என் மலர்
நீங்கள் தேடியது "Viral Video"
- பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்க்-குக்கு நபர் ஒருவர் தீ வைக்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிகழ்ந்துள்ளது.
ராய்ப்பூரின் உர்லா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று, தர்மேந்திரா மற்றும் இம்ரான் என்ற இரு இளைஞர்கள் தங்களது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.
இம்ரான் பைக்கில் அமர்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தர்மேந்திரா திடீரென சிகரெட் பற்ற வைக்க முயன்றுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைபிடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா, ஊழியர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போதே, தனது கையில் இருந்த தீப்பெட்டியால் பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
பெட்ரோல் வெளியே வந்து கொண்டிருந்ததால், நொடிப் பொழுதில் தீயானது, பைக் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் வரை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்ததால் மிகப்பெரிய வெடி விபத்து தவிர்க்கப்பட்டது.
பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், தர்மேந்திரா மற்றும் இம்ரானை உர்லா போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
- நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான்.
- எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை.
டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
17 வயது சிறுவன் தனது சகோதரியுடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஆனால் தனக்கு நீதி வேண்டும் என்றும், சிறுவனை வயது வந்தவராக கருதி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், சிறுவனிடம் காரைக் கொடுத்த அவனது தந்தை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வீடியோ வைரலாகி, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தொழிலதிபர் தந்தை, ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இது ஒரு மிகப்பெரிய தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் குடும்பமே இந்தச் செயலால் கடும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் ஆழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாயிடம் நான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கோருவேன்.
சம்பவம் நடந்த போது நான் வேலை விஷயமாக கோரக்பூரில் இருந்தேன். நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.
நான் வீட்டில் இருக்கும்போது எப்போதும் கண்டிப்பாகவே இருப்பேன். நான் இல்லாதபோது அவனது தாயாரையும் மீறி அவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான்.
எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. அங்கேயே இருந்து உதவி செய்தான். எனது மனைவி போன் செய்து தகவல் சொன்னவுடன், உடனடியாகக் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி நான் அறிவுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் சாலை விதிகளை மீறியதாக ஏற்கனவே பல அபராதங்களை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் வணிக ரீதியான தொழில் செய்து வருவதால், டிரைவர்கள்தான் பெரும்பாலும் இந்த வாகனத்தை ஓட்டுவார்கள். முந்தைய அபராதங்களுக்கு அதுவே காரணம்" என்று பதிலளித்தார்.
- வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
- அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேகவுடா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரி (27 டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், யோகேஸ்வரி வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் யோகேஸ்வரி மற்றும் பைக்கை ஓட்டி வந்த தீபக் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, யோகேஸ்வரி அன்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார்.
பைக்கை ஓட்டி வந்தவர் உல்சூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
- இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்கிற்கு ஆசைப்பட்டு பலரும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் பல வீடியோக்களை காணமுடிகிறது. இந்த வீடியோக்களை பார்த்து விழிப்புணர்வு வரும் என்று பார்த்தால் இங்கு ஒருவர் அவருக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதெல்லாம் பார்த்து சும்மா விடுவாங்களா நம்ம போலீசார்... அதிரடி ஆக்ஷனில் இறங்கி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்...
ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாலிபர் ஒருவர், சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு பேருந்தின் கதவை திறப்பது, பேருந்தின் முன்பு வேகமாக இருசக்கர வாகனத்தில் போய் நிற்பது மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களின் கதவை திறப்பது என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டுள்ளார். மேலும் அதி புத்திச்சாலித்தனமாக யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் கஜூரி காஸில் வசிக்கும் துஷார் புனியா என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்’ என கருத்து தெரிவிக்கின்றனர்.
- வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர் கரண் தஞ்சு. இவர் தனது நண்பருடன் ஒரு பந்தயம் கட்டினார். அவர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் ரூ.50 தருவதாகக் கூறினார். இருவரும் சேர்ந்து, உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றனர்.
பானி பூரி விற்பனையாளர் இரண்டு பானி பூரிகளை ஒரு தட்டில் வைத்து தஞ்சுவின் நண்பரிடம் கொடுத்தார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது.
பானிபூரி மசாலா வாளியில் ஒரு எலி விழுந்து நீந்தியது. எலி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அது அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. பானி பூரி விற்பனையாளர் அதை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தார்.
