என் மலர்
அறிமுக இயக்குநர்கள் ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகிய இருவர் இயக்கத்தில் கயல் வின்சண்ட் கதாநாயகனாக நடித்துள்ள 'அந்தோனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் டி.ஜே.பானு, அருள்தாஸ், நிகழ்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இலங்கையில் போருக்குப் பின்னரான மக்கள் வாழ்க்கையின் சாரம் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகிய இரண்டு இளம் இயக்குநர்கள் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். பொதுவாக ஒரு படத்தை இருவர் இயக்குவது அரிதான ஒன்று.
இவர்களின் புதிய சிந்தனையில் ஒரு மாறுபட்ட திரில்லர் அல்லது ஆக்ஷன் கதைக்களமாக 'அந்தோனி' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சட்ட சிக்கல்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
- இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "துருவநட்சத்திரம்". ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தப் படம் இருக்கிறது.
சட்டரீதியிலான சிக்கல்கள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் "துருவநட்சத்திரம்" பட பிரச்சினை குறித்து புதிய தகவல் கொடுத்துள்ளார். அதன்படி இந்தப் படத்திற்கு இருந்த சட்டரீதியிலான பிரச்சினைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசும் போது, "2018ஆம் ஆண்டு இந்தப் படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும், படத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே அதிக காலம் கடந்துவிட்டது. எங்களுக்கு பணத்தேவை இருந்ததால், இந்தப் படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது."
"படத்தின் ரிலீசை ஒட்டி நாங்கள் சில சட்டரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரேயொரு பிரச்சினை தான் மீதமுள்ளது. வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும்," என்றார்.
முன்னதாக திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் இசைக் கச்சேரியில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் மேனன், படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறியிருந்தார். தற்போது படத்தின் பிரச்சினைகள் முடிந்துள்ளதாக கூறியிருப்பதை அடுத்து விரைவில், "துருவநட்சத்திரம்" படத்தின் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.
- சந்தோஷ் ரெட்டி உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கூட்டாளிகளான வினோத் மற்றும் கிரண் ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் சுமார் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் சந்தோஷ் ரெட்டியை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புகாரின் பேரில் சந்தோஷ் ரெட்டி உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஈவிபி குழுமத்தின் சந்தோஷ் ரெட்டி கைதான நிலையில், அவரது கூட்டாளிகளான வினோத் மற்றும் கிரண் ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூரில் 34.75 ஏக்கர் நிலம், ஸ்டூடியோக்கள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், கட்டடங்கள் அனைத்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்றவை என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் தொடருக்காக ரேசர் அஜித் குமார் துபாயில் இருக்கிறார். அஜித் குமாரின் ரேசிங்கை நேரில் காணவும், அவரை வாழ்த்தவும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் துபாய் சென்று வருகின்றனர். இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார்.

ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், அஜித் குமாரை சந்தித்தது, பந்தய களத்தில் கிடைத்த அனுபவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித் குமார். நடிப்பு ஒருபக்கம், ரேசிங் ஒருபக்கம் என பம்பரமாக சுழன்று வருகிறார். அந்த வகையில், தற்போது துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். ரேசிங் ஒருபக்கம், ரசிகர்கள் ஒருபக்கம் என சமூக வலைத்தளங்களில் அஜித் குமார் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
அடிக்கடி ரேசர் அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் என துபாயில் தமிழ் நடிகர்கள் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார். ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.
- ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.
சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருடன் நடிகர் சூர்யா, கார்த்தி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
- வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
- லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு லீடர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டு நிகழ்வின் தருணங்களை பிரதிபலிக்கும் வீடியோ ஒன்றை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் "லீடர்" டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு நிகழ்விற்கு லெஜண்ட் சரவணன் வருகை மற்றும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி . இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்.
நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து இருந்தார்.
இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், விசிக தலைவர்திருமாவளவனை ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது ரெடின் கிங்ஸ்லி குழந்தையை திருமாவளவன் தூக்கி கொஞ்சினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகி சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார் சாய் தன்ஷிகா. அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாதா கபீர் துஹான் சிங்குடன் தன்ஷிகாவுக்கு நேரடி மோதல் உருவாகிறது.
மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணன் ஷாயாஜி ஷிண்டேவின் அரசியல் ஆதரவுடன் வில்லன் கபீர் சிங் அராஜகம் செய்து வருகிறார்.
இறுதியில் கபீர் சிங் செய்யும் அராஜகங்களுக்கு தன்ஷிகா எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக யோகிடாவை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கவுதம் கிருஷ்ணா. ஆனால், கதையும் திரைக்கதையும் புதுமை இல்லாத வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிக்கிறது. தாதா வில்லன், அரசியல் ஆதரவு, நேர்மையான அதிகாரிக்கு எதிரான சதிகள் என ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்களே அதிகம் இடம்பெறுகின்றன. வில்லன் கபீர் சிங், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பல கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்த்த அளவு அழுத்தமான காட்சிகள் அமையவில்லை.
பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மாலைமலர் ரேட்டிங்: 2 / 5
- அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்
- அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து உள்ளது
- திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 40க்கு 40' என்று விருதுநகர் மாநாட்டில் தான் நான் சொன்னேன். அதை நடத்திக் காட்டினோம். இப்போது 2026. இந்தத் தேர்தலில் புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா? வெல்வோம் 200! இந்த வெற்றிக்கு உழைக்க நீங்கள் தயாரா? நான் ரெடி... நீங்க ரெடியா?
தி.மு.க. என்றால் பிரம்மாண்டம்; இளைஞரணி என்றால் பிரம்மாண்டம். உதயநிதி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம் என்றுதான் மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கூட்டம் தெரியும்.
நமது தாய்மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோதெல்லாம், கடுமையாகப் போராடித் தடுத்த இயக்கம் தி.மு.க.
இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து, இன்றைக்கும் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகத்தான் இருக்கிறது.
பெண்களின் உழைப்பிற்கு மகளிர் உரிமைத்தொகை, அவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக் கட்டணமில்லா விடியல் பயணம், பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தோழி விடுதி, பெண்கள் படிக்கப் புதுமைப்பெண் திட்டம் என நீங்கள் கெத்தாகச் சொல்வதற்கு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை இந்தத் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
தேர்தலை மனதில் வைத்தாவது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வழக்கம்போல் ஈரத்துண்டுதான் கிடைத்துள்ளது. பட்ஜெட்ல ஒன்றிய அரசு நமக்கு கொடுத்தது 0. நாமும் தேர்தல்ல அதையேதான திருப்பிக் தரணும்?
திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது. நம் எதிரிகள் யாருக்கும் இந்த சந்தேகம் கிடையாத. மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநிலக் கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு" என்று தெரிவித்தார்.
- இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும்.
தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக வளம் வருபவர் அனிருத். அவரின் இசை இன்றி பெரிய ஹீரோக்களின் படங்கள் வருவதே இல்லை என்ற அளவுக்கு வெற்றிகரமான இசையமைப்பாளராக போட்டியின்றி திகழ்கிறார் அனிருத்.
இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத், சிறுவயது நினைவை பகிர்ந்து, பணம் சம்பாதிப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
நிகழ்வில் பேசிய அவர், சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது 500 ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும். சில நிகழ்வுகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.
இப்போது கோடிகளில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அந்த சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார்.








