என் மலர்
ஸ்பெயின்
- தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது.
- ரெயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்
ஜனவரி 18 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.
தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஸ்பெயினின் பார்சிலோனா அருகே மற்றொரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஏராளமான பயணிகள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை மாலை, மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.
தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.
விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
ராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.
- மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
- ரெயில் தடம் புரண்ட விபத்தில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஸ்பெயினின் கார்டோபா மாகாணத்தில் மலகா அருகே தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று தடம் புரண்டு மற்றொரு ரெயில் மீது மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் நேற்று இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது தடம் புரண்ட ரெயில் மீது மாட்ரிட்டிலிருந்து தெற்கு ஸ்பெயின் நகரமான ஹுயல்வாவுக்கு சுமார் 200 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த மற்றொரு ரெயில் மோதியது.
ரெயில் தடம் புரண்ட விபத்தில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை.
- பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.
பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டை கடந்த 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய இ.ஓ.எஸ்-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
மேலும், அந்த ராக்கெட்டுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவி மற்றும் 16 சிறிய செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் செயல்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆர்பிட்டல் பாராடிகம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பி இருந்தது.
இதற்கிடையே அந்த சிறிய செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியதாக ஆர்பிட்டல் பாராடிகம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது,"எதிர்பாராத அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் சிறிய விண்கலம் கேப்சூல் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.
நாங்கள் அதன் பயணப் பாதையை மீண்டும் உருவாக்குகிறோம். முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.
- அல்காரசின் பயிற்சியாளாராக இருந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் பெராரோ.
- இவரது பயிற்சியில் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார்.
மாட்ரிட்:
டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருபவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22). இவரது பயிற்சியாளாராக இர்ந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் பெராரோ.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டாக தனக்கு பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர் ஜுவான் கார்லோஸ் பெரெரோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறேன் என அல்காரஸ் திடீரென அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அல்காரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைப் பருவக் கனவுகளை நிஜங்களாக மாற்றியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அல்காரஸ் தனது 16-வது வயதில் இருந்து ஜுவானிடம் பயிற்சிகள் பெற்று வந்தார். இதனால் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார். 8 மாஸ்டர்ஸ் 1000 போட்டிகள் உள்பட 24 போட்டிகளில் அல்காரஸ் சாம்பியன் ஆனார். தனது 19-வது வயதில் உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்து சாதனை படைத்தார்.
- அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
- அஜித்குமார் ரேஸிங் அணி பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ரேஸிங் அணி ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் கலந்து கொண்டது.
இந்நிலையில், க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி 3ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
- நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
- சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.
மாட்ரிட்:
காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
அதன்படி, ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.
- அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.
ஸ்பெயினில் ஒரு விமானம் புறம்படும் நேரத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
இன்று, ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.
புறப்படும் போது திடீரென தீ எச்சரிக்கை ஒலித்தது, இதனால் பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.
இருப்பினும், சில பயணிகள், குழுவினரின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல், பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர். இதன்போது சுமார் 18 பேர் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ எச்சரிக்கை ஒலித்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிறுவனம் விளக்கம் அளித்தது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மெக்சிகோவின் கொன்சாலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை சந்தித்தது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 1-6 என இழந்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றியது.
அடுத்து நடந்த சூப்பர் டை பிரேக்கரில் பாம்ப்ரி ஜோடி 13-15 என இழந்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 21 நிமிடம் நடந்தது.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதுகிறார்.






