என் மலர்
நீங்கள் தேடியது "மடிக்கணினி"
- டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
- ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் சுமார் 20 லட்சம் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விலைகளை கோர ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.
அதன்படி பல நிறுவனங்கள் தங்களது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
2025-26 தமிழக பட்ஜெட்டில் கல்லூரி மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிப்பட்டது. முதற்கட்டாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்தார்.
- 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
- 2025 - 26 நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க, மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி திட்டம் என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.எஸ்.எஸ்.டி. கொண்ட ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையில் இந்த மடிக் கணினி இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- மடிக்கணினிக்கு தேவையான ‘சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை.
சென்னை:
சென்னையில் நடந்த தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான விவரங்களை பதிவேற்றம் செய்யும் நிதித்துறையின் இணையதளத்தில் பிரச்சினை இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து, தற்போது அவை சரிசெய்யப்பட்டு, அந்த இணையதளம் வழக்கம்போல் இயங்குகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் தற்போது வழங்கப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில், 11 லட்சம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியிருக்கிறது. மடிக்கணினிக்கு தேவையான 'சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை. இதனால் விரைவில் கொள்முதல் செய்து, மாணவ-மாணவிகளுக்கு தேவையான மடிக்கணினிகள் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
- சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது.
சேலம் :
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் திருடியதை அறிந்த அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அலுவலக மடிக்கணினிகள் தொழிலாளர்கள் "டார்க் வெப்" பயன்படுத்துகின்றனர்.
- தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை தொழிலாளாளர்கள் பார்க்கின்ற்னர்.
90% தொழிலாளர்கள் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளை தனிப்பட்ட வேலைகளுக்கே பயன்படுத்துகின்றனர் என்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகளை உருவாக்கும் என்று ESET தெரிவித்துள்ளது.
ESET நடத்திய ஆய்வில், பணியாளர்களில் பெரும் பகுதியினர் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை பார்ப்பது, இணைய சூதாட்டத்தில் ஈடுபடுவது, தடை செய்யப்பட்ட டார்க் வெப் தளங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆய்வில் பதில் அளித்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (63%) பேர் "டார்க் வெப்" தளங்களை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவதாகவும் 17% பேர் தினமும் டார்க் வெப் தளங்களை பயனபடுத்துவதாகவும் தெரிவித்தனர். பெண்களை விட ஆண்களே அதிக அளவில் டார்க் வெப் பயன்படுத்துகின்றனர்.
சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகள் இருந்தாலும், அலுவலக மடிக்கணினிகளில் தங்களது தனிப்பட்ட செயல்பாடுகளை கண்காணிப்பது தங்களது தனியுரிமையை மீறும் செயல் என்று மூன்றில் ஒருவர் (36%) கருத்து தெரிவித்தனர்.
ஐந்தில் ஒருவர் (18%) தங்கள் அலுவலக மடிக்கணினிகளில் இணையப் பாதுகாப்பு மென்பொருள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.






