என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJPரபேல் ஊழல்"

    • அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
    • 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதும், நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

    உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், உயரிய சிகிச்சை அளிக்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும், விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் சமீபகாலமாக, தொடர்ந்து பேருந்து விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்.
    • காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி::

    மாயேம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது.

    கடந்த சில ஆண்டாக எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விநியோகித்து வருகிறது.

    எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.வுக்கு மாற மாட்டார்கள் என கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?

    2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். 2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களை வழங்குவதற்கு சமமாகி விடும்.

    கோவாவில் பா.ஜ.க. அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

    கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரப்போகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் தேசிய இவிதான் செயலியை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் 3-வது முறையான ஆட்சி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு பிரதமர் தொடர்ந்து 3 முறை இருந்ததில்லை. நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, வேகம் 11 ஆண்டில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

    140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை 11 ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது.

    டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படிப்பு விஷயம் தெரியாதவர்கள், அவர்கள் செல்போன் பயன்படுத்த தெரியாது, இதை எப்படி பயன்படுத்துவார்கள்? என கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

    சத்தியமங்கலம் காட்டில் வெள்ளரிக்காய் வாங்கியபோது, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறியது. முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது.

    உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பிரதமர் மோடி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளார். இங்கிருந்தே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ராணுவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 2014-க்கு முன்பு ராணுவ தளவாடங்கள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டது.

    ஆனால் பிரதமராக மோடி வந்த பின்பு தொழில்நுட்பம் வளர்ந்து, ரூ.50 ஆயிரம் கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது.

    தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இவிதான் செயலி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சட்டசபையில் கேள்விகளை உடனடியாக செயலகத்துக்கு அனுப்ப முடியும். சட்டசபை அலுவல் பட்டியலை பார்க்கலாம். சட்டசபை, பாராளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த இவிதான் செயலி மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    நம் இந்திய நாடு 2027-ல் மிகச்சிறந்த வல்லரசு நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக, உலகின் விஸ்வகுருவாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

    உலகின் முதல் ஜனாப் பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறையிலும் நாடு முன்னேறி வருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல்.
    • தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், " இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ஐயா பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!" என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், " இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா அவர்கள்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

    இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' .

    • ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    கோவை:

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13-ந் தேதி பாரதீய ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப் பதில்லை. தண்ணீர் கிடைக்கா ததற்கு காரணம் ஆனை மலையாறு மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற் றப்படாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் நீண்ட கால கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், தற்போதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 13-ந் தேதி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில்ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றகோரிக்கை வைத்து மாவட்டத்தலைவர் வசந்தராஜன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன ்சத்திரத்திற்கு தண்ணீர்கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக கோரியும  கோரிக்கை வைக்கப்பட உள்ளது.  

    அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அசாம் கனபரிஷத் கட்சி நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது. #AsomGanaParishad #BJP #CitizenshipBill
    கவுகாத்தி:

    ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவில் தங்கி உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் 6 ஆண்டுகள் தங்கினாலே இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அசாம் கனபரிஷத் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். ஆனால் இதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அசாம் கனபரிஷத் கட்சி நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

    அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பா.ஜ.க. 61 இடங்களிலும், அசாம் கனபரிஷத் கட்சி 14 இடங்களிலும், போடோலாண்ட் மக்கள் முன்னணி கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணிக்கு சுயேச்சை ஒருவரும் ஆதரவு தெரிவித்து உள்ளார். தற்போது அசாம் கனபரிஷத் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும் பா.ஜனதா அரசுக்கு 74 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. #AsomGanaParishad #BJP #CitizenshipBill 
    ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் கேள்வி எழுப்பினால் சேற்றை வாரி இறைப்பதா? என மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #RafaleScam #Congress #BJP
    புதுடெல்லி:

    ரபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க மோதலில் உச்சமாக, ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைக்க ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளார் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு பதிலடியாக மத்திய அமைச்சர்கள் அனைவரும் பதில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில்:-

    ரபேல் விமான கொள்முதல் ஊழல் குறித்து கேள்வியை எழுப்பினால் பா.ஜ.க சேற்றை வாரி இறைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போது நாங்கள் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு நாங்கள் ஒப்பந்தம் கொடுத்தோம். ஆனால், பிரதமர் மோடி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். 

    இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அம்பானியிடம் கொடுத்துள்ளார். இது குறித்து நாங்கள் விளக்கம் கோரினால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தைகளையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையே பேசுகிறார்கள்.

    இந்த நாடு அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையை கேட்டிருக்கிறது, இப்போது மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்கிறது. பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்கு பிரதமரா?'' என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 
    டெல்லியில் இன்று நடைபெற்று வரும் பாஜக பொதுக்குழுவில் வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJPinternalpolls #AmitShah
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைவராக இருந்த நிதின் கட்கரி மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதால் பாஜக தலைவர் பதவியில் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதேபோல் அக்கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் கூடிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் தலைமை பதவியில் அமித் ஷா நீடிப்பார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    முன்னதாக,  டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கிய செயற்குழு கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமித் ஷா, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

    உயர்சாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாக சிலர் குறிப்பிடும் நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.


    மேலும், தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உரிய அங்கீகாரம் அளிப்பது உள்பட பாராளுமன்றத்தில் கிடப்பில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி நிறைவு உரையாற்றும்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. #BJPinternalpolls #AmitShah  
    வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் 24-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தயிருக்கிறோம் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

    திசையன்விளை:

    திசையன்விளை அனைத்து வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கடைபிடிக்க முடியாத சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்ட விதிகளை நிர்ணயம்படுத்த வேண்டும், 28 சதவிகிதம், 18 சதவிகிதம் வரி விதிப்புகளை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன அரசு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற நேரத்தில் இன்று பிலிப்காட் நிறுவனத்தை வாங்கி வால்மார்ட் நிறுவனம் பொய்யான புள்ளி விபரங்களை தருகிறார்கள்.

    ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று அப்பட்டமான பொய் புகாரோடு வால்மார்ட் நிறுவனம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். பிலிப்காட் நிறுவனம் வாங்கிய 87 சதவிதம் பங்குகளை உடனடியாக திருப்பி பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் வரும் 24-ந் தேதி ஆயிரக்கணக்காண வணிகர்களை தமிழகத்தில் இருந்து அழைத்து சென்று பேரணி மற்றும் தர்ணா நடத்தயிருக்கிறோம்.

    இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார். #vikramaraja

    சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சிக்கு தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்பட்டு வருகிறது. கட்சியை எப்படி நடத்த வேண்டும், அதன் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைகளை வழங்குவது உண்டு.

    இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா எப்படி எதிர்கொள்வது என்பது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று அந்த கூட்டம் முடிவு பெறுகிறது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தேர்தல் தொடர்பாக சில ஆலோசனைகளை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி உள்ளனர். அதில், தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்கள் செயல்பாடுகளை முற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதற்காக தனியாக சர்வே ஒன்றை எடுக்க வேண்டும். அவர்களுடைய செயல்பாடுகளை முற்றிலும் அலச வேண்டும். அவர்கள் தொகுதியில் எப்படி பணிகளை செய்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா? வருகிற தேர்தலில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை தர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    இவர்களில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும் நபர்கள் யாருக்கும் மீண்டும் டிக்கெட் கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்ற தொகுதிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.


    மேலும் உத்தரபிரதேசத்தில் தற்போது கட்சியின் நிலைமை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அங்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது பாரதிய ஜனதாவை எந்த வகையில் பாதிக்கும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக எதை செய்யலாம் என்றும் ஆலோசித்து உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தல் போலவே பெரும் வெற்றியை பெறுவதற்காக முக்கிய நபர்கள் பலரை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்ற கூட்டங்களை இந்த ஆண்டில் இன்னும் பல தடவை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக பிரதமர் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தேர்தலை சந்திப்பது தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். அப்போது கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக பிரதமருடன் அவர்கள் விவாதித்து உள்ளனர். #BJP #RSS
    ×