என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iphone"

    • ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
    • ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.

    அதிக லைக்குகள் பெற தரமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 2 சிறுவர்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவில் வசித்து வரும் ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ஜூன் 21 ஆம் தேதி ஷதாப் காணாமலே போயுள்ளார்.

    அவரது உடல் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. ஷாதாப்பின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டு, அவரது தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டிருந்தது.

    இந்த கொலை வழக்கை விசாரித்த போலீசார் 4 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களைக் கைது செய்தனர். விசாரணையில் 2 சிறார்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க உயர்தர மொபைல் போன் தேவை என்பதால் ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஷாதாப்பின் ஐபோன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் செங்கல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    • ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பிளாக், பின்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
    • ஐபோன் 16 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR (OLED) டிஸ்ப்ளே 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 16 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 உடனடி கேஷ்பேக் பெறலாம். அதே நேரத்தில் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ஐபோனின் விலையை மேலும் குறைக்கலாம்.

    தற்போதைய விலை குறைப்பு மட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறும் அமேசான் பிரைம் டே 2025 சேலில், ஐபோன் 16 விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலுக்கு இதேபோன்ற தள்ளுபடி அறிவிக்கப்படலாம்.

    ஐபோன் 16 புதிய விலை:

    இந்தியாவில் ஐபோன் 16 தற்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் ரூ.72,400க்கு கிடைக்கிறது. இது அதன் அறிமுக விலையான ரூ.79,900ஐ விடக் குறைவு தான். இருப்பினும், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.68,400 ஆகக் குறைகிறது.

    உங்களிடம் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்து அதனை எக்சேஞ்ச் செய்ய விரும்பினால், ஐபோனின் விலையை மேலும் குறைக்கலாம். இந்தியாவில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பிளாக், பின்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

    ஐபோன் 16 அம்சங்கள்:

    செப்டம்பர் 2024 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A18 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இரட்டை பின்புற கேமராக்கள், 48MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா உள்ளன.

    ஐபோன் 16 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR (OLED) டிஸ்ப்ளே 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் ஐபோன் 15 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. இந்த ஐபோன் ஐஓஎஸ் 18 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இது 3,561mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் யுஎஸ்பி டைப்-சி கேபிள் அல்லது மேக்சேஃப் வழியாக சார்ஜ் செய்யலாம்.

    • ஐபோன் 17 ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் நிறுவனத்தின் A19 சிப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிளின் ஐபோன் 17 ஏர், இந்த ஆண்டின் பிற்பகுதியில், அந்நிறுவனத்தின் மிகமெல்லிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோனின் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் எடை பற்றிய விவரங்கள் டிப்ஸ்டர் மூலம் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.

    ஐபோன் 17 ஏர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ்-ஐ விட சிறிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது அதன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் போட்டியாளரை விட மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கும். இருப்பினும், இது ஒரு பாரம்பரிய லித்தியம்-அயன் பேட்டரியை விட அதிக ஆற்றலை வழங்கும் நவீன பேட்டரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

    ஐபோன் 17 ஏர் விவரங்கள்

    பெயர் தெரியாத டிப்ஸ்டர் (X இல் @MajinBuOfficial என்று அழைக்கப்படுகிறார்) ஒரு வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, ஐபோன் 17 ஏர் சிலிக்கான்-கார்பன் பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய மெலிதான ஐபோன் மாடலில் 2800mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டன. இது பேசிக் மாடலை விட கணிசமாக சிறியது. இருப்பினும், சிலிக்கான்-கார்பன் பேட்டரியை பயன்படுத்துவது ஐபோன் 17 ஏர் மாடலில் முன்னர் எதிர்பார்த்ததை விட சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கக்கூடும்.



    ஐபோன் 17 ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 2025 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் மிக இலகுவான மாடல்களில் ஒன்றாகவும் இருக்கலாம். வரவிருக்கும் புதிய ஐபோன் மாடல் 146 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.

    இது சமீபத்தில் வெளியான தகவல்களுடன் ஒத்துப்போகிறது, இது ஒரு லேசான மற்றும் மெலிதான ஐபோன் மாடலின் வருகையைக் குறிக்கிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஃபேஸ் ஐடிக்கான ஆதரவையும் இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்ற டைட்டானியத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ஏர் மாடல் 7000 சீரிஸ் அலுமினியம் அலாய் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது 30 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். டிப்ஸ்டர் வேறு சில கூறுகளின் எடையையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவற்றில் மிகவும் கனமானது 120Hz OLED டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி ஆகும். மேலும் இவை ஒவ்வொன்றும் 35 கிராம் எடையுள்ளதாக கூறப்படுகிறது.

    கேமராவை பொருத்தவரை ஐபோன் 17 ஏர் ஒற்றை 48MP பிரைமரி கேமரா மற்றும் 24MP செல்ஃபி கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் நிறுவனத்தின் A19 சிப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு ஐபோன் 16 பிளஸ் மாடலைப் போலவே 8 ஜிபி ரேமுடன் வரக்கூடும். புதிய ஐபோனின் பின்புற பேனல் கண்ணாடியால் ஆனது என்றும், இது வயர்லெஸ் (மேக்சேஃப்) சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார்.

    • வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை டிரம்ப் விரும்பவில்லை.
    • அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.

    இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து டிரம்ப் கூறியதாவது:-

    இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.

    என்று டிரம்ப் கூறினார்.

    ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது. 2025 மார்ச் வரை, இந்தியாவில் $22 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
    • இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.

    சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று பேசினார்.

    ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார். 

    • அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது
    • உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

    பஞ்சாபை சேர்ந்த 17 வயது சிறுவன் வைத்திருந்த ஐபோன் 11க்காக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நவ்ஜோத் சிங். மார்ச் 24 அன்று நவ்ஜோத்தின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாள் மார்ச் 25 அன்று தனது நண்பர்களுடன் ஹரித்வார் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

    ஆனால் சிறிது நேரம் கழித்து தான் ஹரித்வார் செல்லவில்லை என்றும், மீண்டும் வீட்டுக்கு திரும்புவதாகவும் பெற்றோரிடம் போன் செய்து கூறியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

    அதே இரவு ரயில் நிலையத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மார்பில் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. உடலை அடையாளம் காண முடியவில்லை.

    உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதற்கிடையே மார்ச் 30 அன்று, ஹர்ஜிந்தர் சிங் தனது மகனைத் காணவில்லை என போலீசிடம் சென்றுள்ளார். அதன்பின் அந்த உடல் நவ்ஜோத் சிங் உடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், நவ்ஜோத் அவரது நண்பர் அமன்ஜோத்தால் கொலை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர். காரணம் நவ்ஜோத்தின் ஐபோன்-11. நவ்ஜோத்தை கொலை செய்து மற்றொரு நண்பன் உதவியுடன் உடல் ரெயில் பாதையில் கிடத்தப்பட்டுள்ளது. நவ்ஜோத்தின் மொபைலை அமன்ஜோத்திடமிருந்து போலீசார் மீட்டனர். அமன்ஜோத் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    • வருடாந்திர அடிப்படையில் ஐபோன் விற்பனை உலகளவில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஐபோன் விற்பனையில் வரலாறு காணாத வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    உலகளவில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 90.1 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதம் வரை அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 394.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் ஆகும்.

    "ஒவ்வொரு பகுதி வருவாயிலும் நாங்கள் புதிய சாதனையை இந்த காலாண்டில் எட்டியிருக்கிறோம். இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் தொடர்ந்து இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தில் கால் தெரிவித்தார்.

    "புதிய ஐபோன் 14 சீரிஸ் பல்வேறு தலைசிறந்த தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை மேற்கொள்வதில் சுவாரஸ்ய அனுபவத்தை வழங்குகிறது," என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 உற்பத்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெற்று வருகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு சாதனங்கள் சீனா ஆலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவன சாதனங்களின் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஆப்பிள் மாற்றி வருகிறது.

    சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி சரியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி இலக்குகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்சௌ-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஆலையில் குறையும் ஐபோன் உற்பத்தியை ஓரளவு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷென்செனில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல பணியாளர்கள் சில நாட்களுக்கு முன் ஆலையை விட்டு வெளியேறினர்.

    உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுதவிர மற்ற ஆலைகளுடன் தொடர்பு கொண்டு உற்பத்தி சரிவை முடிந்த வரை ஈடுகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

    உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. செங்கௌ ஆலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    • ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடாதது பற்றி சாம்சங் சமீபத்தில் கேலி விளம்பரம் வெளியிட்டு இருந்தது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபில் ஐபோன் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வந்தன.

    மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடவில்லை என்பதை கூறி ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் சாம்சங் சமீபத்தில் தான் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆப்பிள் தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    சீனர் உருவாக்கிய போல்டபில் ஐபோன் மாடல் ஐபோன் V என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிளாம்ஷெல் வகையிலான போல்டபில் போன் ஆகும். மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய வீடியோ சீனாவை சேர்ந்த வீடியோ தளமான பிலிபிலியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஏராளமான பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் மோட்டோ ரேசர் போன்ற மாடல்களில் இருப்பதை போன்று ஐபோனில் உள்ள பாகங்களை இரண்டாக பிரித்து அவற்றை ஒன்றாக இணைத்துள்ளார். போனின் கீழ்புறத்தில் மதர்போர்டு, ரேம், மெமரி போன்ற பாகங்களும், மேல்பாதியில் பேட்டரி, கேமரா சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

    நீண்ட கால உழைப்பின் பலனாக இந்த மடிக்கக்கூடிய ஐபோனை சீனர் உருவாக்கி இருக்கிறார். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இவர் உருவாக்கி இருக்கும் போல்டபில் ஐபோனில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சீராக இயங்குகின்றன.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.

    ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.

    • 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா்.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய சீனாவில் உள்ள செங்சாவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அங்கு அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா். இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.

    • ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பெருமளவு ஆபத்தில் சிக்கியும், சீராக இயங்கும் அளவுக்கு தரம் கொண்டிருப்பதற்கு உலகளவில் பெயர் பெற்றுள்ளன.
    • ஒரு வருடத்திற்கு முன் கடலில் விழுந்த ஐபோன் மாடல் கரை ஒதுங்கிய சம்பவம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறி இருக்கிறது.

    ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடத்திற்கு பின் மீட்கப்பட்ட ஐபோன் தற்போது சீராக இயங்குகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    கிளார் அட்ஃபீல்டு நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்து விட்டார். கடலில் விழுந்து காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை பிராட்லி காட்டன் என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

    இதை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 2021 முதல் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். எப்போது சர்ஃபிங் செய்யும் போது தனது ஐபோன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டிக் கொள்வார். அதே போன்று தான் செய்யும் போது தான் தண்ணீரில் தவறி விழுந்த அட்ஃபீல்டு பையை எப்படியோ தொலைத்திருக்கிறார்.

    தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என அட்ஃபீல்டு தெரிவித்து இருக்கிறார். மேலும் 450 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    ×