என் மலர்
நீங்கள் தேடியது "ஆரோக்கியம்"
- நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
- இதய ஆரோக்கியம் காக்கப்படும்.
உடல் நலனை பேண பின்பற்றக்கூடிய நன்மை பயக்கும் பழக்கங்களில் உடற்பயிற்சியும் ஒன்றாகும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
அதன் சில நன்மைகள்:
* சிறந்த தூக்கத்திற்கு வித்திடும்.
* உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்.
* உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
* மன அழுத்தத்தை குறைக்கும்.
* இதய ஆரோக்கியம் காக்கப்படும்.
* மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
- உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.
உலர்பழங்கள், நட்ஸ் வகைகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள். அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஊற வைத்து உட்கொள்வதே சரியானது. அவை பற்றியும், ஏன் ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
வால்நட்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி பீனால்கள் அதிகம் காணப்படும். அடர்த்தியான கொழுப்பையும், சற்று கசப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.
தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது கசப்புத்தன்மையை குறைப்பதோடு மென்மையாக மாற்றும். அதிலிருக்கும் கொழுப்பை உடல் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி செரிமான மண்டலத்திற்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும்.
2 அல்லது 4 வால்நட்டுகளை 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஊற வைத்து உட்கொள்வது, எந்த உணவுப்பொருளுடனும் சேர்க்காமல் தனியாக உட்கொள்வது அதிகபட்ச நன்மையை அளிக்கும்.
முந்திரி
கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதனை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஊறவைக்கும்போது முந்திரியில் உள்ள நொதிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து எதிர்ப்பு தன்மையும் குறையும்.
ஆரோக்கியமான கொழுப்புகளின் தன்மையும் மேம்படுத்தப்படும். 4-5 முந்திரிகளை 2 அல்லது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அவற்றை ஸ்மூத்தி அல்லது சிற்றுண்டிகளில் பயன்படுத்தலாம்.
ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பெரும்பாலான உலர் பழங்கள், நட்ஸ் வகைகளில் பைடிக் அமிலம் உள்ளது. இது இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களுடன் வினைபுரிந்து அவை உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
ஊறவைப்பதன் மூலம் இந்த அமிலத்தின் வீரியத்தை சிதைக்க முடியும். அதன் காரணமாக செரிமானம் எளிதாகும். வயிற்று உப்புசத்தை கட்டுப்படுத்தலாம். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவிடலாம்.
உலர் அத்திப்பழம்
உலர்ந்த அத்திப்பழங்களில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து அடர்த்தியும் இருப்பதால், அவற்றை ஜீரணிப்பதற்கு செரிமான மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுவே உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.
மேலும் கால்சியம், இரும்பை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் அனுமதிக்கும். மலச்சிக்கலை குறைப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். 10 முதல் 12 உலர் அத்திப்பழங்களை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் உட்கொள்வது செரிமானத்தை இலகுவாக்கும். ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்.
- புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.
- இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.
நெற்றியில் சுருக்கங்கள் தோன்றுவது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அடிக்கடி கோபமாகவோ, ஆக்ரோஷமாகவோ, ஆச்சரியமாகவோ முக பாவனைகளை வெளிப்படுத்துதல், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைதல், சூரிய ஒளி சருமத்தில் படர்தல், முதுமையை நெருங்குதல் உள்ளிட்ட காரணங்களால் சருமத்தில், நெற்றியில் கோடுகளும், மடிப்புகளும் உருவாகின்றன. அந்த சமயத்தில் சரும தசைகள் சுருங்கவும் செய்கின்றன. இதே நிலை நீடிக்கும்போது காலப்போக்கில் நிரந்தர கோடுகள் ஏற்பட்டு நெற்றி சுருக்கங்கள் தோன்ற வழிவகுக்கின்றன.
பொதுவாகவே வயதாகும்போது கொலாஜன், எலாஸ்டின் ஆகிய இரண்டு முக்கிய புரதங்களை சருமம் இழக்கிறது. இவைதான் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இவை பலவீனமடைவதுடன், நீர்ச்சத்து குறைபாடு, மன அழுத்தம், புற ஊதா கதிர் வீச்சு உள்ளிட்ட காரணிகளும் சருமத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன. புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.
