என் மலர்
நீங்கள் தேடியது "சிவகார்த்திகேயன்"
- விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'பராசக்தி'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாநாடு' படத்தை போல ஒரு வித்தியாசமான கான்செப்டில் உருவாக இருப்பதாகவும் அப்படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் த்ரில்லுடன் இப்படம் இருக்கும் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான 'மாநாடு' படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 9 அன்று வெளியானது.
இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்டோரும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேலும் 2 நாட்களில் ரூ.51 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் 'திரு' கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது.
உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன்.
2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தியேட்டர் சென்று படம் பார்த்த வீடியோவையும் ரவி பகிர்ந்துள்ளார்.
- 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது.
- பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது.
பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம் என்று அண்ணாமலை பார்ட்டியுள்ளார். பராசக்தி படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "2026 சட்டமன்ற தேர்தலில் பராசக்தி திரைப்படம் திமுகவின் முரசொலியாக அவர்களையே வீழ்த்தும். தீ பரவட்டும் என வைத்திருக்கிறார்கள். முதலில் அவர்கள் வீட்டைத்தான் தீ கொளுத்தும். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கிற உங்கள் கூரையில் தீ பரவட்டும். இன்னும் ஒரு வாரத்தில் முதலமைச்சர் பராசக்தி படம் பார்த்துவிட்டு ரிவிவ்யூ போடுவார். பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம்" என்று தெரிவித்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியானது.
இந்நிலையில், பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- தணிக்கை குழு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவில்லை.
தணிக்கை குழுவுக்கு எதிராக ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதித்து, வழக்கை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனால் 21-ந்தேதி வரை படம் ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகம்தான். படக்குழு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் விவகாரம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திக்கேயன் "ஒரு ரசிகரின் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு, இந்தத் திரைப்படம் திரையுலகிற்கும் திரையரங்குகளுக்கும் மிகவும் முக்கியமானது. இது எப்போது வெளியானாலும், அது அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்" என்றார்.
- பராசக்தி படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது
- பராசக்தி படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பராசக்தி படத்தை பாராட்டி நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அன்புள்ள இளவல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்
பின்குறிப்பு:
பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.
இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
- இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்
- யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பராசக்தி'.
டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது இவரின் 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'டெல்லி தான் இந்தியாவா.. நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல.. என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' உள்ளிட்ட வசனங்கள், பேரறிஞர் அண்ணா ஒரு கதாபாத்திரமாக தோன்றியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
இந்த படதிற்கு ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு அதாவது நேற்று தான் யு/ஏ 16+ தணிக்கைச் சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியது.
படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம்.
சென்சார் வாரிய பரிந்துரைகளின்படி மொத்தம் 25 வெட்டுகள், மியூட்கள் செய்த பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் அண்ணாவின் 'தீ பரவட்டும்' உட்பட பல்வேறு வசனங்களுக்கு சென்சார் வெட்டு போட்டுள்ளது.
"தீ பரவட்டும்" என்ற வார்த்தையை "நீதி பரவட்டும்" என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. படத்தின் அவ்வாசகம் பேசப்படும் அல்லது திரையில் தோன்றும் அனைத்து இடங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
இதோடு 'இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்' என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்ற சென்சார் வாரியம் கூறியுள்ளது. அதன்படி மாற்றப்பட்டது.
அதோடு, 'இந்தி கத்துக்கிட்டு' என்ற வாசகத்தை மியூட் செய்ய வேண்டுமெனவும், "இந்தி அரக்கி" என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் "அரக்கி" என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
"இந்தி அரக்கி" என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
டிரெய்லரில் ரவி மோகன் கூறும் 'Anti national' என்ற வார்த்தை தணிக்கை வாரியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத்தில் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் 50% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் நீக்கி படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது.
- பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது
- சென்னை காசி தியேட்டரில் ரவி மோகன், கெனிஷா பராசக்தி படம் பார்த்தனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நடிகர் ரவி மோகன், கெனிஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி பார்த்தனர். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேனிஷா, "ரவிக்காக மட்டும் தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. ஹீரோவா பண்ணா என்ன வில்லனா பண்ணா என்ன.. அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல.. Second Half-ல அவர தாண்டி படமே இல்ல. அவர் எப்பவுமே Evergreen.. Ever Best" என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய கெனிஷா, "ஜனநாயகன் ரிலீஸ் அன்று தான் உண்மையான பொங்கல்" என்று தெரிவித்தார்.
- படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிப்பயணத்தை தொட்டுள்ளார்.
- ரவி மோகன் காட்டும் வில்லத்தனம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.
நாயகன் சிவகார்த்திகேயன் 1958 காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உயர் காவலதிகாரி ரவிமோகன் சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். இருவருக்கும் நடக்கும் சண்டையில் ரவி மோகன் ஒரு விரலை இழக்கிறார். அதன்பின் சிவகார்த்திகேயன் குழுவில் ஒரு இளைஞன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொல்லப்பட, சிவகார்த்திகேயன் போராட்டத்தை கைவிடுகிறார்.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் முன்னெடுத்த அதே எதிர்ப்பு போராட்டத்தை அவரின் தம்பியான அதர்வா கையிலெடுக்கிறார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவகார்த்திகேயன் முடிவில் அவரும் மீண்டும் இந்தி எதிர்ப்பில் களம் இறங்குகிறார். ரவி மோகனும் சிவகார்த்திகேயனை அழித்தொழிக்க வேலை செய்கிறார்.
இறுதியில் சிவகார்த்திகேயன் ரவிமோகனின் மோதலின் முடிவு என்ன? இந்தி போராட்டத்தின் விளைவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிப்பயணத்தை தொட்டுள்ளார். அபாரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். உடல் மொழி, ஆக்சன், வசனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ரவி மோகன் காட்டும் வில்லத்தனம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. நாயகி ஸ்ரீலீலா முதல் படம் என்ற சுவடே தெரியாமல் நடித்துள்ளார். அதர்வாவின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. சேத்தன், குரு சோமசுந்தரம், கெஸ்ட் ரோலில் வரும் ராணா ஆகியோரும் நல்ல கவனம் ஈர்க்கின்றனர். இந்திரா காந்தி, பக்தவச்சலம் தோற்றத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர்.
இயக்கம்
1937-ல் துவங்கி, 1940-ல் தற்காலிக முடிவுக்கு வந்து, பின் 1963-ல் மூர்க்கமாக வெளிப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து படத்தை பரபரப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. படம் புரட்சி பேசினாலும் கமர்சியல் மீட்டரிலிருந்து விலகவில்லை. நடிகர்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
இசை
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தின் உச்சம். அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அழகாக படம் பிடித்திருக்கிறார்.
- பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
- திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா , ஷாலினி அஜித்குமார் ஆகியோர் சென்னை சத்யம் தியேட்டரில் பராசக்தி படத்தை பார்க்க வந்தனர். அண்மையில் மலேசியாவில் அஜித்குமாரை நடிகை ஸ்ரீலீலா சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
- திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன், கெனீஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி படம் பார்க்க ஒன்றாக வந்தனர்.
- திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.






