என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver"

    • தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
    • இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.

    இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.

    அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
    • இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.

    அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.

    சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    • பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.

    மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.

    பிரபல நிறுவனமான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல்ரூபானி தனது லிங்க்டு -இன் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த வாரம் விசா விண்ணப்பிக்க அமெரிக்க தூதரகம் சென்றேன். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பையை என்னிடம் தாருங்கள். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்கு ரூ.1,000 கட்டணம் என்றார். முதலில் நான் தயங்கினேன். ஆனாலும் வேறு வழியின்றி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றேன். பிறகு தான் தெரிந்தது. இது அற்புதமான வணிகம் என்று. அந்த டிரைவர் தினமும் 20 முதல் 30 பேரின் உடமைகளை தனது ஆட்டோவில் பாதுகாக்கிறார்.

    இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று கருதுகிறேன். ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கிறார் என பதிவிட்டுள்ளார். மேலும் அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரிக்கு சிறிய லாக்கர் வசதி இருக்கிறது. இதனால் பைகளை பாதுகாப்பாக வைத்து கொடுக்கிறார் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.

    • இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டினார்.
    • கன்னடர்களை வெளிமாநிலந்தவர் கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் வடமாநில இளம்பெண் ஆத்திரமடைந்தார்.

    இதனையடுத்து, அவர், ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இளம்பெண் தனது செருப்பை கழட்டி ஆட்டோ டிரைவரை தாக்கினார். 

    மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆட்டோ டிரைவரின் பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார் இந்த விவாகரத்தில் வடமாநில பெண் மீது தான் தவறு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இதனையடுத்து வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டினார்.
    • கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.

    ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் இளம்பெண் அவரை தனது செருப்பால் தாக்கினார்.  

    மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    பெங்களூருவில் கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூருவில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண் வந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் இளம்பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் செல்போனை பழுது பார்க்க ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார்.

    அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இரவு ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கி விடும்படியும், சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் உல்லால் அருகே முன்னூர் பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்ததாக தெரிகிறது.

    இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவர், தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது தான் தன்னை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் உள்ளூர் மக்கள் மற்றும் ஒய்சாலா போலீசார் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    மேலும் இளம்பெண் ஆட்டோ டிரைவருக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முல்கியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தான் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் ஆட்டோ டிரைவர் பிரபுராஜ், அவரது நண்பர்களான கும்பாலாவை சேர்ந்த மிதுன் (30), மணீஷ் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
    • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

    அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

    திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தல்
    • ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன.

    ஊட்டி, :

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக சுற்றுலா தொழில் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார் டிரைவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதை தீர்க்க நகர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    ஆனாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணி லோயர் பஜார், காபி ஹவுஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, டி.பி.ஓ. வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்து.பேரணியின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் பேரணியை அனுமதிக்காததால் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

    ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக்கள் நகரின் எல்லையான 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்களுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும். அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    • ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர்.
    • இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் மாநகரில் அழகாபுரம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஜங்சன், 4 ரோடு, 5 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, குகை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.

    இந்த நிலையில் சேலம் மாநகரில் வின்சென்ட் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்று தாறுமாறாக செல்வதை கண்டு அந்த வழியாக மொபட் ஓட்டிச்சென்ற பெண்கள் கையை நீட்டி சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் திரும்பி வந்த ஆட்டோ டிரைவர் தன்னை சத்தம் போட்ட பெண்கள் சென்ற மொபட்டை வழிமறித்து வம்பு செய்தார். மேலும் அந்த பெண்களை நோக்கி ஆபாசமாக பேசி எச்சரித்ததோடு அவர்களை செல்லவிடாமலும் தடுத்தார். மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனரை சத்தம் போட்டு வழிவிட செய்தனர். இதனையடுத்து இரு பெண்களும் அங்கிருந்து சென்றனர்.

    ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்களின் மொபட்டை பின் தொடர்ந்து சென்றார். இந்த காட்சிகளை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துச்சென்றனர்.

    ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் அந்த பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர். அதற்குள்ளாக அந்த இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.

    கீழே விழுந்ததால் கைகளில் சிராய்ப்பு காயங்களுடன் அவதிப்பட்ட இரு பெண்களையும் அங்கிருந்த பெண்கள் மீட்டு அசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். புத்தி சொன்ன பெண்களை பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பின் தொடர்ந்து சென்று ஆட்டோவால் மோதி சாய்த்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இளம்பெண்களை இடித்துச்சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ஆட்டோ ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாது வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டுத் தானி வாகனங்களுக்கான பயண கட்டணத்தை 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 10 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் தானி ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    தானிகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், 'தானிகளுக்கான பயண கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். மேலும், தானி வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, தானி ஓட்டுநர்களின் உழைப்பினை சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாக தொழில் புரியும் தானி ஓட்டுநர்கள், தானி ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்

    ஆகவே, தமிழ்நாடு அரசு தானி சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் 'தானி சேவைக்கான முன்பதிவு செயலியை' உருவாக்கி தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    ×