என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ்"
- அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டுக்கலில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழாவில் ஆர்.எஸ்.எஸ்.இந்தன் 'கான கீதம்' (பிரார்த்தனை பாடல்) பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'கான மேளா' (இசை கச்சேரி) நிகழ்ச்சியின் போது, தொழில்முறை இசைக் குழுவின் உறுப்பினர்களால் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கொடிகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோயில் திருவிழாவின் போது 'ஆர்.எஸ்.எஸ். கானகீதம்' பாடலைப் பாடுவது தீவிரமான கவலைக்குரிய விஷயம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், கோவில்களில் விதிமீறல் நடந்துள்ளது கவலைக்குரிய விஷயம். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவசம் போர்டை வலியுறுத்தினார்.
கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை, கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது.
- அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை.
வக்பு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, பாஜக இப்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தை தங்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயல்வதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் வக்பு வாரியத்தை விட கத்தோலிக்க திருச்சபை இந்தியாவில் அதிக நிலங்கங்கள் வைத்துள்ளதாக கட்டுரை ஒன்று வெளியானது.
இதை குறிப்பிட்டு பேசிய உத்தவ் தாக்கரே, " பாஜக 45-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வேளையில், ராமரின் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும்.
வக்பு சட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டமாக கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தின் மீதும் கண் வைப்பது இருக்கும். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அவற்றின் முதன்மையான நிலங்களை வழங்குவார்கள். அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை. அவர்கள் அதைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர். அனைவரும் கண்களைத் திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது
- சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அங்கமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று முன்தினம் அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்ந்த இதழான Organiser, "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்எஸ்எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரை குறிவைக்கிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் எச்சரித்தார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து கூறியதாவது, வக்பு மசோதாவுக்குப் பிறகு சங் பரிவாரம் தேவாலயங்களைக் குறிவைத்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகிறது. தேவாலய நிலங்கள் பற்றி குறிப்பிடப்படும் தேவையற்ற கருத்துகள் ஆபத்தான அறிகுறிகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.
இந்தக் கட்டுரையின் மூலம் ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான நோக்கம் வெளியே வந்துள்ளது. சங் பரிவாரம் முன்வைக்கும் பெரும்பான்மை வகுப்புவாதம் மற்ற மதங்களின் மீது பகையை உண்டாக்கும் வேலையே.
சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அங்கமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது
- ஆர்.எஸ்.எஸ் மற்றொரு சிறுபான்மையினரான கிருஸ்த்துவர்களை இதன் மூலம் குறிவைத்துள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக சட்டமானது.
இந்த மசோதா சிறும்பான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. முதல்வர் ஸ்டாலினும் வழக்குத் தொடர்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்ந்த இதழான Organiser, "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்எஸ்எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரை குறிவைத்துள்ளது என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்தார்..
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "வக்ஃப் (திருத்த) மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்பது உறுதியாகியுள்ளது.
ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் இன்று முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.
இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர், "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது ? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரான கிருஸ்த்துவர்களை இதன் மூலம் குறிவைத்துள்ளது.
1930களில், ஹிட்லர் தலைமையிலான நாஜி கட்சியினர், இதே பாணியில் முதலில் கம்யூனிஸ்டுகளையும், அடுததாக தொழிற்சங்கவாதிகளையும், பின்னர் யூதர்களையும் பிடித்து அழித்தனர். அதே பாணியில் இன்று பாஜக தலைமையிலான சங் பரிவார் குழுவினர், முதலில் முஸ்லீம்களை குறி வைத்துள்ளன. அடுத்தது கிருஸ்த்துவர்களை குறி வைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது. அன்று ஜெர்மனியில், அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை. ஆனால் இன்று சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளனர்.
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்து வரும் இத்தகைய நாச வேலைகளை காங்கிரஸ் பேரியக்கம் முழு மூச்சாக எதிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
- "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்"
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சிறும்பான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. முதல்வர் ஸ்டாலினும் வழக்குத் தொடர்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்ந்த இதழான Organiser, "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்எஸ்எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரை குறிவைக்கிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "வக்பு மசோதா முஸ்லிம்களைத் தாக்குகிறது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று நான் கூறியிருந்தேன்.
ஆர்எஸ்எஸ் தனது கவனத்தை கிறிஸ்தவர்கள் மீது திருப்ப அதிக நேரம் எடுக்கவில்லை. இத்தகைய தாக்குதல்களிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே - அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமை" பதிவிட்டுள்ளார்.
- பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?.
- பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்ற அவர் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளதால், விரைவில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் "பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?. பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார். ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றிருந்தார். அடுத்த 2029ஆம் மக்களவை தேர்தலிலும் மோடிதான் பிரதமர் எனத் தெரிவித்திருந்தார்.
- விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடிபத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு மோடி விமான நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாக தலைமை அலுவலகமான ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஹெட் கேவர் ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்று இருந்தார். அவர் இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அங்கு சென்றார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-
குடிபத்வா பண்டிகையையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நாட்டின் சிறந்த டாக்டர்களின் ஆலோசனை, முதன்மை சிகிச்சை மற்றும் கூடுதல் உதவிகளை பெற முடியும். நோய் கண்டறிதலுக்காக அவர்கள் இனி நூற்றுக்கணக்காக கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய தேவையில்லை.
நாங்கள் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் 3 மடங்கு உயர்த்தியுள்ளோம்.
கொரோனா தொற்று காலத்தின் போது உலகத்துக்காக இந்திய உதவியாக இருந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் ஆர்.எஸ். தொண்டர்கள் தன்னலமின்றி பணியாற்றுகிறார்கள். மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவினார்கள்.
அடிமை மனநிலையையும் அடிமைத்தனத்தின் சின்னங்களையும் நிராகரிப்பதன் மூலம் இந்தியா இன்று முன்னேறி வருகிறது. அடிமை மனநிலையுடன் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம்.
உலகின் அனைத்து மூலைகளையும் சென்றடையும் உலகம் ஒரு குடும்பம் என்பதே எங்கள் மந்திரமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அந்த புத்தகத்தில், 'டாக்டர் ஹெட்கேவர், குருஜி ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கங்கள். உங்களின் நினைவுகளை போற்றி, இங்கு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்த இடம், நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு ஒரு சக்தி மிகுந்த இடமாகும். நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும்' என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளி நோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றுள்ளார். நரேந்திர மோடி இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். மேலும் ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும் இருப்பதால் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அங்கு ஆலோசனையை முடித்துவிட்டு புறப்பட்ட பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.
நாக்பூரில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்-வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். 2024 பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அவர் அங்கு அவா் செல்கிறாா்.
இதையொட்டி பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து அவா் மக்களிடையே உரையாற்றுகிறார்.
- ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது.
- அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு ஒப்படைப்பதே பாஜக மாடல்.
ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி அமைப்பு சென்றால் இந்தியா அழிந்துவிடும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).
கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள். இது மிகவும் மெதுவாக தற்போது நடந்து வருகிறது.

இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா பற்றி பெருமையடித்தது குறித்து விமர்சித்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரதமர் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாடல், அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு தாரைவார்ப்பதாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் இந்தியா கூட்டணியின் மாணவர்கள். நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. நாம் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி ஆர்எஸ்எஸ்ஸை பின்னுக்குத் தள்ளுவோம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.
இதற்கிடையே ஜந்தர் மாந்தரில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
- ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா?
- தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
சென்னையில் இன்று பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்- மந்திரிகள் உள்பட 24 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பார்த்து உண்மையிலேயே கவலைப்படுகிறீர்களா? அல்லது அரசியல் நோக்கத்திற்காகவா? என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கூறியதாவது:-
என்னுடைய கருத்தின்படி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காகவா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் இது பற்றி சிந்திக்கட்டும். ஆனால் மீடியாக்கள், உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கப்பட்டுள்ளதா? என அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொடங்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனையும் தொடங்கப்படவில்லை. சட்டம் தொடர்பான வரைவு கூட இன்னும் செய்யப்படவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு சட்டம் வரைவு உருவாக்கும்போது, மத்திய அரசு செயல்முறைக்கு தயாராகும்போது, இது தொடர்பாக கேள்வி எழும்.
தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரையொருவர் நம்புவதும், அனைவரையும் அழைத்துச் செல்வதும் ஜனநாயகத்தின் சாராம்சம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்றவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்துள்ளார்.
- தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
- அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால் தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
அதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாஜகவை தோற்கடிக்க முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் விஷம். இது குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது நம் நாட்டின் கட்டமைப்பில் பரவினால், அனைத்தையும் அழித்துவிடும் என்று பேசினார். இந்த உரைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

துஷார் காந்தி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நெய்யாட்டின்கரா நகராட்சி கவுன்சிலர் மகேசன் நாயரும் அடங்குவார்.
இந்நிலையில் துஷார் காந்திக்கு எதிரான செயல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டித்துள்ளார்.

காங்கிரசும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய துஷார் காந்தி, கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தையும் கருத்தையும் திரும்பப்பெறப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.