என் மலர்
மகாராஷ்டிரா
- இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது.
- சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரு அணிகளும் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
நடப்பு தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 72 ரன்னில் வீழ்ந்தது. அதற்கு பிறகு நெருக்கடியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்றது. லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலம்.
அபிஷேக் சர்மாவின் பேட்டிங் கவலையை ஏற்படுத்துகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்), இஷான் கிஷன் (224), திலக் வர்மா (178 ரன்), ஷிவம் துபே (166) ஆகியோர் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா (9 விக்கெட்), வருண் சக்கரவர்த்தி (12 விக்கெட்) ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் (172 ரன், 6 விக்கெட்) சிறப்பாக செயல்படுகிறார்.
இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்து எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவது அவசியம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி புரூக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 1 சதம், 1 அரை சதத்துடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். வில் ஜேக்ஸ், பெத்தல், பான்டன், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சில் அதில் ரஷீத் (11 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், டாசன் (தலா 10 விக்கெட்) ஓவர்டன் (9), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் தடுமாறிய இங்கிலாந்து அணி அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடமுடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரையிறுதியில் ஆடுகிறது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் ஏற்படாது.
- விபத்துக்குள்ளான விமானத்தை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் பராமரித்து வந்தது.
- தந்தையின் மரணத்திற்கு இந்த அலட்சியமே காரணம்.
மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தனது தொகுதியான பாரதமதிக்கு சென்றுகொண்டிருந்தபோது தனி விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவருடன் விமானிகள் இருவர், உதவியாளர் ஒருவர், விமான பணிப்பெண் ஒருவர் என மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் தான் அங்கம் வகித்த பாஜக கூட்டணிக்கு எதிர் கூட்டணியில் அஜித் பவார் கட்சி போட்டியிட்டது.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரம் செய்தார். எனவே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக விபத்துக்குள்ளான விமானத்தின் தகவல்கள் அடங்கிய கருப்புப்பெட்டி சேதம் அடைந்தது அஜித் பவார் மகன் உட்பட பலரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 என்ற அந்த தனி விமான சேவையை வழங்கிய விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் (VSR Ventures) நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் மீது அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் பராமரித்து வந்தது.
ஜெய் பவார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் உரிமையாளர் ரோஹித் சிங், விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே விமானி இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது பதிவாகி உள்ளது. இது மற்றொரு விமானம் ஆகும்.
"விமானம் பறக்கும் போது இத்தகைய அலட்சியம் ஏற்புடையதல்ல. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் மரணத்திற்கு இந்த அலட்சியமே காரணம் என்று கூறியுள்ள ஜெய் பவார், ரோஹித் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் விமான விபத்து விசாரணை வாரியம் சமீபத்தில் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை குறித்து ஜெய் பவார் மிகுந்த ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை முடியும் வரை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மகாராஷ்டிரா மக்களுக்கும் விபத்து குறித்த உண்மையான மற்றும் வெளிப்படையான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- நிறுவனத்தின் 21 இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரவுல் கானில் சுரங்கம் மற்றும் வெடி பொருள் உற்பத்தி செய்யும் எஸ்.பி.எல். எனர்ஜி நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 21 இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 9 பேரை கைது செய்தனர்.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்பு தகவல் அமைப்பு ஆகியவற்றின் ஆரம்ப அறிக்கையின்படி, இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், அந்த தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால் அவர்களை அடையாளம் காண குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் டி.என்.ஏ. சோதனைக்காக எடுக்கப்பட்டு வருகின்றன.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
- இன்று காலை நடந்த வெடிவிபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
- தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரவுல்கானில் உள்ள சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தியாளரான எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதனை மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்.) குழு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தது. இன்று காலை 7 மணி முதல் காலை 7.15 மணிக்குள் நிறுவனத்தின் டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் இந்த சம்பவம் நடந்ததாக எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் பிரதிநிதிகள், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
மீட்பு பணிகள் நடந்து வருவதாக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார், இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார். குண்டுவெடிப்பு நடந்த உடனேயே காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போடர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு துயர சம்பவமாக இந்த விபத்து நடந்துள்ளது.
- அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
- போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவார் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை எதிர்த்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலும், பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்ததாலும் அவரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பின.
மேலும் பெரிய சேதங்களை தாங்கும் விமானத்தின் கருப்பு பெட்டி இந்த விபத்தில் சேதமடைந்ததாக கூறப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுத்தது. அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
இந்த சூழலில் இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தற்போது தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, விபத்து நடந்த சமயத்தில் பாராமதி பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வை தூரம் மிகக் குறைவாக இருந்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 மீட்டர் கண்பார்வை தூரம் தேவை. ஆனால், விபத்தின் போது இது மிகவும் குறைவாக இருந்துள்ளது.
விமானம் தரையிறங்கும் முன் விமானிகள் பார்வை தூரம் குறித்துக் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3,000 மீட்டர் இருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தரையிறங்குவதற்குப் போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் இயக்கியுள்ளார். அவரே விமானிகளுடன் தொடர்புகொண்டு தரையிறங்க அனுமதி அளித்துள்ளார்.
பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. மேலும், ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன், அதில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்ய AAIB திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என AAIB பரிந்துரைத்துள்ளது.
விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு அளவிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக AAIB தெரிவித்துள்ளது.
- தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என குற்றம்சாட்டப்பட்டவர் வாதிட்டார்.
- உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும்
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மடிக்கணினி வாங்கித் தர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம், 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தொழிலதிபரான தனது தாய்மாமன் மீது பாலியல் புகார் அளித்தார்.
பள்ளிக்குச் செல்லும்போது அவர் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை தவறாகத் தொட்டு முத்தம் கேட்டதாகவும் அந்தச் சிறுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என்றும், தற்போது குடும்ப உறுப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வழக்கை மேலே தொடர விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ஆர். போன்ஸ்லே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர்.
மேலும் தங்கள் உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படிப்புக்கு செல்ல உள்ளதால், அவருக்கு ஆப்பிள் மேக்புக் அல்லது அதற்கு இணையான ஒரு உயர்தர லேப்டாப்பை ரூ.1.5 லட்சம் அபராதத் தொகையில் இருந்து வாங்கித் தர வேண்டும்.
லேப்டாப் வாங்கியது போக மீதமுள்ள தொகையை உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த பழங்களின் மீது எலி மருந்தை தடவினார்.
- பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
மும்பையில் வியாபாரி ஒருவர் பழங்களின் மேல் எலி மருந்தை தடவிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில் பழ வியாபாரி ஒருவர், விற்பனைக்காக வைத்திருந்த பழங்களின் மீது எலி மருந்தை தடவி உள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, போலீசார் உடனடி நடவடிக்கையாக 2 பழ வியாபாரிகளை கைது செய்து, அவர்களின் கடைக்கு சீல் வைத்தனர்.
பழ வியாபாரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எலிகளிடமிருந்து பழங்களை பாதுகாக்க இதை பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.
எலி மருந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதால் வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல்.
- அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி மதிப்பிலான மும்பை இல்லத்தை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.
Yes Bank தொடர்பான பணமோசடி வழக்கில் இதோடு சேர்த்து ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED முடக்கியுள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது.
- தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.

இந்த விபத்தில் சதிச் செயல் இருக்கலாம் என்று பலரை போலவே அஜித்பவாரின் மருமகனும் எம்.எல்.ஏவுமான ரோஹித் பவார் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறார்.
தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் மதிப்பு ரூ.35 கோடி மட்டுமே, ஆனால் அது ரூ.210 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ரோஹித் பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னணியில் உள்ள நிதி நோக்கங்கள் குறித்து விசாரணை தேவை என அவர் கோரியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய வி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் விமான போக்குவரத்து இயக்குனரகமான DGCA அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளது.
எனவே விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து ராம் மோகன் நாயுடு விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ரோஹித் பவார் விரிவான கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
- தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் இந்த திட்டத்தை தொடர்ந்தது.
- பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறும் பெண்களுக்கு ரூ.500 மட்டுமே வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 2024 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு சில மாதங்கள் முன் ஆளும் பாஜக கூட்டணி அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பாஹின் யோஜ்னாவை அறிமுகம் செய்தது.
நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் இந்த திட்டத்தை தொடர்ந்தது.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ், 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 2.4 கோடியாக இருந்த பெண் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025 டிசம்பரில் 1.57 கோடியாக குறைப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 90 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சரிபார்ப்பு பணி, வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கும் e-KYC செயல்முறையில் குளறுபடி எனக் கூறி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறும் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,500-ல் இருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு, நிகர தொகையாக ரூ.500 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
- ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
- மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
மகாராஷ்டிராவின் பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் தொடர்ந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்க உத்தரவாத கடிதம் கொடுத்திருந்தார்.
அவர் காலமான நிலையில், வேறு ஒருவர் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை காரணமாக, ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் நீதிமன்றத்தில் இன்று உத்தரவாத கடிதத்தை அளித்தார். நீதிமன்றம் அதை ஏற்று ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
முன்னதாக இந்த விஷயத்தில் உண்மையை முன்வைப்பதாவும், மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஒரு கொலை குற்றவாளி பாஜக தலைவராக உள்ளார் என அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேற்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே கண்டறிய முடியும்.
- முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அவரது இளைய மகன் ஜய் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில், "விமானத்தின் பிளாக் பாக்ஸ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. மகாராஷ்டிர மக்களுக்கு இந்த விபத்தின் முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை உண்டு.
விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தடை விதித்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெய் பவார் தாயாரும் தற்போதைய துணை முதல்வருமான சுநேத்ரா பவார் மற்றும் சகோதரர் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் பட்நாவிஸை சந்தித்து இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இருந்தனர்.






