search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
    • விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் அதிக மொழிகள் சேர்க்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விர்ச்சுவல் கீபோர்டில் 12 புதிய மொழிகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் ஆங்கிலம் (அமெரிக்க) மொழி மற்றும் எமோஜி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஷன் ப்ரோ சாதனம் அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையை மாற்றும் வகையில், ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ சாதனத்தை அதிக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அதிக மொழிகளை சேர்க்க இருக்கிறது. அதன்படி கான்டோனீஸ் (டிரேடிஷனல்), சைனீஸ் (சிம்ப்லிஃபைடு), இங்லீஷ் (ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன்), ஃபிரென்ச் (கனடா, ஃபிரான்ஸ்), ஜெர்மன் (ஜெர்மனி), ஜேப்பனீஸ் மற்றும் கொரியன் போன்ற மொழிகள் விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் சேர்க்கப்பட இருக்கிறது.

     


    புதிய மொழிகள் சேர்க்கப்பட இருப்பதால், விஷன் ப்ரோ மாடல் விரைவில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோன்று ஹாங்காங் மற்றும் தாய்வானிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யபப்டலாம் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டிற்குள் மேலும் அதிக நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங்-சி-கியூ ஆப்பிள் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன்பே அதிக நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.
    • மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை.

    கோடிங் செய்வது, வலைதளங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு சேவை உருவாக்கப்பட்டு இருக்கிறது. காக்னிஷன் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய சேவைக்கு டெவின் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுவே உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.

    இந்த சேவையிடம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை சிறப்பாக செய்து முடித்துவிடும். புதிய சேவை மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்று இதனை உருவாக்கி இருக்கும் காக்னிஷன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    மனித பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தான் டெவின் உருவாக்கப்பட்டு இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மனித பொறியாளர்களுக்கு மாற்றாக இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டெவினின் குறிப்பிடத்தக்க திறன்களில் ஒன்றாக இது கடினமான பணிகளையும் சிந்தித்து, திட்டமிட்டு செய்து முடிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிவுகளை எடுப்பது, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாளடைவில் சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொள்வது என டெவின் கிட்டத்தட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    மென்பொருள் பொறியியல் துறையில் SWE-bench கோடிங் பென்ச்மாரக்கில் மென்பொருள்களை மதிப்பிடுவதில் டெவின் அதிநவீன தீர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனைகளில் டெவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிஜ உலகின் சவால்களில் டெவின் முந்தைய ஏ.ஐ. மாடல்களை விட அதிகளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில், இது மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
    • வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிதாக சாம்சங் 'கேலக்ஸி ரிங்'  என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக உள்ள மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்து உள்ளன.




     

    நவீன ஸ்மார்ட் வாட்சுகளை விட, கேலக்ஸி ரிங் ஒரு ஆரோக்கிய சாதனம் என்று அழைக்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.

    • ஜியோ டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது
    • இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்

    பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது ரிலையன்ஸ். Paytm, போன்று 'ஜியோ' சில்லரை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

    தற்போது 'ஜியோ பே' செயலி தொழில்நுட்பம் மூலம் இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஜியோ' நிறுவனம் இதனை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளில் உடனடி பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியும்.

    மேலும் Paytm, PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 'ஜியோ' இதனை அமைத்துள்ளது. விரைவில் ஜியோ UPI செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்.

    டிஜிட்டல் வங்கித் துறையில் போட்டியை உருவாக்கும் ஜியோவின் நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
    • ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களை நகைப்பூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்ள செய்யும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அவதார்ஸ். இதை கொண்டு பயனர்கள் தங்களை வெளிப்படுத்தும் உருவங்களை வாட்ஸ்அப் செயலியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் உள்ள அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.6.8 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

     


    இந்த அம்சத்தின் படி பயனர்கள் தங்களின் அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை- காண்டாக்ட் (My Contacts), தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்கள் (Selected Contacts) அல்லது யாருக்கும் வேண்டாம் (Nobody) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    நீங்களும், நீங்கள் தேர்வு செய்யும் காண்டாக்ட்-ம் இந்த அம்சத்தை ஒருவருக்கொருவர் தேர்வு செய்யும் பட்சத்தில் இருவரின் ஸ்டிக்கர்களும் அவரவர் சாட்களில் காணப்படும். புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

    இது ஒருவரின் ஸ்டிக்கர்களை அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங்கில் உள்ள நிலையில், அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
    • பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்

    பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

    மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

    எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    • கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    குவால்காம் ஸ்னப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990-க்கும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் கிரீம் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராஸர், அட்ரினோ GPU, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர்ஷேர், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய 5ஜி போன் என்ட்ரி லெவல் மாடல் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பிராசஸர் அதிக செலவின்றி முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    முன்னதாக ஜியோ பிரான்டிங்கில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போன்களுக்கு இணையான திறன் கொண்டிருக்காத காரணத்தால், அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.

    இந்த போன்களில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த போதிலும், இதில் மற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. ஜியோ 5ஜி போன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மொபைல் போன் மட்டுமின்றி, ஜியோபுக், ஜியோ டைவ், ஜியோ வைபை மெஷ் எக்ஸ்டென்டர், ஜியோ ப்ளூடூத் கேம் கண்ட்ரோலர், ஜியோஃபை, ஜியோ எக்ஸ்டென்டர், யு.எஸ்.பி. கேமரா என பல்வேறு சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    • 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
    • சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.

    அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.

    இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
    • பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

    பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.

    தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.

    • பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் திட்டம்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பிக்சல் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்க வலியுறுத்தி இருக்கிறது. முடிந்தவரையில், அடுத்த காலாண்டிற்குள் பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 10 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 8 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் துவங்கும் என்றும் இவை 2023 முதல் கிடைக்கும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

     


    இவ்வாறு செய்வதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை சீனா மட்டுமின்றி இதர சந்தைகளிலும் விரிவுப்படுத்த முடியும். வரும் வாரங்களில் டாப் என்ட் பிக்சல் 8 ப்ரோ மாடலை உற்பத்தி செய்வதற்கான ப்ரோடக்ஷன் லைனை உருவாக்கவும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் உற்பத்தி பணிகளை துவக்கவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    • செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது.
    • பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் பேட்டரி ஆயுள் அதிகளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஐபோன் 15 சீரிசில் உள்ள பேட்டரி திறன் அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இருமடங்கு அதிகமுறை சார்ஜ் செய்யும் போதும் ஆயுளை தக்கவைத்துக் கொள்ளும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐ.ஒ.எஸ். 17.4 அப்டேட் மூலம் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அதன் செட்டிங்ஸ்-இல் போன் பேட்டரி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை டிஸ்ப்ளே செய்கிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

     


    "ஐபோன் 15 மாடல்களின் பேட்டரிகள் ஆயிரம் முறை சார்ஜ் செய்த பிறகும் 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது," என பேட்டரி குறித்த தரவுகளில் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்களின் பேட்டரிகள் 500 முறை சார்ஜ் செய்த பிறகு 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன.

    குறிப்பிட்ட நிலைகளில் ஐபோன் 15 சீரிசை சார்ஜிங் மற்றும் பயன்பாடுகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோனின் பேட்டரி பாகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு சிஸ்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ×