என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கியம்"

    • விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள்.
    • பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.

    மகிழ்ச்சி ஏன் கடினமாகிறது?

    * எது நம்மை மகிழ்ச்சியாக்கும் என்பதை கண்டறியும் விஷயத்தில் சில சமயம் மனம் தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.

    * மனதை உலுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும்போது துயரம் குடிகொள்ளும். அந்த சமயத்தில் தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள் எழுவது மனதை பலவீனப்படுத்தி விடும். பதற்றத்தை உண்டாக்கிவிடும்.

    * ஏதாவது மகிழ்ச்சியாக நிகழ்வு ஒன்று நடந்த பிறகு, மூளை விரைவாக அதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு பழகி விடுகிறது. அத்தகைய எதிர்பார்ப்பு ஈடேறாதபோது மன மகிழ்ச்சி தடைபடும்.

    எது மகிழ்ச்சியை தடுக்கிறது?

    * அதிக பணம் (அடிப்படை தேவைகளுக்கு மேலாக)

    * கவர்ச்சியான வேலை

    * டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் மூழ்கி விடுதல்

    * கனவு வீடு, ஆடம்பரமான கார், பேஷன் ஆடைகள் பற்றிய சிந்தனையில் எந்நேரமும் மூழ்கி இருத்தல்

    * விரும்பிய உடல் அமைப்பை பெறுவதற்கு போராடுதல்

    எது நம்மை அதிக மகிழ்ச்சியாக்கும்?

    தொடர்பில் இருத்தல்

    * நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவி புரிந்தவர்களுடன் அவ்வப்போது பேசுங்கள். நேரில் தொடர்பு கொள்வது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது.

    * அந்நியர்களுடன் பேசுவதும் (உங்களுக்கு அந்த யோசனை பிடிக்காவிட்டாலும் கூட) மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்கள் முகவரி தெரியாமல் தடுமாறி நிற்கும்போது நீங்களாக சென்று வழிகாட்டுவது கூட ஒருவித மகிழ்ச்சியை உண்டாக்கும்.

    சிறிய தருணங்களை ரசித்தல்

    * விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ஐஸ்கிரீமை ருசிக்கும்போது அதை நேசியுங்கள். இப்படி சிறிய தருணங்களை ரசித்தல் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்.

    * பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.

    தினசரி நன்றியுணர்வு

    * ஒவ்வொரு நாளும் அன்றைய நாளில் நடந்த முக்கியமான 3 விஷயங்களை எழுதுங்கள். இந்த பழக்கம் மூளையை நினைவூட்டும்.

    * அந்த 3 விஷயங்களை உங்களை அதிகம் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது.

    நற்செயல் செய்தல்

    * ஒருவருக்கு தற்செயலாக ஒரு நல்ல செயலை செய்யுங்கள். அந்த நபர் உறவினர்கள், நண்பர்களாக இருக்கலாம். ஏற்கனவே அறிமுகம் இல்லாத நபராகவும் இருக்கலாம்.

    * குறிப்பாக உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உடனே உதவிடுங்கள். அவர்கள் உங்களை அணுகி கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களாகவே செய்யும் அந்த உதவி உங்களையும், சம்பந்தப்பட்டவரையும் மகிழ்ச்சியான மன நிலைக்கு கொண்டு செல்லும்.

    நன்றாக தூங்குதல்

    * ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். அதில் சமரசம் செய்யாதீர்கள்.

    * உங்கள் தூக்க அட்டவணை நிலையானதாக இருந்தால் அதுவே நோய் நொடி இல்லாத, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.

    சாகச பயணங்கள் மேற்கொள்ளுதல்

    * சுற்றுலாவுக்கோ, வெளியிடங்களுக்கோ சென்றால் அங்கு நீங்கள் வாழ்நாளில் அனுபவிக்காத சாகசங்கள், விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தால் அதில் ஈடுபட யோசிக்காதீர்கள். கூடுதல் பணம் செலவழிக்கவும் தயங்காதீர்கள். அது வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்பட்சத்தில் அதனை அனுபவிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தேடித்தரும்.

