என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது.
    • தற்போது எனது கனவுப் படமாக வேள்பாரி உள்ளது.

    சென்னை:

    விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

    இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகை ரோகிணி, இயக்குனர் ஷங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:

    எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது. தற்போது எனது கனவுப் படம் வேள்பாரி.

    நிச்சயம் இது உலகம் போற்றும் தமிழ் படைப்பாக வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

    கனவு மெய்ப்படும் என நம்புகிறேன்.

    புது புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது வேள்பாரி.

    கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக் கூடிய அறிவுப்பூர்வமான, ஜனரஞ்சகமான காவியமா, ஒரு பெருமை மிக்க இந்திய, தமிழ் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது என தெரிவித்தார்.

    • வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது.
    • சென்னையில் நடந்த விழாவில் வேள்பாரி ஒரு லட்சம் வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

    சென்னை:

    விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

    இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும்.

    கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியில் ஓல்டு ஸ்டூடண்ஸ் குறித்துப் பேசினேன். அரங்கத்துல இருக்குற எல்லாரும் சிரிச்சதால நான் பேசணும்னு நினைச்சதை மறந்துட்டேன்.

    இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரொச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

    விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை.

    சிவக்குமாரும் கமல்ஹாசனும் சிறந்த அறிவாளிகள்... ஆனா, என்னை ஏன் கூப்பிட்டாங்க? இந்த 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்ன ஏன்பா விழாவுக்கு கூப்டீங்க?

    வேள்பாரி புத்தகத்தை நான் இன்னும் முழுசா படிக்கல. வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என காத்திருக்கிறேன்.

    ஓய்வுக் காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க விருப்பம் உள்ளது. அதற்காக வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்துள்ளேன்.

    எல்லோரும் காத்திருப்பது போல நானும் வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

    • 'அனிமல்' புகழ் திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
    • முதல் பாகமான 'தடக்', மராத்தி படமான 'சாய்ராத்' என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

    இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் ஆக 'தடக் 2' என்ற படம் உருவாகியுள்ளது.

    கரண் ஜோகர் தயாரிப்பில் ஷாஜியா இக்பால் இயக்கத்தில் 'அனிமல்' புகழ் திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.

    முதலில், இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவிருந்தது, ஆனால் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது. தற்போது படத்தின் டிரெய்லரானது வெளியிடப்பட்டுள்ளது.

    இப்படத்தின் முதல் பாகமான 'தடக்', மராத்தி படமான 'சாய்ராத்' என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

    சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். அதேபோல பரியேறும் பெருமாள் ரீமேக்காக 'தடக் 2' உருவாகியுள்ளது.

    • விஷ்ணு ஏதவன் பாடல் வரிகளை எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர்.
    • சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

    இப்படத்தில் இடம் பிடித்துள்ள சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம்பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.

    இதற்கிடையே பூஜா ஹெக்டே ஆட்டம்போடும் 2ஆவது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

    விஷ்ணு ஏதவன் பாடல் வரிகளை எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர். இவருடன் அசல் கோலார் RAP செய்துள்ளார்.

    • (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர்.
    • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

    பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும், பெரும் வெற்றி பெற்ற "சார்" திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்த நிலையில், இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

    மெஸன்ஜர் படத்தின் கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல் சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குநர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். விக்ரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

    • எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார்.
    • கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கதைக்களம்

    எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50 ஆவது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவியான ராஜிக்கு நீட் தேர்வு பிரச்சனையில் சிக்குகிறார். மூன்றாவது தொடரில், செல்வியெனும் வேலைக்காரப் பெண்ணின் மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழி விழுகிறது.

    கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து, எழுத்தாளர் வாசனை சந்திக்கின்றன. எங்களை இப்படி தவிக்க விடலாமா... கதையை மாற்றுங்க என எழுத்தாளரை மிரட்டுகின்றன. அவர் மறுக்கிறார். உண்மைக்கும், பேண்டசிக்கு நடுவில் வாசன் தவிக்கிறார்.

    இறுதியில் வாசன், அவர் எழுதி வந்த தொடர் கதைகளை மாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாபாத்திரங்களை படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆணவமாக பேசுவது, பயப்படுவது, கோபம் என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    எடிட்டர் டெல்லி கணேஷ், ரவுடி சாய் தீனா, சிற்பி மு.ராமசாமி, வாசனின் மனைவி காயத்ரி, வேலைக்கார பெண் ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா. படம் பார்ப்பவர்களை சீட்டில் இருந்து எழுந்துக்க விடாமல் காட்சிகளால் கட்டி போட்டு இருக்கிறார். அதிக வசன காட்சிகள் இருந்தாலும் அதை ரசிக்கும் படியும், புரியும் படியும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன்-இன் ஒளிப்பதிவு படத்தின் திரையோட்டத்திற்கு பெரிதும் பலமாக அமைந்துள்ளது.

    இசை

    இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் ஆகியோரின் உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    தயாரிப்பு

    Rahul Movie Makers & Abhimanyu கிரேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.                                                 

    • பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.

    பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் தற்பொழுது சன் நெக்ஸ்ட், பிரைம் வீடியோ மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

    • துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
    • இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*

    தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்திற்கு 'பேரடாக்ஸ்' (Paradox) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பேரடாக்ஸ்' குறும்படத்தின் டிரெய்லரை திரையுலக பிரபலங்களான இயக்குநர்-நடிகர் சேரன், இயக்குநர்-நடிகர் எம். சசிகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டு முன்னோட்டத்தை பாராட்டியதோடு இயக்குநர் பிரியா கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த குறும்படத்திற்காக இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், "ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை 'பேரடாக்ஸ்' பார்வையாளர்களுக்கு விளக்கும்," என்றார். குறும்படம் இன்று யூடியூபில் வெளியாக இருக்கிறது.

    'பேரடாக்ஸ்' குறும்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, ஃபைசல் வி காலித் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ஹரிபிரகாஷ் மேற்கொண்டுள்ளார். ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக் கலவையை எஸ் சிவகுமார் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியனும், கலரிங்கை குபேந்திரனும், டிஐ பணிகளை இன்பினிட்டி மீடியாவும் செய்துள்ளனர். 

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியானது 'குபேரா' திரைப்படம்
    • குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படம்
    • பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கின்றனர்.

    நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான புதிய திரைப்படம்

    பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்

    திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.

    நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கியவரும், 'கோமாளி', 'கைதி', 'விஐபி 2', 'இமைக்கா நொடிகள்', மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருப்பவர் பாக்யராஜ் சார் தான். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்," என்றார்.

    இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கவனிக்கிறார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.

    திரைப்படம் குறித்த மேலும் சுவாரசிய தகவல்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும். 

    • யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த காலத்தில் பலரும் யூடியூப் , இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ் மற்றும் Influencers பலரும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்பொழுது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இவர் , மனைவி தீபா மற்றும் இவருடைய அம்மா என குடும்பமாக சேர்ந்து செய்யும் லூட்டி வீடியோஸ், கணவன் மனைவி இடையே நடக்கும் பரிதாபங்கள் வீடியோ என இவர்களின் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளது மேலும் இவர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

    இவர் தற்பொழுது டாட்டூ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை வேனு தேவராஜ் எழுதி இயக்கியுள்ளார். படத்தை ரென்சு மற்றும் சஞ்சு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படமே இந்தியாவில் முதல் ஏஐ இன்வஸ்டிகேஷன் திரில்லராக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
    • 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.

    வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

    இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.

    அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    ×