என் மலர்
- எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம்.
- ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்வின் மனைவி, நடிகை பத்ரா லேகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தம்பதியினர் தங்கள் 4 ஆம் திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் பதிவில்," இது எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2021 இல் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரா லேகா திருமணம் செய்து கொண்டனர்.
ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
- UNICEF அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்
- உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ``குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.
UNICEF இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் UNICEF இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
- இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
ஐதராபாத்:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது
ஏற்கனவே மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேசுகையில் தனது மறைந்த தந்தை நடிகர் கிருஷ்ணாவை நினைவு கூர்ந்தார்.
புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார்.
இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன்.
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.
இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு.
இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன்.
வாரணாசி படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும் என தெரிவித்தார்.
- அக்டோபர் 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், கோவையில் நகைக்கடை ஒன்றை நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். அதன்பின்பு பேசிய ஆண்ட்ரியா, "கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். நான் அடிக்கடி இங்கு வருவேன்.தங்கம் பார்க்க மிகவும் அழகாக தான் இருக்கிறது. ஆனால் தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்
- மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
- இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மும்பையில் இருந்தபடி தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வருகிறார் தாவூத். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஒரு போதை கடத்தல் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.
ஒரு பக்கம் யார் இந்த தாவூத் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் போதை பொருளை கைப்பற்றவும் தீவிரம் காட்டுகிறது.
மறுபக்கம், தாவுத்தின் கடத்தல் பணிகளை பார்த்து வந்த தீனா, போதை பொருளை கைப்பற்ற திட்டமிடுகிறார். மற்றொரு தரப்பும் தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறது.
இப்படி இருக்கையில், தாவுத்தின் போதைப் பொருள் சரக்கை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வழக்கமான ஆட்களை பயன்படுத்தாமல், வாடகை கார் ஓட்டுனரான லிங்காவை தேர்வு செய்கிறார்.
லிங்காவும் பணத் தேவைக்காக கடத்தலில் ஈடுபடுகிறார். இறுதியில், திட்டமிட்டபடி லிங்கா தாவுத் சரக்கை கொண்டு போய் சேர்த்தாரா? தாவுத்தின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதாநாயகனாக வரும் லிங்கா, கதாபாத்திரத்திற்கு நிறைவாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அவரது நடிப்பு இருக்கிறது. நாயகியாக வரும் சாரா ஆச்சர், வில்லன் கூட்டத்திலேயே வலம் வருகிறார். அர்ஜெய், திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், சாரா, வையாபுரி, ராதாரவி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தம்.
இயக்கம்
படத்தின் கதை பரபரப்பாக செல்லும் விதத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராமன். விறுவிறுப்பான காட்சிகள் படத்தை சலிப்பில்லாமல் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது. தாவுத் யார் என்ற கேள்வி எழுகிறது ஆனால், அதற்கான பதிலை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம்.
இசை
ராகேஷ் அம்பிகாபதியின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது கேமரா பதிவு திரைக்கதைக்கு கச்சிதம்.
மலை பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர் படத்தின் நாயகன் மதி. சிறுவயதில் இருந்தே பாசத்திற்காக ஏங்கும் நபர். மைனா பட புகழ் சூசன் மதியின் தாய், சாராயம் விற்கும் தொழில் செய்து வருகிறார். மகன் மீது பாசம், அக்கறை அற்றவராக இருக்கிறார்.
சாராயம் விற்பவரின் மகன் என்று பள்ளியிலும் யாரும் மதியிடம் சேர மறுக்கின்றனர். இதனால் வேதனைப்படும் மதியிடம், ஆசிரியர் ஒருவர் இயற்கையை ரசிக்கும்படி கூறுகிறார்.
அப்போது, வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துவிடுகிறது. அந்த குட்டி யானையை மதி காப்பாற்றுகிார். பின்னர் அந்த யானை மதியை சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமை ஆகிறார். இருவரும் சகோதரர்கள் போல் வளர்ந்து வருகின்றனர்.
