search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது.
    • இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

    ஜியோ ஒரு புதிய ஃப்ரீடம் ஆஃபரை (Freedom Offer) அறிவித்துள்ளது. அதில் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

    ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் (JioAirFiber) திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெறுவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடியை ஜியோ வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1000 கட்டண சலுகையை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

    நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஜியோ ஏர் ஃபைபர் பயனராக இருந்து, புதிய திட்டத்தை வாங்கினால் அல்லது வேறொரு திட்டத்தை மேம்படுத்தினால், நீங்கள் இந்த ஆஃபருக்குத் தகுதிபெற மாட்டீர்கள். ஜியோ வழங்கும் 30 சதவீத தள்ளுபடியானது ரூ.1,000 இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். மேலும் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    நீங்கள் இப்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்திருக்கிறீர்கள், இன்னும் உங்களுக்காக பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம்.

    இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
    • உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும்.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸ் (For Your Kids) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸால் உங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கவும், மேலும் ஆப்பிள் வாட்ச்சின் மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும்.

    இதன் மூலம் உங்கள் குழந்தைகள், தகவல்கள் மற்றும் போன் அழைப்புகள் மற்றும் நீங்கள் வழக்கமாக ஆப்பிள் வாட்சில் பெறும் அனைத்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களையும் பெறலாம்.

     

    இந்த அம்சம் இப்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் 4 அல்லது அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் இந்த அம்சம் வேலை செய்யும். வாட்ச் ஓஎஸ் 7 அல்லது அதற்குப் பிறகு வந்த இயங்குதளங்கள் மற்றும் ஐஓஎஸ் 14 அல்லது அதற்குப் பிறகு வெளியான ஓஎஸ் கொண்ட ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் இயங்கும்.

    தற்போது, ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது, இந்த அம்சம் செயல்பட, நீங்கள் ஆப்பிள் வாட்சுக்கான புதிய ஜியோ இணைப்பைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் அமைக்க, குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது ஐபோன் பயனராக இருக்க வேண்டும்.

    உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் அனுமதிக்கும்.

    ஆப்பிள் வாட்சிலிருந்து குழந்தைகள் எந்த தொடர்பை இணைக்கிறார்களோ அதனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். அதே போல் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை ஐபோனில் இருந்து கண்காணிக்க முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூன்று புது ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இரு ரீசார்ஜ்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் தனது ரீசார்ஜ்களின் விலையை உயர்த்தியது. விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட பயனர்களில் பலர் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், ஜியோ நிறுவனம் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ்களை அறிவித்து இருக்கிறது.

    புதிய ரீசார்ஜ்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. இத்துடன் ஜியோ சாவன் ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய ரீசார்ஜ்களின் விலை ரூ. 329, ரூ. 949 மற்றும் ரூ. 1049 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    பலன்களை பொருத்தவரை ஜியோ ரூ. 329 சலுகையில் தினமும் 1.5 ஜிபி 4ஜி+டேட்டா, ஜியோ சாவன் ப்ரோ சந்தா உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 949 சலுகை தினமும் 2 ஜிபி 4ஜி+, அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஜியோ ரூ. 1049 சலுகையில் தினமும் 2ஜிபி 4ஜி+ மற்றும் அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, சோனிலிவ், ஜீ5 சந்தா உள்ளிட்ட பலன்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களில் வழங்கப்படும் இலவச டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். 

    • கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் பாதிப்பு.
    • பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு.

    விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

    மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் கிரவுட்ஸ்டிரைக் ஈடுபட்டுள்ளது. பாதிப்பு சரி செய்வது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகின்றன.
    • அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    ஏர்டெல் நிறுவனம் புதிதாக டேட்டா பூஸ்டர் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

    ஏற்கனவே 5ஜி டேட்டா சலுகையை பெறாதவர்கள் கூட அன்லிமிட்டெட் 5ஜி கனெக்டிவிட்டி பெற செய்யும் வகையில், இந்த பூஸ்டர் பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புது டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் 5ஜி மட்டுமின்றி கூடுதலாக 4ஜி டேட்டா வழங்குகின்றன.

    சமீபத்தில் ஏர்டெல் நிறுவன சலுகைகளின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய டேட்டா பூஸ்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வு காரணமாக ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா தினமும் 2 ஜிபி மற்றும் அதற்கும் அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய டேட்டா பேக் மூலம், தினமும் 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகைகளில் ரீசார்ஜ் செய்துள்ளவர்கள் ரூ. 51 விலையில் துவங்கும் டேட்டா பூஸ்டர் சலுகைகளை ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பெறலாம். புதிய சலுகைகளின் விலை ரூ. 51, ரூ. 101 மற்றும் ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    இவற்றில் கூடுதலாக 3ஜிபி, 6ஜிபி மற்றும் 9ஜிபி வரை 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பூஸ்டர் பேக் சலுகைகளின் வேலிடிட்டி, பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள சலுகைகள் முடியும் வரை பொருந்தும். 

    • தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு.
    • 10 சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் பல சிம் கார்டுகளை வைத்திருப்பது இயல்பாகி விட்டது. ஆனால் அதிக சிம் கார்டுகளை ஒருவர் வைத்திருப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

    2023 ஆம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு மேல் சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒரு நபர் 6 சிம் வைத்திருக்க மட்டுமே அனுமதி உண்டு.

    உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

    • அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக இருக்கும்.
    • 2022-இல் 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை வாங்கியது.

    சைபர்செக்யுரிட்டி நிறுவனமான விஸ் (Wiz)-ஐ கூகுள் நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விஸ் நிறுவனம் மிக குறுகிய காலக்கட்டத்தில் அசுர வளர்ச்சியை பெற்றது. இந்நிறுவனத்திற்கு ஆசார் ராப்பப்போர்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த மே மாத வாக்கில் ஐபிஓ-வுக்கு தயாரான விஸ் நிறுவன மதிப்பீடு 12 பில்லியன் டாலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    உலகளவில் நிர்வாகிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களுக்கு கிளவுட் சார்ந்த சேவைகளை விஸ் வழங்கி வருகிறது. இஸ்ரேலிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களான சைபர்ஸ்டார்ட்ஸ், இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ், இன்சைட் பார்ட்னர்ஸ் மற்றும் செக்யோவா கேப்பிட்டல் உள்ளிட்டவை விஸ் சேவைகளை பயன்படுத்தி வருகின்றன.

    விஸ் நிறுவனத்தை கூகுள் கைப்பற்றும் பட்சத்தில் கூகுள் நிறுவன வரலாற்றிலேயே அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக விஸ் இருக்கும். கூகுள் நிறுவனம் முன்னதாக 2022 ஆம் ஆண்டு மாண்டியன்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக சைபர் பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருவது பேசு பொருளாக இருக்கிறது.

    • எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர்.
    • Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி ஏஐ இருக்கும்.

    உலகத்தை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. சோசியல் மீடியா முதல் தொழில்துறை  வரை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் நாளை நோக்கி ஏஐ தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.

    அந்த வகையில் சாட் ஜி.பி.டி.யை உருவாக்கிய முன்னணி ஓபன் ஏஐ நிறுவனம், ஸ்ட்ராபெர்ரி [Strawberry] என்ற பெயரில் பகுத்தறிவு கொண்ட ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் குறித்து பலர் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பிராஜக்ட் ஸ்ட்ராபெர்ரியை ஓபன் ஏஐ நிறுவனம் மிகவும் ரகசியமாக செய்து வருவதாக ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     

    இந்த ஸ்ட்ராபெர்ரி திட்டத்தின் மூலம் ஏஐ மாடல்களுக்கு தன்னிச்சையாக விஷயங்களை புரிந்து கொள்ளுதல், லாஜிக்கல் ரீசனிங், எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர். சுருக்கமாக சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினி ரோபோட்டுக்கு உணர்வுகளையும் பகுத்தறிவையும் கற்றுத்தரும் தருணம் நிஜத்தில் நடந்து வருகிறது.

     

    கிட்டத்தட்ட மனிதனின் அறிவை பிரதி செய்யும் வகையிலான ஏஐ மாடலை உருவாக்க ஓபன் ஏஐ நிறுவனம் முயன்று வருகிறது. கூகுள்,மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் பின்தங்கியுள்ள நிலையில் ஓபன் ஏஐ உருவாக்கிவரும் இந்த புதிய ஏஐ வருங்காலங்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கலான சாப்டவேர்களை உருவாக்கவும் பயனுள்ளதாக இருக்கும்என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய ஸ்ட்ராபெர்ரி ஏஐ திட்டம் குறித்து ஓபன் ஏஐ இன்னும் உறுதி செய்யவில்லை.

