வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை

சமீர் தாஸ் என்ற 28 வயது ஆட்டோ ஓட்டுனரை கும்பல் ஒன்று வழிமறித்தது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை
Published on

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு தலைவர் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின.

கொல்லப்பட்டவர் இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தவர் என்பதால் அவரது கொலையை கண்டித்து நடந்த போராட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் வங்கதேசத்தின் சிட்டகாங்கில் சமீர் தாஸ் என்ற 28 வயது ஆட்டோ ஓட்டுனரை கும்பல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர்.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறத. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com