நெற்றி சுருக்கம் முதுமையின் ஒரு அங்கம் என்றாலும் கூட அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் வேகமாகவே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்த்துவிடும். சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியவை...
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்யில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி சுருக்கங்களை மென்மையாக்கும். தூங்குவதற்கு முன்பு நெற்றியில் சிறிதளவு விளக்கெண்ணெய்யை தடவவும். மேல்நோக்கிய நிலையில் மசாஜ் செய்துவிட்டு, காலையில் முகத்தை கழுவி விடலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளிக்கக்கூடியது. முன்கூட்டியே சுருக்கங்களை ஏற்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கக்கூடியது. செக்கில் தயாரான தேங்காய் எண்ணெய்யை சில துளிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதை லேசாக சூடாக்கி, தூங்க செல்வதற்கு முன்பு நெற்றியில் வட்ட வடிவில் தேய்த்து, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டை வெள்ளைக்கரு சருமத்தை தற்காலிகமாக இறுக வைக்கும். மெல்லிய கோடுகளைச் சரிசெய்ய உதவும் புரதங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்கவும். அதை நெற்றியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை மேற்கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கி, அதன் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தும். இதனால் சருமத்தில், நெற்றியில் கோடுகள் தோன்றுவது குறையும். ஒரு வெள்ளரிக்காயை துருவி, சாறு பிழிந்து கொள்ளவும். பஞ்சு உருண்டையை வெள்ளரி சாற்றில் முக்கி நெற்றியில் தடவவும். 15 நிமிடங்கள் உலர விட்டு, பின்பு கழுவி விடலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இவ்வாறு செய்வது நல்ல பலனை தரும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல்லை நெற்றியில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு இருபது நிமிடங்கள் உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தினமும் பயன்படுத்துவது நெற்றி சுருக்கங்கள் விரைவாக எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.
தேன் மற்றும் எலுமிச்சை
தேன், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை அதிகரித்து, நெற்றியில் தோன்றும் மெல்லிய கோடுகளை மங்கச் செய்யக்கூடியது. ஒரு டீஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து நெற்றியில் தேய்த்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த செய்முறையை பின்பற்றிய பிறகு உடனே சூரிய ஒளி சருமத்தில் படுவதை தவிர்க்கவும்.
- முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை.
- முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 90 சதவீதம் நீரும், 10 சதவீதம் புரதமும் கலந்திருக்கும். ஆனால் முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை. சோடியம் அதிகமாக இருக்கும். கலோரிகளோ குறைவாகவே (17 கலோரிகள்) இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு ஊட்டச்சத்து மிக்கது. அதில் சுமார் 17 சதவீதம் புரதம், ஏ, டி, இ, கே, பி12 போன்ற வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். சுமார் 50 கலோரிகளையும் கொண்டிருக்கும்.
எது சிறந்தது?
சமச்சீரான ஊட்டச்சத்தை நாடுபவர்களுக்கு வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டும் கலந்த முழு முட்டையே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
அதே நேரத்தில் கலோரிகள், கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. மூளை ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தசை வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கரு சிறந்த தேர்வாக அமையும்.
- பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
- தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.
தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?
பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.
எப்படி சாப்பிடலாம்?
தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.
இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.
யார் சாப்பிடக்கூடாது?
இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.
குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?
குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.
சருமத்துக்கும் நன்மை பயக்குமா?
குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
குளிர் காலம் தொடங்கியதும் பலரும் வழக்கத்தை விட விதவிதமாக ருசிப்பதற்கு விரும்புவார்கள். வெப்பநிலை குறைவதால் தாகம் தணிவதும், குளிர்ச்சியான வானிலைக்கு சூடான, பொரித்த உணவுகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு இதமாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. அதேவேளையில் சில உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது குளிர் காலத்தில் உடல் நலனை சீராக பேணுவதற்கு வழிவகை செய்யும்.