    * வருடத்திற்கு ஒருமுறையோ, குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையேயோ வெளியிடங்களுக்கு செல்லும் பட்சத்தில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள். அங்கு செல்வதற்காக காத்திருக்கும் நாட்களும், எதிர்பார்ப்புகளும் கூட மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    தியானம் செய்தல்

    * அலை பாய்ந்து திரியும் மனம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கும். அதை தியானம் மீட்டமைக்கும்.

    * தியானத்திற்கு தினமும் 5 நிமிடங்கள் செலவிட்டால் போதும். சமூக வலைத்தளத்தில் யோகா நிபுணர்களின் வழிகாட்டுதலில் வடிவமைக்கப்படும் வீடியோக்களை கூட பார்த்து பயிற்சி செய்யலாம். அதுவும் மனதை இலகுவாக்கும்.

    ஒப்பீடு செய்தல்

    * ஒப்பிடும் அளவுகோலை மாற்றியமையுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவததல்ல. உங்களுடனே ஒப்பீடு செய்யுங்கள். உங்கள் நிறை, குறைகளை அலசி ஆராயுங்கள்.

    * விறுவிறுப்பான, சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். அது அந்த படத்தின் மீதான ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டி விடும். மீண்டும் பார்க்கும்போது புதிய உற்சாகத்தை பெறுவீர்கள்.

    நேரம் செலவளித்தல்

    * உங்களுக்கு அதிக நேரத்தை அளிக்கும் வகையில் செலவிடப்படும் பணம் எப்போதும் மதிப்புடையது என்பதை மனதில் கொள்ளுங்கள். அது பொழுதுபோக்காக இருக்கலாம். விருந்து, விழாக்களாக அமையலாம். உற்றார், உறவினர்கள் ஒன்று கூடும் இடமாக இருக்கலாம்.

    * எனவே எப்போதும் செலவளிக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும் வகையில் கூடுதல் நேரத்தை உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் செலவிடுங்கள்.

    உடற்பயிற்சி செய்தல்

    * உடலுக்கு அசைவு கொடுக்கும் எந்த பயிற்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வதற்கு முயற்சியுங்கள். அது சில நிமிடங்கள் செய்யக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.

    * செல்போன் அழைப்பின்போது நடந்து கொண்டே பதிலளிப்பது கூட ஒருவித உடல் இயக்கமாக அமையும். உடலையும், மனதையும் ஆசுவாசமடைய செய்யும்.

    • நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
    • மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்.

    தினமும் 3 கப் காபி அல்லது இரண்டு கப் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அவர்கள் தினசரி காபின் கொண்ட சூடான பானங்களை (தேநீர், காபி) எவ்வளவு அருந்தினர் என்பதையும், அவர்களின் நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

    ஆய்வின் முடிவில் தினமும் இரண்டு முதல் 3 சுப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு, அதை குடிக்காதவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் 3 கப்புகளுக்கு மேல் டீ, காபி குடிப்பதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "டிமென்ஷியாவைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்தபோது, காபி போன்ற அனைவரும் பயன்படுத்தும் பானம் நல்ல உணவுமுறை தீர்வாக இருக்கலாம் என்று நினைத்தோம்" என்று இந்த ஆய்வின் ஆசிரியரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார். "மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

    டீ மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் போன்ற பொருட்களே இந்த நன்மைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைத்து, நினைவுத்திறன் சரிவைத் தடுக்க உதவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

    • விரால் மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது.
    • குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    கடல் மீன்களைவிட சில நன்னீர் மீன்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதில், விரால் மீனும் ஒன்று.

    இது புரதம் நிறைந்த மீன் வகை ஆகும். உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் விரால் மீன் உணவுகளை அவ்வப்போது உண்டு வருவது நல்லது என்று கூறப்படுகிறது.

    விரால் மீன் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். கர்ப்பிணிகள் விரால் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் கண் பார்வை திறன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது. இதனால், எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி, கால் வலி போன்ற பாதிப்புகளை தணிக்கிறது. இது தவிர, கண் பார்வை கோளாறுகளை தடுக்கும். மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.