வாளியில் எலி விழுந்தவுடன், அது ஓடத் தொடங்கியது. இருப்பினும், இதையெல்லாம் பார்த்த பிறகும், தஞ்சு மித்ரு போட்டியை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை.
மசாலா வாளியில் எலி விழுந்ததை அறிந்த பிறகும், அவர் பந்தயத்தைத் தொடர்ந்தார். ஒரே நேரத்தில் 31 பானிபூரிகளை சாப்பிட்டார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 'பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்' என கருத்து தெரிவிக்கின்றனர்.
- சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், தேர்வுகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கியது.
- கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான்.
டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 3 காலை 11:57 மணியளவில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. காரில் அந்த சிறுவனுடன் அவனது சகோதரியும் இருந்துள்ளார். அவர்கள் காரை அதிவேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "23 ஆண்டுகளாக கணவர் இன்றி தனியாக கஷ்டப்பட்டு என் மகனை வளர்த்தேன். பிப்ரவரி 3 அன்று, அதிவேகமாக கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான். நான் ஒரு ஆதரவற்ற தாய், எனக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
- ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
- அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்
தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்
அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.
நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
- அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.
இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.
அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.
- சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
- ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண் முக்கிய காரணம்.
சீனாவின் ஷாங்காய் நகரில் பரபரப்பான சாலை ஒன்று திடீரென உள்வாங்கிய சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த தொழிலாளர்கள் முன்னிலையிலேயே சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
அங்கிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தன. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அருகிலுள்ள கட்டிடங்களில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண், நிலத்தடி நீரைத் தொடர்ந்து உரிந்து எடுப்பது மற்றும் அதிகரித்து வரும் நகரக் கட்டுமானம் போன்ற காரணங்களால் இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நிகழ்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 2024-இல் மின்ஹாங் மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் 10 மீட்டர் அளவிற்குச் சாலை உள்வாங்கியது.
- வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
- சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரம் மற்றும் நவீன வசதிகள் செய்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ ஒற்றை பெற்றோரின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழ செய்துள்ளது.
அதில், ஆட்டோ பயணத்தின் போது பயணி ஒருவர் ஆட்டோவின் பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கி கொண்டிருப்பதை கவனிக்கிறார். அவர் டிரைவரிடம் அந்தச் சிறுமியை பற்றி கேட்கிறார். அதற்கு டிரைவர், அது என் மகள் ஆயுஷி என்று கூறுகிறார். தொடர்ந்து பயணி ஆட்டோ டிரைவரிடம் அவரை பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த தந்தை தனது மகளை தனியாகவே வளர்த்து வருகிறார். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
எனவே தினமும் ஆட்டோ ஓட்ட செல்லும் போதெல்லாம் தனது மகளையும் உடன் அழைத்து செல்கிறாராம். ஆட்டோவின் இரைச்சல், மேடுபள்ளங்கள் என எதை பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தந்தை மீதான நம்பிக்கையில் ஆயுஷி நிம்மதியாக உறங்குகிறாள். வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் ஒரு ஒற்றை பெற்றோரின் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்த வீடியோவின் முடிவில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருவதும், அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், எளியவர்களின் சத்தமில்லாத போராட்டங்களுக்கு இந்தத் தந்தை ஒரு உதாரணம் என பதிவிட்டனர்.
- இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
- வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
சிறிய தொழில் செய்தாலும், திறம்பட செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதை உறுதிபடுத்துவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் நளினி உனாகர் என்ற பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நளினி உனாகரின் வீட்டுக்கு அருகே ஒரு டிரை கிளீனிங் கடைக்காரரிடம் அவரது வருமானம் குறித்து பேசும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. கடைக்காரரும், அவரது மனைவியும் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். தினமும் சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வதன் மூலமும், விலை உயர்ந்த புடவைகள் மற்றும் சூட்களை டிரைகிளீனிங் செய்வதன் மூலமும் ஒரு நாளைக்கு ரூ.10,500 வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். சொந்தக்கடை என்பதால் வாடகை கிடையாது, மின்சாரக் கட்டணம் மற்றும் ஆட்கள் கூலி போக மாதம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் வரை லாபமாக கிடைப்பதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
அதேநேரம் சிலர், இதுபோன்று வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என பதிவிட்டுள்ளனர். இவ்வாறு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட நிலையில் நளினி உனாகரின் இந்த வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
- "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
- விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.
"Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.
அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.
ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.






