search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral video"

    • கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார்,கவுமுக், கங்கோத்திரி உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு சிவனின் பக்தர்கள் பயணம் சென்று கங்கை நீரை எடுத்துவரும் இந்து மத யாத்திரை கன்வர் யாத்திரை என்று அழகைக்கப்படுகிறது. உத்தரபிரதேசம் வழியாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 6 தேதி முடிவடைகிறது.

    முன்னதாக உ.பியில் கன்வர் யாத்திரை நடக்கும் வழியில் உள்ள உணவகங்களின் முன் உரிமையாளர்கள் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது. இது இஸ்லாமிய கடை உரிமையாளர்களை பாதிக்கும் விதமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் கடைகளில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அமைதியை உறுதிசெய்யவே என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி உ.பி மாநிலம் முஜாபர்நகரில் உள்ள சாலையில் தங்களை பார்த்து ஹாரன் அடித்ததாகவும் மோத முயன்றதாகவும் கூறி இஸ்லாமிய நபர் சென்ற காரை அடித்து உடைத்து அவரை தாக்கும்  வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 15 கன்வர் யாத்ரீகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இந்நிலையில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உ.பியின் மீனாக்ஷி சவுக் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முகாமிட்டிருந்த அந்த பக்தர்கள், அவ்வழியாக சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபரை மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தி அதை படம் பிடித்தும் உள்ளனர். தாக்கப்பட்ட நபர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உ.பி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவருவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏறபடுத்தியுள்ளது.

    • தௌபா... தௌபா... ரீல்ஸ் வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
    • வீடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அந்த பெண்ணின் நடனத்தை வியந்து பாராட்டினார்.

    சமீபத்தில் வெளியான 'பேட்நியூஸ்' படத்தில் இடம் பெற்ற தௌபா... தௌபா... பாடல் இணையத்தில் வைரலானது. பஞ்சாபி பாடகர் கரண் அவுஜ்லா இசையமைத்து எழுதிய இந்த பாடலுக்கு விக்கி கவுஷல், கரண் மற்றும் ட்ரிப்தி டிம்ரி ஆகியோர் அசத்தலாக நடனமாடி இருந்தனர். இந்த பாடல் ஹிட் ஆன நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பினரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    இதனால் இணையத்தில் தௌபா... தௌபா... ரீல்ஸ் வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரூபாலிசிங் என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளபா... தௌபா பாடலுக்கு ஒரு பெண் நடனமாடும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சள் நிற சேலை அணிந்து ஒரு பெண் சிறிய ஓட்டு வீட்டின் முன்பு நின்று குழந்தைகளுடன் சேர்ந்து அசத்தலாக நடனமாடுகிறார்.

    அவரின் இந்த நடனம் பயனர்களை ரசிக்க செய்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அந்த பெண்ணின் நடனத்தை வியந்து பாராட்டினார். பயனர்களும் அந்த பெண்ணின் நடனத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது பல் இருக்காது. குழந்தை வளரும் போது பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு ஞானப்பல் உள்பட 32 பற்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகும். பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் 32 பற்கள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், அந்த குழந்தைக்கு நேர்த்தியான பற்கள் இருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ நிகாதிவா அன்னோ என்ற பயனரின் இன்ஸ்டா கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

    அரிய நோய் பாதிப்பு காரணமாக பிறக்கும் போதே 32 பற்கள் இருந்ததாகவும், இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே வீடியோவை பகிர்ந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். பிறக்கும் போதே இவ்வாறு பற்களுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரச்சினையை நேட்டல் டீத் என்று சொல்வார்கள். நீண்ட காலமாக இந்த நேட்டல் பற்கள் பிரச்சனையுடன் பிறந்த குழந்தைகளுக்கு 4 முன் பற்கள், தாடையில் 4 முதல் 6 பற்கள் மற்றும் பலவற்றின் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    • மிகவும் குறுகலான பாதை கொண்ட அந்த கடைக்குள் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
    • ஜவுளிகளுக்குள் அந்த பெண் ஊழியர்கள் மறைந்து நின்றதால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

    நகர பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படும் பிரச்சனைகள் பூதாகரமாகி வருகிறது.

    இந்நிலையில் ரிஷிகேஷின் ராம்ஜூலா பகுதியில் சமீபகாலமாக தெருக்களில் அதிகமாக கால்நடைகள் சுற்றித்திரிவதாகவும், அவை பொது மக்கள் மீது பாய்ந்து காயம் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால் அதனை உள்ளூர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இப்பகுதியில் 2 காளைகள் தெருவில் நின்று சண்டை போட்டுள்ளன. திடீரென அந்த காளைகள் சாலையோரம் இருந்த ஒரு ஜவுளி கடைக்குள் புகுந்து அங்கும் சண்டை போட்டன. அப்போது கடையில் இருந்த 2 இளம்பெண்கள் பயந்து கூச்சல் போடுகின்றனர்.

    ஆனால் மிகவும் குறுகலான பாதை கொண்ட அந்த கடைக்குள் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. அப்போது சண்டை போட்ட மாடுகள் பெண் ஊழியர்கள் மீதும் பாய்ந்தன. ஆனால் ஜவுளிகளுக்குள் அந்த பெண் ஊழியர்கள் மறைந்து நின்றதால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே பெண் ஊழியர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த வாலிபர்கள் காளைகளை அங்கிருந்து விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பயனர்கள் பலரும் இது போன்று கால்நடைகளை தெருக்களில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் நடைபெற்றுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் சில ரசிக்கும் படியாகவும், சில அதிர்க்குள்ளாக்கும் வகையில் அமையும். அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.