ஒரு நாள் யானை காணாமல் போய்விடுகிறது. மதி எங்கு தேடியும் யானை கிடைக்கவில்லை. இதனால் மதி ஒரு கட்டத்தில் தன்நிலை மறந்தவராக காட்டுக்குள் சுற்றித்திரிகிறார்.
இதற்கிடையே, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மதியிடம் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும்படி ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.
மதி பிறகு, கல்லூரி படிப்பை பயில வெளியூருக்கு செல்கிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பும் மதிக்கு யானை மாயமானது குறித்து தகவல் கிடைக்கிறது.
பின்னர், யானை மாயமானதற்கான பின்னணி என்ன? மாயமான யானை மதியிடம் திரும்ப வந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
முதல் படத்திலேயே நடிகர் மதி அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யானையுனான பாசம், யானையை இழந்த தவிப்பு, கோபம் என உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகி ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆண்ட்ரூஸ், அர்ஜூன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி என கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கின்றனர்.
இயக்கம்
வனம், இயற்கை சார்ந்து படம் எடுப்பது இயக்குனர் பிரபு சாலமனுக்கு புதுசு அல்ல. அதேபோல், இந்த கதையும் தமிழில் புதிது அல்ல. கதாநாயகனுக்கும்- யானைக்கும் இடையேயான பாசத்தை தவிர படத்தில் பெரிதாக வேறு எதுவும் இல்லை. திரைக்கதை, காட்சிகள் படத்தில் சுவாரஸ்யம்.
இசை
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பொருத்தம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா லென்ஸ் இயற்கையை வியக்கும் வகயைில் அமைந்திருக்கிறது.
- காந்தா படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடித்துள்ளார்.
- இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், நேற்று வெளியான காந்தா படம் முதல் நாளில் ரூ.10.5+ கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் மைதிலி போட்டியிட்டார்.
- 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் மைதிலி வெற்றி பெற்றார்.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில், எம்எல்ஏ மைதிலி தாகூர், தமிழில் பாடிய "கண்ணான கண்ணே' பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர்.
- கானா வினோத் அடித்த கவுண்டர்கள் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பு ஆக்கின.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
இந்த சீஸனின் முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் தர்பீசு சாம்ராஜ்ஜியம் கானா சாம்ராஜ்ஜியம் என பிக்பாஸ் வீடு பிளவுபட்டு போட்டிகள் நடந்தன. கானா வினோத் அடித்த கவுண்டர்கள் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பு ஆக்கின.
இந்நிலையில், இந்த வார எவிக்ஷனில் கனி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பிரவீன் வெளியேற்றப்பட்டது விமர்சனத்திற்கு உள்ள நிலையில், நல்ல போட்டியாளராக கருதப்பட்ட கனியும் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் கடைசி நேரத்தில் பெண்கள் விஷயத்திலும் சாதி ரீதியாக தவறாக பேசிவரும் திவாகர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
- முற்போக்கு பாடகரும் எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.
'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் உடைய நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மறைந்த முற்போக்கு பாடகரும் எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசை வடிவில் உருவான இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கிரிதரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் , "தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்" ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் இப்படம் சிறந்த முழு நீள ஆவணப்படம் என்ற விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
- கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- ராஜமவுலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.
கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முதல் தோற்றத்தை தனது சமூக வலைதளத் பக்கத்தில் வெளியிட்டுள்ள எஸ்.எஸ்.ராஜமவுலி, "உலக அரங்கில் இந்திய சினிமாவை மறுவரை செய்த பெண். மீண்டும் வருக. மந்தாகினியின் எண்ணற்ற சாயல்களை உலகம் காண காத்திருக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.
ராஜமவுலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர், ஐதராபாத் பிரியாணியை இதுவரை சாப்பிட முயற்சித்தது இல்லையா? என கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, "ஐதராபாத் பிரியாணி தான் உலகிலேயே சிறந்தது" என பதில் அளித்தார்.








