என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
    • திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

    சமீபத்தில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்தனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் விஜயை சந்தித்தனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ஏன்டி விட்டு போன? பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கொ சேஷா வரிகளில் சிலம்பரசன் பாடியுள்ளார்.

    • விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.
    • பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா புதிரா பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளது என வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    திரைப்படத்தின் இசை அப்டேட்டை தற்பொழுது ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் பின்னணி முடிவடைந்துள்ளதாகவும். படத்தின் வெளியீட்டிற்காக ஆயுத்தமாகி கொண்டு இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
    • நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது

    தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்புகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.

    இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

    பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்
    • விக்ரமின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியீடு

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.

    இந்நிலையில், வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தது.

    இந்த் வழக்கின் விசாரணையில் வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வீர தீர சூரன் படத்தின் காலை, மதிய காட்சிகள் திரையிடப்படவில்லை.

    இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த B4U நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.

    இதனையடுத்து, வீர தீர் சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களுக்குள சேட்டிலைட் உரிம ஆவணங்களை வழங்க வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து வீர தீர சூரன் படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    வீர தீர சூரன் படம் வெளியீடு தாமதமானதற்காக படக்குழுவினர் சார்பாக விக்ரமின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று அந்த வீடியோவில் இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார். 

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.

    இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வீர தீர சூரன் படத்தின் 9 மணி காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 9 மணி காட்சிக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்தில் பணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்யவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த B4U நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.

    இதனையடுத்து, வீர தீர் சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களுக்குள சேட்டிலைட் உரிம ஆவணங்களை வழங்க வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து இப்படம் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறத

    • சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
    • நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.

    நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

    எம்புரான் படம் வெற்றி பெறவேண்டி சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மம்முட்டிக்காக மோகன்லால் வழிபடு நடத்தியது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணம் என்று நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் பாராட்டினார்.

    அதே சமயம் மம்முட்டி ஒரு முஸ்லிம் என்றும் இந்து முறைப்படி அவருக்கு பிரார்த்தனை செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கையை மீறுவதாகும் என்று மற்றொரு தரப்பினர் இதற்கு தெரிவித்துள்ளனர்.

    இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மோகன்லாலிடம் மம்முட்டி கூறியிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று 'மத்யமம்' செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரான அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
    • போஸ்டரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ஆர்.சி. 16 படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

    இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த நிலையில், ஆர்.சி. 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராம் சரணின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ள படத்தின் போஸ்டரில் இந்தப் படத்திற்கு 'பெட்டி' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம் சரண் சுருட்டு பற்ற வைத்து மாஸாக காட்சியளிக்கிறார். இத்துடன் கையில் மட்டை ஒன்றை வைத்துக் கொண்டு நிற்கிறார். போஸ்டரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.

    இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வீர தீர சூரன் படத்தின் 9 மணி காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 9 மணி காட்சிக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்தில் பணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்யவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • திருவனந்தபுரத்தில் மட்டும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கூட்ட நெரிசலால் வன்முறை மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

    கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களின் அதிக கூட்ட நெரிசலால் வன்முறை மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த காலங்களில் ஐதராபாத்தில் 'புஷ்பா-2' பட பிரிமீயர் ஷோவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.

    நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

    இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.

    படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.

    நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி உள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை ஸ்டுடியோவாக மறுகட்டமைபு செய்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரும் வியக்க வைத்தது.

    இதனிடையே, நயன்தாரா தற்போது 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து வழிபாடு செய்தார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். இதன்பின் கோவிலின் கலைநயத்தை புகைப்படம் எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    ×