    சுமார் 27 வினாடிகள் ஓடும் வீடியோவில், தெருவில் செல்லும் 5வயது சிறுவனை குரங்குகள் சேர்ந்து கடிக்கின்றன. சிறுவன் பயத்தில் அலறி சத்தம் போட்டதும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் விரட்டியதை அடுத்து குரங்குகள் ஓடிவிட்டன. இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் நடைபெற்றுள்ளது.

    • பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
    • ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

    ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    க்ஷதனது திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்டுகிறது.

    Audemars Piguet நிறுவனத்தின் Perpetual Calendar வகை லிமிட்டட் எடிஷன் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷாருக்கான், ரன்வீர் உள்பட சிலர் ஒரே மாதிரியான வாட்களை அணிந்து எடுத்த ரீல்ஸ் இணையத்தில் பரவி வருகிறது.

    • பஸ்சில் ஏறும் பயணிகளை கைகூப்பி வணங்கி வரவேற்கிறார்.
    • உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தெனாலியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வருபவர் சுதாகர் ராவ். தான் வேலை செய்யும் பஸ்சில் ஏறும் பயணிகளை கைகூப்பி வணங்கி வரவேற்கிறார்.

    பயணிகள் ஏறியவுடன் பஸ் கிளம்பும் முன் உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார். பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும் போது இன்முகத்துடன் சிரித்தபடி டிக்கெட்டுகளை வழங்குகிறார்.

    பின்னர் பயணிகள் இறங்கும் போது அரசு பஸ்சில் பயணம் செய்ததற்கு உங்களுக்கு நன்றி என மீண்டும் கைகூப்பி வணங்கி வழி அனுப்பி வைக்கிறார். இவரது செயல்பாடுகளை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    சமூக வலைத்தளங்களில் சுதாகர் ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அறிந்த ஆந்திரா போக்குவரத்து துறை மந்திரி ராம் பிரசாத் ரெட்டி சுதாகர் ராவிற்கு போன் செய்து உங்கள் மனம் நிறைந்த சேவைக்கு பாராட்டுக்கள் என வாழ்த்து தெரிவித்தார்.

    • டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதள புகழுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை சந்திக்கும். பல வீடியோக்கள் வைரலாகும்.

    அந்த வகையில் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது. வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து ப்ரொஜெக்டர் வைத்து பெரிய திரையில் சிலி மற்றும் பெரு அணிகள் இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை குடும்பத்தினர் பார்ப்பதை காணமுடிகிறது.

    இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

    மெக்சிகோவில் உள்ள ஆலயத்தை சேர்ந்த போதகர் ஒருவர், சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள ஒரு தேவாலயத்தை சேர்ந்த போதகர் கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

    அப்போது சொர்க்கத்தில் உள்ள நிலங்களை விற்பனை செய்ய கடவுள் அவருக்கு அதிகாரம் அளித்ததாகவும், அவர் தெரிவித்த வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    இதன் அடிப்படையிலேயே அந்த தேவாலயத்தினர் சொர்க்கத்தில் நிலங்களை விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் குவிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

    முதலில் இதை ஆலய நிர்வாகத்தினர் விளையாட்டாக தொடங்கியதாகவும், பின்னர் இதை சீரியசாக எடுத்துக்கொண்ட சிலர் மனைகளை வாங்கி குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • சாகசங்கள் சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது.
    • 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சமூக ஊடகங்களில் பிரபலம் ஆவதற்காகவே இளைஞர்களும், இளம் பெண்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். அந்த வீடியோக்களுக்காக அவர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது.

    அதுபோன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயன்று நூலிழையில் உயிர்தப்பிய காட்சி உள்ளது.

    அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது நண்பருடன் தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு ரீல்ஸ் செய்வதற்காக தயாராகும் காட்சிகள் உள்ளது. அப்போது பின்னால் தண்டவாளத்தில் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் அந்த பெண் ரீல்ஸ் உருவாக்குவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

    இந்நிலையில் ரெயில் அந்த பெண்ணின் பக்கத்தில் வந்த போது ரெயில் என்ஜின் டிரைவர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து தள்ளினார். இதனால் அந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரெயில் என்ஜின் டிரைவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் ரீல்ஸ் வீடியோ தயாரித்த பெண்ணையும், அவரது நண்பரையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார்.

    சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டாலர்களை [33 கோடி ரூபாய்] வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடிய அந்த நபர் 4 மில்லியன் டாலர்களை வென்றுள்ளார்.

    இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார். பதறிய கேசினோ ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாடற்ற முடியவில்லை. அவரது இறப்புக்கு அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்ப்பட்டதே காரணம் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

    அந்த நபர் சுருண்டு விழுந்ததும் அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டம் எப்போதாவது சிலருக்கு மட்டுமே வரும் நிலையில் அப்படி ஏற்பட்ட அதிர்ஷ்டமே அந்த நபருக்கு எமனாக முடிந்தது என்பது அபத்தமான உண்மையாக மாறியுள்ளது. 

    • சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அஃலி' படத்திலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் அஜித்தின் பைக் பயணத்தால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று தாமதமான நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

    மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு படமாக்கப்படும் என்று தெரிகிறது. இடையில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனோடு அஜித் இணைந்துள்ள 'குட் பேட் அஃலி' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையொட்டி சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

     

    இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது ஆரம்ப காலங்களில் கார் ரேஸராக இருந்தார்.

    திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றாலும் அவ்வப்போது ரேஸிங்கில் ஈடுபட்டு தனது ஆர்வத்துக்கு தீனி பிட்டுகொள்வது வழக்கம். படங்களில் இடம்பெறும் அஜித்தின் ரேஸிங் சாகச காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளையும் அஜித் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×