search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது.
    • இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று 5 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3.50 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரில் மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பதையும், முதல்வராகப் பொறுப்பேற்ற டோவினோ தாமஸின் அரசியலையும் இந்த பாகம் பேசும் எனத் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர்.
    • பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர். அருணாச்சலேஷ்வரன் உடன் ரியோ நடித்த காமெடி காட்சிகள் மக்களிடம் மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    விளையாட்டுத்தனமான காதலன் எதிர்பாராமல் காதலி பிரக்னண்ட் ஆகிறாள் இதனை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள். இதற்கு என்ன ஆனது என்பதே படத்தின் ஒன் லைனாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஒருத்தி' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

    • சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.
    • பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில், லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பியுள்ள இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்;

    சிவகுமார் உடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    • விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.
    • பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனது.

    1992 இல் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்த படம் பகவதி. 2002 இல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.

    விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகளும், டீக்கடை உரிமையாளராக இருந்து கேங்ஸ்டராக விஜய் பரிணமிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக அமைந்திருக்கும்.

    விஜய்யின் 22 ஆவது படமான இது என்றுமே அவரது கேரியரில் ஸ்பெஷலானதாக இருக்கும்.

    பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி வரும் மார்ச் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) படம் ரீரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • ரெட்ரோ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

    ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிடி.எஸ். காட்சிகளை காமிக் வடிவத்தில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    இன்று ரெட்ரோ படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள். இதையொட்டி படக்குழு சார்பில் இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் பி.டி.எஸ். வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம்
    • கர்மா டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவ்வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம். அதாவது கடந்த பிறவி அல்லது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் விளைவு ஆகும்.

    • பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • படம் இயக்கும் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரவி மோகன். சமீபத்தில் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ரவி மோகன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் நடிப்பை தொடர்ந்து படம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ரவி மோகன் மற்றும் யோகி பாபு இணையும் புதிய திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. விரைவில், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது.
    • ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.

    மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'ஆபிஸர் ஆன் டியூட்டி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.
    • காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    இவருக்கும், இந்தி நடிகர் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.

    இருவருமே நண்பர்களுக்கு காதல் முறிவு விருந்து கொடுத்ததாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாக பேசுபொருளாக மாறி உள்ளது.

    அந்த பதிவில், ''வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    காதல் தோல்வி வேதனையில் இருந்து மீள்வதற்காக இந்த பதிவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசுகிறார்கள். தைரியமாக இருங்கள். காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார்

     புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

    இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர்.

     

     

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார் 

    மேலும் இந்த நிகழ்விற்கு கழகத் தலைவர் அவர்களின் தாய்வழி உறவினரான பல்லவி வினோத்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோரும் பொது அமைப்புகள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சௌந்தர ராஜா, "தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கும், மண்ணுக்கும் சேவை செய்ய வந்த அரசியல் கழகம். பொறாமை பிடித்த பலர் நம் மீது விமர்சனங்களை முன்வைப்பர். அத்தகைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு தமிழர்கள் யாருக்கு, எந்த பிரச்சனை என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தோழர்கள் அவர்களுக்கு முன் நின்று உதவ வேண்டும், என்று தெரிவித்தார்.

     



     


    • இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அண்மையில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மிக வைரலான கோல்டன் ஸ்பாரோ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் சிறப்பு நடனமாடியுள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.


    • சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

    'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது.

    இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் சுராஜ், அருண்குமார், எஸ்.ஜே சூர்யா, விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் கலந்துக் கொண்டனர்.

    அதில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமுடு பல விஷயங்களை அவரது பாணியில் நகைச்சுவையாக பேசினார். அந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் அவர் கூறியது " விக்ரம் சார் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். நான் முதல் முதல்ல ஒரு நடிகரோடு புகைப்படம் எடுத்தது விக்ரம் சாரோட தான். மேலும் அருண்குமார் வீர தீர சூரன் திரைப்பட கதையை கூறும் போது அவருக்கு தமிழ் தெரியாததால் அருண் கூறியது எதுவுமே புரியாமல் கதை என்னவென்று தெரியாமலே படத்திற்கு ஒகே சொன்னேன். படப்பிடிப்பில் நடந்த நகைச்சுவை விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்"

    ×