என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plane crash"

    • இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
    • சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.

     ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை யாரையும் பழிவாங்கும் முயற்சி அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர். ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்துக்கு விமானி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமான விபத்தில் இறந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    விசாரணையில் விமானிகள் மீது குற்றம் சாட்ட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய தந்தை, விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.

    இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளது.

    இந்நிலையில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜெயமல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விசாரணையின் நோக்கம், துயரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதும் ஆகும் என்றும், தனிநபர்கள் மீது பழி சுமத்துவதோ அல்லது யார் தவறு செய்தார்கள் என்று சொல்வதோ அல்ல என்றும் கூறியது.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தரத்தின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணை யாரையும் பழிவாங்க முற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

    • அகமதாபாத் ஏர் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
    • விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார்.

    கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.

    இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.

    மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

    இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    முதற்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. 

    • C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
    • விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    அஜர்பைஜான்-ஜார்ஜியா எல்லைக்கு அருகே துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.

    துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில், C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது. 

    ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் அந்த விமானத்தில் இருந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜார்ஜியா அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

    விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
    • இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியை குறை கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.

    இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.

    மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.  

    • மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்டது.
    • எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

    மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் மொத்தம் இருந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் சம்பவ இடத்திலிருந்து கருகிய நிலையில் உள்ள விமான பாகங்களும், எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.  

    • விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    மிச்சிகன்:

    அமெரிக்கா மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிர் இழந்தனர்.

    விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
    • உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

    விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.

    இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

    விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், "விமான விபத்து குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், சுயாதீன விமானப் போக்குவரத்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

    மேலும், விமான விபத்து குறித்த புலனாய்வுப் பணியாகத்தின் (AAIB) முதற்கட்ட அறிக்கை "பாரபட்சமாகவும் குறைபாடுகளுடனும் உள்ளது என்றும் விமான விபத்துக்கு விமானி தான் காரணம் என்றும் கூறுகிறது. ஆகவே விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகத்தால் (AAIB) நடைபெற்று வரும் விசாரணையை முடித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் தரையில் மோதியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில் விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியது.
    • இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அசர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் ஜூலையில் அறிவித்திருந்தார்.

    2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.

    ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் ரஷியாவின் விமானத் தற்காப்பு அமைப்பே அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார்.

    தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ஒப்புக்கொண்ட புதின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அஜர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதின் தற்போது வெளிப்படையாக தவறை ஒப்புக்கொண்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. 

    • விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார்.
    • அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

    தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஜெட் விமானம், காலை 10:30 மணியளவில், முகமதாபாத் பகுதியில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தில் டேக்-ஆஃப் செய்யும் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த புதர்களுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.

    விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார். அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

      

    • ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
    • கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

    துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    • மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
    • இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

    நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.

    இந்த செயல்பாட்டில், இரண்டாவது விமானத்தின் இறக்கை முதல் விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.

    விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×