என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இந்தியா எப்போதுமே என் வீடு, என் ஆசான்.
    • யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை.

    இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

    அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், "சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

    கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

    ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், "இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே என் வீடு, என் ஆசான். இசை மீதான அர்ப்பணிப்பு மூலம் இந்தியாவுக்கு நான் மிகவும் நன்றிகடன் பட்டுள்ளேன்

    சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் என் நோக்கமாக இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சாவா படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன்.
    • பிரசார திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க ஏஆர் ரகுமான் விரும்பவில்லை

    இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

    அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், "சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

    கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அன்புள்ள ரகுமான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும், நிறைய பாரபட்சத்தையும் எதிர்கொள்கிறேன். ஆனால், உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    நான் இயக்கிய Emergency கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால் கதை கேட்பதை விடுங்கள். என்னை சந்திக்க கூட நீங்கள் மறுத்தீர்கள். பிரசார திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், Emergency ஒரு தலைசிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது. உங்களுக்காக நான் வருந்துகிறேன்.

    • மீசைய முறுக்கு படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது.
    • இப்படத்தில் ஆத்மிகா, விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார்.

    சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார்.

    இசை நிகழ்ச்சியில் பேசிய ஹிப் ஹாப் ஆதி, "'மீசைய முறுக்கு 1', ஆதி - ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை. 'மீசைய முறுக்கு 2'வும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட, இரு நண்பர்களை பற்றிய படம்தான். அந்த இருவரில் ஒருவராக நான் நடிக்கிறேன், இன்னொரு பாத்திரம் யார் என்றால், அவர் உண்மையிலேயே எனக்கு நண்பர், உண்மையிலேயே எனக்கு தம்பி; நடிக்கிறாயா என விளையாட்டாக கேட்டேன், உடனே சரி எனக் கூறினான், ஹர்ஷத்கான் தான் அது" என்று தெரிவித்தார்.

    • கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என் டிரம்ப் கருத்து
    • டிரம்பின் கருத்துக்கு THE LANCENT இதழ் விளக்கம் அளித்துள்ளது.

    பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டால் குழந்தைகளுக்கு 'ஆட்டிசம்' ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என THE LANCENT இதழ் விளக்கம் அளித்துள்ளது.

    கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, ADHD ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று The Lancet இதழில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது.

    வழிகாட்டுதல்படி எடுத்துக்கொள்ளும் போது, கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் பாதுகாப்பான தேர்வாகவே உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    • இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
    • டைட்டில் வின்னர் ஆவார் என்று கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நாட்கள் நெருங்க நெருங்க கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வந்தது.

    இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குறிப்பாக டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

    டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம், ஆரோரா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. 

    அனிருத்தின் இசையில் ஜனநாயகனில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்.

    தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத 'ராக்ஸ்டார்' ஆக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர்.

    இவர், பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மிக பிஸியான ஒரு அட்டவணையை வைத்துள்ளார்.

    அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..

    ஜனநாயகன்:

    எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜனநாயகன். தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் இசையில் ஜனநாயகனில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்.

    எல்ஐகே:

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் மெலடி பாடல்களைத் தயார் செய்துள்ளார்.

    தி பாரடைஸ்:

    தெலுங்கு திரையுலகின் 'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணையும் படம் "தி பாரடைஸ்". அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

    ஜெயிலர் 2:

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' இரண்டாம் பாகத்திற்காக அனிருத் ஏற்கனவே சில மெட்டுகளை உருவாக்கி வருவதாகவும், முதல் பாகத்தை விட பிஜிஎம் (BGM) இன்னும் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    தலைவர் 173:

    தலைவர் 173 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) மற்றும் அவரது மகள் சுஹானா கான் இணைந்து நடிக்கும் "கிங்" படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    அல்லு அர்ஜூன் ஏஏ23:

    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீ (Atlee) இணையும் பிரம்மாண்டத் திரைப்படமான AA23க்கு அனிருத் இசையமைக்கிறார்.