    விரால் மீன் பொதுவாக பாதுகாப்பான உணவாக கருதப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனை தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வாயு அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இருப்பினும் இது விரால் மீனுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மீன்களுக்கும் பொருந்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சரியாக வேக வைக்காத விரால் மீன் உணவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.

    • கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது.
    • கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும்.

    நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. பல வகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நார் பொதுவாக கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

    இந்த 2 வகைகளிலும் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் இருந்து செரிக்கப்படாமல் உங்கள் பெருங்குடலுக்குச் சென்று வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். அவை பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சில நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடையை கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்றன.

    கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும். நார்ச்சத்து உணவுகள் குடலில் நீரை இழுத்து செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும், குடல் சுத்தமாக இருக்கும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் ஆபத்து குறைகிறது. சில ஆய்வுகள் கூறியபடி நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன என்கின்றனர் டாக்டர்கள்.

    • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    • கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

    உடல் ஆரோக்கியத்துக்கு 3 வேளையும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் குறிப்பாக இரவு உணவை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

    முன்னதாகவே சாப்பிடும் பழக்கம் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த நேரத்திற்குள் உங்களது இரவு உணவை முடித்துவிட வேண்டியது அவசியம்.

    இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கோதுமை ரவை கிச்சடி அல்லது இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

    40 வயதைக் கடந்தவர்கள் சிறுதானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி வடிவில் சமைத்து உண்பது சிறந்தது. ஆரம்பத்தில் இதுபோன்ற உணவு பழக்கத்தை கொண்டு வரும்போது பசி எடுக்கலாம்.

    அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால், கனமான உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பழங்களைச் சாப்பிடலாம். குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

    இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் டாக்டர்கள். 

    • சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பாக, பெண்களுக்கான 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' என்ற அதிநவீன கருத்தடை சாதனம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஜோஸ்பின் ஹேமா, டாக்டர்கள் சித்ராதேவி, ஜெயந்தி பிரசாத். மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சாதனத்தின் செயல்பாடுகள் குறித்து குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நடராஜன், மகப்பேறு சிகிச்சை பிரிவு தலைவர் காயத்ரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு சாதனம். கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி போன்ற மருத்துவ முறைகளை காட்டிலும் இது பெண்களுக்கு பாதுகாப்பானது, வசதியானது.

    இது தீக்குச்சி போன்று 3 செ.மீ நீளம் கொண்டது. வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் இந்த சாதனம் பொருத்தப்படுகிறது. தீக்குச்சி வடிவில் இருப்பதால், தோலுக்கு அடியில் செலுத்தும்போது கையில் இருப்பது தெரியாததுபோல் இருக்கும். இதனால், எந்தவித பாதிப்பும் வராது.

    இந்த அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறை செலுத்தினால் போதும். அதில் உள்ள மருந்து தினசரி உடலில் வெளியாகி கரு உருவாதலை தடுக்கும். இதன் மூலம் பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கர்ப்பத்தைத் தடுக்க முடியும். ஒரு வருடம் கழிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், உடனடியாக அதனை வெளியே எடுத்துவிடலாம்.

    குழந்தை பெற்று கொண்ட பெண்களுக்குதான் இது செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பும் வராது. 18 வயது முதல் 45 வரை உள்ள பெண்களுக்கு இது பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.3 ஆயிரம். அரசு அஸ்பத்திரியில் உள்ள பெண் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உடம்பில் அந்த சாதனம் இருப்பது போன்று தெரியாது. எந்தவித தொந்தரவு, அசவுகரியமும் இருக்காது. நமது அன்றாட பணிகளை செய்ய முடியும். குறிப்பாக, இதய நோய் உள்ளிட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 3 வருடங்கள் கடந்துவிட்டால், அதனை எடுத்து விட்டு புதிதாக வேறு ஒன்றை பொருத்தி கொள்ளலாம்.

    இதனை நோயாளிகளுக்கு பொருத்துவது குறித்து அரசு டாக்டர்களுக்கும். தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 72 சாதனம் கையிருப்பு உள்ளது. தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாக அரசிடம் கேட்டு பெற்று கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
    • கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.

