என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகார்த்திகேயன்"

    • ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
    • ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் நேற்று வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில், முதல் நாளே இரண்டரை கோடி ரூபாய் குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
    • கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார்.

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    அவ்வ்கையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார். அதே போல சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென் வென்றார்.

    இந்நிலையில், கொட்டுக்காளி படத்திற்காக விருது வென்ற பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் அன்னா பென் ஆகியோரை சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ளது.

    முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.

    விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், "13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்ோது அவர், எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும் என்று கூறினா்.

    அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்," என்றார்.

    • தாய் கிழவி திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
    • தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். 'தாய் கிழவி' திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.

    இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'தாய் கிழவி' படத்தின் Script to Screen வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்தப் படம் தொடக்கம் முதல் ரிலீஸ் வரையிலான பணிகளின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


    • இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' படம் வருகிற 20-ந்தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், வருகிற 27-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. இதனால் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் இலங்கையிலும், பிரான்சிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில், 'ஒரு தாய் எப்போதும் தன் வழியைக் கண்டுபிடிப்பாள். தாய் கிழவி இலங்கைக்கு வருகிறது, Zineflix நிறுவனம் வெளியிடுகிறது. பிரான்சில் 180 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. 

    • சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தை கமல் தயாரிக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சேயோன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி இருக்கும் புதிய வீடியோ படம் கிராம பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது. ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    • சிவகார்த்திகேயனின் 26வது படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு.
    • சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதன்படி இந்தப் படத்திற்கு "சேயோன்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் "சேயோன்" படத்தின் கொண்டாட்டம் நாளை (பிப். 17) காலை 10 மணிக்கு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சேயோன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடன் மயில்களுக்கு மத்தியில் உட்கார்ந்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    • சிவகார்த்திகேயனின் 26வது படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு.
    • சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப். 16) மாலை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5.02 மணிக்கு வெளயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


    • 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இதனிடையே, 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தாய் கிழவி படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்
    • அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
    • அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    ×