என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bombay High Court"
- 4 சட்ட கல்லூரி மாணவர்கள் வழக்கை தொடர்ந்திருந்தனர்
- மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிப்பதை தவிர்த்தது நீதிமன்றம்
உத்தர பிரதேச அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது.
நாளை, ஜனவரி 22 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்தியாவில் 15 மாநிலங்கள் இந்நிகழ்ச்சிக்காக விடுமுறை அறிவித்தன. அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலமும் ஜனவரி 22 அன்று அரசு விடுமுறை என அறிவித்தது.
ஆனால், இந்த விடுமுறையை எதிர்த்து 4 சட்ட கல்லூரி மாணவர்கள், பொதுநல வழக்கு (Public Interest Litigation) ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இன்று சிறப்பு அமர்வில், ஷிவாங்கி அகர்வால், சத்யஜித் சால்வே, வேதாந்த் அகர்வால் மற்றும் குஷி பாங்கியா எனும் 4 சட்ட கல்வி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள், ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாவது:
விடுமுறைகள் குறித்த முடிவுகள் மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. மதசார்பின்மைக்கு ஒத்து போகும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த மனுவில் அவ்வாறு மாநிலம் செயல்படவில்லை என காட்ட மனுதாரர்கள் தவறி விட்டனர். இந்த மனு, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல; பொது விளம்பர வழக்கு (publicity interest litigation). எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள் என கருதி, அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, விசாரணைக்கு எடுத்து கொள்ளும் முன்பே வழக்கு குறித்த விவரங்கள் ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டதற்கு, தங்களுக்கும் அது தெரியாது என அவர்கள் பதிலளித்தனர்.
20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை சட்டப்படி கோர்ட்டு அனுமதி பெற்றால் மட்டுமே கலைக்கமுடியும். இந்தநிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரின் தந்தை தன் மகளின் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார். சிறுமிக்காக வாதாடிய வக்கீல், ’சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி 24 வார கர்ப்பமாக இருப்பது தற்போது தான் தெரியவந்தது. அவரின் கருவை கலைக்க அனுமதி அளிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் கருவை கலைக்க அவர்கள் அனுமதி வழங்கினர்.
மேலும் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்ததாகவும், இந்த நிலையில் அவர் கற்பழிப்புக்கு ஆளானதால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டதாகவும்’ தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவளின் பெற்றோர் மாநில சட்ட சேவை ஆணையத்தை அணுகி சட்ட உதவி மற்றும் சிறுமியின் கல்விக்கு தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். #BombayHighCourt #TeenCancer
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அபு சலீம் (வயது 46). இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் கவுசர் பகர் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். எனவே இதற்காக தனக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
எனவே இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் அவர் முறையிட்டார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி வி.கே.தகில்ரமணி, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அபு சலீமை பரோலில் விட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரது பரோல் மனுவை தள்ளுபடி செய்தனர். #BombayHighCourt #AbuSalem #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்