையின்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல்வர் பதவி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் "தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா... அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக்கூடாது என உத்தர விட முடியுமா? என்ற எங்களுக்குச் சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் டெல்லி மாநில முதல்வர். அவர் வகிப்பது முக்கியத்துவமும் செல்வாக்கும் கொண்ட பதவி. நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. ஆனால் அந்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவாலிடமே விட்டுவிடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

    • நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும்.
    • மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவான கர்தார் சிங் தன்வார் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், அவரது மனைவி ஆகியோர் டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர் கூறுகையில், டெல்லி மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சிப் பணிகள் இல்லாததால் தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யு கோர்ட்டில் சி.பி.ஐ. அவரை நேரில் ஆஜர்படுத்தியது. அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    • பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் மேடையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம்.
    • மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர்.

    முன்னாள் துணை மேயர் பர்வேஷ் டாங்ரி, முன்னாள் பிஎஸ்எஸ்சி இயக்குநரும், வார்டு எண் 78 ஜகதீஷ் ராம் சாம்ராய் மற்றும் ராஜ் குமார் ராஜு ஆகியோர் பா.ஜ.க மற்றும் காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

    பஞ்சாப்பில் ஜகதீஷ் ராம் சாம்ராய் ஒரு முக்கிய தலைவர். பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக உள்ள அவர் பிபிசிசியில் பல பதவிகளை வகித்துள்ளார். ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக துணை மேயர் மற்றும் எம்.சி.க்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகியிருப்பது பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகராட்சியில் கவுன்சிலராக உள்ள ஜகதீஷ்ம் ராம் சாம்ராய் கடந்த 40 நாட்களில் 3 கட்சிகளுக்கு தாவியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவி பிரசாரத்தில் ஈடுபட்ட இவர் நேற்று அம்மாநில முதலமைச்சரை சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது, மேலும் ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றியைப் பதிவு செய்யும்.

    நாங்கள் ஒரு குடும்பம் போன்றவர்கள். பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் மேடையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம். மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். அவர்களின் தலைவர்கள் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைவது, அனைத்து தலைவர்களும் தங்கள் எதிர்காலத்தையும், பஞ்சாபின் எதிர்காலத்தையும் ஆம் ஆத்மி கட்சியுடன்தான் பார்க்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது, என்று மான் கூறினார்.

    • கெஜ்ரிவால் கைதை கண்டித்து பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆம் ஆத்மி அறிவித்து இருந்தது.
    • டிடியு மார்க்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு இருக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் அவரை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆம் ஆத்மி அறிவித்து இருந்தது.

    இந்த போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'டெல்லியில் உள்ள டிடியு மார்க்கில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி பெறாததால் போராட்டக்காரர்களை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தடுப்புகள் போடப்பட்டு துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    டிடியு மார்க்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு இருக்கிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள்' என்றார். இதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளன.
    • மூன்று நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஜாமின் கேட்டு போராடி வந்த நிலையில் ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. இந்த நிலையில் சிபிஐ கைது செய்துள்ளது.

    தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுவேன். ஏற்கனவே உத்தவ் தாக்கரேயிடம் பேசியுள்ளேன். காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவேன். பாஜக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது தொடர்பாக குரல் எழுப்ப வேண்டுகோள் விடுக்கப்படும்.

    மாநிலத்தை பொறுத்த வரையில் எங்களுக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துதல் போன்ற தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிராக எதிராக கட்சிகள்" என்றார்.

    • ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
    • நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்தது.

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இம்மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்தது.

    இந்த நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 5 நாள் காவல் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில், இந்த வழக்கில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை காவலில் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    சிபிஐ வாதங்களை கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

    • நான் இன்று முதல் "பானி சத்தியாகிரகத்தை" தொடங்குகிறேன்.
    • டெல்லி மக்களுக்கு அரியானாவில் இருந்து உரிமையான தண்ணீரை பெறும் வரை போராட்டத்தை தொடருவேன்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில் போகல் பகுதியில் டெல்லி மந்திரி அதிஷி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    முன்னதாக ராஜ்காட் பகுதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில்,

    நான் இன்று முதல் "பானி சத்தியாகிரகத்தை" தொடங்குகிறேன். டெல்லி மக்களுக்கு அரியானாவில் இருந்து உரிமையான தண்ணீரை பெறும் வரை போராட்டத்தை தொடருவேன் என்று கூறினார்.

    கடந்த இரண்டு வாரங்களாக அரியானா மாநிலம் தனது பங்கான 613 எம்ஜிடிக்கு பதிலாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீர் கொடுத்துள்ளது. இதன் விளைவாக டெல்லியில் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது. இதன் விளைவாக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தலைநகர் டெல்லியில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது.
    • குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி பிரதமருக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டெல்லியில் 28 லட்சம் பேர் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இரு நாளுக்குள் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    அரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர்.

    தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்கக்கோரி அரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ×