search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று தேர்தல்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் வாக்குப்பதிவு.

    நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்கள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படும் ஜோதி ஆம்கே நாக்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார்.

    2009-ம் ஆண்டில், ஜோதி ஆம்கேக்கு உலகின் 'உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது.

    தற்போது, ஜோதிக்கு 30 வயதாகிறது.

    • நாக்பூரில் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
    • 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

    நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று வாக்களித்த மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் நிதின் கட்காரி பேசியதாவது:-

    நாட்டின் மிகப்பெரிய பண்டிகையை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.

    நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

    இந்த தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்போது முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு உள்ளது.
    • அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

    மும்பை:

    நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு உள்ளது. அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஜுகுவில் ஷில்பா ஷெட்டி பெயரில் உள்ள வீடு, புனேயில் உள்ள பங்களா மற்றும் ராஜ்குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

    • சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

    சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுசெய்தனர்.

    இதற்கிடையே, சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை நேரில் சென்றார். அவர் சல்மான் கான் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் மந்திரி சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது ஐபிஎல் லீக் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், சி.எஸ்.கே .அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பிசிசிஐ தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2011 உலகக் கோப்பை டிராபி மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

    மேலும், மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.

    • இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
    • மும்பை கிரைம் பிரிவு போலீசார் சல்மான் கான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் 2 பேர் அதிகாலை 5 மணிக்கு சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர் எனவும் தெரிய வந்தது.

    தகவலறிந்து மும்பை கிரைம் பிரிவு போலீசார் சல்மான் கான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது
    • உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது - மோடி

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர்.

    அப்போது பேசிய மோடியும் அமித் ஷாவும் , உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது என்று தெரிவித்தனர்.

    இதற்கு விளக்கம் அளித்த உத்தவ் தாக்கரே "சிவசேனா போலியானது என்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எங்கள் கட்சி அவரது கல்லூரி பட்டமல்ல" என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், அமித் ஷாவிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களது இந்த தேர்தல் பிரசாரத்தில் உங்களிடம் உள்ள தலைவர்களில் எத்தனை பேர் பாஜகவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய மக்களை தனது அடிமைகளாக நடத்தும் மோடி, 'பாரத் சர்க்கார்' என்பதற்குப் பதிலாக 'மோடி சர்க்கார்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் கோழைகள் அல்ல, இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • நாட்டு மக்களை இந்தியா கூட்டணி பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
    • மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்து விடும்.

    பிரதமர் மோடி இன்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராம்டெக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், அதன்பின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புக்கு ஆபத்து என பொய்த் தகவலை பரப்பி வருகின்றனர். நான் அரசியல் வந்தததில் இருந்து, ஒரு தேர்தலில் கூட இந்த விசயத்தை அவர்கள் கூறவில்லை. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா?. சாதாரண ஏழை நபரின் மகன் பிரதமரான நிலையில், அவர்கள் ஜனநாயகம் ஆபத்து என பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

    நாட்டு மக்களை இந்தியா கூட்டணி பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

    அவர்கள் இந்து தர்மத்துடைய சக்தியை ஒழிக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட இந்தியா கூட்டணியை ஒரு தொகுதியில் கூட நீங்கள் வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா?. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா உங்களிடம் வந்துள்ளது. உங்களது ஒவ்வொரு வாக்குகளும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்கு மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளை தண்டிப்பதற்கும்தான்.

    அவர்கள் என்னுடைய மறைந்த தாயார் அல்லது தந்தை குறித்து அவதூறு செய்யும்போது, இனிமேல் மோடி ஆட்சிதான். வாக்கு எந்திரம் (EVM) குறித்து அவர்கள் கேள்வி எழுப்பும்போது இனிமேல் மோடி ஆட்சிதான்.

    • நானா படோலின் கார் பாந்த்ரா அருகே பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது.
    • பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார் நானா படோல்.

    இந்நிலையில், நானா படோலின் கார் பாந்த்ரா நகருக்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது தெரிய வந்தது.

    இந்த விபத்தில் நானா படோலே அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், இந்த விபத்தில் அவரது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவரை கொல்ல முயற்சியா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்துள்ளனர்
    • பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்

    மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

    ×