search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர்.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், கல்லூரி 2-ம் ஆண்டு படிக்கும் மகளும், பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் சுரேஷ் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாய், தந்தை இருவரும் இறந்த நிலையில் 2 மகள்களும் பரிதவிப்பில் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ஆட்டோ டிரைவரான இவர் மாதவரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு 3 வாலிபர்கள் செங்குன்றம் எட்டயபாளையத்திற்கு செல்வதற்காக இவரது ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் மீது ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வால்டாக்ஸ் ரோட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு எதிரே உள்ள யானைக்கவுனி போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது ஆட்டோவில் சந்தேகம் படும்படி 3 பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது பெயர் யாசின், தாவூத், பைசூலா என்பது தெரியவந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு காரில் வந்துள்ளனர்.

    அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி பணம் இருந்தது. இது பற்றி விசாரித்த போது இவர்கள் முதலாளியான முகமத் என்பவர் எட்டயப்பாளையத்தில் உள்ள தத்தா என்பவரி டம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

    இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து இருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம்பெண் கண்டித்தும் ஆட்டோ டிரைவர் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.

    இதனால் பொறுமை இழந்த இளம்பெண் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் அந்த டிரைவரை ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் டிரைவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து சென்றார். சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் இழுத்துபோட்டு செருப்பால் தாக்கும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரியார் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர்.

    மதுரை

    மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45), ஆட்டோ டிரைவர். பெரியார் பஸ் நிலையம் அருகே இவர் நின்றிருந்தபோது சிறுவன் உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து திடீர் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்துச்சென்ற திடீர் நகர் சதீஷ்குமார் (21), குடிசை மாற்று வாரிய குடியிருப்புசேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21) ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் பத்ரு ஹரி (20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் முன்பு போய் தனது ஆட்களை விழச்செய்து மோட்டார் சைக்கிளை ஏற்றிவிட்டதாக கூறி பணம் பறிப்பார். இந்த காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக அமைந்து இருக்கும்.

    இந்த நிலையில் அதே பாணியில் சென்னை புரசை வாக்கத்தில் 2 பெண்கள் ஆட்டோ மீது போய் விழுந்து டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் பால செல்வ விநாயகம். இவர் புரசைவாக்கம் சுந்தரம் வேன் சந்திப்பு மேனாட் தெருவில் தனது ஆட் டோவை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப் போது அந்த வழியாக சென்ற 2 பெண்கள் திடீரென ஆட்டோவின் முன்னால் பாய்ந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கள் மீது ஆட்டோவை ஏற்றிவிட்டதாக கூறி உறவினர்களை வரவழைத்து உள்ளனர். ஆட்டோ டிரைவர் பால செல்வ விநாயகத்தை தாக்கி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு 2 பெண்களும் தப்பிஓடி தலைமறைவானார்கள்.

    இதுபற்றி பால செல்வ விநாயகம் வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொன்னையா சொந்தமாக ஆட்டோ வைத்து ஸ்பிக் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
    • தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையை கடந்து நடந்து செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மீது பயங்கரமாக மோதிவிபத்து ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே குமாரசாமிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60)சொந்தமாக ஆட்டோ வைத்து ஸ்பிக் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு 10 மணி அளவில் ஸ்பிக் நகர் பஜார் வழியாக தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையை கடந்து நடந்து செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மீது பயங்கரமாக மோதிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் பொன்னையா தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன ளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்,

    இது குறித்து முத்தையா புரம் இன்ஸ்பெக்டர் (பொ றுப்பு)மூக்கண் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழுமனதுடன் பாராட்டுகிறேன்.
    • நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி இன்று மான் கி பாத் 105-வது நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சென்னை ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பராமரிக்க, பாதுகாக்க ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்திய கலாசாரமும், இந்திய இசையும் தற்போது உலகமயமாகிவிட்டது.

    அவர்கள் மீது உலகம் முழுவதும் உள்ள மக்களின் பற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21 வயதான காஸ்மி இன்ஸ்டாகிராமில் இன்று மிகவும் பிரபலமானவர். ஜெர்மனியை சேர்ந்த காஸ்மி இதுவரை இந்தியா வந்ததில்லை.

    ஆனால் இந்தியாவை பார்த்திராத இந்திய இசையின் ரசிகை, இந்திய இசையில் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். அவரது முயற்சிகள் ஒவ்வொரு இந்தியரையும் மூழ்கடிக்கப் போகிறது.

    ஜீவேஷு கருணா சாபி, மைத்ரி தேஷு விதியாதம் என்றால், உயிரினங்கள் மீது கருணை காட்டுங்கள், அவர்களை உங்கள் நண்பர்களாக்குங்கள். எல்லா வழிகளிலும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் சிங்கம், புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    உயிர்களிடம் கருணை காட்டுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களாக ஆக்குங்கள். தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் வாகனங்களில் பெரும்பாலானவை விலங்குகள் மற்றும் உயிரினங்கள். ராஜஸ்தானில் சுக்தேவ்பாம்பு களை பராமரிப்பதிலும், சென்னையில் ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பாதுகாப்பதிலும் சிறந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களது பணிகளை பாராட்டுகிறேன். ஐதராபாத்தை சேர்ந்த 11 வயது அக்சரா குழந்தைகளுக்கான 7 நூலகங்களை நிர்வகிக்கிறார். குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர் பங்களிக்கும் விதம் ஊக்கமளிக்கிறது.

    இன்று 'மான் கி பாத்' மூலம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். அக்டோபர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூய்மை குறித்த பெரிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டோ டிரைவரான செய்யது மசூது மற்றும் அவரது நண்பர்கள் அணைக்கு வரும் நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்றனர்.
    • போலீசார் மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறை அதிகாரிகள் இரவு சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரமாக போராடி உயிரிழந்த டிரைவரை மீட்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான மேக்கரை அருகே உள்ள அடவிநயினார் அணை 132 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அணையில் குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது அணை நீர்மட்டம் 94 அடியை கடந்துள்ளது.

    நேற்று மாலை அச்சன்புதூர் நடுத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செய்யது மசூது(வயது 32) மற்றும் அவரது நண்பர்கள் அணைக்கு வரும் நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்றனர். அப்போது பாறை இடுக்கில் செய்யது மசூது சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறை அதிகாரிகள் இரவு சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரமாக போராடி உயிரிழந்த டிரைவரை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது.
    • கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    வெட்டிக்கொலை

    இவர் நேற்று முன்தினம் இரவு கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் மேலச்செவல் கிருஷ்ணன் கோவிலில் மது அருந்தி யவர்களை தட்டிக்கேட்டது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவந்து, ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். அதில் ஒருவரின் உறவினர் தான் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள விஜயகுமார் என்பதால் பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    7 பேரிடம் விசாரணை

    இதுதொடர்பாக அதே ஊரை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே குற்றவாளி களை கைது செய்யும் வரை விஜயகுமாரின் உடலை வாங்க வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து விட்டனர். அவர்களிடம் போலீசார், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயகுமார் மகனுக்கு அரசு வேலை, ரூ.1 கோடி நிவாரணம், கொலை யாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை அவரது உறவினர்கள் விதித்தனர்.

    அதனை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி அரசுக்கு பரிந்துரை செய்வதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். எனினும் இன்றும் 2-வது நாளாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டு நர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்து லட்சுமி, கண்காணிப்பாளர் செந்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.