என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்பிள்"
- அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
- நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல், மூன்றாம் தரப்பு மூலம் விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள்.
அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
- ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.
இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.
இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.
இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.
உலகின் பலதரப்பட்ட மக்களும் ஆப்பிளை எடுத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. "An apple a day keeps the doctor away". அதாவது ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் இந்த தொடர் உண்மையா? உண்மையில் தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க நேராதா? பார்ப்போம்.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
ஆப்பிளை தோலுடன் எடுத்துக்கொள்வதுதான் அதிக நன்மை பயக்கும். ஆப்பிள்கள் நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். தினசரி ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்வது இதயநோய் அபாயத்தை குறைப்பதோடு அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளையும் குறைக்கிறது. மேலும் தினசரி ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
செரிமானத்தை மேம்படுத்தும்
ஆப்பிள்கள் பெக்டினின் நல்ல மூலமாகும். இது கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்தும். பெக்டின் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு ப்ரீபயாடிக்காவும் செயல்படுகிறது.
எடை இழப்பு
ஆப்பிள்களில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் கலோரிகள் குறைவாக உள்ளன. இதனால் தினசரி கலோரி உட்கொள்ளல் குறையும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயை தடுக்கலாம்
ஆப்பிள், பேரிக்காய் எடுத்துக்கொள்வது வகை 2 நீரிழிவு நோய் ஆபத்தை 18% குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் அபாயத்தை 3% குறைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆப்பிளில் உள்ள குர்செடின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகளின் செறிவு ஆகும். இது இரத்த சர்க்கரையை குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் செரிமானமாவதையும், இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதையும் மெதுவாக்குவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுத்து, நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்.

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
ஆப்பிள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. கூடுதலாக, ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கவும், அவை பெருகுவதைத் தடுக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் .
மூளை ஆரோக்கியம்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு பயனளிக்கக்கூடும், குறிப்பாக வயதானவர்களுக்கு. ஆப்பிளில் உள்ள குர்செடின் மூளையில் உள்ள நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், அல்சைமர் நோயைத் தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அபாயங்கள்
ஆப்பிள்களை சரியான அளவு எடுத்துக்கொள்வது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வீக்கம், வாயு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் ஆப்பிளில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய பிரக்டோஸ் மோனோசாக்கரைடும், சர்பிடால் பாலியோலும் உள்ளது. ஆப்பிள் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் தவிர்த்துகொள்ளலாம். இறுதியில், ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு பலன்களை கொடுக்கும். ஆனால் அது வெறும் ஆப்பிள் சாப்பிடுவதை மட்டும் குறிப்பதல்ல. நாம் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவின் ஒரு பகுதியாக ஆப்பிள் இருக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடினால் கிடைக்காது.
- ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன.
- M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ சீரிசை அப்டேட் செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு வெளியான M4 சிப்செட் கொண்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபேட் ப்ரோ சமீபத்திய M5 சிப்செட் கொண்டிருக்கின்றன.
இந்த டேப்லெட் வழக்கம் போல் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவை புதிய M5 சிப்செட் உடன் வருகிறது. இதன் 256GB மற்றும் 512GB மாடல்களில் 9-கோர் CPU உடன் 3 பெர்ஃபார்மன்ஸ் கோர்கள் மற்றும் 12GB RAM உள்ளது. இதன் 1TB மற்றும் 2TB மாடல்களில் 10-கோர் CPU மற்றும் 16GB RAM உள்ளது. இவை இரண்டும் 10-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளன.
ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன. அவை 50% வேகமான செல்லுலார் தரவு செயல்திறனை உறுதியளிக்கின்றன. மேலும் செயலில் உள்ள செல்லுலார் பயனர்களுக்கு, M4 உடன் ஐபேட் ப்ரோவை விட 30% வரை குறைவான மின் பயன்பாட்டை உறுதியளிக்கின்றன என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில், வைஃபை 7, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் ஆகியவற்றை இயக்கும் புதிய ஆப்பிள் வடிவமைத்த வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்: N1 இடம்பெற்றுள்ளது. 5GHz நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது N1 சிறந்த செயல்திறனைக் கொண்டுவருகிறது. மேலும் பெர்சனல் ஹாட்ஸ்பாட் மற்றும் ஏர் டிராப் போன்ற அம்சங்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறதும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது. ஆப்பிளின் புதிய 40W டைனமிக் பவர் அடாப்டர், 60W மேக்ஸ் ஆப்ஷனல் யுஎஸ்பி சி பவர் அடாப்டர் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.
ஐபேட் ப்ரோ (2025) சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜிபி மாடல் ரூ. 99,900 என்றும், ஐபேட் ப்ரோ 11-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,19,900 என்றும் ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வை-பை) 256 ஜிபி ரூ. 1,29,900 என்றும்
ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,49,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
+2
- நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
- வீடியோக்கள் சமூகவ லைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
கூடுதலாக, அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.
இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விடிய, விடிய நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். டெல்லி மற்றும் மும்பை ஆப்பிள் நிறுவனங்கள் முன்பு பல அடி தூரத்திற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் 42 மில்லிமீட்டர் அலுமினியம் ஜி.பி.எஸ். மாடலுக்கு ரூ. 46,900 என தொடங்குகிறது.
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 விலை ரூ. 89,900 ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
கூடுதலாக, அவை பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் புனேவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.
இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு காலையில் இருந்தே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று முதல் விற்பனைக்கு வந்த சாதனங்கள்:
ஐபோன் 17 சீரிஸ்
ஐபோன் ஏர்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3
ஆப்பிள் வாட்ச் SE 3
ஐபோன் 17, ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) இந்திய விலை
1. ஐபோன் 17 சீரிஸ், ஐபோன் ஏர்:
இந்தியாவில் ஐபோன் 17 இன் விலை 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் மாடலின் விலை ரூ. 82,900 முதல் தொடங்குகிறது. ஐபோன் ஏர் அதே மெமரி வேரியண்டின் விலை ரூ. 1,19,900 இல் தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,49,900 விலையில் தொடங்குகின்றன.
2. ஆப்பிள் வாட்ச்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் 42 மில்லிமீட்டர் அலுமினியம் ஜி.பி.எஸ். மாடலுக்கு ரூ. 46,900 என தொடங்குகிறது. ஜி.பி.எஸ். ஆதரவுடன் அலுமினிய கேஸ் கொண்ட வாட்ச் எஸ்.இ. 3 மாடலின 40 மில்லிமீட்டர் வேரியண்ட் ரூ. 25,990 விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 விலை ரூ. 89,900 ஆகும்.
3. ஏர்பாட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) விலை ரூ. 25,900.
இந்த சாதனங்களை அதிகாரப்பூர்வ ஆப்பிள் வலைத்தளம் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5,000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும், ஆப்பிள் தயாரிப்பின் முழு விலையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பாதவர்களுக்கு விலையில்லா EMI ஆப்ஷன்கள் உள்ளன.
- ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
- ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆப்பிள் நிறுவனம் தனது 'Awe Dropping' நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்கள் வெளியீட்டைத் தொடர்ந்து பழைய ஐபோன் சீரிஸ் விலைகள் குறைக்கப்படுவது இயல்பான ஒன்றுதான்.
அந்த வரிசையில் நேற்றைய நிகழ்வு முடிந்த கையோடு ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் இரு மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல், இந்த போன்கள் அதன் அறிமுக விலையில் இருந்து ரூ.10,000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. ஆனால் ஐபோன் 16 இப்போது 128 ஜிபி மாடலில் கிடைக்கிறது. ஐபோன் 16 பிளஸ் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் மட்டுமே வருகிறது.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏனெனில் அவை ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களால் மாற்றப்பட்டுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
128 ஜிபி கொண்ட ஐபோன் 16 ரூ.69,900, 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.79,900, 256 ஜிபி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் தளங்களில் இன்னும் விலை மலிவாக பெற்றுக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போதும் விலை மலிவாகக் கிடைக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட். சிவப்பு நிறக் காய்கறி- பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. ஏராளமான நன்மைகளைக் கொடுக்கவல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். இவை தவிர சூரியக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
- சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம்.
இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். பெரும்பாலானவர்களின் தேர்வு வாழைப்பழமாகவே இருக்கும். ஆப்பிளும் சாப்பிடலாமா? என்ற குழப்பமும் சிலருக்கு எழுவதுண்டு. இரவில் ஆப்பிள் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சாப்பிடும் நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனெனில் இரவில் ஆப்பிள் சாப்பிடுவதில் நன்மைகளும், தீமைகளும் ஒருசேர கலந்திருக்கின்றன.
நன்மைகள்:
ஆப்பிளில் பெக்டின் நிறைந்துள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்தை கொண்டிருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். அதனால் இரவில் சிற்றுண்டி அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் சீராக வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக உடல் எடையை குறைக்க அல்லது பசியை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு ஆப்பிள் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆப்பிள்களில் உள்ளடங்கி இருக்கும் பிரக்டோஸ் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கும். பதப்படுத்தப்பட்ட இனிப்புகளை விட இரவில் சாப்பிட ஏற்றதாக ஆப்பிள் விளங்கும்.

இரவு சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசமோ, வயிறு வீங்கியோ செரிமானம் மந்தமாக நடப்பதாக உணர்ந்தாலோ, அதன் காரணமாக இரவில் தூக்கம் வருவதற்கு தாமதித்தாலோ ஆப்பிள் சாப்பிடலாம். ஏனெனில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனினும் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது வறுத்த உணவுகளுடன் ஆப்பிளை உட்கொள்ள வேண்டாம்.
எப்போது சாப்பிடலாம்?