    அரசன்:

    சிலம்பரசன் (STR) நடிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ('ஓ மை கடவுளே' புகழ்) இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமானத் திரைப்படம் "அரசன்". இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    தனுஷ் D57:

    தனுஷ்- அனிருத் கூட்டணி கடைசியாக 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இணைந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, தனுஷ்- அனிருத் கூட்டணி D57-ல் இணைகிறது.

    DC:

    பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் "DC" திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    மேஜிக்:

    இயக்குனர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) மற்றும் அனிருத் ரவிச்சந்தர் கூட்டணி, 'ஜெர்சி' (Jersey) படத்தின் மூலம் ஏற்படுத்திய மேஜிக்கை இப்போது 'மேஜிக்' (MAGIC) என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிகழ்த்தத் தயாராகிவிட்டனர்.

    அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சந்திப்பு.

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல், லீலாவும் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின.

    இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

    அஜித்தின் 'ரேஸிங்' பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சிபிராஜ் அஜித்தை கார் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருந்த வீடியோ வைரல் ஆனது.

    விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.

    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

    அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.

    தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும்.

    தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் ஜீவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விஜய் அண்ணனின் நடனம், ஆக்ஷன் அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என நாங்க பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவருடன் நண்பன் படத்தில் நடித்திருக்கிறேன்.

    அதுவும் பொங்கல் ரிலீஸ் தான். 14 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுக்காக தம்பி (டிடிடி) பொங்கலில் ரிலீஸ் செய்திருக்கிறோம்.

    என்னைக்குமே மக்கள் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். அவருக்காக பூவே உனக்காக படத்தில் இருந்து படங்கள் பண்ணிட்டு வந்திருக்கிறோம்.

    தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும். உண்மையிலேயே அது அவருக்கு தான் சொல்லி இருக்கிறோம்.

    எனக்கும், அவருக்கும் இடையே இருக்கும் பாண்ட் எப்படி சொல்றதுனு தெரியல. என்னைக்குமே அவருடைய ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கும்.

    எங்களுடைய ஆதரவும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்த பொங்கலை தம்பி பொங்கலாக எடுத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக இருந்தது.

    விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

    இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.

    ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

    எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்தார்.

    இந்நிலையில், தெறி படம் ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தாணு இரண்டு அப்டேட்களை கொடுத்துள்ளார். ஆமாம்.. தெறி ரீ ரிலீஸ் ஆகும் புதிய தேதியை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அதன்படி, தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் நாளை வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

    ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.

    மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'இஷ்க்' (Ishq) என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் படம் 'ஆசை'.

    மலையாளத்தில் ஷேன் நிகம் மற்றும் ஆன் ஷீட்டல் நடித்த பாத்திரங்களில் தமிழில் கதிர் மற்றும் திவ்யபாரதி நடித்துள்ளனர்.

    தமிழில் இப்படத்தை ஜீரோ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஷிவ் மோஹா இயக்குகிறார். இப்படத்தில், லிங்கா, பூர்ணா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.

    ரொமாண்டிக் திரில்லரபாக உருவாகி இருக்கும் இப்படம்,'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் மற்றும் 'பேச்சுலர்' புகழ் திவ்யபாரதி ஆகிய இருவருக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆசை படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, ஆசை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    • இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் .
    • இப்படம் கவினின் 9-வது படமாகும்.

    இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். இப்படம் கவினின் 9-வது படமாகும்.

    கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

     

    இந்த நிலையில், 'Kavin 09' படத்தில் நடன மாஸ்டர் சாண்டியும் கவினுடன் இணைந்திருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3'-ல் தங்களின் நட்பின் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்த நடிகர்கள் கவின் மற்றும் சாண்டி ஆகியோர் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். "The Boys Are Back" என்று கூறி வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் "The Boys" என்ற வார்த்தை இவர்கள் பங்கேற்ற 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3'-ன் போது பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

    ×