    நன்றாக தூங்கி எழும்போது உடலில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அதே வேளையில், போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.

    இதுசம்பந்தமாக சர்வதேச அமைப்பு ஒன்று இளம் வயது ஆண், பெண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், தூங்கச்செல்லும் நேரம், விழிக்கும் நேரம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வு முடிவில், குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கிய குழுவில் இருந்தவர்களின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருந்ததும், இவர்களின் இதய துடிப்பு மிகவும் சீராக இருந்ததும் தெரியவந்தது.

    மேலும், இவர்கள் அன்றாட வாழ்வில் படிப்பு, புதிய சொற்களின் அர்த்தம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இத்துடன், கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.

    எனவே, இளம் வயதினர் போதிய உடல் மற்றும் மன வளர்ச்சியை இயற்கையாக பெற இளம் வயது பருவத்தில் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை இழக்காமல் போதிய நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி நன்கு தூங்கி எழ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
    • சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது.

    விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் செடி, கொடிகளுக்கு இடையே மட்டுமே காணப்படும் விஷப்பூச்சிகள் தற்போது நகர்ப்புறங்களுக்குள் படை எடுக்க தொடங்கி விட்டன. இந்தச்சூழலில் திடீரென தேனீ, குளவி போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

    செய்யக்கூடாதவை

    கடித்த இடத்தில் கீறுதல், விஷத்தை உறிஞ்சுதல், மிகுந்த அழுத்தம் கொடுத்தல், மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    அபாய அறிகுறிகள்

    மூச்சுத்திணறல்

    முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்

    கடும் தலைச்சுற்றல், மயக்கம்

    தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு

    இதயத் துடிப்பு அதிகரித்தல்

    உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்

    கடும் அலர்ஜி

    விஷப்பூச்சி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

    தேனீயோ அல்லது குளவியோ கொட்டினால் முதலில் பதற்றம் கொள்ளாமல் கொட்டிய இடத்தில் இருக்கும் அந்த கொடுக்கை ஏ.டி.எம். கார்டு, ஸ்கேல் வைத்து அழுத்தி தேய்த்து அகற்றவும். விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் கையை வைத்து அழுத்தவோ, கொடுக்கை பிடுங்கவோ கூடாது.

    சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது. உடனே மருத்துவமனை செல்வது முக்கியமானது. 

    • வாரத்திற்கு 4 அல்லது 5 முறை இவ்வாறு செய்தால் போதுமானது.
    • அதிகபட்சமாக 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது போதுமானது.

    காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது உடலுக்கும், மன ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். எலும்பு ஆரோக்கியத்துக்கும் வித்திடும். உடலின் உள் கடிகாரமான சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரவில் தூக்கத்தை மேம்படுத்தும். செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் வழி வகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். அதேவேளையில் உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க எந்த நேரத்தில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுவது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு.

    உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டுமானால் காலை 10 மணிக்குள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட்டால் மட்டும் போதுமானதல்ல. ஏனெனில் வைட்டமின் டி-க்கு தேவையான புறஊதாக்கதிர்கள் பெரும்பாலும் காலை 7 மணிக்கு முன்பு பூமியை அடைவதில்லை. இதனால் அதிகாலை சூரிய ஒளி வைட்டமின் டி உற்பத்திக்கு பயன்படுவதில்லை. அந்த சமயத்தில் சூரிய ஒளியின் வீரியம் அதிகமாகவோ ஊதாக்கதிர்கள் வலுவாகவோ இருக்காது.

    காலை நேரத்தை பொறுத்தவரை சூரிய ஒளி சர்க்காடியன் தாளங்களை ஒழுங்குபடுத்த உதவும் என்றாலும், வைட்டமின் டி உற்பத்திக்கு தேவையான புற ஊதாக்கதிர்களின் தீவிரம் இதில் இருப்பதில்லை. வைட்டமின் டி உற்பத்திக்கான சிறந்த நேரம் எது தெரியுமா? காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இந்த நேரத்தில் புற ஊதாக்கதிர்கள் அதிகமாகவும், நிழல்கள் குறைவாகவும் இருக்கும்.

