என் மலர்
கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
டைரக்டர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் 75-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டைரக்டர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு போலீசார் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவாலுக்கு எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.
சிதம்பரம் எஸ். பொதுவால் மீது அண்மையில் இளம் பெண் அளித்த பாலியல் புகாரை விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது.
- தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படம் மறுதணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் வெளியாவது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை அடுத்து படக்குழு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.
இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர்.
ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தேதி பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், "லீடர்" திரைப்படம் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"லீடர்" திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 21-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது "மரகத மலை."
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும், எல்.ஜி மூவிஸ்நிறுவனத்துடன் இணைந்து எஸ். லதா இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
எல்.வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி. சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பா.விஜய், கே.டி. சேஷா பாடல்களை எழுதியுள்ளனர். கே. தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலான "ஆடினே இருப்பேன்" சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடலில் அஜித் குமார் ரேசிங், பென்குயின் என சமீபத்திய டிரெண்டிங் சம்பவங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டன. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்தது. முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் `துரு துரு' நாளை மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடலை விவேக் எழுத, கங்கை அமரன் பாடியுள்ளார். முதல் பாடலை போன்றே இரண்டாவது பாடலும் பெரும் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், 'தாய் கிழவி' படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ்.
- முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகர்கிறது இந்த கதை.
கார் மெக்கானிக்காக வேலை செய்யும் பால்ராஜ், தனது மனைவி காயத்ரி ரேமாவுடன் வாழ்ந்தாலும் அவர்களது இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகிறது. இந்த நிலையில், குடிகார கணவனை இழந்த சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜ்க்கு ரகசிய காதல் உருவாகிறது.
ஒருபுறம் இந்த காதல் வளர்ந்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுவேதா மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவி மரியாவுக்கும் மோகம் ஏற்படுகிறது. இதனால் மூன்று பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கார் மெக்கானிக்காகவும், குடும்ப வாழ்க்கையில் குழப்பத்துடன் இருக்கும் மனிதராகவும் நாயகன் பால்ராஜ் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட விரிசல், அதனால் ஏற்பட்ட மன வேதனை, மறுபக்கம் புதிய காதலால் கிடைக்கும் ஆறுதல் ஆகிய உணர்வுகளை அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காயத்ரி ரேமா, கணவன் மீது கோபம் கொண்ட மனைவியாக தனது எதிர்ப்பை கண்களின் மூலம் வெளிப்படுத்தும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். சுவேதா ஸ்ரீ, வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்த பெண்ணாகவும், புதிய வாழ்க்கையை தொடங்க விரும்பும் மனிதராகவும் கதைக்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா தனது அனுபவமிக்க வில்லன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
இயக்கம்
குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ். முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகரும் இந்த கதையில், திரைக்கதையில் இன்னும் வலுவான தருணங்கள் இருந்திருந்தால் படம் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவு இசை
உதயன் ஒளிப்பதிவு மற்றும் விஜய் பிரபு இசை கதைக்கு தேவையான அளவில் மட்டுமே அமைந்துள்ளது.
- பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள், அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த X தளப் பதிவில் அவர், "எங்கள் ஆண்கள் அணி, தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்! ஆண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம், பெண்கள் ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன்கள்.
ரஞ்சி டிராபி முதல் ஐ.பி.எல். வரை இந்தியாவின் ஆழமான உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு சான்று. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இதுபோன்ற உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தால் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்திய இளைஞர்களின் ஆற்றல் வரம்பற்றது.
பள்ளத்தாக்குகளில் இருந்து பிரமாண்டமான மைதானங்கள் வரை, குழந்தைப் பருவ கனவுகளில் இருந்து உலக சாம்பியன்கள் வரை - இந்தியா உயர்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணிக்கு திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா எக்ஸ் தள பக்கத்தில் "இந்தியா தி சாம்பியன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், 'என்ன ஒரு அணி, என்ன ஒரு சிறப்பான ஆட்டம்... நாட்டிற்கு என்ன ஒரு பெருமையான தருணம். டி20 உலகக் கோப்பையை வென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், 'நாம ஜெயிச்சிட்டோம், என்ன ஒரு போட்டி' என தெரிவித்துள்ளார்.
நடிகர் சதீஷ் எக்ஸ் தள பக்கத்தில், சக்திவாய்ந்த அணியின் சக்திவாய்ந்த வெற்றி பல சாதனைகளை முறியடித்துள்ளது. சஞ்சு, பும்ரா, இஷான், ஹார்டின், வருண், ஆக்சர் துபே, அபிஷேக் மற்றும் சூர்யாவை நேசிக்கிறேன்... என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம்பிரபு, 'டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்' என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றிருந்தார். பெங்களூருவில் கட்டப்பட்டு இருந்த கிம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. இதனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றது அந்த விழாவுக்கு வந்தவர்களை திணறடித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். மருத்துமனையை திறந்து வைக்கும் தகவல் அறிந்து அங்கு கூடிய ரசிகர்களால் பரபரப்பான சூழல் உருவானது. மிகக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் ரசிகர்கள் திரண்டதால், மருத்துவமனைக்குள் தள்ளுமுள்ளு சூழல் உருவானது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் விழா ஏற்பட்டாளர்கள் திணறினர்.
இதையடுத்து காவல் துறையினர் கூட்டத்திற்குள் நுழைந்து ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ காண ஒன்று திரண்ட ரசிகர்களால் திறப்பு விழாவுக்காக தயாராகி இருந்த நகரும் படிக்கட்டுகள் உள்பட மருத்துவமனை உள்கட்டமைப்புகள் சேதமடைந்தது.
புதிய மருத்துவமனை திறப்பு விழாவின் போது திடீரென அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியது, அங்கு கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
- சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
- சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
- யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன்.
'இதுதாண்டா போலீஸ்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் -ஜீவிதாவின் இளைய மகள் ஷிவாத்மிகாவும் நடிகை ஆவார். தமிழில் 'பாம்', 'ஆரோமலே' படங்களில் நடித்துள்ள சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷிவாத்மிகாவிடம், 'என்ன மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கும் போது, "யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன். எனக்கு ஆக்ஷன் கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனது தந்தையை போல ஆக்ஷனில் கலக்க விரும்புகிறேன். அதேவேளை காதல் நிரம்பி வழியும் படங்களிலும் நடிக்க துடிக்கிறேன். நல்ல கதைகள் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.








