என் மலர்
- டூரிஸ்ட் பேமிலி படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2-ஆவது சிங்கிள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லரை இயக்குனர் அட்லி அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டிரெய்லரில், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்து தப்பிக்க போராடும் குடும்பத்தின் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன்.
- இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர். தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும் என நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும்.
என ஆண்ட்ரியா கூறினார்.
- பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் 26 பேர் உயிரிழப்பு.
- அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும்.
ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.
அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர்!
தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் புகார் தெரிவித்தார்.
- நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை வின்சி அலோசியஸ், படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், அது போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நடிகர் பற்றி விவரங்களை நடிகை வின்சி அலோசியஸ், நடிகர்கள் சங்கத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் போதை பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரை தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு வழங்கியதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
படப்பிடிப்பில் நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். நடிகரின் பெயரை வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பாக விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் கூறினார். இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு விவாதித்தது.
போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்க முடியாது. போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஷைன் டாம் சாக்கோவை திரைப் படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம். தற்போது நாங்கள் உள் புகார்கள் குழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து வருகிறார்.
- இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து சூரி மண்டாடி படத்தில் நடித்து வருகிறார்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் மே1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
- சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோவை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் மே-1ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு டான் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறார். அதேவேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும்.
இந்த நிலையில் புதிய படத்தில் இணைவது தொடர்பாக கார்த்திக் சுப்பராஜ்- சிவகார்த்திகேயன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை சிவகார்த்திகேயன்- கார்த்திக் சுப்பராஜ் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், அது சிவகார்த்திகேயனின் 26ஆவது படமாக இருக்கும். ஏற்கனவே, ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
- துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்திருந்தது.
- உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் ரேஸில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:- ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரெட்ரோ சூர்யாவின் 44ஆவது படமாகும்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத் தளத்தில் டிரெய்லரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியது. ரெட்ரோ 2 மணி நேரம் 48 நிமிட படமாக அமைந்துள்ளது.
- நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான திருநெல்வேலி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார்.
கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து தற்பொழுது அக்யூஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை கன்னட இயக்குநரான பிரபு இயக்கியுள்ளார். உதயாவுடன் இப்படத்தில் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், இசை நரேன் பாலகுமார் , படத்தொகுப்பை கே.எல் ப்ரவீன் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டீசர் விறுவிறுப்பாக அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
- சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
இந்நிலையில் சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஜப்பானிய சுமோ வீரர் கதாநாயகன் சிவாவிடம் இருக்கிறார். இவரை எப்படி அவர் மிண்டும் ஜப்பானில் நடக்கும் சுமோ பந்தயத்தில் போட்டியிட உதவுகிரார் போன்ற காட்சிகள் டிரெய்லரில் நகைச்சுவையான பின்னணியில் இடம் பெற்றுள்ளது.
படத்தின் பாடலான ஆழியே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன்ராஜன், தீப்தி ரெட்டி வரிகளில் நரேச்ஜ், ஹெவின் ,நித்யஸ்ரீ மற்றும் ரோஸ் வெரோனிகா இணைந்து பாடியுள்ளனர்.
- ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘சச்சின்’
- ‘சச்சின்’ படம் மீண்டும் கடந்த 18-ந்தேதி திரைக்கு வந்தது.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், பிபாசா பாசு ஆகியோர் நடித்து இருந்தனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரித்து இருக்கிறார். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'சச்சின்' படம் மீண்டும் கடந்த 18-ந்தேதி திரைக்கு வந்தது. சுமார் 300 தியேட்டர்களில் உலக அளவில் வெளியான 'சச்சின்' படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர்.
படம் வெளியான திரையரங்கம் முழுவதும் ஹவுஸ்புல்லாக காட்சி அளிக்கிறது. படம் வெளியாகி 4 நாட்களில் 'சச்சின்' படம் ரூ.12 கோடி வசூலை பெற்று உள்ளது. இந்த வார இறுதிக்குள் மேலும் ரூ.10 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த 'கில்லி' படம் மீண்டும் திரைக்கு வந்து வசூலில் சக்கை போடு போட்டது. ரீ ரிலிசான ஒரு படத்துக்கு இவ்வளவு வரவேற்பா? என பலரும் வியப்புக்குள்ளாகினர். இந்நிலையில் 'கில்லி' படத்தின் சாதனையை 'சச்சின்' படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி ரோல்கள் ஏற்று நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி.
- தற்போது சூப்பர்குட் சுப்பிரமணி ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி ரோல்கள் ஏற்று நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும்,ஹீரோ, மகாமுனி, கூர்கா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக பரமன் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் அவருக்கு புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது. தற்போது ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் நான்காம் கட்ட புற்று நோய் மற்றும் நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறார்.
பலரும் இந்த செய்தி தெரிந்து அதிர்ச்சியில் உள்ளனர். பல மக்கள் இவர்க்கு உதவுமாறு இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரது மனைவியான ராதா திரைத்துறையினருக்கும் அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.