    அந்த சமயத்தில் கைகள், கால்கள் மற்றும் முகம் என உடல் பாகங்கள் மீது சூரிய ஒளி சுமார் 15 நிமிடங்கள் படரும்படி நேரத்தை செலவிடலாம். வாரத்திற்கு 4 அல்லது 5 முறை இவ்வாறு செய்தால் போதுமானது. அதே நேரம் 15 நிமிடங்களுக்கு அதிகமாக சூரிய ஒளி உடலில் படுவது நல்லதல்ல.

    ஏனெனில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியின் தாக்கமும், வெப்பமும் அதிகமாக இருக்கும் என்பதால் வெயிலில் சருமம் சேதம் அடையக்கூடும். அதனை தடுக்க அதிகபட்சமாக 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது போதுமானது. குளிர் காலத்தில் புற ஊதாக்கதிர்களின் வீரியம் அதிகரிக்க காலதாமதாகும் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்குள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடலாம். ஆனால் 15 நிமிடங்களை தாண்டக்கூடாது.

    • இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
    • இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

    தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது உடலின் ஒரு அத்தியாவசிய செயல்முறையாகும். தூக்கத்தை ஓய்வு நேரமாக நாம் நினைக்கிறோம், ஆனால் இந்த நேரத்திலும் கூட, உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். தூக்கத்தின் போது, உடல் ஆற்றலைச் சேமிக்கிறது, செல்களை சரிசெய்கிறது, மூளை நினைவுகளை ஒழுங்கமைக்கிறது. அதனால்தான் தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

    எட்டு மணி நேரம் முழுமையாகத் தூங்கியும், சோர்வாக, தலைச்சுற்றலாக, சோம்பலாக உணர்ந்தால், அது வெறும் தூக்கமின்மை மட்டும் காரணம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    8 மணி நேரம் தூங்கிய பிறகும் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?

    இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பலர் 8 மணிநேரம் முழுமையாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறார்கள். கண்கள் திறந்தாலும், மனம் கனமாகவே இருக்கும், உடல் சோம்பலாகவே இருக்கும், நாளின் தொடக்கமே பாரமாகத் தெரிகிறது. பெரும்பாலும் மக்கள் இதை மன அழுத்தம் அல்லது வேலை அழுத்தம் என கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு ஒன்று. இதற்கு மிகப்பெரிய காரணம் தூக்கக் கோளாறு. இதன் பொருள் நீங்கள் இரவில் பல முறை எழுந்தாலும், அதை நீங்கள் உணரவில்லை. இதன் காரணமாக, தூக்கம் முழுமையாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அதன் தரம் மோசமாக உள்ளது.

    மோசமான தூக்கத்தின் அறிகுறிகள்

    தூக்கம் மோசமாக இருப்பதற்கான சில அறிகுறிகள் சோர்வாக எழுந்திருத்தல், பகலில் மூளை மூடுபனி, மதியம் திடீரென சக்தி குறைந்து போதல், சாதாரணமாக உணர காஃபின் தேவைப்படுதல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

    தூக்கத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்

    இரவு நேர காஃபின், மது, கனமான உணவு மற்றும் படுக்கையில் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துதல் ஆகியவை தூக்கத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரகாசமான விளக்குகள் மற்றும் ஸ்க்ரோலிங் ஆகியவை மூளையை தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன, ஆழ்ந்த தூக்கத்தைத் தடுக்கின்றன.

    இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

    படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கனமான இரவு உணவு செரிமானத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உடல் முழுமையாக ஓய்வெடுப்பதைத் தடுக்கிறது, இதனால் அடிக்கடி தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, காலையில் நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்கிறீர்கள்.

    சிறந்த தூக்கத்திற்கு மருத்துவரின் ஆலோசனை

    படுக்கைக்கு 8 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் பயன்பாட்டைக் குறைத்தல், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு உட்கொள்வது, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் படுக்கையறையை குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் வைத்திருப்பது ஆகியவை அடங்கும்.

    தொலைபேசியிலிருந்து தூரம் அவசியம்.

