என் மலர்
நீங்கள் தேடியது "சிவகார்த்திகேயன்"
கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'சேயோன்' திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- தாய் கிழவி படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
- தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனரை சிவகார்த்தியன் அறிமுகப்படுத்தினார்.
SK புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 10 ஆவது படத்தை அம்மாமுத்து சூர்யா இயக்குவார் என்று மேடையில் வைத்து அவரை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், 'தாய் கிழவி' படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் வெளியான சில நாட்களில் ரூ. 22 கோடிக்கும் அதிக வசூல் செய்துள்ளது.
வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தாய் கிழவி வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசனத்தை கூறி தாய் கிழவி படத்தை அனைவரும் பார்க்க சொல்லி படக்குழு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.
இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.
இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.
இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில் 'தாய் கிழவி' படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது. மேலும், இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தாய் கிழவி படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன், ராதிகா மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை கண்டுகளித்த நிலையில் திரைப்படம் குறித்து சீமான் விமர்சன அளவில் வெகுவாக பாராட்டித்தள்ளினார்.
இதுகுறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
- ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.
இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.
இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் நேற்று வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில், முதல் நாளே இரண்டரை கோடி ரூபாய் குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
- கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார்.
70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
அவ்வ்கையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார். அதே போல சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென் வென்றார்.
இந்நிலையில், கொட்டுக்காளி படத்திற்காக விருது வென்ற பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் அன்னா பென் ஆகியோரை சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ளது.
70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.
விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், "13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.
அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்ோது அவர், எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும் என்று கூறினா்.
அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்," என்றார்.
- தாய் கிழவி திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
- தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். 'தாய் கிழவி' திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'தாய் கிழவி' படத்தின் Script to Screen வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்தப் படம் தொடக்கம் முதல் ரிலீஸ் வரையிலான பணிகளின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
- 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' படம் வருகிற 20-ந்தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், வருகிற 27-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. இதனால் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் இலங்கையிலும், பிரான்சிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில், 'ஒரு தாய் எப்போதும் தன் வழியைக் கண்டுபிடிப்பாள். தாய் கிழவி இலங்கைக்கு வருகிறது, Zineflix நிறுவனம் வெளியிடுகிறது. பிரான்சில் 180 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
- சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தை கமல் தயாரிக்கிறார்.
கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.