தூங்க செல்வதற்கு 30 முதல் 60 நிமிடங்களுள் சாப்பிடுங்கள். அது ஜீரணமாவதற்கு போதிய கால அவகாசத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். சிவப்பு நிற ஆப்பிளை சாப்பிடுவது நல்லது. அது செரிமானத்தை எளிதாக்கும். ஆப்பிளுடன் பீனட் பட்டர் போன்ற புரதம் நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்து உட்கொள்ளலாம். அது ரத்த சர்க்கரையை சமப்படுத்தி வயிறை முழுமையாக உணர வைக்கும். பாலுடன் ஆப்பிள் சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆப்பிளை லேசாக தீயில் சுட்டு எடுத்தோ, வேகவைத்தோ சாப்பிடலாம். அது ஆப்பிளை பச்சையாக சாப்பிடுவதை விட எளிதில் செரிமானமாகுவதற்கு வழிவகை செய்யும்.
தீமைகள்:
சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம். அத்தகைய உணர்திறன் மிக்க வயிற்று பிரச்சனை கொண்டவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். விரும்பும் பட்சத்தில் பாதி ஆப்பிள் சாப்பிடலாம். அல்லது ஆப்பிளை வேகவைத்து உட்கொள்ளலாம்.
இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களும் ஆப்பிளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து உள்ளது. அதனால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடும்.
ஆப்பிளை சாப்பிட்ட உடன் தூங்குவதும் நல்லதல்ல. சிலருக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.
பழங்களை துண்டுகளாக நறுக்கி சாப்பிடும்போது சிலர், சில துண்டுகளை அப்படியே வைத்து விட்டு தங்கள் வேலையை தொடர்வார்கள். சில மணி நேரம் கழித்து பார்க்கும்போது அவை பழுப்பு நிறமாக மாறியிருக்கும். அவை ஏன் அந்த மாற்றத்திற்கு உள்ளாகின்றன தெரியுமா?
ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை வெட்டிய பின்பு அவற்றில் இருக்கும் ஒரு நொதி காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலக்கிறது. அந்த வினையின் காரணமாக பழம் பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த நிகழ்வு `நொதி பழுப்பு நிறமாக்கல்' என்று அழைக்கப்படுகிறது. இச்செயலின் காரணமாக பழுப்பு நிறமாக மாறிய பழம் அதன் இயல்பு சுவையை இழந்து விடும். இந்த மாற்றம் ஒரு பழம் வெட்டப்படும்போதோ, மரத்தில் இருந்து பழுத்து கீழே விழும்போது சேதமடைந்தாலோ நிகழும். அதனை தடுப்பதற்கான வழிமுறைகள்:
* எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழச்சாறை பழத்துண்டுகள் மீது பூசுவதன் மூலம் இந்த வினையை தடுக்கலாம்.
* ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பழத்துண்டுகளை சுமார் 2 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு பழங்களை சாதாரண நீரில் கழுவி சாப்பிடலாம்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இதில் அனைத்து பழத்துண்டுகளையும் சுமார் 30 முதல் 40 விநாடிகள் ஊற வைக்கவும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இது பழங்களை சில மணி நேரங்களுக்குப் பிறகும் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
* வெட்டப்பட்ட பழங்கள் கெட்டுப்போவதை தடுக்க பிரிட்ஜில் வைக்கலாம். அது பழங்கள் பழுப்பு நிறமாக்குவதை தாமதமாக்கும்.
- முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் சாதனங்கள் (iPhone, iPad, MacBook, Apple Watch) உலகளவில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ஆனால் முழுமையான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் ஐபோன் உள்பட அனைத்து ஆப்பிள் பொருட்களும் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான CERT- In அதி தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
iOS, iPadOS, macOS, watchOS, TVOS/ visionOS 2 இருந்து முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும்.
- சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் 'துருக்கியைத் தடை செய்' என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.
துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக, துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும், ஆனால் இந்த புறக்கணிப்பு இந்த வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
புனேவின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) ஆப்பிள் வர்த்தகரான சுயோக் ஜெண்டே, "துருக்கியிலிருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஆப்பிள்களை வாங்க முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
வணிகர்களுக்கு மட்டுமல்ல, நுகர்வோரும் இந்தப் புறக்கணிப்பில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். துருக்கிய ஆப்பிள்களுக்கான தேவை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். "நுகர்வோர் துருக்கிய தயாரிப்புகளைத் தீவிரமாகத் தவிர்த்து வருகின்றனர், சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் பெரிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகாகும் என தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். புதிய டேப்லெட் மாடல் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களிடையே நிலைநிறுத்தப்படும்.
சமீபத்தில் தான் ஐபேட் (10th Gen), M2 பிராசஸர் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தகவல்களின் படி 16 இன்ச் ஐபேட் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் இதுவரை உற்பத்தி செய்ததில் பெரிய டேப்லெட் மாடலாக இது அமையும். கிராபிக் டிசைனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயனுள்ள சாதனமாக 16 இன்ச் ஐபேட் இருக்கும்.

புதிய 16 இன்ச் ஐபேட் மாடலை ஆப்பிள் எவ்வாறு தனது சாதனங்களுடன் நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாடல் ஐபேட் ப்ரோ என்று அழைக்கப்படுமா அல்லது ஐபேட் என்றே அழைக்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் பெரிய ஐபேட் மாடல் டேப்லெட் மற்றும் லேப்டாப் மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் சிறியதாக்கும்.