     

    ஆனால் சமீபத்தில் ஓபன் ஏஐ பரிசோதனை செய்த Q* என்ற புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஏஐ சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கணக்குகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெர்ரி ஏஐ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    • 1198 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.
    • 1999 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 600GB டேட்டா.

    அரசு செல்போன் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி வழங்க தயாராகி வருகிறது. நாட்டின் முக்கிய இடங்களில் 4ஜி சேவை வழங்கி வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மலிவான விலையில் வருடாந்திர பிளானை அறிவித்துள்ளது.

    1198 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி

    300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.

    மாதந்தோறும் 30 இலவச எஸ்எம்எஸ்.

    1999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி.

    அன்லிமிடெட் வாய்ஸ் கால்.

    365 நாட்களுக்கு 600GB டேட்டா.

    தினந்தோறும் 100 எஸ்எம்ஸ் இலவசம்.

    2999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி.

    ஒரு நாளைக்கு 3GB டேட்டா உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்.

    தினசரி 10 எஸ்எம்எஸ் இலவசம்.

    • அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.
    • அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம்.

    அமேசான் பல நாடுகளில் பிரைம் டே விற்பனையை நடத்த தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, பிரைம் டே விற்பனையின்போது பிரைம் உறுப்பினர்களுக்கு Suicide Squad: Kill the Justice League, Chivalry 2 மற்றும் பல்வேறு பிரபல டைட்டில்களை கொண்ட கம்ப்யூட்டர் கேம்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அமேசான் பிரைமில் கூடுதல் கட்டணமின்றி இந்த கேம்களை எவ்வாறு பெறலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

    அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.

    இந்த விற்பனையின்போது, Suicide Squad: Kill the Justice League, Chivalry 2, and Rise of the Tomb Raider உள்ளிட்ட மூன்று கேம்களை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் பெற்றுக் கொள்ளலாம்.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த கேம்களை ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 48 மணிநேரத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த இலவச கேம்கள் எபிக் கேம்ஸ் ஸ்டோர் (Epic Games Store) மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம். இதில், Thieves of the Heart, The Invisible Hand, Forager, Heaven Dust 2, Soulstice, Wall World, Hitman Absolution, Call of Juarez: Bound in Blood, and Call of Juarez ஆகியவை தற்போது கிடைக்கின்றன.

    ஜூலை 11 முதல், பிரைம் உறுப்பினர்கள் Knights of the Old Republic II — The Sith Lords, Alex Kidd in Miracle World DX, Teenage Mutant Ninja Turtles: Shredder's Revenge, and Samurai Bringer ஆகிய கேம்களை பெறலாம்.

    • 1999 ரூபாய் பிரீபெய்டு ரிசார்ஜ் பிளான்- 365 நாள் வேலிடிட்டி கொண்டதாகும்.
    • 509 ரூபாய் பிரீபெய்டு பிளான்- 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

    ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் விலையை அதிரடியாக உயர்த்தின. இதனால் டேட்டா உபயோகிப்பவர்கள் முதல் பேசுவதற்காக மட்டும் போன் பயன்படுத்துபவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிம் கார்டை டேட்டா, போன் பேச வைத்திருப்பார்கள். மற்றொரு சிம் கார்டை மாற்றபாக பயன்படுத்த வைத்திருப்பார்கள்.

    தற்போது விலை உயர்வு காரணமாக இரண்டிற்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஏர்டெல் சில திட்டங்களை அறிவித்துள்ளது.

    1999 ரூபாய் ப்ரீபெய்டு ரிசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி கொண்டதாகும். அத்துடன் 24GB டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    509 ரூபாய் ப்ரீபெய்டு பிளான்

    84 நாட்கள் வேலிடிட்டி. 6GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    355 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 25GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    199 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    28 நாட்கள் வேலிடிட்டி. 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    219 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    609 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    ஒரு மாதம் வேலிடிட்டி. 60GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    589 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 50GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    489 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    77 நாட்கள் வேலிடிட்டி. 6GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 600 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    ×