    உங்கள் தொலைபேசியை படுக்கைக்கு எடுத்துச் செல்வது தூக்கத்தின் தரத்திற்கு மிகப்பெரிய தீங்குகளில் ஒன்றாகும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் என்ற ஹார்மோனை அடக்குகிறது.

    மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

    நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தபோதிலும் சோர்வு தொடர்ந்தால், அது தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஓய்வற்ற கால் நோய்க்குறி, மன அழுத்தம், மருந்துகள் அல்லது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மேலும் குறிப்பிட்ட தகவலுக்கு நீங்கள் மருத்துவரை அணுகலாம்.

    • இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது.
    • புரோக்கோலி தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    பூங்கொத்து வடிவில் காட்சியளிக்கும் புரோக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறியப்படுகிறது.

    இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது. தோற்றத்தில் காலிபிளவரை ஒத்திருக்கும். பூவாக மலரும் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். புரோக்கோலி குளிர் தட்பவெப்பநிலையில் வளரக்கூடியது. அதனால் கோடை காலத்தில் வளராது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கும். இதில் வைட்டமின்கள் சி. கே. பி9 மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

    • தினமும் புஷ்-அப் செய்வது உடலை நேராக வைத்திருக்க உதவும், முதுகெலும்பு சார்ந்த தசைகளை செயல்படுத்தும்.
    • தண்டாலானது வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    தண்டால் அல்லது 'புஷ்-அப்' என்பது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சி. கைகள், மார்பு பகுதிக்கு வேலை கொடுக்கும் இந்த உடற்பயிற்சியை தினமும் சரியான முறையில் செய்து வந்தால் கைகள், கால்கள், தொடை, இடுப்பு என ஒட்டுமொத்த உடல் தசைகளும் வலுப்பெறும். தினமும் தண்டால் எடுப்பதால் தசைகள் வலுவடைவது மட்டுமின்றி வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அவை குறித்து...

    எடை இழப்பு:

    தினமும் புஷ்-அப் செய்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், உடலில் இருக்கும் கொழுப்பு குறையத் தொடங்கும். இந்த உடற்பயிற்சியை குறைந்த நேரத்தில் செய்தாலும் அதிக கொழுப்பை எரிக்க உதவும். எனவே எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.

    ஆற்றல் அதிகரிப்பு:

    நாளின் தொடக்கத்தை உற்சாகமான உடற்பயிற்சியுடன் தொடங்கினால் எண்டோர்பின், டோபமைன் போன்ற நல்ல ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் நாள் முழுவதும் மனஅழுத்தம் இல்லாமல் மனநிலை நன்றாக இருக்கும்.

    தோரணை மேம்பாடு:

    தினமும் புஷ்-அப் செய்வது உடலை நேராக வைத்திருக்க உதவும், முதுகெலும்பு சார்ந்த தசைகளை செயல்படுத்தும். மேலும், உட்காரும், நடக்கும் நிலை மேம்படும். கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.

    முதுகு தசைகளுக்கு பலம்:

    தண்டாலானது வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முதுகுத் தசைகள் பலப்பட்டு, முதுகு வலி குறையும்.

    தோள்பட்டை, மார்பு பகுதியில் வலிமை:

    தினமும் புஷ்-அப் செய்து வந்தால் உங்களது தோள்பட்டை மற்றும் மார்பு தசைகள் வலுப்படும். வலுவான தோள்கள் மற்றும் மார்பு, மேல் உடலை சமநிலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், காயங்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

    இதயம், நுரையீரலுக்கு நன்மை:

    ஏரோபிக் மற்றும் வலிமை பயிற்சி இவை இரண்டின் கலவைதான் புஷ்-அப். எனவே தினமும் புஷ்-அப் செய்து வந்தால் இதயம் நன்றாக செயல்படுவதோடு, நுரையீரல் திறனும் அதிகரிக்கும்.

    எலும்புகளின் ஆரோக்கியம்:

    தண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு அபாயத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. எனவே எலும்புகள் வலுவாக, எலும்புத் தாது அடர்த்தி அதிகரிக்க தினமும் புஷ்-அப் செய்யலாம்.

    புஷ்-அப் செய்யும்போது ஏதேனும் வலி அல்லது அசவுகரியம் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    ×