என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car race"

    • சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார்.
    • எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார்

    இப்போது அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ரேஸ் காரை அஜித் வாங்கியுள்ளார்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த MCLAREN Automotive என்ற நிறுவனம் இந்த ரேஸ் காரை தயாரித்து வருகிறது.

    ரேசுக்கு தேவையான ஸ்பெஷல் எடிசன் இந்த காரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி என்று கூறப்படுகிறது. அந்த கார் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    • அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார்.
    • அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.

    கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.

    2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.

    2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    இதற்கிடைய, அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்றதோடு, இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் AjithKumarRacing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த சேனல் மூலம் அஜித் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

    அஜித் குமாரின்  அதிகாரப்பூர்வ யூடியூட் சேனலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

    • அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர் ஆவார்.
    • பார்முலா 1 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான "குட் பேட் அக்லி" படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகராக இருக்கும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்தாண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

    அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தய வீரரான அயர்டன் சென்னா சிலையின் காலில் நடிகர் அஜித் குமார் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர் ஆவார். இவர் 1988, 1990, 1991 ஆண்டுகளில் மெக்லாரன் அணிக்காக பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்றார். பார்முலா 1 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

    இவர் 1994 மே 1 அன்று சான் மரினோ கிராண்ட் ப்ரீயில் (இமோலா) வில்லியம்ஸ் அணிக்காகப் பந்தயத்தில் ஈடுபட்டபோது, தாம்புரெல்லோ வளைவில் விபத்துக்குள்ளாகி (34 வயது) உயிரிழந்தார். இவரது மரணம் பார்முலா 1 பாதுகாப்பு விதிகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

    சென்னாவின் ஆர்வம், திறமை, மற்றும் மனிதாபிமான செயல்கள் (குறிப்பாக பிரேசிலில் ஏழைகளுக்கு உதவியது) அவரை உலகளவில் புகழ்பெறச் செய்தன. அவரது நினைவாக பிரேசிலில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக "சென்னா நிறுவனம்" இயங்குகிறது.

    • டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார்.
    • இந்த விபத்தில் நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    டயர் வெடித்ததை அடுத்து அவரது கார் பந்தய டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது.

    டயர் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் அஜித் போட்டியில் தொடர்ந்து பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார்.

    இந்த விபத்தில் நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமீப காலமாக அஜித் சர்வதேச கார் பந்தயங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
    • ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.

    அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர்.

    நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.

    ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன் என்றார்.

    மேலும், தான் உடல் எடை குறைத்தது தொடர்பாக அஜித் குமார் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறுகையில்,"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

    இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.

    ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.

    என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் சி ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம்
    • அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர். நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.

    ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன். நான் என்று மீண்டும் ரேசிங்கிற்கு செல்ல வேண்டும் என நினைத்தேனோ அன்று முடிவு செய்தேன் நாம் மீண்டும் ஃபிட்டாக வேண்டும் என. கடந்த 8 மாத காலத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். டயட், சைக்கிலிங், ஸ்விமிங் , வெஜிடேரியனாகவும் மாறியதால் இது சாத்தியமானது" என கூறியுள்ளார்.

    • நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

    நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல கார் ரேஸர் நரேன் கார்திகேயனிடம் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பேசும் புகைப்படம் அஜித்குமார் ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆத்விக் குட்டி ரேஸ் காரில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் அஜித்குமார், ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    • துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்திருந்தது.
    • உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் ரேஸில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:- ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.

    ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • GBU படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.
    • ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

    ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.

    முன்னதாக, அஜித் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

    இந்நிலையில், ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
    • நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் முழுக்க முழுக்க ஒரு ஃபேன் பாய் சம்பவமாக படத்தை உருவாக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

    • சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.
    • குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

    அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.

    சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.

    குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.

    • தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
    • அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் போட்டியை நடத்துகிறது.

    சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது.

    தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

    அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி இப்போட்டிக்கான பணிகள் 10 நாட்களில் நிறைவடையும். 3 வருடம் இப்போட்டியை நடத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளோம். அடுத்த 2 வருடமும் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சென்னை தீவுத்திடலில் இப்போட்டியை நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    ×