குளிர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் குளிர்ந்த பால், குளிர்ந்த ரொட்டி, குளிர்ந்த சாதம், அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், குளிர்ந்த உணவை சாப்பிட்டால் ஜீரண சக்தி பலவீனமடையும். அதனை தவிர்க்க எப்போதும் சூடான, புதிதாக சமைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள். சூடான சூப் பருகலாம். அவை உடலுக்கு கதகதப்புத்தன்மையை கொடுத்து குளிர்ச்சியில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவிடும்.
ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்த்தல்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
அதிகப்படியான உலர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு. பரோட்டா, சப்பாத்தி, பச்சை காய்கறி சாலட்டுகள் போன்ற உலர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் வாதம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அவை உடலை மேலும் உலரச் செய்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் உண்ணும் உணவுகளுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. அத்துடன் ஈரப்பதமான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
- ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் வயிற்று பசிக்கு உணவைத்தேடி காடுகள், மலைகளில் நடந்து வேட்டையாடி கிடைத்ததை உண்டு வாழ்ந்தார்கள். இயற்கையான வாழ்வில் உடல் உறுதியாக இருந்தது. உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால் பெரிய அளவில் நோய்களின் தாக்கம் இல்லை.
வண்டி சக்கரம் மற்றும் வேட்டை ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மனிதன் இலகுவாக உணவை வேட்டையாட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்து பிரபஞ்சத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோள்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் அளவுக்கு விரிவாகி இருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்வியல் நடந்து ஓடி உணவு தேடும் தேவை குறைந்து போனதால் நோய்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்க, ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நடைப்பயிற்சி பல்வேறு பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடங்கள் நடந்தால் மனநிலை மேம்படுகிறது. 10 நிமிடங்கள் நடந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறைந்து மனதில் அமைதி ஏற்படுகிறது. 15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் மனதில் இருக்கும் தேவை இல்லாத குழப்பங்கள் நீங்க, சிந்தனை குறைந்து தெளிவான மனநிலை ஏற்படுகிறது. 60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதையெல்லாம் விட தினமும் நடந்தால் உடலில் ரத்த சுழற்சி சீராக நடந்து உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு நன்மை தரும் நடைப்பயிற்சியை நாமும் மேற்கொள்ளலாம்.
- ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர்.
- ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை.
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஒருவர் அல்லது ஒரு குழு செய்யும் தியானம் என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்ய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர். பின்னர் இந்த தியான நிகழ்வு நடைபெற்ற நகரங்களில் அந்த தியான நிகழ்வுக்கு முன் பின் நடைபெற்ற சம்பவங்களை ஆய்வு செய்தனர். அதில், இந்த தியான நிகழ்வுக்கு பிறகு அந்த நகரங்களில் குற்றம், வன்முறை சம்பவங்கள், விபத்துகள், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர். அதில், தோராயமாக ஒரு நகரில் வெறும் 1 சதவீத மக்கள் தொடர்ந்து தியானம் செய்தால், அந்த இடத்தில் இருந்து பரவும் கண்ணுக்கு தெரியாத அமைதி அலைகள் அந்த நகரைச் சுற்றி சுமார் 5 மைல் தொலைவுக்கு ஒரு வித அமைதியை அந்த பகுதியில் வாழும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. இது அந்த பகுதியில் வாழும் தியானத்தில் ஈடுபடாத மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்கி அமைதியை உருவாக்குவதால் அந்த மக்களின் மன அழுத்தம் குறையத் தொடங்குகிறது. பொதுவாக மனிதர்கள் ஒருவரையொருவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றனர். ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை. பொதுவாக தியானம் அமைதியை தருகிறது. அது ஒரு சமூகத்தில் பரவும் போது ஒட்டுமொத்த சமூகமும் அமைதிக்கு திரும்புகிறது என்றனர்.
- வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
- மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.
காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.
இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.
வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.
நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.
கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.
வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.
வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.
- வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
- இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.
நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.
- ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
- கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.
கருப்பு காபி (பிளாக் காபி):
கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
கருப்பு தேநீர் (பிளாக் டீ):
கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.
எது சிறந்தது?
இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.
- குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.
சளி, மூக்கடைப்பு பிரச்சனையால் காது வலி வருமா?
குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது 'பெல்ஸ் பாலஸி' என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம்.
குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
எதனால் ஏற்படுகிறது?
நமது மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.






